சனி, 14 மே, 2011

நீ

உன் விழியே...  விழியே
என் வலி தீர்த்திடும் மருந்தல்லவா

உன் மொழியே... 
மொழியே
என் கண்ணீரை துடைத்திடும் துணி அல்லவா

இது நெடு நாள் வாழும் பந்தம்
உன் மடி மீது தூங்கும் என் நெஞ்சம்

அடடா... அழகிய சொர்க்கம்
நீ.. அருகினில் இருந்தால் வாசல் திறக்கும்

உனை பார்த்த பின்பு தானே
நானே நான் ஆகினேன்....


இதுவரை...
விடிந்த பின்னும் கிழக்கு எனக்கு இல்லை
இருந்திருந்தும் என் விரல் பிடித்தாய்
இனி என் உலகினில் சூரியன் தேவையில்லை...

முன்பு...
சுழன்றபோதும் சுகம் எனக்கு இல்லை
உடைந்திருந்தும் எனக்கு உயிர் கொடுத்தாய்
ஆகவே, நீளும் நேரம் போதவில்லை...


வெறும் வானமாய், நெடுந்தூரமாய் நின்றேன் நானடி
புது வானவில்லாய், தொடும் நிழலாய் வந்தாய் நீயடி
....



நீ...
சரி என்றால் அன்பே
எனக்கெனும் ஆயுளை உனக்
களித்திடுவேன்
நீ...
சிரிப்பதென்றால் அய்யோ
நான் சிறு குழந்தையாய் ஆடிடுவேன்

மறைந்தோடும் தென்றலாய்
நாளும் மனதோடு தீண்டுகிறாய்
இனி.. என் உயிர் போவதென்றால்
உன் நிழல் மீது தான் அன்றோ...


மழை பொழிந்தால், உடனே
நான், குடை
ன உனக்கிருப்பேன்
ஒரு துளி விழுந்தாலும் - அய்யோ
மறுகணம் உயிரையும் நான் இழப்பேன்...

எனக்காக துடிக்கும் உனக்காக
தயங்காது உயிரை நான் தருவேன்
எனக்கேதும் இல்லைஎன்ற போதும்
நீ இருக்க, மரணத்திலும் இதழ் விரிப்பேன்...


வெறும் வானமாய், நெடுந்தூரமாய் நின்றேன் நானடி
புது வானவில்லாய், தொடும் நிழலாய் வந்தாய் நீயடி!!




mvidhyasan@gmail.com

வெள்ளி, 13 மே, 2011

நிலா

தூரத்தில் நீ
தொடர்ந்து தேய்வது நான்

வட்டமாய் நீ
வட்டமிடுபவனாய் நான்

வெளிச்சமாய் நீ
உன் வருகைக்காகவே இரவாய் நான்

புள்ளியாய் நீ
சுற்றி அலையும் மேக புகையாய் நான்

பந்தாய் நீ
தட்டி விளையாடுகிறேன் இமைகளால் நான்


பனித்துளியாய் நீ
ஒவ்வொரு முறையும் உருகுகிறேன் நான்

அப்பளமாய் நீ
பார்த்தே பசியாருகிறேன் நான்

சக்கரமாய் நீ
சுழலும் பொழுதாக நான்


பொட்டாய் நீ
தொட்டாடும் மர இலையாய் நான்

வெண் "மை" யாய் நீ
நிரப்பிக் கொள்ளும் பேனா வாக நான்

கண்ணாடியாய் நீ
முகம் பார்க்க முடியாதவனாய் நான்

பலுனாய் நீ
பறப்பவனாய் நான்

பழமாக நீ
பறிக்க முடியாதவனாக நான்
நிர்வாணமாய் நீ
கண்கள் கூசியபடி வெட்கத்துடன் நான்

நாணயமாக நீ
சேமிக்கும் நாயகனாக நான்

ஒலிந்துகொள்வாய் நீ
தேடுபவனாக நான்

காதலியாக நீ
காதலனாக நான்
தனிமையாய் நான்
தேவதையாய் தேடி வருகிறாய் நீ !!

இயங்கும் பிணமாய்


உன் நினைவை மட்டும் தந்துவிட்டு
தனிமை காட்டில் விட்டுவிட்டாய்

உன் மொழிகளை மட்டும் வீசிவிட்டு
நாவறுந்த வனத்தினில் நடக்கவைத்தாய்

உன் கனவுகளை மட்டும் கொடுத்துவிட்டு
இரவே இல்லா வானத்தை காட்டினாய்

உன் புன்னகையை கடலாக்கிவிட்டு
கரையில் நின்று கண்ணீரை பொறுக்கவிட்டாய்

உன் நேசத்தை சிந்தி விட்டு
ஸ்வாசம் தீரும்மிடத்தில் மீனாய் தத்தளிக்கசெய்தாய்


உன் ஓவியத்தை கலைத்துவிட்டு
காலத்தடத்தை தேடி அலையவிட்டாய்


தூரத்து மின்னலாய் மறைந்துவிட்டு
எனை இயங்கும் பிணமாக்கிவிட்டாய் !!

சாரல்கள்

நினைவுகளின் உரசல்களில்
கனவுகளின் கால்தடங்கள் பதிகிறது

நிமிடங்களின் வழிநெடுகெங்கிலும்
நிஜங்களின் பிம்பங்கள் கரைகிறது

தடுமாறும் பயணங்களில்
தவிப்புகளின் விரல்கள் வருடுகிறது...

அலைமோதும் விநாடிகளில்
இதய கரைகள் கிளிஞ்சல்களை தேடுகிறது...

இளைபாறும் தருணங்களில்
நிழலின் மடிகளில் தனிமை பேசுகிறது...

மரணங்களின் வேதனைகள்
உண்மை காதலில் உயிர்க்கிறது...

கானலின் தூரத்தில்
தாகித்து நாக்குகள் ஏங்குகிறது...

நேசத்தின் உணர்வுகளில்
வேசங்கள் முகமூடி அணிகிறது...

உடைந்திடும் பொழுதினில்
மனம் முகம் காட்டும் கண்ணாடியாகிறது...

யார் அறியக் கூடும்
உனக்குள் பூக்கும் உயிர்ப்புகளை எல்லாம்...

போடா

எதுவும் நடக்கட்டும் போடா
உலகத்தில் கவலையில்லா மனிதன் யாரடா
சென்றவர்கள் போகட்டும் போடா 
சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒன்றாய் இறந்தது இல்லையடா...



பிறக்கும்போது ஒன்றும் கொண்டு வரவில்லை கையில்
இறக்கும்போது ஏதும் சொந்தமில்லை மண்ணில்
வருவது வரட்டும் விட்டுவிடுடா 
வாழ்க்கை என்றாலே இழப்புதானடா....



வாழ்ந்தவர் எல்லாம் இறுதில் சொன்னது ஒன்றுமில்லை
வாழ்வில் அனுபவத்தை தவிர்த்து ஏதுமில்லை
உறவுகள் உதிரட்டும் போடா 
உன் அழுகைக்கு நீயே காரணமடா....







ஆவதும் அழிவதும் ஆசைகளே காரணம்
ஆண்டவனாக இருந்தாலும் அவனுக்கும் உண்டு துயரம்
வானமுண்டு, பூமிவுண்டு போடா 
யாரையும் நிர்ணயிப்பது பணம்தானடா



போவதும் வருவதும் மாயைதானே
காதலும் பருவமும் காயம்தானே 
உண்மைகள் நானே போடா
இந்த உலகம் து சொன்னால் என்ன போடா!!


நான் வாழும் காதல் பூகோளம்

ஏதேதோ தோன்றும்
எல்லாமே மாயம்
தீயாக மாறும்
உன் தேகம் தேடும்
இரவெல்லம் ரணம்
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

இதயம் வேரோடு சாயும்
இளையுதிர் காலமாய் நிமிடங்கள் மாறும்
உயிர் கூடு வாடும்
விழும் வார்த்தைகள் தடுமாறும்
விடியாத இரவாக எப்போதும் தோன்றும்
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

போதையின் உச்சியிலும்
உன் முகமே வந்தாடும்
பாதையின் வழி எங்கும்
உன் நினைவே பந்தாடும்
உணர்ச்சிகள் வெறிகொள்ளும்
விடும் மூச்சும் எனை கொல்லும்
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...


மோகங்கள் நகம் கீறும்
முழு நிலவும் ஆடை சூடும்
தேடல்கள் விரைந்தோடும்
தேன் உண்டும் நா கசக்கும்
புயல் ஒன்று இசைமீட்டும்
புலம்பல்கள் புதிராகும்
விரகங்கள் விண் தீண்டும்
நரகங்கள் கண் மூடும்
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...


ஒரு பக்கம் சரியுதடி
மறு பக்கம் உடையுதடி
நடு பக்கம் ஏனோ நரகங்கள் தேடுதடி
ஒரு விழியில் வலி கொல்லுதடி
மறு விழியில் உயிர் வழியுதடி
என் நான்கு இமைகள் மட்டும் முள்ளாக மாறுதடி
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

உன் நினைவுக் கொம்புகள்
என் இதயம் கிழிக்குதடி
உன் கனவு கத்திகள்
என் உறக்கம் நறுக்கதடி
மரணங்கள் கூடி வந்து
உன் பாதம் தொழுகுதடி
கல்லெல்லாம் உனைதேடி
காதல் கண்ணீராய் வடிக்குதடி
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...


மதி கெட்டுபோனது
விதி எட்டி நிற்கிறது
புவி முற்றும் எனக்கு
ஒரு புள்ளியாய் ஆனது
மரங்களுக்கு சொந்ததமில்லை
பிறக்கின்ற இலைகளுக்கு
வானங்கள் நிரந்தமில்லை
வலம் வரும் நிலவுக்கு
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

உன் மடிமீது சாய்ந்திடும்
தருணங்கள் என் தலை கேட்கும்
உன் உருவங்களை காணும்
நிமிடங்களை என் விழி கேட்கும்
அதிகாரம் செய்யாதே
காதல் அவமானம் அறியாததே
மெளனங்கள் மீட்டாதே
புது மரணங்கள் காட்டாதே
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...


இறைவா.. இரவே இல்லாத
ஒரு உ
கம் எனக்கென படைத்துவிடு
மனம் உள்ளே ஆடையின்றி
ஆடும் பேய்களை கொன்று விடு
அவளை பார்த்
து குற்றம் என்றால்
என் இரு விழி
களை நீக்கிவிடு
மீண்டும்.மீண்டும் அவளை விரும்பும்
இதயம் இல்லா உடலை தந்துவிடு
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

செவ்வாய், 10 மே, 2011

சீ...சீ... படுக்கை மொத்தம்

திடுக்கென்று ஒரு சப்தம் 
வெடுக்கென்று பூத்தது பயம்
விசுக்கென்று வழிந்தது வியர்வை...

பொசுக்கென்று நுழைந்தது பார்வை 
பிசுபிசுக்கச் செய்தது இதய வேரை 
கசக்கி புழிந்தது உன் வருகை...

எது எது காண்பேனோ
அது அது நீயானாய்
விடு விடு என்றபோதும் ஏனோ விதையானாய்...

மது மது உன் இதழ்
எடு எடு என்றது என் விழி 
ம்ஹூம் , ம்ஹூம் என்று தடுத்தது உன் விரல்...

சல சல என காற்று
கல கல என கை வளை பாட்டு
விழ விழ எழுந்தது மோக கீற்று...

மூடி மூடி மறைத்தது உன் முந்தானை
மாறி மாறி பொழிந்தது தேன் மழை
இன்னும் இருக்கிறது அந்த கலை...

மள மள என சரிந்தது உயிர் கூடு 
எழு எழு என சிரித்தது உன் தோடு 
அழ அழ வைத்தது அந்தரங்கத்தோடு...

திடுக்கென்று ஒரு சப்தம் 
படக்கென்று பிரிந்தது இமை முற்றும்
சீ...சீ... இது கனவென்றது படுக்கை மொத்தம் !!

mvidhyasan@gmail.com

வா வா

ஓர் அழகிய மாலை
அவள் நினைவு சுமந்த வேளை
இதை விட சுகம் இந்த உலகில் இல்லை...

வான் நிலா முகம் காட்ட
அவள் நினைவு எனை வாட்ட
எப்படி அவளிடம் என் மன நிலையை காட்ட...

குளிர் தென்றல் இசைக்கிறது
விழி இரண்டில் உயிர் கசிகிறது
சதா என் உள் மூச்சும் என் பெயரையே உச்சரிக்கிறது...

இரவு தொட்டிலில் நான் குழந்தையாக
உன் இதழ் கட்டிலில் நான் புது உறவாக
நீளட்டும் இன்னும் நிமிடங்கள் தூரமாக...

மேகம் ஆனது துளி ஈரம்
மோகம் கொண்டது மனம் முழுதும்
நீ என் அருகில் இல்லை தீராத பாரம்...

உடைந்து போகட்டும் இந்த பூமி
கீழே விழுந்து நொருங்கட்டும் வானம்
வா வா என்னோடு நாம் செல்வோம் புது உலகம் !!


mvidhyasan@gmail.com

ஆஹா...


மின்னல் நரம்பில்
வானம் மீட்டியது ஓசை
மேகம் கொட்டியது இசை மழை...

ஜன்னல் கதவுகள் தட்ட
தொட்டதும் உயிர்விட்டது
பூக்களின் இதழ்கள்....

நடுநிசி நேரம்
நாய்களின் பயங்கர ஓலம்
தனியாக நானும் -  நிலாவும்...

ரகசிய உறவு
அழகிய பரிமாற்றம்
காதல் இனிப்பானது தேன்...

மெழுகுவர்த்தியும்/வெளிச்சமும்
கும்மிருட்டு கதை சொல்லியது
என் நிழல் எனக்குள்...

கசங்கிய காகிதம் கைகளில்
விரித்து விழிகள் ருச்சித்தது
என்னைபோல் யவனோ எழுதிய காதல் கவிதையை...

சொட்டும் மழைத்துளி
தட்டி விளையாடும் உள்ளங்கை
பட்டதும் நதியானது - ரேகையில்...

முற்றும் சுற்றும் பயணம்
இடைவிடாது துடிக்கும் இதயம் நிற்கும்
கண்ணீர் மற்றவருக்கு
ஆஹா...
இளைபாறுதல் இறந்தவனுக்கு !!

வியாழன், 5 மே, 2011

நீ ஆக வடிவெடுப்பதால்

கைகளில் புத்தகம்
ஒவ்வொரு பக்கமும் உன் பெயரானது 
அத்தனை எழுத்துகளும்....

எப்படி அதை விடுப்பது என்று தெரியாது 
படித்து கொண்டே இருக்கிறேன் ன் 
வார்த்தைகள் எல்லாம் நீ ஆக வடிவெடுப்பதால்!!.

புதன், 4 மே, 2011

முடியவில்லை



நான் உனக்கு என்றேன்
நீ எனக்கு என்றாய்
இத்தோடு என் வாழ்க்கை முடிந்தது என்றேன் 
நீ... இன்னும்...
முடியவில்லை தொடரும் என்றாய்...




அன்பின் எல்லை நீ என்றேன் 
அதிசய புத்தகம் நான் என்றாய் 
என்னை முழுவதும் படித்தாயே என்றேன்
நீ... இன்னும் ...
முடியவில்லை படிக்கிறேன் என்றாய்...




நீ எனது சூரியன் என்றேன் 
நான் உனை சுழலும் பூமி என்றாய் 
முற்றிலுமாக சுழன்று விட்டேன் என்றேன் 
நீ...இன்னும்..
முடியவில்லை சுழல்கிறாய் என்கிறாய்...


நீ எனது கனவு என்றேன்
நான் உன் நிஜம் என்றாய் 
கனவு கலைந்திடுமே என்றேன் 
நீ...இன்னும்...
முடியவில்லை கனவு தொடரும் என்றாய்...




நீயே எனக்கு எல்லாம் என்றேன் 
எனனை தவிர உனக்கு ஏதும் தேவையில்லை என்றாய் 
உயிர் பிரிந்திடின் உனை விலகிடுவேனே என்றேன் 
நீ...இன்னும்...
முடியவில்லை நமக்கான வாழ்வு  உள்ளவரை என்றாய் !!




எல்லாம் முடியவில்லை என்கிறாயே ஏன் என்றேன் 
முடியவில்லை ஏதும் நமக்குள் ஏனெனில் முடிவில்லலாதது நாம் என்றாய் உனக்கே உண்டான முடிவில்லா புன்னகையோடு!!

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

மே 1

இந்த மே தினமாவது உழைத்து காய்த்துபோன விரல்களுக்கு
ஒளி கொடுக்கும் மோதிரமாகட்டும்


வியர்த்து கறுத்து சலித்துப்போன இனத்தவருக்கு
விண்ணும், மண்ணும் விழா எடுக்கட்டும்

 
புது எந்திரமாய் தினமும் சுழலும் உடலுக்குள்
மெல்லிய இருதயம் இயங்குவதை யாவரும் உணரட்டும்


வெயில் அணிந்து, பசி சுமந்து ஒட்டிய வயிறுகளுக்கு
சுதந்திரமாக தண்ணீர் பருக சிறிது நேரம் கிடைக்கட்டும்

 
அடிமை பொருளாய் நாளும் அடங்கி கிடக்கும் கூட்டத்திற்கு
முட்டும் சிறுநீர் கழிக்கவாவது உரிமை கிடைக்கட்டும்


வழிகள் தொலைத்து, வலிபொறுத்து உழைக்கும் வர்க்கத்திற்கு
புதுப் பாதைகளின் கதவுகள் திறக்கட்டும்


தூக்கம் விடுத்து, ஏக்கம் மறைத்து வாழும் தொழிலாளர்களின்
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிட்டட்டும்

 
ஏய்க்கும் குணத்தவரின் முச்சை நிறுத்தி
உழைப்பவர் பக்கம் காற்று உரக்க வீசட்டும்

 
நாளும் முதலாளி காரில் பறக்க காரணமான
தொழிலாளிகளின் கால்கள் ஓய்வெடுக்க
இன்று ஒருநாளாவது விடுமுறை அறிவிக்கட்டும் !!

வியாழன், 28 ஏப்ரல், 2011

துளி துளி


தேவையற்று தூக்கி வீசப்பட்ட காகிதம்
காற்றில்....
எதைத் தேடி அலைகிறது தெருவெல்லாம்


அடுத்த பயணத்திற்கே தற்போதைய மரணமாம்
சொல்லியபடி...
உதிர்கிறது கிளையிலிருந்து இலைகள்

சரியாக கவனிக்காதவர் சொன்னது
மொட்டை மாடி ...
பூந்தொட்டியில் சிரித்துக் கொண்டிருக்கிறது பூக்கள்


மின்சார கம்பியில் அரங்கேற்றம் பறவையின் விநோத நடனம்
ரசிக்க யாருமில்லை ..
நிற்கவில்லை தூரத்து மரத்தின் கை தட்டல்கள்


பசி அடக்கிய பாத்திரம் கழுவி ஊற்றிய தண்ணீர்
கண்ணீரானது...
பசியோடு உண்டு கொண்டிருந்த எறும்பு கூட்டத்திற்கு


மழை வரும் முன்னே காதலாய் மின்னல்
காளான் ...
குடை விரித்து தன் முகம் மறைத்து கொண்டது வெட்கத்தில் மண்


கொடூரமாய் பயமுறுத்தும் விலங்கும்
அன்பாய்...
கவ்விச் சென்றது தன் குட்டியை தனதென்றதும்


வளர்வது நன்றென்று அறிந்தும் விடுவதில்லை
மரத்தை...
சிலர் - தீதென்றும் வெட்டுவதில்லை நகத்தை

பச்சை ஆடை சூடிக் கொள்ள இடைவிடாது நிகழ்கிறது
புவிக்கு...
ஆற்றின் இரு கரை நடுவில் தயாராகிறது நீர் பின்னலாடை


பக்கவாத்தியத்துடன் பாட்டுக் கச்சேரி நடக்கிறது
பாம்பு...
பசி தீர்க்க நடு இரவில் தாளத்துடன் தவளை


ஒவ்வொரு மிருகமும் ஒவ்வொரு குணம்
எப்படி...
எல்லாம் கலந்ததாய் மனித இனம் !!

ஒரு நாள்

ரகசியத்தின் ரசிகர்களை ஒலித்து வைத்திருக்கும் 24 மணி நேரம்
தேடல்களை புதைத்து வைத்திருக்கும் 86400 விநாடிகள்
தன்னை அழங்கரித்து கொள்ளும் அதிகாலை
அயராது விளையாட்டு காட்டும் நண்பகல்
மயக்கத்தை வருட மலரும் மாலை
விந்தைகள் புரியும் விசித்திர இரவு
இளைப்பாராத ஒற்றை வழி பயணம்
கனவுகளை உற்பத்தி செய்யும் களம்
கற்பனைகளுக்கு உருவம் கொடுக்கும் கருவறை
இழப்புகளை சொல்லித் தரும் புத்தகம்
கரைய கரைய உருவெடுக்கும் ஓவியம்
கூட்டல் கழித்தல் சொல்லித் தரும் சூத்திரம்
எல்லாவற்றையும் சுமக்கும் அழகிய பாத்திரம்
நினைவுகளை அசைபோடவைக்கும் ராட்டினம்
கழியும் காலங்களை உருளச் செய்கிறது
சுழலும் சக்கரமாக
ஒரு நாள்

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

யார் அறிவார் ?

பக்கத்தில் பக்கத்தில் தான்
நீயும்- நானும்...

தொடும் தூரத்தில் இருந்தும்
இரு வரும் பரிந்தபடி
...
இணை பிரியாத பயணம்தான்
தொடர்கிறது இணைய முடியா இடைவெளி

வெயில் நேரத்தில் -நான்
வெங்துவிடுவேன் என்று
நீ‡நொந்ததுண்டு

மழை காலத்தில் -நான்
நனைவேன் என்று
நீ‡ கண்ணீர் சிந்தியதுண்டு

நீண்ட வளைவுகளில்
நாம்- அவ்வப்போது
நலம் விசாரித்து கொள்வதுண்டு

பேசாமலிருக்கும் உதட்டின் மீது
பிரியத்தை சொல்லி போகும் ரயில் பெட்டிகள்

கற்களின் மேடையில் நடக்கிறது
தினம் தினம் நமது காதல் நாடகம்

யார் அறிவார் ?
உனக்கும் -எனக்குமான
உயிர்ப்புள்ள இடைவெளி இணைப்பை !!

payanam


புதன், 6 ஏப்ரல், 2011

அன்றையதாய் ஆனேன்




உன் தோள் சாய்ந்த அந்த நிமிடம்
என் துயரங்கள் யாவும் தூரம் சென்ற மாயம்

...உலகம் புரியாத புதிராய் சுழன்ற காலம்
என்னை அழைத்து சென்று காண்பித்தாய் நட்பெனும் அழகிய உலகம்

எதை எதையோ காட்டி உனக்கு வேண்டுமா என்பாய்
எப்போதும் என்னிடம் நீ மட்டும்தான் இருந்தாய் அன்பாய்


உன் விரல் கோர்த்து விளையாடிய காலம்
விழி மீது அலையாடி ஏற்படுத்துகிறது நினைவுகளாக காயம்

எதற்கெடுத்தாலும் உன்னையே தேடும் என் மனம்
ஏனோ மறந்தது தோழா துருவம் பிரிந்து பருவம் தீண்டியதால்

இது நாள் வரை தென்பாடாத உனதுருவம்
விதி விளையாட்டாய் வீதியில் நாம் சந்திக்க

கொட்டி தீர்த்து விட்டாய் அந்த நாள் முதல் எனை கண்ட நிமிடம் வரை நீ:
எல்லாமே சொல்லாமல் கேட்டறிந்தேன் உன் முகவரியை நான்

வீடு வரும் முன் இது வரை தொடர்ந்து வந்த துயரங்கள் நடந்து வந்தது
இமை மூடி சற்று சுவற்றில் சாய்ந்தேன்,தோள் கொடுத்து கண்ணீர் துடைத்தாய் அன்றையதாய் ஆனேன் நான் !!
vidhyasan@gmail.com

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

நமக்கான உரையாடல்


உலகத்தின் உன்னத மணித்துளிகள்
நாம் இருவரும் உரையாடும் நிமிடங்கள்


வார்த்தைகளின் உரசல்களில்

வானம் தீண்டி பார்த்ததுண்டு நம் மொழிகள்


நமக்கான கோடி கேள்விகளை நான் எழுப்புகையில்

எனக்காக நீ உதிர்ப்பாய் ம்... என்ற ஒலியாய் முடிப்பாய்


உனக்காக நீ பேசி கொள்ளும் பொழுதெல்லாம் என்னவோ

எனக்கு பொறாமைதான் உன் உதடுகள் முத்தமிடும் எழுத்துக்கள் மீது



நம் உரையாடலில் உருண்டோடிபோகும் காலம்

பின்னோக்கி நகர கடிகார முற்களுக்கும் ஆசை கொள்ளும்


வார்த்தைகளின் தூரம் வரை ஏதேதோ பேசி தீர்த்தோம்

ஒவ்வொருமுறையும் நமக்கான உரையாடலில் நம்மை தொலைத்தோம் !!

திங்கள், 4 ஏப்ரல், 2011

சுகமாகவே

நெடுந்தூர பயணம்
உன் நினைவுகள் நிழலாய் துணை வரும்....


மழை சொட்டும் தருணம்

உன் உதடுகள் கொடுத்த ஒத்தடம் ஞாபகம்...


வெயில் சுடும் கணம்

உன் மடி சாய்ந்த நிமிடமாய் வருடும்...


கடல் அலை கரையில் நுரையிடும்
மெளனம்
உன் கால் கொழுசு மணியாய் உருமாறும்...


நிலவு உலா வரும் நேரம்

நீ காத்திருப்பதாய் தோன்றும்...


கிளை, இலை எல்லாம் அசையும்
சுகம்
நீ விடும் மூச்சு காற்றை சுவாசிக்கும் இதயமாகும்....


எது எதுவாகினும் எனக்கென்னமோ

எல்லாமே நீ ஆகிறாய் எனக்குள் சுகமாகவே !!




-வித்யாசன்

செவ்வாய், 29 மார்ச், 2011

தெரியும்


எடுத்தது தெரியும்....
திருப்பி
ரும்போது வாங்கிக் கொள்ள மனமில்லை
தொலைந்து போனது எனது இதயம் என்பதால் அல்ல
திருடியது அவன் இதயம் என்பதால் !!
vidhyasan@gmail.com........

செவ்வாய், 22 மார்ச், 2011

உன் வருகைக்காக



வழி எல்லாம் வான் மழை
விழி எல்லாம் உன் நினைவலை

திசை
ல்லாம் ஈர உடை
இதயம் நனைகிறது நீ பிடிக்கவா குடை

உன் பிம்பம் தேடி தேய்கிறது பார்வை எல்லை
நம் இருவருக்கும் உள்ள இடைவெளி அழகிய தொல்லை

திசுக்கள் ஆனது குளிர் ஓடை
பொசுக்கென்று வா நீயே என் ஆடை

காத்திருப்புக்குள் மறைகிறது நிகழ்நிலை
காற்றிடம் சுவாசம் எழுதுகிறது உனக்கான மடலை

உனக்கும், எனக்குமான தூரம் மட்டுமே தடை
உன் வருகைக்காக மட்டுமே துடிக்கிறது என் இருதய மேடை !!


நம் காதல்



என் உலகம் எதுவென்றால்
அது நீதானே
உன் இதயம் எதுவென்றால்
அது நான்தானே
நீ வேறு, நான் வேறு என்று வழி மாறிடாது
எப்போதும் நாமாவோம் ஒன்று....

இமை ஒட்டி சற்று விழி மூடினால்
என் இரவுக்குள் உன் முகம் விண்மீன்களாய்
என் கடிகார முள்ளாக நீ நகர்வதால்
என் காலம் கரைகிறது காதல் கணமாய்...

நீ வருகின்ற திசை எல்லாம் உனக்காகத்தான்
கிளை இலை எல்லாம் மழைத் துளியாக உதிர்கின்றதே
உன் வளையோசை அசைகின்ற இசை கேட்கத்தான்
வெயில் மீறி குயில் எல்லாம் தவம் கிடக்கின்றதே....
 

இமை மூடும் கணம் எனை நீ பிரிந்தாலுமே
என் வானம் தரைதட்டி வீழ்கின்றதே
உன் மடி மீது எனை சாய்த்து நீ தலை கோதினால்
அந்த தருணங்கள் தனி உலகங்கள் ஆகின்றதே....

எந்தன் உயிர் நீங்கும் நிமிடத்தில் உந்தன் விரல் தீண்டால்
எந்தன் தேகத்தின் காயங்கள் சுகமாகும்
உன் வாழ்க்கையின் மொத்தம் நான் நிரம்பினால்
நம் காதல் ஒன்றே உலகில் முதலாகு
ம் !!

வியாழன், 17 மார்ச், 2011

புரிய வைக்க முடியும்


என்னோட வருவதற்கும் மனமில்லை
விட்டு விலகவோ இருவருக்கும் மனமில்லை


அன்பில் இதுவே முதல் நிலை
நினைவுகளுக்கு ஏது எல்லை


எப்போதும் உனை தொடர்வதே வேலை
எனை துரத்துவதுவே உனக்கு அழகிய தொல்லை


யாருக்கு புவியில் இல்லை கவலை
தூக்கி எரிந்து விட்டு வா ஊடலை


ஒரு நிமிடம் என்னோடு இருந்து பார்
நிச்சயம் புரிய வைக்க முடியும்  என் காதலை !!

புதன், 16 மார்ச், 2011

அந்த நிமிடத்தில் ஜப்பான்



விதையிலிருந்து ஒரு  அரும்பு புதுப்பித்த மணித் துளி
பட்டாம் பூச்சி ஒன்று தனது சிறகை திருப்பி பார்த்த வினாடி
கருவறையிலிருந்து குழந்தையின் தலை மட்டும் வெளிவந்த  தருணம்
காதல், ஆயிரம் கடிதம் எழுதிக் கொண்டிருந்த வேளை
காமம் கண்ணாடியாய் ஒட்டி பார்த்திருந்த பூஞ்சோலை
அன்பு வருடி வரவேற்றுக் கொண்டிருந்த கணம்

உறவுகளின் வேர்கள் ஆழப்படும் நேரம்
ஏதும் அறியாது தூக்கம் களவாடிக் கொண்டிருந்த நாளிகை
ஓர்அக்கிரமம் வக்ரமத்துடன் மீசையை முறுக்கிய கோலம்
முதுமை பழமையை ரசித்து வர்ணம் தீட்டிய ஜாலம்
இரும்பு பெட்டிக்குள் கணக்கு பார்த்த பணம்
விஞ்ஞானியின் புலம்பல் ஆரம்பம்பம்

அடுத்த தலைமுறைக்கு இணைத்து வைத்த செல்வம்
அறிவியலின் உச்ச வளர்ச்சியிட்ட அரை கூவல்
அணு உலைகளுக்குள் நடந்தேரிய ஆராய்ச்சிகள்
மனித முயற்சியின் முதுகெலும்பான இனத்தவரின் உரத்த சிந்தனைகள்

யாருக்கு தெரியும் ?

அடுத்த கணத்தில் அரங்கேரப்போகும் பயங்கரம் ?


ஒரு சில நிமிடத்தில்....
 நிலநடுக்கம்...

கடலுக்கு நிகழ்ந்த குழப்பத்தில் அலைகள் வாய் பிளக்க
கரை தாண்டி விரைந்தோடி வந்தது தண்ணீர் பெருக்கம்
அபாய குரல் .. அடி நாக்கின் தூரம் தாண்டவில்லை
இமைகளில் இருந்து கண்ணீர் முழுதாக இறங்கவில்லை
நினைவுகள் ஒரு முறை நினைக்க இடமில்லை

ஆழிபேரலை அள்ளிச் சென்றது எல்லையில்லா உயிரை...

பாதைகள் கற்காலமாய் ஆனது
வீடுகள் தீப்பெட்டி குச்சியாய் சிதறியது
வாகனங்கள் காகித கப்பலாய் மிதந்தது
எல்லாம் பிரவித்த மனிதனின் உடல் எங்கே புதைந்தது ?


மீண்டும் மீண்டெலுவோம் என்று ஊன்றுகோலாய் நின்றாலும்
மாண்டுபோன மனங்களுக்கு என்ன ஆறுதல் சொல்ல ?
அழுவதற்கு கூட ஆள் இல்லாத இடத்தில்
அணு உலைகள் உறுமுகிறதாம் இனி யாரை கொல்ல ?


கடல் எல்லைகளை கைப்பற்றியது குற்றமா ?
அறிவியல் அனைத்தையும் வெள்ளும் எனும் ஆனவமா ?
அழிவு என்பது நிச்சயம் உண்டு என்ற அலட்சியமா ?
எதுவாக, யாராக, எப்படிபட்ட கேள்வியாக இருந்தால் என்ன ?
அங்கு இருந்தவருக்கு மட்டுமே தெரியும் அந்த நிமிடத்தில் ஜப்பான் !!

vidhyasan@gmail.com






செவ்வாய், 15 மார்ச், 2011

எப்போது வருவாய்...

எப்போது வருவாய்...

அடர்ந்த காடாய் இருந்தது என் உதயம்
அடை மழையாய் ஆனது உன் வருகையால்

...சுடும் பாலைவனமாய் என் மனது
மடை வெள்ளமாய் ஆனது உன் பார்வையால்...

நீ எப்போது வருவாய்
எனக்காக ஒரு நிமிடமாவது

நீ எப்போது வருவாய்
எனக்கே எனக்காகவே எப்போதுமாய்

நிமிடத்திடம் உலறியதை உணர்கிறேன்
செல்லும் வழி எல்லாம் நீயாக் கூடாதா என ஏங்குகிறேன்...

வந்து விட்டு செல் போதும்
நீ வந்த தருணத்தை எண்ணிக் கொண்டே
என் ஆயுளை தீர்த்து விடுகிறேன்....

மறந்து விட்டேன் என்று சொல் போதும்
நீ என்னை நினைத்து விட்டாய் என்ற
ஆதங்கத்தில் என் ஆண்டை நீளவிடுகிறேன்...

எப்போது வருவாய் நீ
எப்படி?

சொல்
சொல்
இல்லை
கொல்
கொல்
உடனே...

உனக்குள் இருக்கும்




மெல்லிய இடைவெளியில் நீயும், நானும்
சொல்லிக் கொள்ளும் தூரத்தில் நம் நாவும்
கேட்கும் நீளத்தில் நான்கு  செவியும்
இருப்பினும் இதயத்தில் ஏதோ உதறல்கள்...

எனக்குள் இருப்பதுதான் உ
க்குள்ளுமா ?
உனக்குள் இல்லாதிருப்பது எனக்குள் முளைத்திருக்குமா ?
ச்..சீ.. நமக்குள் என்றான பின் நினைவு மாறுமா ?

இப்படி கேள்விகள் ?  நிமிடத்தில் ஆயிரம்
இமைகளின் விலகலில் கூட உன் நினைவுகளை தேடிடும்
உனக்கும் இது தெரியும் என்பது எனக்கு மட்டுமே புரியும்...


மணி கணக்கில் யோசித்து வைத்திருப்பேன்
உன்னிடம் என்னவெல்லாம் அலாவலாம் என்று
நிமிடக் கணக்கில் மறந்திடுவேன்
நீ தொலைவில் வந்த தருணத்தில் ஏனோ தொலைந்திடுவேன்...


எப்படியோ, எப்போதாவது, எப்படியாவது
என் காதலை, சொல்ல நேரிடும் கணத்தை எதிர்பார்த்து
எதுவாகிய பின்னும், நீயே எனதுயிராவாய் என்றும்
அப்படித்தானா?  இப்படித்தானா ?  உனக்குள் இருக்கும்



சனி, 26 பிப்ரவரி, 2011

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே

                            


முடியும் என்ற வார்த்தை சொல்லி - இனி
ஒவ்வொரு பொழுதுகளும் விடியட்டும்
எழும் தடைகள் யாவும் - இனி
திரை விலகிடும் என இமை பிரியட்டும்...

காலமிட்ட கைவிலங்குகள்
கர்ஜித்து அவிழட்டும்
ஞாலம் யாவும் நம் பெயர் சொல்லி
காற்று பயணிக்கட்டும்...


அடிமை, மடமை,கொடுமை; யாவுமினி
அடுப்பு நெருப்பாக எரியட்டும்
நிஜ உரிமை, முகம் கொண்டு;
நிலம்தனில் நம் பாதம் தடம் பதிக்கட்டும்...


படுக்கைக்கும், இனப் பெருக்கத்திற்கும்
பிறவி எடுத்த இயந்திர வாழ்க்கை புதையட்டும்
உடுக்கை  என ஆண்கள் கையிடுக்கில்
அகப்பட்டு கண்ணீர் வடிக்கும் அவலம் மாறட்டும்...

படிப்புக்கும், படைப்புக்கும்
நம் பெயர் சொல்லி பிறவிகள் எடுக்கட்டும்
துடிக்கும் மீனினமாய் யிருந்த கதைகள் மாறி
விண்மீன் பிடித்து நம்
விரல்கள் விளையாடட்டும்...


வெறும் பேச்சில் மட்டுமிருக்கும் நம் சுதந்திரம் - இனி
விடும் ஒவ்வொரு மூச்சு காற்றிலும் கலந்திருக்கட்டும்
ஏடுகளில் மட்டும் படிந்திருக்கும் நம் உணர்வுகள் - இனி
எல்லோர் இதயங்களிலும் அழுத்தி எழுதட்டும்....


இச்சமூகத்தின் முன் அணு அணுவாய் கொல்லப்படுவதும்
நாளுக்கொரு விதமாய் ஆளுக்கொன்றாய் மெல்லப்படுவதும்
உருக்குலைந்து காய்ந்த சருகாய் காலம் கழிப்பதும் - இனி போதும்
புறப்படு பெண்ணே புது யுகம் படைத்திட  !!

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

நீயே யாதும்

மண்ணில் இல்லா இன்பம்
எது வென்று கேட்டேன்

விண்ணில் இடம் பெறா
அதிசயம் எதுவென்று வினவினேன்
...
கண்ணில் உள்ள சோகத்தை எல்லாம்
கரைக்கும் காட்சி எது வென்று விரைந்தேன்

எண்ணி,எண்ணி மகிழும் 
 நான் என்பது எதுவென்று தேடினேன்...

என் கைதனிலே மின்னி மிதக்கும்
மகளே
நீயே யாதும் என்று அறிந்தேன் !!

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

உன்னைப் போலவே

விழித்துக் கொண்டே
தூக்கம் கொள்கிறது...


ஒளிர்ந்து கொண்டே
ஒலிந்து கொள்கிறது...


சிரித்துக் கொண்டே
சிறிது சிறிதாக தேய்கிறது...


நான்...
இமைகளை மூடி
எங்கே பயணித்தாலும்
என்னுடனே வருகிறது...


வானத்து வெண்ணிலா
உன்னைப் போலவே !!

mvidhyasan@gmail.com

 

செவ்வாய், 25 ஜனவரி, 2011

அவளும், நானும் உரையாடல் - 6

அவள்
என்ன இன்று இந்த பக்கம்

நான்
எப்போதுமே உன் பக்கம் தானே

அவள்
எதை பற்றி இன்றைய படைப்பு


நான்
உன் நகம் பற்றிய படிப்பு

அவள்
நகத்த பத்தியா ? அதுல்ல என்ன இருக்கு ?

நான்
தெரிந்ததை சொல்கிறேன் கேட்க விருப்பமா ?

அவள்
ம்ம்ம்......


நான்

வளரும் வைரம்
நீளும் கோபுரம்
கண்கள் விளையாடும் 20 சதுரங்கம்
வெட்ட வெட்ட எழும் பளிங்கு சுவர்
ரசம் பூசப்படாத கண்ணாடி
திறக்க முடியாத அழகிய பெட்டி
அசைபோடாத பற்கள்
கைப்பிடியில்லா கத்தி
விரல்களின் மூக்குத்தி
தூக்கம் ஏங்கும் தலையனை
கனவு புரளும் படுக்கை
உயிர் உள்ள பனிக்கட்டி
இருதயம் வெட்டும் மண்வெட்டி (மம்பட்டி)
உடையாத முட்டை ஓடு
அதிசய பொட்டல் காடு
ஒட்டி வைக்கப்பட்ட கதவு
தென்றல் இளைப்பாறும் இருக்கை
பேச தெரியாத குட்டி நாக்கு
கற்பனை நிறைந்த வெற்று காகிதம்
பாதம் படாத ஒற்றை படி
நிலா நின்று பார்க்கும் மொட்டை மாடி
அசையாது எரியும் தீபம்
அசையும்ஆமை கூடு
வெள்ளை நிற வழுக்கு பாறை
விரல்களின் மகுடம்
விளக்க முடியாத வரைபடம்
உனது நகம்


அவள்
எப்போது இப்படி எல்லாம் என் நகத்தை பார்த்தீங்க

நான்
நீ அடிக்கடி நகம் கடிப்பாய்
அப்போதெல்லாம் நான் அதில் பாடம் படிப்பேன்

அவள்
நல்லாதான் படிக்குறீங்க

நான்
அப்ப மதிப்பெண் என்ன ?

அவள்
இந்த மதி (போன்ற) பெண் உங்களுக்குதான்

நான்
ம்ம்ம்......

திங்கள், 24 ஜனவரி, 2011

அவளும் நானும் உரையாடல் - 5

அவள்
என்னை மறந்து விட்டீர்களா ?

நான்
என்னை எப்பொழுதும் நான் மறப்பதில்லை

அவள்
நான் என்னை கேட்டேன்

நான்
நானும் அதைத்தான் சொன்னேன்

அவள்

ம்ம்ம்...

நான்
ம்

அவள்
போதும், போதும் இன்று என்ன வருணனை

நான்
எனது கவிக்காக காத்திருக்கும் உன் செவி பற்றி

அவள்
ம்ம்... கேட்க காத்திருக்கு என் செவியே

நான்

ஒரு பக்க சிப்பி
ஒட்டி வைக்கப்பட்ட இரட்டை ரோஜா இதழ்
வண்ணத்து பூச்சியின் ஒற்றை சிறகு
தொங்கிக் கொண்டிருக்கும் கேள்விக் குறி ?
குடைந்து செதுக்கப்பட்ட குகை
இரண்டாக நறுக்கப்பட்ட மாதுளை
ஒலிகள் நடந்து செல்லும் சாலை
பறவைகள் கட்ட துடிக்கும் கூடு
முழுமையடையாத கருவறை
ஊர்ந்து செல்ல முடியாத நத்தை
கடலில் கிடைக்காத சங்கு
முளைக்காத விதை
மெல்லிய மேக இலை
வண்ணமில்லாத மயில் தோகை
படமெடுத்தாடும் நாகத்தின் தலை
அழியாத கால் தடம்
நாண்ஏற்றாத வில்
ஆணவம் கொள்ளும் ஆங்கில எழுத்து 3,21
காற்று ஏங்கும் அழகிய விசிறி
நான் மட்டும் நீந்தி குளிக்கும் குளம்

அவள்
அடடா செவிக்கு இத்தனை அர்த்தம் உண்டா?

நான்
நான் கண்டது குறைவுதான்
உன் செவி கொண்ட அழகு கோடிதான்

அவள்
ஒன்றை சொல்ல மறந்து விட்டீர்களே

நான்
ம்ம்ம்... கண்டுபிடித்து விட்டாயே

அவள்
அது என்ன ? என்ன ? சொல்லுங்க !

நான்
வழியும் துளி
அதன் நுனியில் ஆடி, பாடுது தோடு எனும் தோழி

அவள்
ம்ம்ம்....

நான்
ம்ம்ம் என்றால்

அவள்
ம்ம்ம்ம்ம்ம்ம......... தான் !

புதன், 19 ஜனவரி, 2011

தை பிறந்தால்

தை பிறந்தால் புது வழி பிறக்கும்
இந்த வாசகம் உண்மையாகட்டும்

தட்டினால் காற்றில் பறக்கும் தூசாக

நம்மில் தோழ்விகள் மட்டும் வீழட்டும்

விண்ணும் முட்டி உடையும் அளவு

மனித நேயம் பெருகட்டும்

மண்ணில் உழவர் சிந்தும் வியர்வையில்

பொங்கும் கடலின் தாகம் அடங்கட்டும்

முடியும் என்ற நம்பிக்கை கொண்டு

விடும் மூச்சு காற்று வெளியேறட்டும்

இருள் இடிந்து விடியும் பொழுதுகளில்

உரக்க நம் பெயர் சொல்லி சூரியன் உதிக்கட்டும்

அடிமை என்னும் கசப்பு நீங்கி

அனைவரும் சமம் என்று
அடிக் கரும்பாய் இந்த பொங்கல் இனிக்கட்டும் !!

 

புதன், 29 டிசம்பர், 2010

என்னை தவிர

மெலிந்துபோன இடையில் நீ
வைத்திருப்பது குடமா?
இல்லையது அழகிய மகுடமா !

உன் வளை கரத்தால்
வளைத்து பிடித்திருப்பதால்
மண்ணும் விலையில்லா அழகானது !

நீ வைத்திருப்பது வெற்றுகுடமா?
பின்பு ஏன் காற்று காத்திருக்கிறது
தன்னை நிரப்பிக் கொண்டு குளிர!

பல்லவன் காணவில்லை
இதை  பார்த்திருந்தால் சிலை வடிக்க
புவியில் கல்லில்லை என்று புலம்பியிருப்பான்!

புத்தரும் புதைந்து விட்டார் இல்லையேல்
புது ஓவியமென்று உன் மீது ஆசை என்று
ஒப்புக் கொண்டிருப்பார் !

ரவிவர்மன் ரசித்திருந்தால் மட்டும் என்ன?
உனை வரைய வண்ணமில்லை என்று
விரலை ஒடித்தருப்பான்!

பாரதியும் இதை  கண்டிருந்தால்
பாட்டில் வடிக்க இயலாத
பாவை என்று ஏட்டில் எழுதி வைத்திருப்பான்!

என்னை தவிர
என்னவளை
யாரால் - இப்படி
கவியில் பூட்டி வைக்க முடியும்!!

வித்யாசன்

செவ்வாய், 28 டிசம்பர், 2010

தாண்டிய போது

கண்ணீரின் உலகம்;
வலியின் வசிப்பிடம்

துயரம் தூங்கும் விடுதி;
மரணம் விழுங்கும் ஆலயம்


அலரல் சப்தத்திற்கு நடுவே
அவரவர் இருப்பிடம்

வேதனையை தீர்க்க,
தீர்த்தம் தரப்படுகிறது மருந்தாக

 ரணம் ஆற, பல வண்ணத்தில்
வாயில் நுழைகிறது மாத்திரையாக

பெரும் சோக கதை;
நீளும் உடல் பரிசோதனை

நிஜமான வெள்ளை தேவதைகள்
இங்கே புன்னகையுடன் வலம்

அவ்வப்போது மறு பிறவி
அறுவை சிகிச்சை அறையிலிருந்து

மருத்துவர் பிரம்மாவாக;
மரண தீர்ப்பை ஒத்தி வைத்து எழுதும்போது

வீரனும், அறிஞனும், ஏழையும், யாராயினும்
ஒன்றுதானாம் இதற்கு முன் (நோய்)

எது எதுவோ பெரிது என்று
எண்ணிய என் மனதின்று;
இனி யாரும் - மறுமுறை
இங்கே வராதிருப்பதே சிறந்ததென்று;

உள்ளம் உணர்ந்தது
மருத்துவமனையை தாண்டிய போது !!



செவ்வாய், 21 டிசம்பர், 2010

தனிமை



நமக்கு நம்மை காட்டும்
ரசமில்லா கண்ணாடி

நினைவுகளை படம் பிடிக்கும்
ஒலி,ஒளி யில்லா ஊடகம்

மெளனத்தின் இதழ்கள் படிக்கும்
அர்த்தமுள்ள புத்தகம்

தோய்ந்து போன கனவுகளை
உலர்த்தி ரசிக்வைக்கும் தருணம்

நிமிடங்களின் இடுக்கில் அமர்ந்திருக்கும்
இடைவெளியை மீட்டும் புது ஸ்வரம்

சுதந்திரத்தின் சுகந்தத்தை
கற்றுத் தரும் கரு மந்திரம்

தொலைவில் போனதை எல்லாம்
தொடும் தூரத்தில் கொண்டு வரும் வரம்

ஒரு நிமிடம் தனித்து பார்
மரணத்தின் பிந்தைய ரகசியம் சொல்லும்
தனிமை !!
அன்பு மலர்

திங்கள், 20 டிசம்பர், 2010

பின்னால்

ஒரு சிலைக்கு பின்னால்
அடி வாங்கி அலங்கரித்த உளி மறைந்திருக்கிறது


ஒரு ஓவியத்திற்கு பின்னால்
பல வண்ணங்களை உடுத்திய தூரிகை ஒலிந்திருக்கிறது


ஒரு பட்டு சேலைக்கு பின்னால்
பல்லாயிர பட்டு பூச்சிகளின் உயிர் படிந்திருக்கிறது


ஒரு மலருக்கு பின்னால்
உயிர் கொடுத்த வேர்கள் புதைந்திருக்கிறது


ஒரு ஒளிக்கு பின்னால்
இருளின் குவியல்கள் குவிந்து கிடக்கிறது


ஒரு மழைத்துளிக்கு பின்னால்
காற்றின் கால்தடங்கள் கலைந்திருக்கிறது


ஒரு நிமிடத்திற்கு பின்னால்
பல்லாயிர கணக்கான காலங்கள் உரைந்து கிடக்கிறது


ஒரு வெற்றிக்கு பின்னால்
உயிரை புரட்டி பார்த்த தோழ்விகள் பதுங்கியிருக்கிறது


ஒரு ஒலிக்கு பின்னால்
உருமில்லா இசை பின்னல்கள் பினைந்துகிடக்கிறது


ஒரு துன்பத்திற்கு பின்னால்
துளிகளின் வடிவில் கண்ணீர் கடல் கவிழ்ந்திருக்கிறது


ஒரு கவிதைக்கு பின்னால்
ஓராயிரம் கற்பனைகள் வடிகட்டியிருக்கிறது


ஒரு முதுமைக்கு பின்னால்
இளமையின் ரகசியங்கள் தொலைந்திருக்கிறது


ஒரு திறமைக்கு பின்னால்
இடைவிடாத முயற்சியின் சுவர் எழுந்திருக்கிறது


உலகில் உள்ள ஒவ்வொன்றிற்கு பின்னாலும்
கதை எழுத காத்திருக்கிறது


இயற்கையின் அதிசயங்கள் !!



 

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

புத்தாண்டு 2011

யாதும் சமமென்று யாவரும் கூடுவோம் 1
சாதி உண்டு - ஆண்,பெண் என்ற 2
அன்பின் மடியில் மலரும் நம் மதங்கள் 3
வெற்றியை சுமந்து பயணிக்கும் திசைகள் 4
அதிசியங்கள் நிறைந்து வழியும் சக்தியான பூதங்கள் 5
அனைத்தையும் ஆளும் அறிவானது 6
வானவில் நம் வாழ்க்கையில் குலைக்கட்டும் வர்ணங்கள் 7
தோழ்விகள் தொடர்ந்தாலும் சோர்வடையாது லட்சியம் 8
நம் பெயர் சொல்லி சுழலட்டும் கோள்கள் 9
நம்பிக்கையின் மூலனதனமாய் நம் விரல்கள் 10
புது ஒளி கொண்டு வழி ஒன்று பிறக்கிறது 2011

சனி, 18 டிசம்பர், 2010

புத்தாண்டு 2011




புழுதி படிந்த நமது கலாச்சாரம் - இந்த

புத்தாண்டில் புத்தாடை அணியட்டும்;

பழுதடைந்த நமது பண்பாடு - இன்றோடு

பாரதத்தில் புதையுண்டு அழியட்டும் !



சுருங்கி கிடக்கும் நமது உள்ளம் - இனி

பரந்து இருக்கும் வானம் ஆகட்டும்;

கிழிந்துபோன பழைய தேதியாக -  நம்மில்

சாதிகள்  ஒழிந்து போகட்டும் !



பதுக்கி வைத்திருக்கும் பணங்களை எல்லாம்

ஏழைக்கு பகிர்தளிக்க முடிவெடுப்போம்;

ஒதுக்கி வைக்கும் இன, மதங்களை யாவும்

குப்பையில் பெருக்கி தள்ள தோள்கொடுப்போம் !





அறிவியல் வளர்ச்சி, அழிவுக்கு வழி விடுவதை

புது முயற்சிகள் மூலம் முறியடிப்போம்;

அமுதும் ஏங்கும் தமிழை இன்னும்

அதிகம் கவிதை எழுதி அழகாய் விதைப்போம் !



வானம் முட்டி உடையும் அளவு

மனித நேயம் எட்டி வளரட்டும்;

கானக் குயில்களின் இன்னிசை மட்டும்

நம் காதுகளை துளைக்கட்டும் !





கடந்த காலம் துன்பங்கள் யாவும்

இறந்த காலம்  ஆகட்டும்;

இனி கடக்கப்போகும் ஒவ்வொரு கணமும்

நமக்குள் புது சக்திகள் பிறக்கட்டும் !



இருட்டு எனும் அழுக்கு வேட்டி - (இன்றோடு)

வானம் விட்டு கிழியட்டும்;

வெளுப்பு எனும் ஆடை கட்டி  - (புதிய)

கிழக்கு முட்டி முளைக்கட்டும் !





                                                                              வித்யாசன்........

சனி, 11 டிசம்பர், 2010

மழை துளி

மேகம் கருப்பு கொடி ஏற்றி வடிக்கிறது கண்ணீர் துளி 
தற்கொலை செய்து கொள்ளும் அழகிய விழி

பூமி எனும் எழுத்தில் வானம் வைக்கிறது புள்ளி
எல்லோரையும் குழந்தையாக மாற்றும் பள்ளி
உருகி வடிகிறது வின்னிலிருந்து புது வெள்ளி
பேதம் என்று எவரையும் பார்பதில்லை தள்ளி
வானம் உடைந்து குதிக்கிறது துள்ளி
விழுந்ததும் மறைந்திடும் கள்ளி

இனிக்கும் நெல்லி
சொட்டுகிறது (தெழி)
மழை துளி !!

செவ்வாய், 30 நவம்பர், 2010

அவளும்-நானும் உரையாடல்- 4

அவள்
என்ன வெகு நாட்களாக காணவில்லை

நான்
கரை கடந்து கரைந்து கொண்டிருந்தேன் உன் நினைவில்

அவள்
        ம்ஹீம்.....

நான்
நீ என்ன செய்தாய்

அவள்
ரசிப்பவர் எப்போது வருவார் என்று உள்ளங்கை ரேகையில் தேடிக் கொண்டிருந்தேன்...

நான்
ம்ம்.....

அவள்
இன்று என்ன ?

நான்
என்னை தேடிக் கொண்டிருந்த உனதுள்ளங்கை பற்றி

அவள்
ம்ம்ம்.... சொல்லுங்க

நான்
நான் மட்டும் நடந்து செல்லும் சாலை
மீன்கள் நீந்த துடிக்கும் நதி
இலைகள் இல்லாத கிளை
மின்னி மறையாத மின்னல்
அழியாத அழகிய கோலம்
இசை மீட்டும் தந்தி
பூக்கள் கட்டிக் கொள்ள ஏங்கும் நார்
வண்ணத்து பூச்சி பொறமை கொள்ளும் நூலிழை
இளவம் பஞ்சு இளையாறும் படுக்கை
காற்று வந்தமரும் இருக்கை
விதையில்லா வேர்
விழிகள் விளையாடும் சதுரங்கம்
சிலந்தி பூச்சி கட்ட முடியற்சிக்கும் கூடு
முகம் காட்டாத ஒட்டி/உடைந்த கண்ணாடி
குறுக்கு, நெடுக்காக கட்டப்பட்ட கோபுரம்
வண்ணங்கள் ரசிக்கும் ஓவியம்
வற்றாது பாயும் நீர்வீழ்ச்சி
மணல் இல்லா பாலைவனம்
சிதறி கிடக்கும் சிப்பி ஓடு
மிதந்து உறங்கும் அதிசய கோடு
இயற்கையால் பின்னப்பட்ட கயிறு
உதிராத மரப்பட்டை
மிகப் பெரிய இறகு
மேகம் உரச தவமிருக்கும் முகடு
கூட்டல், பெருக்கல், வகுத்தல் காட்டும் கணக்கேடு
ரசிக்க வைக்கும் ரகசிய கிறுக்கல்
ஒவ்வொரு தடங்களும் புதுமை
ஆயிரம் உவமைகளை ஒலித்து வைத்திருக்கிறது
உனது உள்ளங்கை!!


அவள்
       ம்ம்.........

நான்
குறைவாக சொன்னதை அறிவேன்
நிறைவாக இன்னொரு நாள் சொல்கிறேன்
இப்போது விடை பெறுகிறேன்...


அவள்
அடுத்து எப்போது ?

நான்
சந்திப்பு நடக்கும்போது !!
அன்பு மலர்

Mvidhyasan@gmail.com.................