சனி, 9 அக்டோபர், 2010

யார் நீ ?


நிலவா?
வட்டமா?

பூஜ்ஜியமா?
உலா வரும் கோளா?

நாணயத்தின் முகமா?
புல்லாங்குழ
லின் துளையா?

பூமி பந்தின் ஒரு தோற்றமா?
காலத்தை நகர்த்தும் சக்கரமா?
 

கொதித்து எரியும் சூரிய தட்டா?
சிப்பிக்குள் ஒலிந்திருக்கும் முத்தா?

உயிர் எழுத்துகளின் ஒலிக்கு உடலா?
நெற்றியில் ஒட்டிருப்பதால் பொட்டா?

புல்லில் படுத்துறங்கும் பனித் துளியா?
உடலில் ஒட்டிக் கொண்டிக்கும் மச்சமா?

தண்ணீரில் தள்ளாடும் தாமரை இலையா?
மயிலிறகின் மையத்தில் இருக்கும் அழகா?

சொட்டு சொட்டாக அவிழ்வதால் மழையா?
என் காதலியின் கன்னத்தில் உதித்த பருவா?

மணிக் கைகளில் விளையாடும் வளையலா?
அங்கும் இங்குமாய் அலைபாயும் கருவிழியா?

எழுத்து வடிவத்திற்கு உயிர் ஈட்டும் உருவமா?
தாயின் உறவை உயிர்பிக்கும் தொப்புள் கொடியா?

அகிலம்   எல்லாம்  நீயே   என்ற  கர்வத்தின்  உச்சமா?

யார் நீ ?

நானா.... ?

சிறு புள்ளி !!

நன்றி

கேள்விக்குறி ?

உன்னை பற்றி என்ன எழுத ?
எழுத்து பிழையாக நான் ...

எதனை ஒப்பிட்டுச் சொல்ல ?
எல்லாமே உனக்கு எஞ்சியதுதான்...

உன்னை குறித்து என்ன சொல்லிவிட முடியும் ?
வார்த்தைகளை தேடி அலையும் என்னால்...

உனக்குகென்று எதை கொடுப்பேன் ?
என்னை தவிர எனதென்று ஏதுமில்லா உலகத்தில்...

எப்போது படித்து முடிப்பேன் ?
ஒவ்வொரு நிமிடமும் ஒரு புத்தகமாய் நீ...

உன் கனவுகளை எப்படி அலங்கரிப்பேன் ?
என் தூக்கத்தை தொலைத்து விழிப்பதால்...

உனது அழகை எங்கே வர்ணிப்பது ?
உன் முன் ஊமையாகும் என் இதழ்களால்...

உன் அசைவுகளை என்னென்று ரசிப்பது ?
அடிக்கொருமுறை நீ ஓவியமாக மாறும் நிமிடத்தில்...

உன் உலகத்தில் எந்த இடத்தில் நான் இருப்பது ?
என் உலகமே நீயான பின்பு ?
 
பாடகன்

வெள்ளி, 8 அக்டோபர், 2010

எய்ட்ஸ் 11

எய்ட்ஸ் 10

எய்ட்ஸ் 9

எய்ட்ஸ் 8

எய்ட்ஸ் 7

எய்ட்ஸ் 6

எய்ட்ஸ் 5

எய்ட்ஸ் 4

புதன், 6 அக்டோபர், 2010

காதல் கிறுக்கல்கள்



எப்படி நுழைந்தாய்
காற்றை மட்டும் அனுமதித்த என் இதயத்திற்குள் !

தவறுகள் செய்வதுண்டு
உன் திருத்தல்கள்  ரசிப்பதற்காக !

உனக்குள் நான் !
யார் சொன்னது நமக்குள் நாமே !

ஒரு வார்த்தை சொன்னது
இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது
என் பெயரை நீ உச்சரித்த சுகம் !

நீ சொல்லா விட்டால் எனக்கென்ன
புரியாத ?
உன் இமைகளின் காதல் பாசைகள் எனக்கு !

என்னையும் திருத்துகின்றன
கவலையில் நான் கவிழும் வேளையில்
உன் நினைவுகள் !

இவனுக்குள்ளும் ரசனையை
வரைந்து காட்டியது உனது மெளனம் தான் !

இது போதும் பிறந்ததற்கு
உன் கொழுசுகளின் மொழிகள் 
எனக்கு புரிந்தால் !

நான்
னக்கான பின்பு
நீ ஆனாய் எனது முற்றும் !

உன் உள்ள உதடு
எப்போதும் என்னை உடைப்பதில்லை
நான் உடுத்து கொண்டிருப்பதால் !

எனக்குள்ளே நிகழும் மாற்றங்கள்
அது உன் நினைவுகளின் ராட்டினங்கள் !

இவ்வுலகில் எனக்கென்று ஒன்று உண்டு
உன்னைத் தவிர வேறு ஏது ஒன்று !

எதாவது புரிந்ததா ?
உன்னைத் தவிர
என்னை முழுமையாக
 புரிந்த கொள்ள யாரால் முடியும் !

எனக்கும் புரியவில்லை ?
உனக்கு என்னை எப்படி புரிந்தது என்று !

இதை தான் காதல் கிறுக்கல்கள்
என்று சொல்லுவார்களோ ?

 
இல்லை இது செதுக்கல்கள் செதுக்கல்கள் !!



MVIDHYASAN@GMAIL.COM . பாடகன்

செவ்வாய், 5 அக்டோபர், 2010

எய்ட்ஸ் 3

எய்ட்ஸ் 2

எய்ட்ஸ் 1

ஆப்பிள்


ஆதாம் ஏவாலின்
முதல் காதல் பரிசு...

நீயூட்டனை அறிமுகப்படுத்திய
அதிசய உலகம்

சிம்லா, காஷ்மீரின்
சிவப்பு தேவதைகள்...

5 இதழ்களுடைய
வெள்ளை நிற பூக்கள்..

7500 இன வகைகள்
கொண்ட மருந்துவன்...


மத்திய ஆசியா நிலப்பரப்பு
இதன் முதல் பிறப்பு...

இப்பொழுதும்...
பழக்கடையை கடக்கும் போதேல்லாம்
இமைக்காமல் பார்க்கிறது இமையில்லா ஆப்பிள் !!

திங்கள், 4 அக்டோபர், 2010

காதல் கடிதம்.



நீ கேட்ட அந்த நிமிடம்

வானம் வெள்ளை தாளானது

வானவில் எழுதுகோலானது

விண்மீன்கள் வார்த்தையானது

வெண்ணிலா, சூரியன் புள்ளியானது

அனுப்பிவைக்க காற்று தகுதியானது

படித்து பார்க்க உனக்கே உருவானது

படைத்து விட்டேன் அது உனக்கென்றதும்
ஏனோ கவிதையானது.

உன் முத்தம்




இரட்டை  அலை 

 
ஒற்றை முறை

 
என் மீது மோதியதில்

 
உடைந்தே போனது

 
என் மனக்கரை !!

தொலைவில் உன்னை

எனது நெடுந்தூர தனிமை பயணத்தில்
உன் நினைவே துணை....

மெளனம் நிலை கொண்டிருக்கும் தருணத்தில்
உன் பேச்சின் நினைவே இசை...

கனவுகளின் மடியில் நான் கைதாகும்போதெல்லாம்
உன் வருகையின் எதிர்பார்ப்பே சுகம்...

தென்றல் உரசி போகும் வேளையில்
உன் சுவாச நுனி தொடும் இதம்...

ஏதேதோ மாற்றம் நிறைந்த வழித்தடம்.
அந்த வழி எங்கும் நான் தேடி அலைவது
உன் கால் தடம்...


கலையும் மேகம் ஓவியம் கோடிவரைந்தாலும், 

மேகம் கூடி வரும் போதெல்லாம்
இமை எனும் தூரிகை உன்னையே வரைகிறது...

இயலாமையின் கொடுமை
இழப்பின் அருமை
பிரிவின் ஆழம்
துயரின் துயரம்
உணர்கிறேன்
நீ தூரம் சென்ற நிமிடம்...

கதை சொல்ல உதடுகள் காத்திருக்கிறது
எங்கே உன் செவி ?

பார்த்தே அதிசயிக்க துடிக்கிறது விழிகள்
எங்கே உன் முகம் ?

நனைந்து கொண்டே நடக்க பொழி
கிறது மழை
எங்கே உன் வருகை ?

தொலையும் வாழ்க்கையின் கரையில்
தொலைந்து, தொலைத்து தேடுகிறேன்
தொலைவில் உன்னை !!



பாடகன்

சனி, 2 அக்டோபர், 2010

நீ

உயிரோடு என்னைக் கொல்கின்றாய்
என் அன்பே...
உயிர் போனாலும் நியே என்றும்
என் கனவே...
அலையோடு கடல் பேசும்
உன் அழகே...
ஆதம் ஏவாளின்
நீ மகளே...


ஏதோ செய்கிறாய், ஏதோ சொல்கிறாய்
ஏனோ என்னை நீ  இழுக்கிறாய்....

என்னி ல் அறியாது, கண்ணில் தெரியாது
காற்றை  போல நீ நுழைக்கிறாய்...

புதுமாற்றங்களை நீ புகுத்திவிட்டாய்
எனை தோற்கடித்து  நீ தோற்றுவிட்டாய்!!

வாளும் இல்வை, போரும் இல்லை
காயம் நூறு நீ தந்தாய்...

வானம் இருந்தும், பூமி இருந்தும்
நீ ஏன் என்னை  தீவாக்கினாய்...

உயிர் மூச்சினிலே நீ கலந்து விட்டாய்
உன் பெயரை சொல்லி எனை தினம் புலம்பவிட்டாய் !!

புதன், 29 செப்டம்பர், 2010

தூக்கம் 7 - இதை எழுதியது 30 நிமிடத்தில் இரவு 10 மணி . ஒளி,ஒலி இணைப்புக்குதான் நீண்ட நேரம் ஆகிவிட்டது. இதற்காக என்னோடு தம்பி வரதன் இத் தொகுப்பிற்கான காட்சி இணைப்பு பணியினை செய்தார். எனது எல்லா படைப்புகளுக்கும் பின்னால் வரதன் உள்ளான். அதற்காக நன்றியை தெரிவிக் கொள்கிறேன். மீண்டும் நாங்கள் இணைவோம் என்ற நம்பிக்கையில்.

தூக்கம் 6

தூக்கம் 5

தூக்கம் 4

தூக்கம் 3

தூக்கம் 2

தூக்கம் 1 (இந்த பகுதியை முடிக்க இரவு 3 மணி ஆனது. முடித்து சந்தோசத்தில் நான் தூங்கிவிட்டேன் அயர்ந்து. ஒரு நாள் விடுமுறை. மறக்க முடியாத அனுபவ தூக்கம் இது)

சனி, 25 செப்டம்பர், 2010

விபத்து 8 ( part end_ this video"s story writing ,pictures, video, voice _all of me )

விபத்து 7

விபத்து 6

விபத்து 5

விபத்து 4

விபத்து 3

விபத்து 2

விபத்து 1 I ( my own creation in 2009 tv )

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

தாய்மையோடு ஒருத்தி

இதில் மட்டும்தான்
சுமைகள் கூட, கூட
சுகங்கள் அதிகரிக்கும்...

ஒவ்வொரு நிமிடமும்
கடந்து செல்வதற்குள்
ஓராயிரம் யுகங்கள் இருப்பது
கண்டுபிடிக்கப்படும்...

முதன் முதலாக
வீட்டு தேதிகள் கிழிப்பதற்கு
கைகள் தவமிருக்கும்...

அடிக்கடி
பயமும், பரவசமும்
ஒரே நேரத்தில் சந்திக்கும்...

ஒவ்வொரு...
செயல்களிலும் ஈடுபடும்போது
எச்சரிக்கை ஒலிகள்
அலைகளாக வந்து சேரும்...


இளமைப் பருவத்தில்
முதுமைப் பருவத்தின்
அனுபவம் கற்றுக் கொடுக்கப்படும்
தள்ளாடி நடக்கையில்...


உறங்கும் வேளையில்
எட்டி உதைத்து எழுப்புவதுண்டு
குட்டி பாதச்சுவடுகள்
உலகத்திற்குள்...

அங்கும் இங்குமாய் நிகழும்
அசைவுகளும்,நெழிவுகளும்
அழகிய கவிதையாகிறது...

கண்ணாடி வளையல்களுக்குள்
ஒலிந்து கொண்டது கைகளும்,
கைரேகைகளும்...

பெயர் சூட்டுவதற்கு
இப்பொழுதே மனதிற்குள்
மாபெரும் மாநாடு நடக்கும்...

தாயின் தன்மையை
உணர்கிறேன் கருவில்
உருவை சுமக்கையில்...

இன்னும்
சில தினங்களில்
விதைக்கப்போகிறேன்
இன்னொரு தலைமுறையை
(இல்லை)
மீண்டும் என்னை...

உலகத்தில்
உயர்ந்தது இதுதான்
படைப்பதால், கடவுளாவதால்...

கனவுகளின் பிம்பங்களோடு
காலத்தடங்கின் சின்னங்களோடு
காத்திருக்கிறாள்..

அம்மா என்று அழைக்கும்
அந்த நிமிடத்திற்காகவும்
தனக்கு மட்டும் புரியும்
அழகிய மொழிக்காகவும்...

ஆவலோடு
அடி வயிற்றை தடவிக்கொண்டு
தாய்மையோடு
ஒருத்தி...

ஆமாம்
ஒவ்வொரு
பெண்ணுக்கும்
இது ..
தன்னை அளந்து பார்க்கும் காலம்
தனக்குள் நிகழும் மாற்றங்களை
உணர்ந்து பூக்கும் தருணம்...

பூமிப்பந்தின் பேரானந்தம்
ஒவ்வொரு பெண்ணுக்கும்
இது...
புது ஜென்மம்தான் !!

வித்யாசன்.
ஐ லவ் யூ

வியாழன், 23 செப்டம்பர், 2010

எங்கே போனாய் தோழி


எங்கே போனாய் தோழி


நீ யாரோ
நான் யாரோ


பிறந்ததும், வளர்ந்ததும்
வேறு, வேறு இடம்

இணைந்தததோ
இணையதளத்திடம்

எதார்த்தமாக எங்கு அமர்ந்தாலும்
வண்ணத்துப் பூச்சியின் வண்ணம்
ஒட்டிக் கொள்வது போல்
பழகியதும் சிறகு விரித்தது நம் நட்பு


எனக்காதரவு நீயானாய்
உனக்காதரவு நானானேன்

தொலைவில் நாமிருந்தாலும்
தொடும் தூரத்தில்தான் நம் நினைவுகள்

வலிநேரிடும் போதெல்லாம்
ஓடி வருவாய் என்னிடம்
மருத்துவன் நான் என்று...

மகிழ்வோடு விளையாடும்போது
ஒரு குழந்தையாகவே மாறிவிடுவாய் 
நட்பெனும் மயிலிறகு தீண்டும் போது...

எனக்கு மட்டும்தான் தெரியும்
நீ தோழமையின் பூந் தோப்பு என்று...

எனக்கு மட்டும்தான் புரியும்
உன் நேசத்தின் மொழி  பெயர்ப்பு...

ஏதோ காரணம்
விலகி விட்டாய்
இல்லை
விளையாடி பார்க்கிறாய்...

கண்ணாமூச்சு ஆட்டடமாய் ஆனது வாழ்க்கை
உன் விரல் பிடித்து சென்ற வழி எல்லாம் கேட்கிறது
எங்கே  உன் நிழல் என்று...

நிலை மாறும் உலகத்தில்
தடுமாறும் நிமிடத்தில்
எங்கே நீ இருந்தாலும்

உனக்கென்று ஒன்று இல்லை என்று
ஓய்ந்து விடும் காலத்தில்
உடைந்து விடாதே...
நட்பெனும் நம் வீட்டு
கதவு திறந்து இருக்கு மறந்துவிடாதே...


எப்பொழுதும்...
இணையதளம் வரும்போது எல்லாம்
இணை பிரிவதில்லை
இளையுதிர் காலமாய்
இன்னும் நிகழ்கிறது
நமக்குள் முட்டிக் கொண்டு
நாம் ஒட்டிக் கொள்ள காரணமாக இருந்த
அந்த முதல் வார்த்தைகள்...

உன் பெயர் உள்ளவரிடம் எல்லாம்
உரிமையோடு உரையாடுகிறேன்
அது நீயாக இருக்கலாமோ என்று...

நீ..

எப்படி

தோழி...

அப்படிதானா
என்னையும் தேடுகிறாய்



வித்யாசன்


பாடகன்






புதன், 22 செப்டம்பர், 2010

அதிசய உலகம் நீ மட்டுமே

ஏதேதோ பேசிக் கொண்டே
உன்னையே பார்ப்பேன் நான்
ம்ம்... என்று சொல்லிக்கொண்டே
குழந்தையாக என்னையே பார்ப்பாய் நீ...

நீ தூங்குவதை நான் பார்க்க விழித்திருக்கிறேன்
என்று சொல்லிவிட்டு
நான் தூங்கும் அழகை
நீ ரசித்த இரவுகள்தான் அதிகம்...

உனக்காக செய்யும் எல்லாவற்றிலும்
எனக்கானதை நான் மறந்துவிடுவதுண்டு
எனக்காக நான் எதை தேர்வு செய்தாலும்
அது உனக்கு பிடித்திருக்கவே ஆசைபடுவதுண்டு...

வீட்டின் நாட்குறிப்பேட்டில் உள்ள
தினங்களில் சிகப்பு நாட்களை
மட்டுமே நான் நேசிக்கிறேன்
உன் விடுப்பு தினம் அது என்பதால்.....

அலுவலக நெருங்கும் நேரம்
நீ அரக்க, பறக்க கிளம்பும் தருணம்
அழுக்கு படிந்த முக வியர்வையை புடவையில் மறைத்து
கதவோரும் நானிருந்து இமைக்காது கையசைப்பது சுகம்...

நெடுந்தூரம் உன்னோடு நான் பயணிக்கும் வேளையில்
இது அதுவென்று, அது இதுவென்று
என்று சாலையில் விவரிப்பாயே அப்போது
உன் தோள் சாய்ந்து கேட்பது இதம்...

உனக்காக காத்திருக்கும் எண்ணற்ற
உலகத்துக்கு மத்தியில்
நமக்காக வாழும் போதும்
எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே !!

 பாடகன்

--------mvidhyasan@gmail.com

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

இன்னும் இன்னும்

இதுவரை...
தூசுபடிந்த இடம்
தூங்கா சொர்க்கமானது
நீ வந்ததும்...

சில நொடிக்கு முன் வரை
இது...
பாலைவம் என்றவர்கள்
பால் நிலா உவா வரும்
விண்ணுலகம் என்றனர்
உன் பார்வை பட்டதும்...


வெறும் மூங்கில் காடு
இதுவென்று வட்டமிட்ட வண்டுகள்
தேன் கூடு என்று தேனீக்களுக்கு
தகவல் சத்தம் கொடுக்கிறது
உன் விரல் பட்டதும்...

விழுந்ததும்அருவம் தெரியாது
உடைந்திடும் மழைத்துளி...
ஊஞ்சல் என்றும்,அருவி என்றும் பாய்ந்ததாம்
என் தோழிலும், மாரிலும் விழுகையில்...

புழுதிகளை உடுத்திக் கொண்டு
புலம்பிய பூங் காற்று...
புதுப் புலவராக மாறி
ம்ம்... என்ற சத்தமும் கவிதையயன்றதாம்
உன் மூச்சுக்காற்றாய் நுழைந்ததும்...

கைதட்டி, கைகாட்டி
வரவேற்று,வழி அனுப்பிய மர இலைகள்...
விசிறியாகவும், தலையாட்டி பொம்மையாகவும்
உதிரும் இதயமாகவும்,காதல் கடிதமாகவும் உருமாறி போகிறது
நீ கடக்கும்
(தவறு)
மிதக்கும் தருணத்தில்...


சுட்டு பார்த்த சூரியனுக்கு
கொதிக்கும் காய்சலாம்
தெரிந்தும் மீண்டும், மீண்டும் சுடுகிறது
உன் மேனி தொட்டு பார்த்து காய்ச்சல் கூட்ட...

விந்தையின்
சந்தையில்
விலை கேட்கிறது
இயற்கையை
உன் அழகா?

அல்ல ...


அசைந்து, இசைந்து
குவிந்து,வளைந்து
நெளிந்து, உலர்ந்து
சிவந்து,முதிர்ந்து
இன்னும் இன்னும்
என்று எல்லாவற்றையும்
சுட்டு விரல் நீளத்தில்
சுட்டிலுக்கும்
சூட்சமம் கொண்ட
உந்தன்
இரட்டை இதழ்தான் !!

--------------------Mvidhyasan@gmail.com

வியாழன், 16 செப்டம்பர், 2010

அந்த தருணம்

எதிர் பார்க்க வில்லை
இது நிகழும் என்று...


இயற்கையில் மாற்றங்கள்
ஏற்பட்டதை உணரவில்லை...

சற்றும் தோனவில்லை
சந்தர்ப்பம் அமையும் என்று...


இதய கதவுகள் சாத்தியிருந்தும்
உள் நுழைந்தது எப்படி ?

இரு விழிகள் விழித்திருந்தும்
கனவாக மாறியது எதனால் ?

நடந்து முடிந்த நிமிடம் தாண்டி
இன்னும் நீங்கவில்லை நினைவு கரை மோதி

மறுபடியும் நிகழுமா
?
நீ....
கடந்து செல்லும் அந்த தருணம்!!


----------Mvidhyasan@gmail.com

கனவு


இது....
ஜன்னல்களை எட்டி பார்க்கும்
பூங்காற்று அல்ல...


எப்போதுமாய் ஏதோதோ
வந்து போகும் காட்சி அல்ல..


ரத்தம் பிலிறும் சத்தம்
லட்சியத்தின் வெறியில்
இரவின் உச்சியில் எழுந்த நர்த்தனம்
இந்த கனவு...
இது...

 இமைகளை மூடிக்கொண்ட
முனங்கல் அல்ல
விழிகளை கிழித்துக்கொண்டு
சீறி எழுந்த உணர்வு...

நரம்புகள்
போர்க்களமாக மாறும் !
உணர்வுகள்
உரக்க தாளம் போடும்!


ஏ... கனவே.... கனவே...
நீ களைந்து விடாதே !
நீ களைத்து  விடாதே !
தோல்வி கதறி
அழுது கேட்டாலும்
நீ கலங்கி விடாதே !
என்று முழங்கிய கனவு இது...

தோற்று, தோற்று
போனதெல்லாம்
நேற்று, நேற்று, என்று சொல்லி
போனகதை போதுமடா !
உயிர் கூட்டை விட்டு
பிரியும் கனம் எதுவென்று
தெரியாத பின்னே இன்னும்
தூக்கம் ஏனடா !
என்று எனை துப்பி
எழுப்பிய கனவு இது...

இமைக்கதவை உடைத்தெறிந்து வெளியே வா
விழித்துவிட்டால்
விண்ணும் தூரமில்லை
வியர்வை (சூரியன்)
விழாமல்
வெளிச்சம் (பகல்) இல்லை
என்று அணிச்சமாக
வந்த கனவிது....

தோல்வி கோடி வந்தபோதிலும்
ஓடி ஒழிந்து விடாது எதிர்த்து
மோதி உடைந்து தூளாகிவிடு !
காற்று உன்னை சுமக்க
காத்திருக்கும் !
ஒரு கனம் உலகை கடந்து பார்க்க
துடிக்கும்
என்று
உருமிய கனவிது...

கவலை சொல்லும்
நினைவை கல்லறையாக்கிவிடு !
நீ...
காலத்திற்கு
கையயழுத்து போட
தூக்கத்தை கலைத்துவிடு !

உறங்கியது போதும்
உடனே எழுந்து விடு !

உன்...
உடைவாளாய் நானிருக்கிறேன்
என்று உணர்த்திய கனவிது...

ம்....
கனவிது என்று
யார் சொன்னது
எனுது...
நகக் கண்களும் இப்பொழுது
விழித்திருந்து
பார்க்கும் போது கனவெல்லாம்
நிஜமானது!!




--Mvidhyasan@gmail.com

புதன், 8 செப்டம்பர், 2010

அழகு

அடிக்கடி எனை பார்த்தும்
பார்க்காதது போல் இருப்பது அழகு...

நகம் கடிக்கும் நிமிடத்திலும்
எனை நினைப்பது அழகு...

எட்டி நான் செல்லும் போதெல்லாம்
நீ குட்டி சோகம் கொள்வது அழகு...

அதி காலை விடியலில் முகம் கழுவி
கண்ணாடியில் என் முகம் காண்பது அழகு...

புத்தகத்தின் இடையே என் பெயர்
எழுதி தெரியாமலிருக்க அடித்திருப்பது அழகு...

திட்டி நான் பேசினாலும் முதலில்
விட்டு கொடுத்து நீ பேசுவது அழகு...

விட்டு விலகும் நேரத்தில்
குழந்தை போல் அடம்பிடிப்பது அழகு...

எங்கு சென்றாலும் உன் மனதோடு
எனை அழைத்து கொண்டு தனி இடம் கொடுப்பது அழகு...

மழை கொட்டும் கணத்தில்
என் உள்ளங்கை பிடித்து நடப்பது அழகு...

பிடித்திருக்கு என்று உன்னிடம் சொல்லுகையில்
விழிகளை மடித்துக் கொண்டு வெட்கம் கொள்வாயே
அது அது தனி அழகு !!

பாடகன் ---------- Mvidhyasan@gmail.com

இன்று

மர இலைகளின் கைதட்டல்,
கொடிகளின் கைகோர்ப்பில் வரவேற்ற சாலை:
செல்போன் டவர்களாகவும்,
மின் இணைப்பு வயர்களாகவும் உருவெடுப்பு...

ஆற்றங்கரை குளிர்காற்றிலும்,
குருவிகளின் சத்தத்திலும் குதூகலித்த நிமிடங்கள்:
புழுதிகளின் முகமூடியிலும் ,
வாகன இரைச்சல்களின் பிடியிலும் நகர்கிறது...

மலை பாங்கையும்,
விளை நிலங்களையும் சுமந்த பசுமை
அடுக்குமாடி குடியிருப்பாகவும்,
தொங்கும் பூந்தொட்டிகளாகவும் புதுமை...

குளக்கரை துவையலும்,
கிணற்று குளியலும் நனைத்த சுகங்கள்:
சவர் பாத்ரூமிலும்,
வாசிங்மிசன் சலவையிலும் சுமைகளாக...

உரலில் இடித்து,
அம்மியில் அரைத்த மருந்து உணவு:
மிக்சியில் நுரைத்து,
ஃபிரிஜ்ஜில் விரைத்து விசமானது உண்மை...

பாட்டி விற்ற நெல்லிக்காயும்,
மாங்காய் வடுவும் ருசித்த வாய்:
பீசா, பிரட்டும்,
வண்ண சருகையில் லாலிபாப்புமாய்...

ஊற்று நீரும்,
மண்பானை தண்ணீரும் சுவைத்த நாக்கு:
ஃபில்ட்டர் பாட்டிலும்,
பிளாஸ்டிக் பாக்கெட்டிலும் குடிநீர் விலைக்கு...


வெயிலில் ஆடி,
மழையில் நனைந்தபடி கழிந்த காலம்:
புத்தகம் பாதி, அலைபேசி,
தெலைகாட்சி,கணினி என மீதியில் கரைகிறது...


வெண்ணிலாவும்,
வின்மீனும் ரசிக்க வேண்டுமாயின்:
பொட்டை காட்டைத் தேடியும்,
மொட்டை மாடி ஓடியும் நின்றால்தான் தெரியும்...

காதலும்,வீரமும்
மானமும், ஈகையும் கலந்த கலாச்சாரம்
துட்டுக்கு ஓட்டும்,
துடிக்கும் நிமிடத்திற்கு ஒரு காதலும்,
ஏழை மீது ஆதிக்கமும்,
உழைப்போரை ஏய்ப்பதுமாய் ஆனது...

மாறிப்போனது யாவும்
தேடி பார்க்க வேண்டியிருக்கிறது
 இன்று !! அன்பு மலர் 

---------Mvidhyasan@gmail.com

ஒருவன்

யாரென்று தெரியாது - நீ...
இணையதளம் இணைத்த இணைப்பு...
மன்னிக்கவும்...
இனிப்பு...

உனக்கும் எனக்கும் ஒரு வித்யாசம்...
நிஜங்கள் எனக்கு கை கொடுப்பதில்லை...
கனவுகள் உனக்கு கை கொடுப்பதில்லை...
இருந்தும்,
நம்பிக்கையின் பாதையில்,
ஊர்ந்து கொண்டிருக்கிறோம்...

வெற்றி தொலைவல்ல தோழியே...
சில உறவுகளுக்கு அர்த்தங்கள் இல்லை...
நீ இல்லையேல், வாழ்வில் அர்த்தம் இல்லை...
இந்த வார்த்தைகள்,
நேரம் தாழ்ந்தாலும்,
நேசம் தாழாது...

என் வெற்றியில் உன் பங்கிருக்கும்...
உன் வெற்றியில்,
நிச்சயம் என் பங்கிருக்கும்...
நேரில் பார்க்காவிட்டாலும்...
நேரம் கிறுக்கி விட்டது..
நம் நட்பை...

கிறுக்களும் காவியமாகிவிட்டது...
இது அதிசயம்...
என்றும் உன் அருகில் இருப்பேனா என்பது எனக்கு தெரியாது..

ஆனால்...
ஓடி..கலைத்து வா...
நட்பென்னும் நிழலை கொண்டு நான் நின்றிருப்பேன்...
தோழியே...
உனக்காக...
உங்களை சந்திக்க சிந்திக்க ஒருவன் !!!
மு.வித்யாசன்  நன்றி

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

கருவறை


மருதாணி

என் விரல்கள் சூடிக் கொள்ளும்
ஒற்றை வண்ண தாவணி..

இரவும், பகலும் மறையாமல்
உள்ளங்கையில் ஒளிரும் முழு மதி...
ரேகை எனும் சாலையில்
பூத்திருக்கும் நிழற்குடை...


இமைகள் இன்றி
விழித்திருக்கும் அழகிய விழி...
உன் விரல்கள் கோலம் போட
நான் யிட்டுக் கொண்ட புள்ளி...
உனக்கு மட்டும் புரியும்
இந்த புன்னகையின் மொழி...
நீ...
பக்கம் வரும் முன்
வெட்கம் கொள்கிறது ஏனோ .
என்ன?
என் மருதாணி !!
ஐ லவ் யூ ஐ லவ் யூ  ஐ லவ் யூ

---------mvidhyasan@gmail.com

திங்கள், 6 செப்டம்பர், 2010

சொன்னது...

 


வானம் எப்பொழுதுமே
அழகாகவே இருக்கிறது
ஏன், எப்படி என்று கேட்டேன்...

சொன்னது...

நானென்று அகந்தை கொள்ளாது
தானென்று எதையும் எண்ணாது
பொதுவென விடுவதும்...

வருவதும்,மறைவதும் மாயையின் வழக்கம்
எதுவாக இருப்பினும் தள்ளி இருப்பதே சிறக்கும்
என்பதை புரிந்ததே காரணம் என்றது...

சற்று குனிந்து பார்த்தேன்...

நிஜம்தான் !!
 
புவி மேடையில் நான் !!


மு.வித்யாசன் அன்பு மலர்

விளக்கு

காலம்

மழை

மாயை