திங்கள், 4 ஏப்ரல், 2011

சுகமாகவே

நெடுந்தூர பயணம்
உன் நினைவுகள் நிழலாய் துணை வரும்....


மழை சொட்டும் தருணம்

உன் உதடுகள் கொடுத்த ஒத்தடம் ஞாபகம்...


வெயில் சுடும் கணம்

உன் மடி சாய்ந்த நிமிடமாய் வருடும்...


கடல் அலை கரையில் நுரையிடும்
மெளனம்
உன் கால் கொழுசு மணியாய் உருமாறும்...


நிலவு உலா வரும் நேரம்

நீ காத்திருப்பதாய் தோன்றும்...


கிளை, இலை எல்லாம் அசையும்
சுகம்
நீ விடும் மூச்சு காற்றை சுவாசிக்கும் இதயமாகும்....


எது எதுவாகினும் எனக்கென்னமோ

எல்லாமே நீ ஆகிறாய் எனக்குள் சுகமாகவே !!




-வித்யாசன்

செவ்வாய், 29 மார்ச், 2011

தெரியும்


எடுத்தது தெரியும்....
திருப்பி
ரும்போது வாங்கிக் கொள்ள மனமில்லை
தொலைந்து போனது எனது இதயம் என்பதால் அல்ல
திருடியது அவன் இதயம் என்பதால் !!
vidhyasan@gmail.com........

செவ்வாய், 22 மார்ச், 2011

உன் வருகைக்காக



வழி எல்லாம் வான் மழை
விழி எல்லாம் உன் நினைவலை

திசை
ல்லாம் ஈர உடை
இதயம் நனைகிறது நீ பிடிக்கவா குடை

உன் பிம்பம் தேடி தேய்கிறது பார்வை எல்லை
நம் இருவருக்கும் உள்ள இடைவெளி அழகிய தொல்லை

திசுக்கள் ஆனது குளிர் ஓடை
பொசுக்கென்று வா நீயே என் ஆடை

காத்திருப்புக்குள் மறைகிறது நிகழ்நிலை
காற்றிடம் சுவாசம் எழுதுகிறது உனக்கான மடலை

உனக்கும், எனக்குமான தூரம் மட்டுமே தடை
உன் வருகைக்காக மட்டுமே துடிக்கிறது என் இருதய மேடை !!


நம் காதல்



என் உலகம் எதுவென்றால்
அது நீதானே
உன் இதயம் எதுவென்றால்
அது நான்தானே
நீ வேறு, நான் வேறு என்று வழி மாறிடாது
எப்போதும் நாமாவோம் ஒன்று....

இமை ஒட்டி சற்று விழி மூடினால்
என் இரவுக்குள் உன் முகம் விண்மீன்களாய்
என் கடிகார முள்ளாக நீ நகர்வதால்
என் காலம் கரைகிறது காதல் கணமாய்...

நீ வருகின்ற திசை எல்லாம் உனக்காகத்தான்
கிளை இலை எல்லாம் மழைத் துளியாக உதிர்கின்றதே
உன் வளையோசை அசைகின்ற இசை கேட்கத்தான்
வெயில் மீறி குயில் எல்லாம் தவம் கிடக்கின்றதே....
 

இமை மூடும் கணம் எனை நீ பிரிந்தாலுமே
என் வானம் தரைதட்டி வீழ்கின்றதே
உன் மடி மீது எனை சாய்த்து நீ தலை கோதினால்
அந்த தருணங்கள் தனி உலகங்கள் ஆகின்றதே....

எந்தன் உயிர் நீங்கும் நிமிடத்தில் உந்தன் விரல் தீண்டால்
எந்தன் தேகத்தின் காயங்கள் சுகமாகும்
உன் வாழ்க்கையின் மொத்தம் நான் நிரம்பினால்
நம் காதல் ஒன்றே உலகில் முதலாகு
ம் !!

வியாழன், 17 மார்ச், 2011

புரிய வைக்க முடியும்


என்னோட வருவதற்கும் மனமில்லை
விட்டு விலகவோ இருவருக்கும் மனமில்லை


அன்பில் இதுவே முதல் நிலை
நினைவுகளுக்கு ஏது எல்லை


எப்போதும் உனை தொடர்வதே வேலை
எனை துரத்துவதுவே உனக்கு அழகிய தொல்லை


யாருக்கு புவியில் இல்லை கவலை
தூக்கி எரிந்து விட்டு வா ஊடலை


ஒரு நிமிடம் என்னோடு இருந்து பார்
நிச்சயம் புரிய வைக்க முடியும்  என் காதலை !!

புதன், 16 மார்ச், 2011

அந்த நிமிடத்தில் ஜப்பான்



விதையிலிருந்து ஒரு  அரும்பு புதுப்பித்த மணித் துளி
பட்டாம் பூச்சி ஒன்று தனது சிறகை திருப்பி பார்த்த வினாடி
கருவறையிலிருந்து குழந்தையின் தலை மட்டும் வெளிவந்த  தருணம்
காதல், ஆயிரம் கடிதம் எழுதிக் கொண்டிருந்த வேளை
காமம் கண்ணாடியாய் ஒட்டி பார்த்திருந்த பூஞ்சோலை
அன்பு வருடி வரவேற்றுக் கொண்டிருந்த கணம்

உறவுகளின் வேர்கள் ஆழப்படும் நேரம்
ஏதும் அறியாது தூக்கம் களவாடிக் கொண்டிருந்த நாளிகை
ஓர்அக்கிரமம் வக்ரமத்துடன் மீசையை முறுக்கிய கோலம்
முதுமை பழமையை ரசித்து வர்ணம் தீட்டிய ஜாலம்
இரும்பு பெட்டிக்குள் கணக்கு பார்த்த பணம்
விஞ்ஞானியின் புலம்பல் ஆரம்பம்பம்

அடுத்த தலைமுறைக்கு இணைத்து வைத்த செல்வம்
அறிவியலின் உச்ச வளர்ச்சியிட்ட அரை கூவல்
அணு உலைகளுக்குள் நடந்தேரிய ஆராய்ச்சிகள்
மனித முயற்சியின் முதுகெலும்பான இனத்தவரின் உரத்த சிந்தனைகள்

யாருக்கு தெரியும் ?

அடுத்த கணத்தில் அரங்கேரப்போகும் பயங்கரம் ?


ஒரு சில நிமிடத்தில்....
 நிலநடுக்கம்...

கடலுக்கு நிகழ்ந்த குழப்பத்தில் அலைகள் வாய் பிளக்க
கரை தாண்டி விரைந்தோடி வந்தது தண்ணீர் பெருக்கம்
அபாய குரல் .. அடி நாக்கின் தூரம் தாண்டவில்லை
இமைகளில் இருந்து கண்ணீர் முழுதாக இறங்கவில்லை
நினைவுகள் ஒரு முறை நினைக்க இடமில்லை

ஆழிபேரலை அள்ளிச் சென்றது எல்லையில்லா உயிரை...

பாதைகள் கற்காலமாய் ஆனது
வீடுகள் தீப்பெட்டி குச்சியாய் சிதறியது
வாகனங்கள் காகித கப்பலாய் மிதந்தது
எல்லாம் பிரவித்த மனிதனின் உடல் எங்கே புதைந்தது ?


மீண்டும் மீண்டெலுவோம் என்று ஊன்றுகோலாய் நின்றாலும்
மாண்டுபோன மனங்களுக்கு என்ன ஆறுதல் சொல்ல ?
அழுவதற்கு கூட ஆள் இல்லாத இடத்தில்
அணு உலைகள் உறுமுகிறதாம் இனி யாரை கொல்ல ?


கடல் எல்லைகளை கைப்பற்றியது குற்றமா ?
அறிவியல் அனைத்தையும் வெள்ளும் எனும் ஆனவமா ?
அழிவு என்பது நிச்சயம் உண்டு என்ற அலட்சியமா ?
எதுவாக, யாராக, எப்படிபட்ட கேள்வியாக இருந்தால் என்ன ?
அங்கு இருந்தவருக்கு மட்டுமே தெரியும் அந்த நிமிடத்தில் ஜப்பான் !!

vidhyasan@gmail.com






செவ்வாய், 15 மார்ச், 2011

எப்போது வருவாய்...

எப்போது வருவாய்...

அடர்ந்த காடாய் இருந்தது என் உதயம்
அடை மழையாய் ஆனது உன் வருகையால்

...சுடும் பாலைவனமாய் என் மனது
மடை வெள்ளமாய் ஆனது உன் பார்வையால்...

நீ எப்போது வருவாய்
எனக்காக ஒரு நிமிடமாவது

நீ எப்போது வருவாய்
எனக்கே எனக்காகவே எப்போதுமாய்

நிமிடத்திடம் உலறியதை உணர்கிறேன்
செல்லும் வழி எல்லாம் நீயாக் கூடாதா என ஏங்குகிறேன்...

வந்து விட்டு செல் போதும்
நீ வந்த தருணத்தை எண்ணிக் கொண்டே
என் ஆயுளை தீர்த்து விடுகிறேன்....

மறந்து விட்டேன் என்று சொல் போதும்
நீ என்னை நினைத்து விட்டாய் என்ற
ஆதங்கத்தில் என் ஆண்டை நீளவிடுகிறேன்...

எப்போது வருவாய் நீ
எப்படி?

சொல்
சொல்
இல்லை
கொல்
கொல்
உடனே...

உனக்குள் இருக்கும்




மெல்லிய இடைவெளியில் நீயும், நானும்
சொல்லிக் கொள்ளும் தூரத்தில் நம் நாவும்
கேட்கும் நீளத்தில் நான்கு  செவியும்
இருப்பினும் இதயத்தில் ஏதோ உதறல்கள்...

எனக்குள் இருப்பதுதான் உ
க்குள்ளுமா ?
உனக்குள் இல்லாதிருப்பது எனக்குள் முளைத்திருக்குமா ?
ச்..சீ.. நமக்குள் என்றான பின் நினைவு மாறுமா ?

இப்படி கேள்விகள் ?  நிமிடத்தில் ஆயிரம்
இமைகளின் விலகலில் கூட உன் நினைவுகளை தேடிடும்
உனக்கும் இது தெரியும் என்பது எனக்கு மட்டுமே புரியும்...


மணி கணக்கில் யோசித்து வைத்திருப்பேன்
உன்னிடம் என்னவெல்லாம் அலாவலாம் என்று
நிமிடக் கணக்கில் மறந்திடுவேன்
நீ தொலைவில் வந்த தருணத்தில் ஏனோ தொலைந்திடுவேன்...


எப்படியோ, எப்போதாவது, எப்படியாவது
என் காதலை, சொல்ல நேரிடும் கணத்தை எதிர்பார்த்து
எதுவாகிய பின்னும், நீயே எனதுயிராவாய் என்றும்
அப்படித்தானா?  இப்படித்தானா ?  உனக்குள் இருக்கும்



சனி, 26 பிப்ரவரி, 2011

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே

                            


முடியும் என்ற வார்த்தை சொல்லி - இனி
ஒவ்வொரு பொழுதுகளும் விடியட்டும்
எழும் தடைகள் யாவும் - இனி
திரை விலகிடும் என இமை பிரியட்டும்...

காலமிட்ட கைவிலங்குகள்
கர்ஜித்து அவிழட்டும்
ஞாலம் யாவும் நம் பெயர் சொல்லி
காற்று பயணிக்கட்டும்...


அடிமை, மடமை,கொடுமை; யாவுமினி
அடுப்பு நெருப்பாக எரியட்டும்
நிஜ உரிமை, முகம் கொண்டு;
நிலம்தனில் நம் பாதம் தடம் பதிக்கட்டும்...


படுக்கைக்கும், இனப் பெருக்கத்திற்கும்
பிறவி எடுத்த இயந்திர வாழ்க்கை புதையட்டும்
உடுக்கை  என ஆண்கள் கையிடுக்கில்
அகப்பட்டு கண்ணீர் வடிக்கும் அவலம் மாறட்டும்...

படிப்புக்கும், படைப்புக்கும்
நம் பெயர் சொல்லி பிறவிகள் எடுக்கட்டும்
துடிக்கும் மீனினமாய் யிருந்த கதைகள் மாறி
விண்மீன் பிடித்து நம்
விரல்கள் விளையாடட்டும்...


வெறும் பேச்சில் மட்டுமிருக்கும் நம் சுதந்திரம் - இனி
விடும் ஒவ்வொரு மூச்சு காற்றிலும் கலந்திருக்கட்டும்
ஏடுகளில் மட்டும் படிந்திருக்கும் நம் உணர்வுகள் - இனி
எல்லோர் இதயங்களிலும் அழுத்தி எழுதட்டும்....


இச்சமூகத்தின் முன் அணு அணுவாய் கொல்லப்படுவதும்
நாளுக்கொரு விதமாய் ஆளுக்கொன்றாய் மெல்லப்படுவதும்
உருக்குலைந்து காய்ந்த சருகாய் காலம் கழிப்பதும் - இனி போதும்
புறப்படு பெண்ணே புது யுகம் படைத்திட  !!

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

நீயே யாதும்

மண்ணில் இல்லா இன்பம்
எது வென்று கேட்டேன்

விண்ணில் இடம் பெறா
அதிசயம் எதுவென்று வினவினேன்
...
கண்ணில் உள்ள சோகத்தை எல்லாம்
கரைக்கும் காட்சி எது வென்று விரைந்தேன்

எண்ணி,எண்ணி மகிழும் 
 நான் என்பது எதுவென்று தேடினேன்...

என் கைதனிலே மின்னி மிதக்கும்
மகளே
நீயே யாதும் என்று அறிந்தேன் !!

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

உன்னைப் போலவே

விழித்துக் கொண்டே
தூக்கம் கொள்கிறது...


ஒளிர்ந்து கொண்டே
ஒலிந்து கொள்கிறது...


சிரித்துக் கொண்டே
சிறிது சிறிதாக தேய்கிறது...


நான்...
இமைகளை மூடி
எங்கே பயணித்தாலும்
என்னுடனே வருகிறது...


வானத்து வெண்ணிலா
உன்னைப் போலவே !!

mvidhyasan@gmail.com

 

செவ்வாய், 25 ஜனவரி, 2011

அவளும், நானும் உரையாடல் - 6

அவள்
என்ன இன்று இந்த பக்கம்

நான்
எப்போதுமே உன் பக்கம் தானே

அவள்
எதை பற்றி இன்றைய படைப்பு


நான்
உன் நகம் பற்றிய படிப்பு

அவள்
நகத்த பத்தியா ? அதுல்ல என்ன இருக்கு ?

நான்
தெரிந்ததை சொல்கிறேன் கேட்க விருப்பமா ?

அவள்
ம்ம்ம்......


நான்

வளரும் வைரம்
நீளும் கோபுரம்
கண்கள் விளையாடும் 20 சதுரங்கம்
வெட்ட வெட்ட எழும் பளிங்கு சுவர்
ரசம் பூசப்படாத கண்ணாடி
திறக்க முடியாத அழகிய பெட்டி
அசைபோடாத பற்கள்
கைப்பிடியில்லா கத்தி
விரல்களின் மூக்குத்தி
தூக்கம் ஏங்கும் தலையனை
கனவு புரளும் படுக்கை
உயிர் உள்ள பனிக்கட்டி
இருதயம் வெட்டும் மண்வெட்டி (மம்பட்டி)
உடையாத முட்டை ஓடு
அதிசய பொட்டல் காடு
ஒட்டி வைக்கப்பட்ட கதவு
தென்றல் இளைப்பாறும் இருக்கை
பேச தெரியாத குட்டி நாக்கு
கற்பனை நிறைந்த வெற்று காகிதம்
பாதம் படாத ஒற்றை படி
நிலா நின்று பார்க்கும் மொட்டை மாடி
அசையாது எரியும் தீபம்
அசையும்ஆமை கூடு
வெள்ளை நிற வழுக்கு பாறை
விரல்களின் மகுடம்
விளக்க முடியாத வரைபடம்
உனது நகம்


அவள்
எப்போது இப்படி எல்லாம் என் நகத்தை பார்த்தீங்க

நான்
நீ அடிக்கடி நகம் கடிப்பாய்
அப்போதெல்லாம் நான் அதில் பாடம் படிப்பேன்

அவள்
நல்லாதான் படிக்குறீங்க

நான்
அப்ப மதிப்பெண் என்ன ?

அவள்
இந்த மதி (போன்ற) பெண் உங்களுக்குதான்

நான்
ம்ம்ம்......

திங்கள், 24 ஜனவரி, 2011

அவளும் நானும் உரையாடல் - 5

அவள்
என்னை மறந்து விட்டீர்களா ?

நான்
என்னை எப்பொழுதும் நான் மறப்பதில்லை

அவள்
நான் என்னை கேட்டேன்

நான்
நானும் அதைத்தான் சொன்னேன்

அவள்

ம்ம்ம்...

நான்
ம்

அவள்
போதும், போதும் இன்று என்ன வருணனை

நான்
எனது கவிக்காக காத்திருக்கும் உன் செவி பற்றி

அவள்
ம்ம்... கேட்க காத்திருக்கு என் செவியே

நான்

ஒரு பக்க சிப்பி
ஒட்டி வைக்கப்பட்ட இரட்டை ரோஜா இதழ்
வண்ணத்து பூச்சியின் ஒற்றை சிறகு
தொங்கிக் கொண்டிருக்கும் கேள்விக் குறி ?
குடைந்து செதுக்கப்பட்ட குகை
இரண்டாக நறுக்கப்பட்ட மாதுளை
ஒலிகள் நடந்து செல்லும் சாலை
பறவைகள் கட்ட துடிக்கும் கூடு
முழுமையடையாத கருவறை
ஊர்ந்து செல்ல முடியாத நத்தை
கடலில் கிடைக்காத சங்கு
முளைக்காத விதை
மெல்லிய மேக இலை
வண்ணமில்லாத மயில் தோகை
படமெடுத்தாடும் நாகத்தின் தலை
அழியாத கால் தடம்
நாண்ஏற்றாத வில்
ஆணவம் கொள்ளும் ஆங்கில எழுத்து 3,21
காற்று ஏங்கும் அழகிய விசிறி
நான் மட்டும் நீந்தி குளிக்கும் குளம்

அவள்
அடடா செவிக்கு இத்தனை அர்த்தம் உண்டா?

நான்
நான் கண்டது குறைவுதான்
உன் செவி கொண்ட அழகு கோடிதான்

அவள்
ஒன்றை சொல்ல மறந்து விட்டீர்களே

நான்
ம்ம்ம்... கண்டுபிடித்து விட்டாயே

அவள்
அது என்ன ? என்ன ? சொல்லுங்க !

நான்
வழியும் துளி
அதன் நுனியில் ஆடி, பாடுது தோடு எனும் தோழி

அவள்
ம்ம்ம்....

நான்
ம்ம்ம் என்றால்

அவள்
ம்ம்ம்ம்ம்ம்ம......... தான் !

புதன், 19 ஜனவரி, 2011

தை பிறந்தால்

தை பிறந்தால் புது வழி பிறக்கும்
இந்த வாசகம் உண்மையாகட்டும்

தட்டினால் காற்றில் பறக்கும் தூசாக

நம்மில் தோழ்விகள் மட்டும் வீழட்டும்

விண்ணும் முட்டி உடையும் அளவு

மனித நேயம் பெருகட்டும்

மண்ணில் உழவர் சிந்தும் வியர்வையில்

பொங்கும் கடலின் தாகம் அடங்கட்டும்

முடியும் என்ற நம்பிக்கை கொண்டு

விடும் மூச்சு காற்று வெளியேறட்டும்

இருள் இடிந்து விடியும் பொழுதுகளில்

உரக்க நம் பெயர் சொல்லி சூரியன் உதிக்கட்டும்

அடிமை என்னும் கசப்பு நீங்கி

அனைவரும் சமம் என்று
அடிக் கரும்பாய் இந்த பொங்கல் இனிக்கட்டும் !!

 

புதன், 29 டிசம்பர், 2010

என்னை தவிர

மெலிந்துபோன இடையில் நீ
வைத்திருப்பது குடமா?
இல்லையது அழகிய மகுடமா !

உன் வளை கரத்தால்
வளைத்து பிடித்திருப்பதால்
மண்ணும் விலையில்லா அழகானது !

நீ வைத்திருப்பது வெற்றுகுடமா?
பின்பு ஏன் காற்று காத்திருக்கிறது
தன்னை நிரப்பிக் கொண்டு குளிர!

பல்லவன் காணவில்லை
இதை  பார்த்திருந்தால் சிலை வடிக்க
புவியில் கல்லில்லை என்று புலம்பியிருப்பான்!

புத்தரும் புதைந்து விட்டார் இல்லையேல்
புது ஓவியமென்று உன் மீது ஆசை என்று
ஒப்புக் கொண்டிருப்பார் !

ரவிவர்மன் ரசித்திருந்தால் மட்டும் என்ன?
உனை வரைய வண்ணமில்லை என்று
விரலை ஒடித்தருப்பான்!

பாரதியும் இதை  கண்டிருந்தால்
பாட்டில் வடிக்க இயலாத
பாவை என்று ஏட்டில் எழுதி வைத்திருப்பான்!

என்னை தவிர
என்னவளை
யாரால் - இப்படி
கவியில் பூட்டி வைக்க முடியும்!!

வித்யாசன்

செவ்வாய், 28 டிசம்பர், 2010

தாண்டிய போது

கண்ணீரின் உலகம்;
வலியின் வசிப்பிடம்

துயரம் தூங்கும் விடுதி;
மரணம் விழுங்கும் ஆலயம்


அலரல் சப்தத்திற்கு நடுவே
அவரவர் இருப்பிடம்

வேதனையை தீர்க்க,
தீர்த்தம் தரப்படுகிறது மருந்தாக

 ரணம் ஆற, பல வண்ணத்தில்
வாயில் நுழைகிறது மாத்திரையாக

பெரும் சோக கதை;
நீளும் உடல் பரிசோதனை

நிஜமான வெள்ளை தேவதைகள்
இங்கே புன்னகையுடன் வலம்

அவ்வப்போது மறு பிறவி
அறுவை சிகிச்சை அறையிலிருந்து

மருத்துவர் பிரம்மாவாக;
மரண தீர்ப்பை ஒத்தி வைத்து எழுதும்போது

வீரனும், அறிஞனும், ஏழையும், யாராயினும்
ஒன்றுதானாம் இதற்கு முன் (நோய்)

எது எதுவோ பெரிது என்று
எண்ணிய என் மனதின்று;
இனி யாரும் - மறுமுறை
இங்கே வராதிருப்பதே சிறந்ததென்று;

உள்ளம் உணர்ந்தது
மருத்துவமனையை தாண்டிய போது !!



செவ்வாய், 21 டிசம்பர், 2010

தனிமை



நமக்கு நம்மை காட்டும்
ரசமில்லா கண்ணாடி

நினைவுகளை படம் பிடிக்கும்
ஒலி,ஒளி யில்லா ஊடகம்

மெளனத்தின் இதழ்கள் படிக்கும்
அர்த்தமுள்ள புத்தகம்

தோய்ந்து போன கனவுகளை
உலர்த்தி ரசிக்வைக்கும் தருணம்

நிமிடங்களின் இடுக்கில் அமர்ந்திருக்கும்
இடைவெளியை மீட்டும் புது ஸ்வரம்

சுதந்திரத்தின் சுகந்தத்தை
கற்றுத் தரும் கரு மந்திரம்

தொலைவில் போனதை எல்லாம்
தொடும் தூரத்தில் கொண்டு வரும் வரம்

ஒரு நிமிடம் தனித்து பார்
மரணத்தின் பிந்தைய ரகசியம் சொல்லும்
தனிமை !!
அன்பு மலர்

திங்கள், 20 டிசம்பர், 2010

பின்னால்

ஒரு சிலைக்கு பின்னால்
அடி வாங்கி அலங்கரித்த உளி மறைந்திருக்கிறது


ஒரு ஓவியத்திற்கு பின்னால்
பல வண்ணங்களை உடுத்திய தூரிகை ஒலிந்திருக்கிறது


ஒரு பட்டு சேலைக்கு பின்னால்
பல்லாயிர பட்டு பூச்சிகளின் உயிர் படிந்திருக்கிறது


ஒரு மலருக்கு பின்னால்
உயிர் கொடுத்த வேர்கள் புதைந்திருக்கிறது


ஒரு ஒளிக்கு பின்னால்
இருளின் குவியல்கள் குவிந்து கிடக்கிறது


ஒரு மழைத்துளிக்கு பின்னால்
காற்றின் கால்தடங்கள் கலைந்திருக்கிறது


ஒரு நிமிடத்திற்கு பின்னால்
பல்லாயிர கணக்கான காலங்கள் உரைந்து கிடக்கிறது


ஒரு வெற்றிக்கு பின்னால்
உயிரை புரட்டி பார்த்த தோழ்விகள் பதுங்கியிருக்கிறது


ஒரு ஒலிக்கு பின்னால்
உருமில்லா இசை பின்னல்கள் பினைந்துகிடக்கிறது


ஒரு துன்பத்திற்கு பின்னால்
துளிகளின் வடிவில் கண்ணீர் கடல் கவிழ்ந்திருக்கிறது


ஒரு கவிதைக்கு பின்னால்
ஓராயிரம் கற்பனைகள் வடிகட்டியிருக்கிறது


ஒரு முதுமைக்கு பின்னால்
இளமையின் ரகசியங்கள் தொலைந்திருக்கிறது


ஒரு திறமைக்கு பின்னால்
இடைவிடாத முயற்சியின் சுவர் எழுந்திருக்கிறது


உலகில் உள்ள ஒவ்வொன்றிற்கு பின்னாலும்
கதை எழுத காத்திருக்கிறது


இயற்கையின் அதிசயங்கள் !!



 

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

புத்தாண்டு 2011

யாதும் சமமென்று யாவரும் கூடுவோம் 1
சாதி உண்டு - ஆண்,பெண் என்ற 2
அன்பின் மடியில் மலரும் நம் மதங்கள் 3
வெற்றியை சுமந்து பயணிக்கும் திசைகள் 4
அதிசியங்கள் நிறைந்து வழியும் சக்தியான பூதங்கள் 5
அனைத்தையும் ஆளும் அறிவானது 6
வானவில் நம் வாழ்க்கையில் குலைக்கட்டும் வர்ணங்கள் 7
தோழ்விகள் தொடர்ந்தாலும் சோர்வடையாது லட்சியம் 8
நம் பெயர் சொல்லி சுழலட்டும் கோள்கள் 9
நம்பிக்கையின் மூலனதனமாய் நம் விரல்கள் 10
புது ஒளி கொண்டு வழி ஒன்று பிறக்கிறது 2011

சனி, 18 டிசம்பர், 2010

புத்தாண்டு 2011




புழுதி படிந்த நமது கலாச்சாரம் - இந்த

புத்தாண்டில் புத்தாடை அணியட்டும்;

பழுதடைந்த நமது பண்பாடு - இன்றோடு

பாரதத்தில் புதையுண்டு அழியட்டும் !



சுருங்கி கிடக்கும் நமது உள்ளம் - இனி

பரந்து இருக்கும் வானம் ஆகட்டும்;

கிழிந்துபோன பழைய தேதியாக -  நம்மில்

சாதிகள்  ஒழிந்து போகட்டும் !



பதுக்கி வைத்திருக்கும் பணங்களை எல்லாம்

ஏழைக்கு பகிர்தளிக்க முடிவெடுப்போம்;

ஒதுக்கி வைக்கும் இன, மதங்களை யாவும்

குப்பையில் பெருக்கி தள்ள தோள்கொடுப்போம் !





அறிவியல் வளர்ச்சி, அழிவுக்கு வழி விடுவதை

புது முயற்சிகள் மூலம் முறியடிப்போம்;

அமுதும் ஏங்கும் தமிழை இன்னும்

அதிகம் கவிதை எழுதி அழகாய் விதைப்போம் !



வானம் முட்டி உடையும் அளவு

மனித நேயம் எட்டி வளரட்டும்;

கானக் குயில்களின் இன்னிசை மட்டும்

நம் காதுகளை துளைக்கட்டும் !





கடந்த காலம் துன்பங்கள் யாவும்

இறந்த காலம்  ஆகட்டும்;

இனி கடக்கப்போகும் ஒவ்வொரு கணமும்

நமக்குள் புது சக்திகள் பிறக்கட்டும் !



இருட்டு எனும் அழுக்கு வேட்டி - (இன்றோடு)

வானம் விட்டு கிழியட்டும்;

வெளுப்பு எனும் ஆடை கட்டி  - (புதிய)

கிழக்கு முட்டி முளைக்கட்டும் !





                                                                              வித்யாசன்........

சனி, 11 டிசம்பர், 2010

மழை துளி

மேகம் கருப்பு கொடி ஏற்றி வடிக்கிறது கண்ணீர் துளி 
தற்கொலை செய்து கொள்ளும் அழகிய விழி

பூமி எனும் எழுத்தில் வானம் வைக்கிறது புள்ளி
எல்லோரையும் குழந்தையாக மாற்றும் பள்ளி
உருகி வடிகிறது வின்னிலிருந்து புது வெள்ளி
பேதம் என்று எவரையும் பார்பதில்லை தள்ளி
வானம் உடைந்து குதிக்கிறது துள்ளி
விழுந்ததும் மறைந்திடும் கள்ளி

இனிக்கும் நெல்லி
சொட்டுகிறது (தெழி)
மழை துளி !!

செவ்வாய், 30 நவம்பர், 2010

அவளும்-நானும் உரையாடல்- 4

அவள்
என்ன வெகு நாட்களாக காணவில்லை

நான்
கரை கடந்து கரைந்து கொண்டிருந்தேன் உன் நினைவில்

அவள்
        ம்ஹீம்.....

நான்
நீ என்ன செய்தாய்

அவள்
ரசிப்பவர் எப்போது வருவார் என்று உள்ளங்கை ரேகையில் தேடிக் கொண்டிருந்தேன்...

நான்
ம்ம்.....

அவள்
இன்று என்ன ?

நான்
என்னை தேடிக் கொண்டிருந்த உனதுள்ளங்கை பற்றி

அவள்
ம்ம்ம்.... சொல்லுங்க

நான்
நான் மட்டும் நடந்து செல்லும் சாலை
மீன்கள் நீந்த துடிக்கும் நதி
இலைகள் இல்லாத கிளை
மின்னி மறையாத மின்னல்
அழியாத அழகிய கோலம்
இசை மீட்டும் தந்தி
பூக்கள் கட்டிக் கொள்ள ஏங்கும் நார்
வண்ணத்து பூச்சி பொறமை கொள்ளும் நூலிழை
இளவம் பஞ்சு இளையாறும் படுக்கை
காற்று வந்தமரும் இருக்கை
விதையில்லா வேர்
விழிகள் விளையாடும் சதுரங்கம்
சிலந்தி பூச்சி கட்ட முடியற்சிக்கும் கூடு
முகம் காட்டாத ஒட்டி/உடைந்த கண்ணாடி
குறுக்கு, நெடுக்காக கட்டப்பட்ட கோபுரம்
வண்ணங்கள் ரசிக்கும் ஓவியம்
வற்றாது பாயும் நீர்வீழ்ச்சி
மணல் இல்லா பாலைவனம்
சிதறி கிடக்கும் சிப்பி ஓடு
மிதந்து உறங்கும் அதிசய கோடு
இயற்கையால் பின்னப்பட்ட கயிறு
உதிராத மரப்பட்டை
மிகப் பெரிய இறகு
மேகம் உரச தவமிருக்கும் முகடு
கூட்டல், பெருக்கல், வகுத்தல் காட்டும் கணக்கேடு
ரசிக்க வைக்கும் ரகசிய கிறுக்கல்
ஒவ்வொரு தடங்களும் புதுமை
ஆயிரம் உவமைகளை ஒலித்து வைத்திருக்கிறது
உனது உள்ளங்கை!!


அவள்
       ம்ம்.........

நான்
குறைவாக சொன்னதை அறிவேன்
நிறைவாக இன்னொரு நாள் சொல்கிறேன்
இப்போது விடை பெறுகிறேன்...


அவள்
அடுத்து எப்போது ?

நான்
சந்திப்பு நடக்கும்போது !!
அன்பு மலர்

Mvidhyasan@gmail.com.................


ஞாயிறு, 28 நவம்பர், 2010

இரும்பு காதலி

கதவு காது அணிந்து கொள்ளும்
கனத்த தோடு...

கறுப்பு பணத்தை காவல் காக்கும்
கருப்பசாமி...

சுதந்திரம் இருக்கி அனைத்தப்படி
தொங்குகிறது இரும்பாக...

சாமி சாக்கரதையா இருக்க அர்ச்சகர்
பூட்டும் கதவு விலங்கு...

வீடு, அலுவலக வாயிலில் விழித்துக் கொண்டிருக்கும்
ஒற்றைக் கண் காவல்காரன்...

பலகோடி இதயங்களை பத்திரப்படுத்தும்
பயமறியா பயில்வான்...

குடிசை மீது ஏறி நிற்கும் பங்களாவை
விழுங்கும் குட்டி நாக்கு...

திருடர்களின் விரல்கள் தொட்டதும்
நெஞ்சை நிமிர்த்திடும் மா வீரன் ....

ஒருவனை மட்டும் தொடவிட்டு
இதய அறையை திறந்து காட்டும்
இரும்பு காதலி  
!!பூட்டு !!
 
Mvidhyasan@gmail.com.............பாடகன்


-----வித்யாசன்

செவ்வாய், 16 நவம்பர், 2010

யாருக்கு தெரியும்

ஆயிர மாலைகள்
ஆள் உயர மாலைகள்
மலையாய் குவிஞ்சிருச்சு...

அவர் பெத்த ஆறு மக்கா
மண்ணில் அழுது புரண்டாச்சு...

பட்டு சருக வச்ச வேட்டி நூறு
கட்டு கட்டா வந்திறங்கிய சட்டை வேறு...

குளிப்பாட்ட பன்னீர், சுருட்டோடு,
அவருக்கு பிடிச்ச சாராய தண்ணீர்...

இரண்டாளு உயரத்துக்கு
பூச் செண்டால பின்னிய பல்லக்கு

தப்புத் தாளத்தோட புறப்புட்டாரு
நாட்டுப்புற நடனத்தோடு கிளம்பினாரு...

 
சாலை வெடிக்க சரவெடி
மேடு உடைய மொக்க வெடி
காடு அலற விசிலடி...

ஆட்டத்தோடு ஒய்யாரம்ம
அடக்கம் பன்னீட்டாங்கம்மா...

மூனாம் நாளு விஷேச முன்னு
மூனுமுற சொல்லிட்டாங்கம்மா...

பொசுக்குன்னு அவரு போனது போல
புசுக்குன்னு வந்துருச்சு 3ம் நாளு

அவரு பெத்த மக்கா ஆறும்
தூரத்து சொக்காரரும்
கூடி ஒன்னா சேர்ந்தாச்சு
அவரு பெருமை எல்லாம் பேசி
மூலைக்கு மூலை-மூக்க சீந்தியாச்சு...

உச்சி வேளை வச்தாச்சுன்னு
பெரிசு குரல் பெரிசா எழுப்ப...

வெட்டி வச்ச பத்தாடு பத்தாதுன்னு
பக்கத்து வீட்டு முத்தம்மா ஆடு
தொங்குது முற்றத்துல்ல...

நேத்து அருத்த நெல்ல
கொதிக்க வச்சு இறக்கியாச்சு...

படப்புக்கு பருப்பு சோறு
பக்குவமா கிளறிவச்ச கூட்டாஞ்சோறு
பத்தாம்பள கிளம்பியாச்சு இடுகாட்டுக்கு...

அய்யர வச்சு ஓதியாச்சு
அவுக,அவுக கட்டு முடிஞ்சாச்சு
புதுசா சொக்கா எல்லாம் உடுத்தாச்சு
படைப்ப வச்சு சாமி கும்பிட்டாச்சு
காகம் தின்னத பார்த்தாச்சு...

பக்குவமா
வீடு வந்து சேர்ந்தாச்சு...

அவுக படத்துக்கு மாலை
சூடம், பத்தி காமிச்சாச்சு...

இனி...
காக்கும் கடவுள் நீங்கதானு
கண்ணு கலங்கி
கன்னத்துல்ல இரண்டு போட்டாச்சு...

 
வந்தவங்க எல்லாம்-ஒரு நாளு
வானம் போவது
வழக்கமுன்னு பெரு மூச்சு விட்டு
பந்தி அமர்ந்து-அவரு
பழங்கதை பேசி
பானை வயிற நிறப்பியாச்சு..

தொந்தி வயிற நெப்பி
எல்லாம் அவஞ் செயலுன்னு
அவுக,அவுக ஊருக்கு
முந்தி -கிளம்பியாச்சு...

பாவம்...
பரம சிவம் பட்டினியா
போய் சேர்ந்த கத
யாருக்கு தெரியும்
என்ன?

---MVIDHYASAN@GMAIL.COM---

திங்கள், 15 நவம்பர், 2010

உதவாதது-உயிரானது


நீ...
சிக்கெடுத்து சீவி எறிந்த
சிறு கூந்தலில்-நான்
சித்திரங்கள் பல பார்த்தேன்...

உனது...
கைகளை உதிர்த்து உடைந்த
கண்ணாடி வளையல்களில்-நான்
வானவில் ஆயிரம் சேகரித்தேன்...

நினது...
செவிகளை முத்தமிட்டு செவ்விதழ்
இழந்த கம்மலில்-நான்
செங்கதிரவனை கவனித்தேன்...

உன்னுடைய...
உள்ளங் கால்களை உரசி உதிர்ந்த
கொலுசு மணியில்-நான்
உலகத்தின் ஓசை எல்லாம் உணர்ந்தேன்...

உன்னை...
எப்போதும் சூடி வாடிக் கிடந்த
கிழிந்த புடவையில் -நான்
கோடி வாசங்கள் நுகர்ந்தேன்...

உனது...
கருவிழி இரண்டும் தொலைவில்
எனை தொட்டதில் -நான்
காற்றை கல்லென்று கண்டு பிடித்தேன்...

நினது...
பாதங்களை கட்டித் தழுவி
அருந்த காலணியில் -நான்
அருந்ததிகள் கைப்பற்றினேன்...

உனது...
ஆடை நூல் ஒன்று அவிழ்ந்து
அங்கு,இங்குமாய் அலைந்ததில்-நான்
அலைகள் ஒலிந்திருப்பதை உற்றறிந்தேன்...

உன்னுடைய....
கூந்தல் பரப்பில் உலைந்த
பூக்களின் இதழ்களில்-நான்
மேகங்கள் மெலிந்திருப்பதை சந்தித்தேன்...

நினது...
விரல் கொண்டு கிறுக்கிய
காகிதத்தை கண்ட பிறகுதான்-நான்
கவிஞன் இல்லை என்று ஒப்புக் கொண்டேன் !! 
ஐ லவ் யூ 

-MVIDHYASAN@GMAIL.COM-

திங்கள், 1 நவம்பர், 2010

தீபாவளி


இருட்டை கிழித்து பிறக்கட்டும் புது வழி
மத்தாப்பு புன்னகையில் கரையட்டும் கண்ணீர் துளி...


வறுமை கோலம் உடைய வானவெடி
அடிமை எரித்து, புதுமை உடுத்தி கும்மியடி...

உடலோடு, உள்ளமும் உடுத்தட்டும் புத்தாடை
ஒவ்வொரு இதயத்திலும் வீசட்டும் இனிப்பு வாடை...


ஒன்றே யாவரும் என்று கூடி வெடி,வெடி
நன்றே செய்வோம் என்று சொல்லி கொடி பிடி...

விடியும் பொழுது ஒளிர- ஏற்று தீப ஒளி
முடியும் என்ற திண்ணம் கொண்டு துவங்கட்டும் தீபாவளி !!

பாடகன் அன்பு மலர் பாடகன்

நிலா வரைந்த நிலாக்கள்

வெள்ளைத் தாளில் விளையாட்டாய்
வைத்தாய் புள்ளியாய்...

தலை சீவி, கூந்தல் சிரிக்க
கோர்த்தாய் பூவாய்...

தேகம் தீண்டி மோகம் கொள்ள கழுத்தில்
சூட்டினாய் பாசி மணியாய்...

தென்றல் அமர்ந்து ஊஞ்சலாட செவியில்
மாட்டினாய் தோடாய்...

உரசி, உரசி ஓவியமாக கைகளில்
பூட்டினாய் வளையலாய்...

தூங்கும் போதும் கதை பேச
அணிந்தாய் பாத கொழுசாய்...

பணி செய்யும் போதெல்லாம்
வடித்தாய் வியர்வை பனியாய்...

அப்பொழுதெல்லாம் எனக்கு
புரியவில்லை...

நிமிர்ந்து வானம் பார்த்தேன்
வெண்ணிலா தென்படவில்லை...

என்னவள்
அருகில் வந்து பார்த்தேன்...

அவள்...
தேய்த்து சுட்டு கொண்டிருந்தாள் வெண்ணிலவை !

அன்பு மலர் (சப்பாத்தி,தோசை,இட்லி -இதுல எதுவாகவும்) அன்பு மலர்

பின்புதான் அறிந்தேன்

உனை தொட்டதெல்லாம்
நிலா வரைந்த நிலாக்களாக மாறுமென்று !!

என்னிடம்...
ஏக்கத்தோடு கேட்டது
வானம்-வெண்ணிலவை
எப்போது விடுதலை செய்வாள் என்று !!!

அன்பு மலர் 
M.VIDHYASAN@GMAIL.COM.........................

சனி, 30 அக்டோபர், 2010

ஏங்கவைக்கும் பொற்காலம்


வானெல்லாம் பருத்தி ஆடை
ஊரெல்லாம் பச்சை வாடை
மரக்கிளை எல்லாம் தேனடை
பூவாசம் பேசும் ஓடை...

ஒத்த வழி பாதைக்கு நான் துணை
ஒரே இடத்தில் கை வீசி நிற்குது தென்னை
யாருக்கு நெய்கிறது சேலையை ஆற்றங்கரை
வயிறு பெருத்து படுத்திருக்கு பெரும்பாறை...

புள்ளி மானாய் துள்ளி குதித்த கிணறு
புது சட்டையில் பிடித்து நழுவிய அயிர மீனு
ஆழ மர ஜடையில் ஆடிய பொழுது
அடித்த அன்னை மடியில் அழுதுகொண்டே படத்துறங்கிய இரவு...

மழை காலத்தில் தட்டான் பிடித்து தலை எடுத்த வீரன்
ஊரின் உயரமான மரத்திலேறி பெயர் எழுதிய சூரன்
ஊதிய வண்ண பலூன்னாய் வட்டமிட்ட திருவிழா
வெட்டிய ஆடு துடிக்கையில் அப்பா வேட்டியில் புதைத்த முகம்...


வீட்டு ஒழுகலில் பாத்திரத்தில் மழை வடித்த கண்ணீர்
சில்லரை சேர்த்து சிரிக்க, சிரிக்க குழுக்கி பார்த்த உண்டியல்
மின்னலில் பூத்த காளான் பறித்து செய்து சுவைத்த சமையல்
ஜன்னல் ஓரம் நின்று ரசித்த வானவில்...

பள்ளி மணி ஓசைக்காக காத்திருந்த பட்டம்
பனை ஓட்டில் வண்டி ஓட்டி பல நாடுகள் சென்று வாங்கிய பட்டம்
ரயில் பூச்சியாய் தோள் பிடித்து சாலை கடந்த சுகம்
வெயில் அப்பிய முகத்தோடு வியர்வை விழுந்த தடம்....

நுனி நாக்கு சிவக்க அப்பத்தா இடித்து தந்த வெற்றிலை பாக்கு
பனியில் குளிர் நடுங்க கருப்பட்டி கருப்பு தேனீர் இனிப்பு
ஆடு, மாடு, கோழி சத்தத்தில் அயர்ந்து தூங்கிய தூக்கம்
ஆவி வந்த கதைகள் கேட்டு பயந்து தொலைத்த தூக்கம்....

இனபேதம் அறியாது இணைந்து விளையாடிய தருணம்
ஒட்டு மொத்த ஊரும் வந்து அழுத என் உறவினரின் மரணம்
என் கிராமத்தை விட்டு வந்த பின்னும், மின்னுகிறது அந்த எண்ணம்
அவசர கதியில் அலுவலகம் புறப்பட, நகர புழுதியில் - தலைதுவட்டியது அந்த பொற்காலம்!!
அன்பு மலர் நன்றி அன்பு மலர் 

MVIDHYASAN@GMAIL.COM/////////////////////////////////////////////////////////

எப்போது வருவாய் விழியோரம்!

உன் கனவுகளில் ஊஞ்லாடுவது
என் நினைவுகளுக்கு நிலா அருகில் இருப்பதாய்..

உன் தூக்கத்தை ரசிப்பது
என் விழிகளுக்கு கவிதை படிப்பதாய்...

உன் தோள் சாய்வது
என் முகத்திற்கு பஞ்சாலையில் பதிப்பதாய்...

உன் விரல் பிடிப்பது
என் கை ரேகைகளுக்கு மருதாணி பூசியதாய்...

உன்னோடு நடப்பது
என் பாதைகளுக்கு பூந்தோட்டமாய்...

உன்னோடு இருப்பது
என் மணித்துளிகளுக்கு குளிர்காலமாய்...

நீ...
இப்போது இருப்பது தூரம்
எப்போது வருவாய் விழியோரம்!! 
அன்பு மலர்
Mvidhyasan@gmail.com./////////////////////////////////////////


வெள்ளி, 29 அக்டோபர், 2010

தென்படும் மறு பிறவியின் எல்லை

இலைகளின் மரணங்களால்
மரங்கள் மரித்து போவதில்லை ..

மேகங்கள் கலைவதால்
வானம் மெலிவதில்லை ...

உடல் உருகுவதால்
மெழுகுவர்த்தி ஒளியை குறைப்பதில்லை ...

குடை பிடிப்பதால்
மழை கொஞ்சுவதை நிறுத்துவதில்லை ...

பாதங்கள் மிதிப்பதால்
பாதைகள் பழிப்பதில்லை ...

அலை அடிப்பதால்
கரைகள் காயமாவதில்லை...

வண்டுகள் அமர்வதால்
பூக்கள் வசைபாடுவதில்லை...

மேகம் இருளை சூடுவதால்
வெண்ணிலா வெளிச்சத்தை குறைப்பதில்லை...

வானம் ஒழுகுவதால்
பூமி இட மாற்றம் செய்வதில்லை...

வீட்டை சுமப்பதால்
நத்தை ஓய்வெடுப்பதில்லை...

உயரம் என்பதால்
பறவை கூடு கட்ட மறுப்பதில்லை...

நிலை மாறும் வாழ்க்கையில்
இழப்பதற்கு உனதென்று ஏதுமில்லை...

உடைந்து ஒடுங்கிட விட
நீ ஒன்றும் கல்லறை இல்லை...

எதுவந்த போதும் எதிர்த்து நில்
மரணம் கூட உன்னை நெருங்க-தென்படும் மறு பிறவியின் எல்லை !!

Mvidhyasan@gmail.com ............................அன்பு மலர்

அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி)

அவள்
ஏன் இன்று நீங்கள் தாமதம்
நான் வெகு நேரம் காத்திருக்கிறேன்


நான்
காத்திருந்தது நீ தானே பின்பு ஏன்
என் விழிகள் சிவந்திருக்கிறது

அவள்
சிவக்கும் சிவக்கும்


நான்
எதிர்பார்த்த விழிகளில் எத்தனை அதிசியம்


அவள்
ஏன் அப்படி பார்கிறீர்கள் ?

நான்
இல்லை என் கற்பனையை தாண்டி
எப்படி உன் கண்கள் ஜொலிக்கிறது
என்ற ஆச்சர்யத்தில்தான் பார்த்து கொண்டிருக்கிறேன்.

அவள்
உங்கள் கற்பனையை தாண்டியா ?
எதை பற்றி அப்படி என்ன கற்பனை செய்தீர்கள் ?

நான்
உன் விழிகளை பற்றிய கற்பனை தான்
ஒரளவு வடித்துள்ளேன்

அவள்
எங்கே சொல்லுங்கள் எனது விழி பற்றி
உங்களின் மொழி விளையாட்டை பார்ப்போம்


நான்
விழி, இமை என்று இரண்டும் ஒட்டியிருக்க எப்படி சொல்வது என்று யோசிக்கிறேன்.

அவள்
அதில் என்ன பிரிவு


நான்
இணைப்பிலும் பிரிவு உண்டு, இரண்டையும் தனித்தனியே வர்ணிப்பதே நன்று.

அவள்
ம்ம்ஹூம்... வரையுங்கள்

நான்
முதலில் விழி பற்றி சொல்கிறேன் கேள்

உதிராத இலை
முளைக்காத விதை
தேயாத கருப்பு நிலா
உயிர் கொண்ட கோள்
அழிக்க முடியாத புள்ளி
கண்ணீர் வடிக்கும் மீன்கள்
இருட்டு விளையாடும் பந்து
ஒட்டியிருக்கும் குட்டி கருவண்டு
வெளிச்சம் மீட்டும் இருட்டு உலகம்
இதயத்தை துளைக்கும் அழகிய குண்டு
வெண் மேகத்தில் மிதக்கும் குளிர்ச் சூரியன்
வெள்ளை நதியில் உருளும் கூழாங்கல்
காட்சியை பதிய வைக்கும் குறுந்தட்டு
உருவம் காட்டும் உருளை கண்ணாடி
சுருக்கிக் கொள்ள முடியாத குடை
சிவந்திருக்கும் போது மிளகாய்
விலைக்கு கிடைக்காத முத்து
பறிக்க முடியாத கருப்பு பூ
நினைவுகளின் அச்சாணி
முள்லில்லாத கடிகாரம்
செதுக்கப்பட்ட வட்டம்
நீந்த முடியாத படகு
இரட்டை மயிலிறகு
இரும்பு கேடயம்
அசையும் மச்சம்


அவள்
இவ்வளவு தானா ?

நான்
இன்னும் இருக்கிறது இதோ உன் இமை பற்றி


வைர உறை
மெல்லிய வில்
திறந்து, மூடும் சிப்பி
உதிர்ந்து ஒட்டும் பூவிதழ்
நிழல் கொண்ட வானவில்
சிரித்து சிதைக்கும் சோவி
வேர் விட்டிருக்கும் விதை 
வளைந்திருக்கும் மரக்கிளை
சீவிக் கொள்ள முடியாத சீப்பு
விரிந்து, சுருங்கும் விழிக் கூரை
பறக்க சிறகு விரிக்கும் இறக்கை
ஒரே இடத்தில் இமைக்கும் பட்டாம் பூச்சி
மின்னலை மூடி, திறக்கும் ஜன்னல் கதவுகள்
விழிகள் போர்த்தி கொள்ளும் போர்வை

 நான்கு பக்கம் கொண்ட நூலகம்
பாதியாக பிரிக்கப்பட்ட தூரிகை
இனிக்கும் தேனடை மேல் இமை
மிதக்கும் தேய்பிறை கீழ் இமை
தனக்குத் தானே வீசும் விசிறி
புகைப்படம் எடுக்கும் கேமரா
மெளன மொழி பேசும் உதடு
காயமில்லாது உரசும் வாள்
பிரிந்து இணையும் மலை
படுத்து எரியும் தீபம்
வளையும் முள்



அவள்
பராவயில்லை...
இமைக்கும், விழிக்கும்
இரட்டை வரியில் ஒற்றையாக
ஒன்று சொல்லுங்கள்



நான்
உன்...
இமை திறந்தால் உலக போர் படை
மூடினால் கைபிடியில்லா குடை


அவள்
ம்ம்ம்...
வர்ணனை முடிந்ததா?


நான்

அலை அடிக்கும் கடலாய்
விரல் இன்றி புரட்டும் காகிதமாய்
புது அர்த்தம் சொல்லும்
உன் இமைக்கும், விழிக்கும்
உவமை இன்னும் பிறக்கும் !!


பிரிந்து இணையும் மலை
படுத்து எரியும் தீபம்
வளையும் முள்



அவள்
பராவயில்லை...
இமைக்கும், விழிக்கும்
இரட்டை வரியில் ஒற்றையாக
ஒன்று சொல்லுங்கள்



நான்
உன்...
இமை திறந்தால் உலக போர் படை
மூடினால் கைபிடியில்லா குடை


அவள்
ம்ம்ம்...
வர்ணனை முடிந்ததா?


நான்

அலை அடிக்கும் கடலாய்
விரல் இன்றி புரட்டும் காகிதமாய்
புது அர்த்தம் சொல்லும்
உன் இமைக்கும், விழிக்கும்
உவமை இன்னும் பிறக்கும் !!


பிரிந்து இணையும் மலை
படுத்து எரியும் தீபம்
வளையும் முள்



அவள்
பராவயில்லை...
இமைக்கும், விழிக்கும்
இரட்டை வரியில் ஒற்றையாக
ஒன்று சொல்லுங்கள்



நான்
உன்...
இமை திறந்தால் உலக போர் படை
மூடினால் கைபிடியில்லா குடை


அவள்
ம்ம்ம்...
வர்ணனை முடிந்ததா?


நான்

அலை அடிக்கும் கடலாய்
விரல் இன்றி புரட்டும் காகிதமாய்
புது அர்த்தம் சொல்லும்
உன் இமைக்கும், விழிக்கும்
உவமை இன்னும் பிறக்கும் !!


 Mvidhyasan@gmail.com..........................
அன்பு மலர்
 

திங்கள், 25 அக்டோபர், 2010

அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி)


நான்
இன்று என்ன விரைந்து வந்து விட்டாய்


அவள்
உதட்டு கவியின் ஈரம் இன்னும் காயவில்லை

நான்
ஆமாம்.. சிவந்திருக்கிறது

அவள்
இன்று என்ன சிந்தனை

நான்
உன் நாசியை பற்றி

அவள்
ஏன் நாசியை பற்றி யோசனை

நான்

என்னை சுவாசித்து வாழ்ந்து
கொண்டிருக்கும் நாசியை நினைத்தேன்
கவிதை வந்தது

அவள்
எங்கே வாசியுங்கள் .. நான் சுவாசிக்கிறேன்


---நான்---

கற்கால கத்தி
படகின் முனை
யானை தந்தம்
பறக்காத பட்டம்
முகத்தின் மகுடம்
உடையாத அலை
அசையும் நங்கூரம்
ஆலயத்தின் முகப்பு
பாய்ந்து வரும் அம்பு
ஏவப்படாத ஏவுகனை
முடிவடையாத பாலம்
முக்கோண கண்ணாடி
அழகிய அடைப்பு குறி
பட மெடுத்தாடும் நாகம்
வாசம் நுகரும் வாசல்கள்
ஒலி எழுப்பா ஆலய மணி
காற்றை துப்பும் துப்பாக்கி
வடிவமைக்கப்பட்ட இலை
விலை மதிப்பற்ற பிரம்மிடு
வாழ்த்து கூறும் பூங்கொத்து
எடை போட முடியாத தராசு
ஒட்டி பிறந்த இரட்டை குளம்
பறிமுக்க முடியாத மாங்காய்
தொங்க விடப்பட்ட தொட்டில்
தலை கீழாக தொங்கும் மலை
சிறகு சுருக்காத சின்ன பறவை
மூச்சு வாங்கும் இரட்டை புள்ளி
சிற்பத்தில் பொருத்தப்பட்ட உளி
தென்றல் தங்கிச் செல்லும் குகை
அனையாது எரியும் அழகிய தீபம்
சிக்
கிக் கொள்ள ஏங்கும் தூண்டில்
இரு தலை கொண்ட ஒற்றை ஆணி
விடை காண முடியாத கேள்வி குறி
வியர்வை இறங்கும் சருக்குப்பாறை

அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர்

அவள்
ம்ம்.... அவ்வளவுதானா?

நான்
அடியேன் அறிந்தது அவள்ளவுதான்
உன் மூக்கில் உள்ளது ஏராளம்தான்


அவள்
அப்டினா இன்னும் இருக்கா?

நான்
பேனாவின் முனையும்
மூச்சுவாங்கும் நாசியானது...
உன்
மூக்குத்தியாக பிறந்திருந்தால்
இன்னும் அதிசியங்கள்
பிறந்திருக்க வாய்ப்புண்டு !!
பாடகன் 
Mvidhyasan@gmail.com........................................................

புதன், 20 அக்டோபர், 2010

அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு)


அவள்
வெகுநேரம் காக்க வைத்து விட்டேனா

நான்
மனதில் சிந்தித்து கொண்டிருப்பதால் காத்திருப்பது தெரியவில்லை

அவள்
எதை பற்றிய சிந்தனை

நான்
உன் உதடுகளை பற்றிதான்

அவள்

உதடா ? ஏன் ?

நான்
ஆமாம்...
நேற்று என்னோடு பேச
மறுத்தது உன் உதடு தானே...
அதனால்தான் அதை சிந்தித்தேன்...



அவள்

என்ன வந்தது ?

நான்
கவிதை வந்தது
அவள்
பெரிதாக என்ன சொல்லிவிட போகிறீர்கள்

நான்
சொல்லவா ?

அவள்
ம்ம்ம்......

நான்

உடைந்து போகாத இரட்டை அலை
இரு பக்கம் கொண்ட காதல் நூலகம்

விழிகள் இல்லாத இமைகள்
நதிகள் பாயாத கரைகள்

தேய்ந்து போன சிவப்பு நிலா
உரைந்து போன அருவி

வாடாத இரு பூ இதழ்
கலையாத மேகம்

ஈரமான பாலைவனம்
புன்னகைக்கும் மொட்டு

அமர்ந்து கொள்ளும் படித்துறை
ஒற்றை நிறம் கொண்ட வானவில்

நாணல் பூட்டாத வில்
காயம் ஏற்படுத்தாத வாள்

உருகி வழியாத பனிக்கட்டி
ஒருவர் மட்டும் பயணிக்கும் படகு

பேசும் இதயம்
சிறகு விரிக்கும் அதிசிய இலை

கீறல் இல்லாத கிளை
செதுக்கப்பட்ட வழுக்குப் பாறை


அவள்
போதும், போதும்!

நான்
இன்னும் சொல்கிறேன் கேள்...

முத்தில்லாத சிப்பி
கூடு இல்லாத நத்தை

விரிந்து சுருங்கும் விநோத சாலை
விரல்கள் விளையாடும் சிறிய மலை

தூர பறக்கும் பறவையின் உருவம்
மொட்டவிழ்ந்த ரோஜாவின் வடிவம்

தூக்கம் தராத தலையணை
உரிக்கபடாத மாதுளை

குறுக்கு, நெடுக்காக திறந்து மூடும் கதவு
மயக்கம் தீர்க்காத மது கோப்பை

கீழே ஆங்கிலத்தின் மூன்றாவது எழுத்து
மேலே ஆங்கிலத்தின் பதிமூன்றாவது எழுத்து

முகத்திற்கு சூட்டப்பட்ட முத்து மாலை
பாதியளவு இறகை விரித்து வைத்த பட்டாம் பூச்சி

நறுக்கி வைக்கபட்ட ஆரஞ்சு சுளை
அலையில் வீசுப்படும் வலை

குழையும் வைரம்
தேன் சுரக்கும் ஓடை

மீட்டாது இசை தரும் வீணை
மடித்து வைக்கப்பட்ட கடல்

சுவைக்க, சுவைக்க எனக்கு மட்டும்
கவிதையாகிறதே உனது

இதழ்.....

அவள்
உதடு வலிக்க வில்லையா

நான்
இன்னும் முழுமையாக ரசிக்க வில்லையடி
மெலிந்திருக்கும் ரோஜாவை
இந்த ராஜா !


புன்னகைத்த பாசி மணி மாலை

சுட்டேறிக்கும் சூரியன் அகல விழித்திருக்கும்
மதிய வேளை...

பரபரப்பாக பறந்து கொண்டிருக்கும்
நெடுஞ்சாலை...

நரைத்த தாடி,முடி, தள்ளாடியபடி
துவண்டு வந்தார் முதியவர் கவலை கோடி...

கண்கள் நிறைய பசியோடு
கையிலோ பாசி மணி ஜெலித்த மாலையோடு...

அருகில் வந்தார்...
அசைய முடியாத நிலை
உதடுகள் உலர்ந்தபடி உதிர்த்தார்
பசிக்கிறது வாங்கிக் கொள்ளுங்கள் என்று...

சட்டை பையை பார்த்தேன்
20 ரூபாய் சிரித்தது
இதயத்தை பார்த்தேன்
ஈரம் கசிந்தது...

மனமில்லாது நகர்ந்து சென்றேன்
மறு படியும், மறு படியும்
பசியில் பினைந்த முகம் எனக்குள்
பதிந்து வாட்டியது...

வயதை தொலைத்தாலும் வயிராக்கியத்தை
தோள்களில் சுமந்து பிச்சை எடுக்காது
உழைத்து வாழும் அவரை நினைத்து உதவிட
தேடியது வழிகளில் வழிந்தபடி விழிகள்...

மறைந்து விட்டாரோ? கரைந்து விட்டாரோ?
பசியால் மயங்கி விட்டாரோ ? என்று பதைத்தது மனம்
பரிதவித்தேன் பார்ப்பேனோ என்று...

நான்கு திசைகளிலும் வீசி பறந்தது கண்கள்
கண்டேன், கண்டேன் நெடுஞ் சாலையை
கடப்பதை உணர்ந்து கொண்டேன்...

காற்றென விரைந்தேன்
கண நேரத்தில் அவர் கண் எதிரே தோன்றினேன்
சற்று முன் பார்த்த நினைவின்றி, ஏக்கதோடு உதடுகளை அசைத்தார்...

விலை என்ன ?
சட்டை பையில் இருந்ததை உரைத்தார்
சரமாக நான்கு மாலையை காண்பித்தார்...

சட்டென பட்டது கண்ணில் ஒரு மாலை
பட்டென பறந்து வந்தது என் கைகளில் பாசி மணி
மொட்டென மலர்ந்தது அவரிடம் அந்த குறந்த தொகை...

பசி விட்டு போனது அவரது பால் முகத்தில்
பளிச்சென்று புன்னகைத்தது என் கைகளில்
பாசி மணி மாலை !!

நன்றி 

செவ்வாய், 19 அக்டோபர், 2010

மூடிய புத்தகமாகவே இரு

உன் இதயத்தை திறந்த புத்தகமாக வைக்காதே,
படித்து விட்டு சென்றால் பரவாயில்லை
எதை எதையோ கிறுக்கி வைத்து விடுவார்கள்...

உன் கடந்த வாழ்க்கையை கண் மூடி
சொல்லிவிடாதே, காதில் போடா விட்டாலும் பரவாயில்லை
கதைகள் திரித்து சொல்லி விடுவார்கள்...

உன் கண்ணீரை பங்கிட்டுக் கொள்ள
விரல்களை தேடாதே, துடைக்கா விட்டாலும் பரவாயில்லை
புன்னகைத்து ஏலனம் செய்வார்கள்...


உன் உணர்வுகளை யாருக்கும் உணர்த்தி விடாதே,
உரிமை எடுத்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை
உதாசினப் படுத்தி விடுவார்கள்...

உன் கனவுகளை வெளியே வரைந்து காட்டி விடாதே
கண்டு ரசிக்கா விட்டாலும் பரவாயில்லை
கிழித்து எறிந்து விடுவார்கள்...

உன் நினைவுகளை படம் பிடித்து காட்சியாக்கி விடாதே
கை தட்டா விட்டாலும் பரவாயில்லை
காலில் போட்டு மிதித்து விடுவார்கள்...

உன் உழைப்புக்கு பாராட்டு எதிர் பார்த்து விடாதே
வாழ்த்துக்கள் கூறாவிட்டாலும் பரவாயில்லை
வஞ்சகன் என்று வர்ணித்துவிடுவார்கள்...

உன் கவலைகளை எவரிடமும் உரைத்து விடாதே
தோள் கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை
தொலை தூரத்தில் சென்று விடுவார்கள்...

உன் புனிதமான காதலை ஒருவரிடமும் ஒப்படைத்து விடாதே
இதயத்தை பார்க்கா விட்டாலும் பரவாயில்லை
இரக்கமின்றி அசிங்கம்  என்று கதவடைத்து விடுவார்கள்...

அர்த்தங்களை தேடி அலையும் வாழ்க்கையில்
முகமூடி போர்த்தியிருக்கும் முகங்களுக்கு முன்னால்
நீ....
மூடிய புத்தகமாகவே இரு
வருத்தங்கள் ஏதும் வருவதில்லை !!

அன்பு மலர்
------------- Mvidhyasan@gmail.com

கூடாதா ?

உன் விரல் படும் காகிதமாக
பிறந்திருக்க கூடாதா ? 


நின் மணிக்கைகளை உரசிக் கொண்டே
உயிர் வாழும் வளையலாக நானிருந்திருக்க கூடாதா?


நீ... உன் முகம் பார்த்து ஒப்பனை செய்யும்
கண்ணாடியாக உருவெடுத்திருக்க கூடாதா ? 


அதிகாலை பொழுதில் வாசலில்
அலங்கரிக்கும் கோலத்தின் புள்ளியாக மாறியிருக்க கூடாதா?

நின் பனிகட்டி தேகத்தில் உருண்டு
விளையாடும் வியர்வைத்துளியாக அவதரித்தி
ருக்க கூடாதா ? 

உன் செவிகளில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும்
கம்மலுக்கு திருகாணியாக ஒலிந்திருக்க கூடாதா ? 


நின் விழிகளை சுற்றி தீட்டியிக்கும்
கண் மை யாக கரைந்திருக்க கூடாதா ?

 
 மேக நெற்றியில் மெலிந்து மிதந்து கொண்டிருக்கும்
நிலவு பொட்டாக உருமாறியிருக்க கூடாதா ?

உன் கழுத்து வளைவுகளை கட்டிக் கொண்டிருக்கும்
பாசி மணியாக மாறியிருக்க கூடாதா ? 


நீ எட்டு வைத்து நடக்கும் போதெல்லாம்
வாசம் வீசும் கொழுசு மணி மொட்டாக இருந்திருக்க கூடாதா ?


உன் உடல் தொட்டு தன்னை அழகுபடுத்தி கொள்ளும்
புடவையின் நூலாக புகுந்திருக்க கூடாதா ? 


நின் இருதய அறையில் தங்கி செல்லும்
மூச்சுக் காற்றாக சில நிமிடம் மறைந்திருக்க கூடாதா ?

பாதைகள் எல்லாம் காத்திருக்கும்
உன் பாதங்களுக்கு நகமாக வளர்ந்திருக்க கூடாதா ?


நீ கற்பனை செய்யும் தருணத்தில்
அதன் கருப் பொருளாக கருவாகியிருக்க கூடாதா ?


என்ன செய்ய நான் மனிதனாக பிறந்து விட்டேன் என்பதற்காக

 
என்னை !

 
நீ... 

 
ஒரு பொம்மையாக கூட வைத்திருக்க கூடாத ?

ஐ லவ் யூ

திங்கள், 18 அக்டோபர், 2010

இழைக்கிறது எனது இருதயத்தை

உனது மெளனத்தின் கரை உடைகையில்
எனது வார்த்தைகளின் சருக்கள்கள்
கிளிஞ்சல்களை பொறுக்குகின்றன.... 

உனது இமைகள் கைத்தட்டி திறக்கையில்
எந்தன் காட்சிகளில் வண்ணத்து பூச்சிகளும்,
வானவில்லும் சாயம் பூசிக் கொள்கின்றன...

உனக்குள் தவறி விழுந்த வார்த்தைகள் எல்லாம்
என் தோளில் சாய்ந்தபடி கதைகள்
சொல்லிக் கொண்டிருக்கிறது தினமும் தனிமையில்...

நெடுந்தூர பாதையில்,யாருமில்லா பயணத்தில்
தொடந்து வந்து, விரல் கோர்த்து அழைத்துச்
செல்கிறது உந்தன் நிழல் தோற்றங்கள்...

உடைந்துபோன பொம்மையாய்
நானிருந்த போதெல்லாம், மறைந்திருந்து
மென்மையாய் ஒட்டவைக்கிறது உந்தன் நினைவுகள்...

இரவுகளின் துயரங்களில் இமைகள், கதவடைக்கும்
தருணங்களில், கனவுகளின் வாசல்களில்
கோலங்கள் வரைகிறது, உந்தன் கால்தடங்கள்...

மண்ணோடு உரசி பறக்கும் சருகைபோல,
என்னோடு... உள்மூச்சில் உரைந்து கிடக்கிறது
உன் உதடுகள் உதிர்த்த நேசங்கள்...

நூலிழையில் பிரிவுகள் நிகழ்கையில்
உனது இணைகையின் நினைவுகள்
கொஞ்சம், கொஞ்சமாக இழைக்கிறது எனது இருதயத்தை !!
ஐ லவ் யூ

நீ வந்த தருணத்தில்

பனித் துளிகள் எல்லாம் நிலவாய் ஆனது
எந்தன் காலையில்...
மர இலைகள் எல்லாம் இதயமாய் மாறுது
எந்தன் சாலையில்....

மழைத் துளிகள் எல்லாம் பூவாய் ஆனது
எந்தன் வானத்தில்....
ஒவ்வொரு நிமிடமும் தீவாய் மாறுது
எந்தன் கடிகாரத்தில்...


தொடரும் அலைகள் போர்வையானது
வானவில்லில் வண்ணம் கூடியது
மின்னல் நின்று புன்னகைத்தது
ஜன்னல் தீண்டி தென்றல் வியர்த்தது !

சுடும் சூரியன் சுருங்கிப் போனது
தொடும் தூரத்தில் மேகம் போகுது
வின்மீன் எல்லாம் இமைத்து பார்த்தது
தண்ணீர் எல்லாம் தவழும் குழந்தையானது!


புல்லின் நுனியும் கத்தியானது
பூமி, வானம் இடம் மாறுது
இரவு இன்று மயிலிறகானது
இருளும் கூட ஓவியமானது !

பூமி சுற்றும் திசை மாறுது
பூங்காற்றும் இசை மீட்டுது
ஓரப்பார்வை உயிர் வேரை அசைத்தது
தேக அசைவு இதயம் தேய வைத்தது !

மாலை நேரம் வெட்கம் கொண்டது
மலைகள் யாவும் பூங் கொத்தானது
கை ரேகை எல்லாம் பாதையானது
பொய் கூட உனக்கென்றதும் கவிதையானது !

இது எல்லாம் எப்படி நடந்தது
நீ வந்த தருணத்தில் நிகழ்ந்தது !
சேர்ந்திசை

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

முன்னும், பின்னும் !!


எனது கனவுகளின் உலகம் முழுக்க
ஏதேதோ கிறுக்கல்கள்....

எனது வழி எங்கும் யார் யாரோ
எழுதி வைத்த கால் தடங்கள்...

எனது நினைவுகளின் தருணங்களில்
எத்தனையோ உருவங்களின் வரவுகள்...

என்னில் கடந்துபோன காட்சிகளில்
வழிந்து ஓடுகிறது தனிமையின் சாயங்கள்...

என்னில் நுழைந்து பார்த்த நிகழ்வுகளில்
தொலைந்து போன என் உணர்வுகள்...

இலையுதிர் காலத்திலும் இடைவிடாது
நிழல் தரும் மரக்கிளைகளாய்...

எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு
நமக்குள் இடைவெளி பூத்த பின்னும்


எனக்குள் வாசம் வீசுகிறது உந்தன் நினைவுகள்
முன்னும், பின்னும் !!


அன்பு மலர்

வெள்ளி, 15 அக்டோபர், 2010

இனி எப்ப வருவாக ?

முள்ளா கிடந்த ஏ முகத்துல
அவுக மெல்ல..
நல்லா எடுத்து சுத்தஞ் செஞ்சவுக!

கல்லா கிடந்த ஏ மேனியில
அவுக வந்து...
நில்லாம கமல எறச்ச கடவுளவுக!

செல்லா காசா இருந்த ஏ உடல
அவுக நின்னு...
வில்லா வளைஞ்சு உழுதவுக!

புல்லா விளைஞ்ச ஏ உசுருல
அவுக தானே...
நெல்லா விளைய விதை விதச்சவுக!

வெடிப்பு பாதம் பட்டு
வரப்பு மடிப்பு நோகுமுன்னு...
பைய்ய அடி எடுத்து வச்சவுக!

மேகம் கருக்கும் முன்னே
தேகம் கருத்து ...
வியர்வை மழைய நில்லாம பொழிஞ்சவுக!

ஒத்த தோகை வாடிச்சுனா போதும்
கொத்து, கொத்தா கண்ணீர் விட்டவுக!

தலைப்பா கட்டிக்கிட்டு
விரப்பா நின்னுக்கிட்டு ஐய்யனார்
மீசையை முருக்கிக்கிட்டு என்ன
ஆசையா பார்த்தவுக!


எனக்கு ஏதாச்சு நோய்
வந்துச்சுன்னா...
தனக்கு வந்ததாச்சுன்னு
மருந்து குடிச்சவுக!

நா...
அரும்பு விட்டு நிற்கையில
அவுக...
இரும்பு மீசைய ஒதுக்கி விட்டவுக!

கதிரு முத்தி நிற்கையில
கஞ்சி தண்ணி குடிக்க மறந்தவுக!

குருவி கொத்தி,குருதி வருமோன்னு
இராவு,பகலா என் கூட படுத்தவுக!

கன மழை பெய்யாம
கருப்பசாமி காத்திருச்சு

கதிரு முத்தி...
கழுத்து வரைக்கும் வளந்துருச்சு

காலம் இப்ப கனிஞ்சிருச்சு
கஷ்டம் எல்லாம் தீர்ந்து போச்சு!

அன்றைக்கு வித்த ஆட்டுக்குட்டி
ஏழுமாசமான ஏ அருமை பசு கன்னுக்குட்டி
அடகு வச்ச பொஞ்சாதி தாளி
அழுது கேட்ட மூத்த பிள்ள கோழி!



இளைய பிள்ள
பார்த்து வச்ச டவுனு சொக்கா
நல்லவனுக்கு
நேந்து விட்ட மூகக்காயி மொட்ட
கடைசியில்ல
கையில்ல காது குத்த காத்திருக்கு
ஒரு பிள்ள பொட்ட
வைத்துல சுமக்குரா ஏ எஜமானி
மூக்குக்கு வளையல் மாட்ட!

எல்லாம் வாங்க
வந்ததிப்ப காலமுன்னு
கைவிரலால என கட்டி அனைச்சவுக!

சூரியன சுத்தியாச்சு
குலசாமிக்கு நேந்தாச்சு
படையல் முடிஞ்சுருச்சு
பாட்டி குலவ போட்டாச்சு!

என்ன...
அருவ கொண்டு அருக்கையில்ல
உசுர விராகட்டாம் எரிச்சவுக!

அலுங்காம, குலுங்காமா
அருத்து போட்டு
கை தூக்கி கதிரு அடிச்சு
புல்ல மட்டும் தனியா பிரிச்சு
நெல்ல மட்டும் கொண்டு போக
நினைக்கையிலே!

வந்து நின்னா விரசா
வயிறு மட்டும் யானை பெருசா
பட்டு வேட்டி, பவுசு சொக்கா
பக்கத்துல்ல இரண்டு அடியாளு மக்கா!

ஏம்...
பக்கம் வந்தா சொகுசா
பன்னையாரு அள்ளி பார்த்தான்
நைசா!

வாங்கிய
வட்டி கடனுக்கு
இந்த வருசம் இது பத்தாதுன்னு
நெல்லோட சேர்த்து
புல்லையும் வண்டியில்ல
ஏத்திக்கிட்டு போயிட்டா!

நெல்லா வீட்டுக்கு கொண்டுபோயி
எல்லாம் வாங்கலாம்முன்னு
தில்லா சொன்னவுக

இப்ப...

வானத்து நிலாவ பார்த்து
நிலத்துல மல்லாந்து படுத்திருக்காக!

வீட்டுல்ல நெல்லு வருமுன்னு
காத்திருக்க!

இப்ப புல்லு கூட இல்லாம
போராக!

ஏ ராசா


இனி எப்ப வருவாக ?


அழுகை

வியாழன், 14 அக்டோபர், 2010

சலித்து கொண்டது சாஜஹானை

நீ வருகின்ற கணத்தில்
சிறகு விரிக்கிறது எனது பாதைகள்...

நீ சிரிக்கின்ற நிமிடத்தில்
என் மணித்துளிக்குள் அடைமழை...

நீ முகம் சிவக்கும் தருணத்தில்
வர்ணம் பூசிக்கொள்கிறது என் வானம்...


நீ எனை நினைக்கும் வினாடியில்
துள்ளி குதிக்கிறது குழந்தையாய் என் மனம்..

நீ இம்மியளவு பிரிந்தாலும்
என் இமை இரண்டும் இமயமளவு துயர் கொள்கிறது...

நீ எனதருகில் இருந்தால் போதும்
என் சிறு இதயமும் சீனப் பெருஞ் சுவராய் மாறுகிறது...

நீ பொம்மையோடு விளையாடும் பொழுதெல்லாம்
யார் நிஜமென்ற உண்மை தெரிவதில்லை...

நீ உதடு ஒட்டி,நீட்டி பேசும் வேளையில்
ஒலிகள் எல்லாம் கை கட்டி கவனிப்பதுண்டு...

நீ மொட்டை மாடியில் நிற்கும் அழகில்
வட்ட நிலவு ஏக்கத்தில் தேய்வதுண்டு...

என்ன விந்தையடி ! உன் வடிவம் பார்த்து
தாஜ்மஹால் சலித்து கொண்டது சாஜஹானை !!

ஐ லவ் யூ