ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

தீரா - மீரா 8

கண்ணாடியின்
பார்வை
ரச விழி உள்ளவரை!

வானத்தின்
பார்வை
பூமி உள்ளவரை!


பூக்களின்
பார்வை
வாசம் உள்ளவரை!

சமுத்திரத்தின்
பார்வை
அலை உள்ளவரை!

ஸ்வரங்களின்
பார்வை
விரல் மீட்டும்வரை!

ஆணின்
பார்வை
பெண் உள்ளவரை!


பெண்ணின்
பார்வை
ஆண் உள்ளவரை!

தீராவின்
பார்வை
மீராவின் உள்ளம்வரை!


மீராவின்
பார்வை
தீராவின் எல்லை வரை!


புவி நடுங்கினால்
பூகம்பம்!

மலை நடுங்கினால்
எரிமலை!

வானம் நடுங்கினால்
மழை!

வாள் நடுங்கினால்
பலி!

சூரியன் நடுங்கினால்
தீ!

நிலா நடுங்கினால்
இருள்!

இதயம் நடுங்கினால்
காதல்!

நடுங்கியது
தீரா!
மீரா!
இதயம்!

இரவுகளை விற்றுவிட்ட
சந்தோசத்தில் அதிகாலை
சலசலத்தது!

தூக்கத்தை தூக்கிலிட்ட
கர்வத்தில் சூரியன்
மினுமினுத்தது!

அன்றைய
பகல் பொழுது
முந்தைய இரவு முதல்
நகர மறுத்தது!

உச்சி வேளை
உணர்வுகளை
பிய்த்து எறிந்து கொண்டிருந்தது!

தீரா
காட்டு தீயானான்!

மீரா
கற்றாளை முள் ஆனாள்!

மாலைக்காக
காத்திருந்தது
இரு மனமும்!

வழக்கம்போல்
சூரியன் சுருங்க ஆரம்பித்தது!

மயக்கம்தரும்
மாலை அரும்புவிட்டது!

தீராவிற்கு தெரியாத என்ன ?
பாதங்கள்
ஆற்றங்கரையில்!


நதிகள்
கரையில்
தலை துவட்டி கொண்டிருந்தது!

மீரா
நினைவு
தீராவை துவட்டிக் கொண்டிருந்தது!


புற்களின் நுனிகள்
பனித்துளிக்காக
புதுப்பித்துக் கொண்டிருந்தது!

தீரா- வின் விழிகள்
மீரா -வருகைக்காக
தடம் பதித்துக் கொண்டிருந்தது!


நிசப்தம்
நீளுகையில்
மொட்டு விரியும்
சப்தம் கூட கைத்தடலாகும்!

சப்தம் பிளிறுகையில்
சரிந்துகிடக்கும் சடல
நிசப்தம் கூட கதறிஅழும்!

நிகழ்ந்தது
கைதட்டல்களும்
அழுகையும்
தீராவுக்குள்!

நதிக்கரையில்
தீரா!
உயிர் கரையை மீட்டிக் கொண்டிருக்க!!

மறு கரையில்
மீரா!
உணர்வுகளை மூட்டிக் கொண்டிருந்தாள்!

ஒரு கல்
எப்போது சிரிக்கும்
சிலையானால்!

ஒரு மரம்
எப்போது காயப்படும்
பழமானால்!

ஒரு சொல்
எப்போது ஆழப்படும்
உண்மையானால்!

ஒரு முள்
எப்போது பேசப்படும்
பதம் பார்த்தால்!

ஒரு வாள்
எப்போது வீசப்படும்
சரித்திரமானால்!

ஒரு நெல்
எப்போது உயிராகும்
பசியாற்றினால்!

ஒரு பெண்
எப்போது பொன்னவாள்
நாணமானாள்!

மீராவுகள்
நிகழ்ந்தது!

யார் அது ?
ஆற்றங்கரையில்
ரேகை அழித்தது!

யார் அது ?
பூவுக்குள்
பூகம்பத்தை புகுத்தியது!

யார் அது?
பாலைவனத்தில்
பனி மழை பொழிந்தது!

யார் அது?
பாதரசத்தில்
பன்னீர் தெளித்தது!

யார் அது?
பாறைக்குள்
வேராய் நுழைந்தது!

யார் அது?
காற்றுக்குள் ஈரமாய்
புகுந்தது?

யார் அது?
சிறகுக்குள் சிறுத்தையை
விதைத்தது!

யார் அது?
நிலவுக்குள் கலங்கங்களை
துடைத்தது!

மீரா!
தீராவை!
யார் ? யார் ?


அனை நிரம்பினாள்
வெள்ளம்!

நீர் குதிக்குமிடம்
பள்ளம்!

மேகம் கூடினாள்
தடுக்க முடியாது
உருகுவதை!

மோகம் கூடினால்
நிறுத்த முடியாது
நோகுவதை!


மீரா!
வெள்ளமாய்!
பள்ளமாய்!
உருகினாள்!
நொந்தாள்!

யரால் ?
தடுக்க முடியும்?
உணர்ச்சிகள் உடைபடும்போது
இலக்கணம் மாற்றமடைவதை!

பெண்ணை
கட்டுப்படுத்துவது
என்பது ?

விண்னை
மட்டப்படுத்துவதற்கு
சமம்!

மீரா!

தடுத்தாள்!
உடைத்தாள்!
அதட்டினாள்!
ஆணையிட்டாள்!
அமிழ்த்தினாள்!
ஆற்றினாள்!
அழித்தாள்!
புதைத்தாள்!
மூடினாள்!
மறைத்தாள்!
தன் மனதை!!

இறுதியில்
உறுதியானாள்!

தீராவை
சந்திக்க
சிறகானாள்!

ஆற்றங்கரையில்
ஆடும் தென்றலாய்!
பாடும் குயிலாய்!
தாவும் மீனாய்!
தழுவும் நீராய்!
நுரைக்கும் மணலாய்!
சிறகு விரிக்கும்
வண்ணத்து பூச்சியாய்
வந்தடைந்தாள்!!


(தொடரும்....)

தீரா - மீரா 7

இரவு
பலருக்கு
தூக்கமாகும்!

இரவு
சிலருக்கு
கனவாகும்!

இரவு
பல நேரம்
படுக்கையாகும்!

இரவு
சில நேரம்
தொலையும் இடமாகும்!


இரவு
இனிப்பு
மழையாகும்!

இரவு
கண்ணீர்
மலையாகும்!

இரவு
நிலா
பந்தலாகும்!

இரவு
வின்மீன்
மாநாடாகும்!

இரவு
வியர்வை
துளியாகும்!

இரவு
கசங்கிய
போர்வையாகும்!

இரவு
தைக்கும்
உறவாகும்!

இரவு
நைய்ய புடைக்கும்
நினைவாகும்!

இரவு
முகம் காட்டும்
கண்ணாடியாகும்!

இரவு
யுகம் கடக்கும்
நிமிடமாகும்!


இரவு
மிதக்கும்
கப்பலாகும்!

இரவு
கலையும்
மேகமாகும்!

இரவு
வெளிச்சத்தின்
அஸ்திவாரமாகும்!

இரவு
இருட்டின்
அஸ்தியாகும்!

இரவு
நிழல்தரும்
குடையாகும்!

இரவு
நிர்வாண
உடையாகும்!

இரவு
கருப்பு
கடலாகும்!

இரவு
சிவப்பு
விழிகளாகும்!


இரவு
அழகிய
பாடமாகும்!

இரவு
இணைக்கும்
கூடமாகும்!

இரவு
நீண்ட
தேடலாகும்!

இரவு
மீளாத
ஊடலாகும்!

இரவு
கிளையில்லா
மரமாகும்!

இரவு
விலையில்லா
வரமாகும்!

இரவு
மர்மங்களின்
முடிச்சு!

இரவு
காயங்களின்
மருந்து!

இரவு
பகலுக்கு
முதுகு!

இரவு
காமத்திற்கு
மதகு!

இரவு
பிறப்புக்கு
விருந்து!

இரவு
காதலுக்கு
விந்து!

ஆனால்!
தீராவுக்கும் ‡ மீராவுக்கும்
அப்படி அல்ல!

ஓராயிரம் குண்டூசி
ஒன்றாக உடலை
துளைப்பதாய்!

நினைவுகளின்
சாட்டைகள் சுழற்றி சுழற்றி
அடித்ததாய்!

கனவுகளின்
இடுக்கில் உணர்வுகள்
துவைத்ததாய்!

வர்ணனையின்
மடியில் கற்பனைகள்
வழிந்ததாய்!

தறியின்
நூலில் பாதியாய்
இளைத்ததாய்!

இமை கதவுகள் சாத்திய பின்பு
விழி கால்கள்
உதைத்ததாய்!

தீரா!
மீரா நினைவில்
கசிந்ததாய்!


உயிரின் நடுவில்
கொதிக்கும் உலையாய்!

இமையின் திறியில்
உறக்கம் எரிந்ததாய்!

அலையின் வளைவில்
ஆடும் பூவாய்!

இரவுக் குடையில்
ஒதுங்கிய நிலவாய்!

தலையணை வலிக்க
புறண்ட உருவமாய்!

தவழ்ந்து வருகையில்
தடுமாறும் குழந்தையாய்!

உருகும் பனிக்குள்
அவிழும் நீர்துளியாய்!

மீரா!
தீரா தீண்டலில்
துவண்டிருந்தாள்!

இருவரின்
விழிகளும்
இமை உறைக்குள்
புக வில்லை!

மெளன இரவு
கசிய கசிய
மயக்கங்கள் தீரவில்லை!

மீரா!
விழிப்பிடியில்
தீரா!

தீரா!
விரல் பிடியில்
மீரா!

உறக்கம்
உளர ஆரம்பித்தது
இருவரின் பிடியில்!

வானம்
கருப்பு ஆடை உரித்து
வெளுக்க ஆரம்பித்தது!

தீரா!
மீரா!
வெளுத்த விழிகள்
சிவத்தது!

அதிகாலை
விடியலானது
தூக்கத்தையே
அணைக்கும்!


தீரா!
மீரா!
விடியலானது
ஏக்கத்தையே
அணைத்தது!

(தொடரும்....)

தீரா - மீரா 6

மீரா பூவாக !
தீரா புயலாக!
மீரா நதியாக!
தீராக கடலாக!
மீரா வண்ணத்து பூச்சியாக!
தீரா ஓவியனாக!
மீரா வானமாக!
தீரா மேகமாக!
விண்மீன் கூட்டத்திற்கு நடுவில்
நிலவாக நின்றிருந்தாள் மீரா !
பொம்மையை தேடும்
குழந்தையாக மீரா அருகில் தீரா!

யார் ? யார் ?
திடுக்கிட்டாள்!
தீயாகினாள்!
திக்கித்தாள்!
ஊமையாகினாள்!
நடுங்கினாள்!
கலங்கினாள்!
நிசப்தம்
நீண்டது !
பார்வைகள்
மோதியது!
தோழிகள்
விலகினர்!
மீரா!
மயங்கினாள்!
நாணமானாள்!
வசியமானாள்!
லகித்தாள்!
துள்ளினாள்!
உள்மூச்சு வாங்கினாள்!
உடைந்தாள்!
உருகினாள்!
இறுதியில்....
தீரா விழியில்
கைதியாகினாள்!

ஒரு ஆண்
ஒரு பெண்ணை ரசிக்க
யுகங்கள் போதாது!
ஒரு பெண்
ஒரு ஆணை ரசிக்க
சில நிமிடங்கள் அதிகமானது!
தீராவை!
மீரா!
சில நிமிடத்தில்
சிறு விழியில்
சிறைபிடித்தாள்!

கற்றுக் கொள்ளுதல் என்றானால்
தவழுதல் கூட கடினம் தான்!
ஒட்டி கொண்ட பிறகு பிரித்தல் என்பது
தழுவலுக்கு பின் கடினம் தான்!
தீரா!
மீரா!
விழிகள்!
கற்றுக் கொண்டது!
ஒட்டிக் கொண்டது!
காற்று உரசி கடந்துவிடும்
பின்புதான் நடக்கும்
இலை அசைவு!
மேகம் மோதி கடந்துவிடும்
வேகமாய் நகர்வதாய்
நிலா தோன்றும்!
நதியில் தண்ணீர் நில்லாது ஓடிவிடும்
மண்ணில் ஈரம் நீங்காது
தங்கிவிடும்!
ஒருவரை ஒருவர்
பார்வையில் தின்றபடி
திணறி கொண்டிருந்திருந்தனர்!
கல கல வென
தோழியர்கள் சிரிப்பு!
உணர்ந்தாள் மீரா!
தீரா உலகத்தில் கடத்தப்படுவதை!
வானவில்லின் வர்ணமாய்
வெட்கம் பூசிக் கொண்டு
தீராவை தாண்டினாள் மீரா!

அலை ஆவேசப்பட்டால்
சுனாமி!
நெருப்பு ஆவேசப்பட்டால்
சுடுகாடு!
காற்று ஆவேசப்பட்டால்
புயல்!
மழை ஆவேசப்பட்டால்
வெள்ளம்!
காதல் ஆவேசப்பட்டால்
காமம்!
மீரா!
கடக்க !
தீரா
தடுக்க!
ஆவேசப்பட்டால்
மீரா!
ஒரு
பூ
தீயானால் என்னாகும்?
ஒரு
நிலா
மூர்க்கமானால் என்னாகும்?
ஒரு
புறா
புலியானால் என்னாகும்?
ஒரு
புல்
கூர்வாள் ஆனால் என்னாகும்?
ஒரு
மெளனம்
அலறி கதறினால் என்னாகும் ?
அப்படி ஆனாள்
கை தீண்டி
தீரா!
தடுக்க!
மீரா!
புல்லாங்குழலை
பிடித்து
வாசிக்கும் இதழ் என்னவாகும்?
கிளைகளை
தாங்கி
ஆடும் தேனடை என்னாகும்?
நீரில்
மோதி
முகம் துடக்கும் காற்று என்னாகும்?
நிலா
உரசி
தேகம் உருகும் மேகம் என்னாகும்?
அப்படி ஆனான்!
தீரா!
மீரா!
விரல்
தீண்டியதும்!
ஒரு
நினைவில்
பூ!
ஒரு
நினைவில்
தீ!
ஒரு
கரையில்
குளிர்!
ஒரு
கரையில்
கொதிப்பு!
ஒரு
பாதியில்
உயிர்!
ஒரு
பாதியில்
சடலம்!
ஒரு
நுனியில்
அருவி!
ஒரு
நுனியில்
எரிமலை!
ஒரு
மன நிலையில்
தீரா!
ஒரு
மன நிலையில்
மீரா!
விடுக்கென்று
விரல் உதறி
உருவிச் சென்றால் மீரா!
படக்கென்று
விழி வழுக்கி
ஊடுறுவி தொடர்ந்தான் தீரா!
தோழிகள்
கேலியில்
துவண்டாள் மீரா!
தோழ்வியில்
வலியில்
தும்சமானான் தீரா!
சூறாவளி கடப்பதாய்
விர்ரென
கடந்தாள் மீரா!
சூரியன் விழுந்ததாய்
சுருண்டு
தேய்ந்தான் தீரா!
(தொடரும்...)

தீரா - மீரா 5

காம்புகள் கூட பாரம்தான்
பழுத்த பிறகு!
உதிரல் கூட தூரல்தான்
இலையுதிர் காலத்தில்!
அழுகை கூட அழகுதான்
மழையாய் வடிகையில்!
கல் கூட சிற்பம்தான்
சிற்பி உளி சிலிர்கையில்!
மரம் கூட வீடுதான்
பறவை கூடு கட்டுகையில்!
மனிதன் கூட மரம்தான்
இரக்கத்தை தொலைக்கையில்!
தீரா கூட காகிதம்தான்
மீரா எனும் கவிதை எழுதைகையில்!
அழகை கண்டால்
இதயம் ஆசையில் தவழும்!
அதிசயம் நடந்தால்
மனம் ஆச்சர்யம் கொள்ளும்!
ரகசியம் கேட்டால்
செவிகள் துள்ளி குதிக்கும்!
ஓவியம் உயிர்த்தால்
வர்ணங்கள் கர்வத்தில் அமரும்!
பிறை ரசிக்கப்பட்டால்
இரவு மயக்கத்தில் நகரும்!
காற்று ஸ்வாசிக்க நினைத்தால்
மூங்கில் காட்டுக்குள் நுழையும்!
தீரா!
மீராவை பார்த்தான் !
அழகாக!
அதிசயமாக!
ரகசியமாக!
ஓவியமாக!
பிறையாக!
காற்றாக!
அவன்
என்னவெல்லாமோ ஆக!
பார்த்தான்!

நிலா !
ஒரு முறை தேயும்
நாளிகை நகர்ந்தது!
காற்று!
இலை கோதி
தள்ளாடும் நிமிடமானது!
அந்த கண இடைவெளியில்
தீரா தீர்ந்து போனான் !
மீரா எனும்
மலர் மோதி!
தூரத்தில்
மிதப்பதால் தான்!
தீண்டபடாத கன்னியாய்
வெண்ணிலா!
உயரத்தில்
மின்னுவதால் தான்!
சூட்ட முடியாத புன்-நகையாய்
விண்மீன்!

அளவிட
முடியாததால் தான்!
பருக முடியாததாய் ஆடுகிறது
கடல்!
கண்ணுக்கு
தெரியாததால்தான் !
கையில் சிக்காது கடக்கிறது
காற்று!
அடுத்து
அறியாததால் தான்
அச்சத்தை ஏற்படுத்துகிறது
மரணம்!
அழித்து!
அடக்கி!
ஒடுக்கி!
ஒதுக்கி!
தாக்கி!
பதுக்கி!
நசுக்கி!
கசக்கி!
பொசுக்கி!
பிசுக்கி!
மடக்கி!
உருக்கி...
எப்படி?
வைத்தாலும் - சரி
முளைத்து கொண்டிருக்கிறது
காதல்!!
தீரா!
கண்களுக்கு புலப்பட்ட
கண்ணாடியில்
தன் முகம் பார்க்க
புறப்பட்டான்!

சில நேரம் ..
சிங்கம் சிறகாகும்!
தீரா சிறகானான்!
சில நேரம் ..
அசிங்கம் அழகாகும்
(அழகிகளிடம் பேசும்போது )
மீரா-வை நெருங்கினான் !
என்ன நடந்தது...??
(தொடரும்...)

தீரா - மீரா 4

மாபெரும் வீரணும் மைவிழியில்
மண் புழுவாய் ஆனதுண்டு !
அனைத்தும் அறிந்த அறிவாளியும் இதழிடையில்
முட்டாளாக மாறியதுண்டு!
கத்திக்கும் - புத்திக்கும்
நடக்கும் சண்டையில்
புத்தி முந்தி கொள்ளும்!
விதிக்கும் - மதிக்கும்
நடக்கும் சண்டையில்
மதி முந்திக் கொள்ளும்!
பகலுக்கும் - இரவுக்கும்
நடக்கும் சண்டையில்
பொழுதுகள் முந்தும்!
ஆணுக்கும் - பெண்ணுக்கும்
நடக்கும் சண்டையில்
ஆணே முந்துகிறான் !

இங்கும் தீராவே !
சில நேரங்களில்
உயிர்க்கும் சடலத்திற்கும்
இம்மி இடைவெளி கூட இருப்பதில்லை!
அமைதியான உடலாய் - சடலம்!
மெளனத்தின் உச்சமாய் - உயிர்!
நினைவுகளை இழந்தாய் - சடலம்!
ஒரே நினைவில் இருப்பதாய் - உயிர்!
அசையாத பொருளாய் - சடலம்!
உணர்விருந்தும் ஜடமாய் - உயிர்!
இதிலும் தீராவே !
உயிர் இருந்தும் சடலமாய்!

குத்துவாள் ஒரு பக்கம் கூர்மை!
துளைக்கும் தோட்டா ஒரு பக்கம் கூர்மை!
தைக்கும் நூல் இரு பக்க கூர்மை!
உடைந்த கண்ணாடி மூன்று பக்க கூர்மை
இரும்பு சட்டம் நான்கு பக்க கூர்மை
ஆனால் ...
பெண்ணின் ஒவ்வொரு பாகமும் கூர்மை !
ஊடுருவினால்
உயிர் தப்புவது கடினம் !
காயப் பட்டு!
உயிர் விட்டு!
தேகம் சுட்டு!
மோகம் முற்று!
தாகம் விற்று!
ஏக்கம் தொற்று!
விக்கித்துக் கிடந்தான் தீரா!

காதல் ஒரு கற்பூரம்
எரிய ஆரம்பித்த மாத்திரத்தில்
கரைவது தெரியாது!
காதல் ஒரு கடல்
மூழ்கும் அவசரத்தில்
ஆழம் புரியாது!
காதல் ஒரு நெருப்பு
பற்றும் வேகத்தில்
வேகுவது அறியாது!
காதல் ஒரு பனித்துளி
உருகும் நிமிடத்தில்
உருக்குலைவது உணராது!
காதல் ஒரு சூறாவளி
சுழலும் கணத்தில்
தூக்கி வீசப்படுவது தென்படாது!

காதல் ஒரு கண்ணாடி
கை நழுவும் வினாடியில்
சுக்குநூறாக உடைவது ஊர்ஜிதப்படுத்தாது!
காதல் ஒரு இனிப்பு
குடித்த பின்
கசப்பாய் மாறுவதை பொருட்படுத்தாது!
காதல் ஒரு விசம்
உயிரை உருக்கும்
கொடூரம் கற்பிக்காது!
காதல் ஒரு மகத்துவம்
கல்லறைகளுக்கு பின்னால்
வரலாறாய் வாசிக்கையில் கேட்காது!
எல்லாம்வாக தீரா !
தீண்டும் தென்றலை பூக்கள்
பார்த்திருக்க வாய்ப்பில்லை!
நதியில் தன் முகம் தெரிந்தாலும்
நின்று ரசிப்பதில்லை நிலா!
வேர் துளைத்து நெடுந்தூரம் சென்றாலும்
பாறைகள் கிடுகிடுப்பதில்லை!
மண்ணில் மறைந்தாலும்முற்றிலுமாக
மரித்துப்போவதில்லை மழைத்துளி!
அலை கரை முட்டி உடைந்தாலும்
கவலை அடைவதில்லை கடல் !
தீரா நின்று தின்று கொண்டிருந்ததை
மீரா கண்டுகொள்ளவில்லை!
உண்ணாதவரை மா சக்தியுடைய
மலைப்பாம்பு!
உண்டுவிட்டால் நத்தை அசைவுடைய
மண்புழு!
தனித்தனியாக இருக்கும் வரைதான் ஸ்வரம்
இணைந்து விட்டால் ராகம்!
திரவமாக இருக்கும் வரைதான் நீர்
உறைய துவங்கி விட்டால் பனி!
ஓடும் வரைதான் நதி
ஓரிடம் நின்றுவிட்டால் கடல்!
மூடி வைக்கப்படும் வரைதான் ரகசியம்
அவிழ்ந்து தென்பட்டால் தகவல் கசியும்!
விழியும், இதயமும் மோதாத வரைதான் தேடல்
மீரா (விழி) - தீரா (இதயம்) - வை தீண்டிவிட்டால் காதல் !

(தொடரும்...)

தீரா - மீரா -3

உலகத்தை ஊதி தள்ளிவிடுவேன் என்றவர்கள்
கல்லறைக்குள் உறங்குகிறார்கள் !
அண்டத்தையே ஆட்டி படைத்தவன் என்றவர்கள்
அக்னிக்கு உணவாகி சாம்பலானார்கள் !
உலகத்தின் கடைசி வரிசையில் நின்றவன்
ஆளும் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆச்சர்யமானான்!
புல்லாக ஒடுக்கப்பட்டவன்
புலியாக மாறி பூமி பந்தை புறட்டிபோட்டிருக்கிறான்!
காலத்தின் சக்கர பற்களில் சிக்கி
சிலாகித்தவர்களும் உண்டு !
சிதைந்து போனவர்களும்வுண்டு!
தீராவின் மனதிற்குள் ஏனோ
இப்படி எழுந்தன கேள்விகள்!
இயற்கையை அரைத்து உள்ளத்தில்
பூசி மகிழ்ந்தவன் கண்ணில்
ஒரு பெண்!
என்ன செய்வான்?
இறக்கை விரித்து பறக்கும்
பறவையாய் ஆனான்!
தீரா...!

அழகின் !
அதிநீள ஆறு!
ஐந்தடி பூ!
வாசம் வீசும் நிலா!
மீராவை..
ஆற்றங்கரையோரம் கண்டான்!
ஆவி சிலிர்த்தது!
பட பட வென இருதய மரம் சாய்ந்தது!
கட கட வென இரு விழிகள் அளந்தது!
மள மள வென காதல் தீ - கடல் பொங்கியது!
குபு குபு வென காம தீ பற்றியது!
தீரா! உரு மாறி ஒரு
நீராவியானான்!
கவனித்தான் மீராவை!
கருமேகமும், நடுநிசி இருட்டும்
காந்தமும் பிணைந்த ரசமாய்
கருங்கூந்தழ்!
சகாரா பாலைவன
சலிக்கப்பட்ட மணலை குழைத்து
செதுக்கப்பட்டதாய் நெற்றி!
கவிழ்ந்த படகாய்
விரிக்கப்பட்ட குடையாய்
ஒற்றை வானவில்லாய்
மெலிந்த நீள இலையாய்
இமைகள்!
உருளும் கருப்பு உலகம்
மிதக்கும் முத்து
கர்வம் துளைக்கும் குண்டு
சிரிக்கும் சோவி
அதிர்நதான் தீரா
இதுயாவும் விழயாக கண்டு!

சாய்ந்த கோபுரமாய்
துடிப்பை நிறுத்தும் நங்கூரமாய்
நாசி!
மடித்த ரோஜா இதழல்களாய்
சுருக்கி பொருத்தபட்ட சங்காய்
வீசாத சமரமாய்
செவிகள்!
பஞ்சு பொதியாய்
பிஞ்சு பூவாய்
சதை பிடித்த காற்றாய்
கன்னங்கள்!

மொழுகிய மெழுகாய்
நெய்யப்பட்ட பட்டு நூலாய்
மேவாய்!
ஒற்றை படகு
ஒரு வரி கவிதை
நத்தையின் உடம்பு
மேல் உதடாய்!
உருகும் அருவி
ஒழுகும் தேன்
சிவப்பு தோட்டம்
கீழ் உதடாய்!
உரைந்தான்
உடைந்தான்
உருகினான்
கருகினான்
பிளிறினான்
மெளனித்தான்
மறித்தான்
உயிர்த்தான்
தீரா !
அதற்குள் நடந்தது
அடுத்த ரசனை தேடல்!
கொய்யா மர வளவளப்பு
பாலை வன மணல் பரப்பு
முத்துகள் முகாமிடும் கூடாரம்
கழுத்தாய்!
பப்பாளி தளதளப்பு
பாதரச மினுமினுப்பு
எண்ணெயில் மூழ்கிய கூழாங்கல்லாய்
தோள்கள்!
மா மலைகள் மல்யுத்தம் செய்து
வெற்றி கொண்ட இரண்டு
மண்டியிட்டு மறைந்திருந்தது
மார்பகமாய்!
உள் நாவில் துளி ஈரமில்லை!
வார்த்தைகள் வசபடவில்லை!
நினைவுகள் கசிந்தன!
உணர்வுகள் பிசுபிசுத்தன!
கனவுகள் நசநசத்தன!
விளக்கை சுற்றி
விழுந்து எழுந்த
விட்டில் பூச்சியாய் தீரா !
அசையும் வானவில்லாய்
நீண்டிருக்கும் மெழுகுகாய்
கைகள்!
அளவெடுக்கப்பட்ட காம்பாய்
மெல்லிய ஸ்வர கம்பியாய்
உருட்டி வைக்கப்பட்ட மாலையாய்
விரல்கள்!
உரசிய சதுர பொட்டகம்
வளரும் வைரம்
முளைக்கும் சித்தரம்
விரல் நகம்!
ஆற்றின் வளைவு
உடுக்கையின் சரிவு
மலையின் நெளிவு
நடுவில் பூமியே மூழ்கும் குழி
இரு தீவு ஒட்டிய குட்டி
இடை!
பனிக்கட்டி மேடை
கண்ணாடி பாளம்
மின்னும் சட்டம்
முதுகுபுறம்!

தீரா!
குளிர்ந்த நீரில் குதித்த
நெருப்பு சூரியனாய்!
கனல் கக்ககும் எரிமலையில்
கானலாகும் துளி பனியாய்!
பூகம்ப விரிசலின் இடையில்
பூத்திருக்கும் பூவாய்!
கடும் புயல் கடந்த பின்
நடந்து வரும் காற்றாய்!
உருமாறியிருந்தான்!
தீரா!
தங்க தூண்
யானை தந்தம்
தொடையாய்!
அழகிய விழுது
பெருத்த புல்லாங்குழல்
முழங்கால்!
படந்த தாமரை இலை
பால் ஊறிய நிலா தோல்
பாதம்!
படுத்து கிடக்கும் கிரீடம்
காற்று நடமாடும் படிகட்டுகள்
கால் நகங்களாய்!
மேகம் உடைந்தால் மழை உதிரும்!
தீ உடைந்தால் கதகதப்பு வெளிப்படும்!
பூமி உடைந்தால் புத்துலகம் பிறக்கும்!
நீர் உடைந்தால் ஈரமாகும்!
காற்றுடைந்தால் நிசப்தமாகும்!
அலை உடைந்தால் கடல் மூழ்கும்!

ம்...ம்...
மனம் உடைந்தால்!
நினைவு உடைந்தால்!
ஆணவம் உடைந்தால்!
அர்த்தங்கள் உடைந்தால்!
வார்த்தைகள் உடைந்தால்!
மோகம் உடைந்தால்!
வேகம் உடைந்தால்!
தடுமாற்றம் உடைந்தால்
கவனம் உடைந்தால்!
நிகழ்வுகள் உடைந்தால்!
நிதானம் உடைந்தால்!
உடல் உடைந்தால்!
உயிர் உடைந்தால்!
என்னவாகும்?
காதல் பெரும் !
தீரா!
உடைந்தான்!
உருண்டான்!
இருண்டான்!
வெளிறினான்!
ஒலிந்தான்!
ஒளிர்ந்தான்!
குளிர்ந்தான்!
நெருப்பானான்!
நேரம் மெல்ல
தேய தேய
தானும் தேய்ந்தான் !
தீரா ...!

(தொடரும்)

தீரா - மீரா - 2

சூரியனுக்கும்,நிலவுக்கும் உள்ள இடைவெளி வெளிச்சமே
காற்றுக்கும், இதத்திற்கும் உள்ள இடைவெளி ஈரமே
நெருப்புக்கும், குளுமைக்கும் உள்ள இடைவெளி உராய்வே
உணர்ச்சிக்கும், உள்ளத்திற்கும் உள்ள இடைவெளி நிகழ்வே

எல்லாவற்றுக்குமான இடைவெளியை
அளந்து வைத்திருந்தான் தீரா...

பூமி பந்தின் இறுதியில் புத்துயிர்கள் உயிர்ப்பதுண்டு
கடல் ஆழத்தின் இறுதி சொட்டும், கரைதொட ஏங்குவதுண்டு
பூவிலிருந்து வெளிப்பட்ட வாசனை காற்று மூக்கில் அமர்வதுண்டு
கானல் நீரில் எழும் தோற்றங்கள் நிஜங்களை அலங்கரிப்பதுண்டு

இல்லாதவற்றிலும் ஏதாவது ஒலிந்து கொண்டிருப்பது உண்டு
அதை தெரிந்து வைத்திருந்தாள் மீரா...

வாழ்க்கை புத்தகத்தின் முதல் அட்டை அழுகையின் ஆரம்பத்தில்
அதன் கடைசி பக்கமும் கண்ணீரின் முடிவில்
இடையில் உள்ள பக்கத்தில் தான் மாறுப்பட்ட
மன நிலைகள் பதிவாகியிருக்கிறது
நிகழ நிகழத்தான் ஒவ்வொரு எழுத்தாக அச்சிடப்படுகிறது....


மூங்கிலுக்குள் காற்று இறங்காதவரை அது வெறும் மரக்கிளையே
காற்று வந்து தங்கி விடைபெறும் போது எழுகிறது ஒலியே...

ஒரு சந்திப்பு நிகழும்போதுதான்
இன்னொரு உணர்வுகள் உசுபப்படுகிறது....

குழந்தையின் பார்வையில் பொம்மையின் சந்திப்பு மகிழ்ச்சியாய்
நோயின் பிடியில் உடலின் சந்திப்பு சோகமாய்
பிரிவின் இடைவெளியில் மறு சந்திப்பு கண்ணீராய்
இழப்பின் பின்னல், தொடர் சந்திப்பு தவிப்பாய்
அவமானத்தின் ஆழச் சந்திப்பு எழுச்சியாய்
பொறமையின் கொடூர சந்திப்பு கோபமாய்
காகிதமும் (ஆண்) கவிதையும் (பெண்) சந்திப்பு காதலாய்...

இந்த உலகத்தை திருப்பி போட்ட சந்திப்புகள் நிறையவுண்டு
அதில்....
ரத்தத்திலும், விழி யுத்தத்திலும் அரங்கேறியதே அதிகமானது !!


தீரா...
விழிகள் எனும் பாடசாலையில்
இமைகள் என்னும் பக்கத்தை திருப்பிக் கொண்டு
இரவை தொடும் தூர அந்தி மாலையில் உலாவிக் கொண்டிருந்தான்....

தொடுவானம் முழுக்க ...
பயணத்தின் பாதங்கள்
அன்று ஏனோ நதி கரையில் மையல் கொண்டது...

சலசலப்பு பேச்சாய்
பாறைகளோடு உராய்வாய்
கூழாங் கற்கள் கன்னத்தில் முத்தமாய்
மீன்களின் நடனங்களாய்
வானம் முகம் பார்க்கும் கண்ணாடியாய்
கரைகளின் காதுகளுக்கு கவிதையாய்
பூமிக்கு நெய்யப்படும் ஆடையாய்
நிலப்பகுதியில் தவழும் ஒற்றை வானவில்லாய்
வேர்களுக்குள் ஒலிந்து கொள்ளும் குழந்தையாய்
ஈரமான இதயத்தால் ரசித்து கொண்டிருந்தான் தீரா....

ஒரு மரம் எப்போதுமே இலைகள் எனும்
பற்காளால் புன்னகைத்து கொண்டே இருக்கிறது
அது ஏன் என்று தெரியுமா?

பரந்து விரிந்த கிளையில்
படுத்துறங்க பறவைகள் கூடு கட்டுவதால்
பாய்ந்து வரும் சூரியனின் பார்வையை சலித்து
மண்ணிற்கு நிழல் தருவதால்
அசுத்தம் முங்கி வரும் தென்றலை
வடிகட்டி வசந்தமாக அனுப்பவதால்
பசி யயனும் பரம்பரை நோய்க்கு
பழம் எனும் வைத்தியம் பார்ப்பதால்
விளை நிலம் ஓங்கி செழிக்க
மழைக்கு சேதி அனுப்பவதால்
களைப்பாறி வரும் மானிடர்கள்
இளைப்பாறும் இடமாக இருப்பதால்
ஒரு பொழுதும் சோர்வின்றி
ஏதும் எதிர்பாராது உழைப்பதால்
இதுஏதும் அறியாது நாம் நறுக்கும் போதும்
விரகாய், வீடாய், கட்டுமரமாய், காகிதமாய்
எல்லாமாய் மறித்து மீண்டும் பிறப்பதால் !!


அப்படி ஒரு கிழம் வயது நிரம்பிய
மரத்தின் வேர் படியில் அமர்ந்து கொண்டு
நினைவுகள் எனும் பம்பரத்தை சுழல விட்டான் தீரா.....

என்றுமில்லாதபடி....
குருவிகள் கும்மாலமிட்டன
நதி நாணம் கொண்டன
மீன்கள் ரகசியம் பேசின
மர இலைகள் இறகுகளாக பறந்தன
காற்று கிசுகிசுத்தன
வானம் இளஞ்சிவப்பு வர்ணம் வார்த்தது
பூக்கள் புது நடனமாடியது
கரைகள் கவிதை எழுதிக் கொண்டிருந்தது
நத்தைகள் வித்தைகள் செய்தது
பாறைகள் குண்டு விழிகளாக மாறியது
கொடிகள் வானத்தை தீண்ட முயன்றது
செடிகள் தலை சாய்த்து தாளமிட்டது
தவளைகள் சங்கீதம் பாடியது
மணல் மகரந்த பொடியானது
நிமிடங்கள் தாமதமாக நகர்ந்தது
தீராவின் நினைவுக்குள் நடப்பது யாவும் வசப்பட்டது...

தீடிரென ஒரு ச..ப்...த...ம்
சட்டென நதிகரையானது நி..ச...ப்...த...ம்

தீரா சுற்றும் முற்றும் பார்த்தான்...

குயிலா? மயிலா? புள்ளி மானா ?
துள்ளி வந்த சப்தம் எதுவாக இருக்கும் என்று ?

எங்கிருந்து வந்தது...
திசைகள் முழுக்க விழிகள் திமிறி திமிறி தேடியது...

சற்று நிமிடத்தில் மீண்டும் அதே சப்தம்
இம்முறை சோவிகள் வானத்திலிருந்து மலைமீது
மோதியதாய் தீரா செவிகளை துளைத்தது சிரிப்பொலி...

வில்லில் இருந்து புறப்படும் அம்பாய்
வேர் படியிலிருந்து பாய்ந்தான்...
பாதம் தரையில் இல்லை
விழிகள் இமைகளுக்குள் அடைக்கப்படவில்லை
எண்ணங்கள் நரம்புகளை மீறி வரம்புகளை கடந்தது
தூரத்தில் ஒரு வெளிச்சம்
கோவில் திருவிழா பளிச்சிட்டது...

இன்று என்ன கோலாகலம் ?
என்ன நாள் ?
பண்டிகையா?
குடமுழக்கா?
திருமணமா?
என்ன? ? ? ? ?
கேள்விகள் கேட்டபடி
நகர்ந்தான் கோவில் நோக்கி...


சோவிகளை உருட்டிய சப்தம் மீண்டும்
தீராவின் செவிகளை நனைத்தது
அது குளக்கரையில் இருந்து ஒலித்தது
தீராவின் பாதங்கள் மெல்ல திரும்பியது
முயலென பதம் பார்த்து நடந்தது...

மண்டபத்தை தாங்கி கொண்டிருந்த தூண்கள்
மறைந்த வண்ணமாய் பார்த்தான் அங்கே சில மான்கள்
சில்லென காற்றில் சட்டென வியர்த்தது தீராவின் உடல்
ரோமங்கள் முள்ளென மாறி சிலிர்த்தது
யார் அது?
அந்த மான் கூட்டத்தில்
யார் அந்த மீன் ?
மலைத் தேன்?
புது வான்?
வாசம் வீசும் மண் ?
இல்லை... இல்லை...
தேவ குலத்து பெண்..

ச்...சீ..ச்சீ... நான்னல்லா
நான இப்படி ?
இமை மூடி யோசித்து
விசிறியாய் விழி திறந்தான்...

மான் கூட்டம் மறைந்தது
மீன் மட்டுமே தீராவின் விழியில் மிதந்தது
மின்னலை பார்ப்பது என்பது கடினம்தான்
புரிந்து கொண்டான் தீரா...

மனம்...
சில நேரம் மன்னராகவும்
சில நேரம் மகானாகவும்
சில நேரம் மாமிச மலையாகவும்
சில நேரம் மனிதனாகவும்
சில நேரம் கல்லாகவும்
சில நேரம் காற்றாகவும்
சில நேரம் நதியாகவும்
சில நேரம் விதியாகவும்
சில நேரம் புவியாகவும்
சில நேரம் கவியாகவும்
சில நேரம் காதலாகவும்
மாற்றிவிடும் சக்தி கொண்டது...

திருடனிடமும், கொலைகாரனிடமும்
உள்ளிருக்கும் இதயம் ஒரே மாதிரி துடிப்பதைபோல...

இருந்தும் தொலைந்ததாய்
தொலைந்ததும் இருந்ததாய்;
உடைந்தான்,
நெளிந்தான்,
வழிந்தான்,
நனைந்தான்,
வியர்த்தான்,
விழுங்கினான்,
நடுங்கினான்,
மிதந்தான்,
சிதைந்தான்,
நைந்தான்,
நொந்தான்,
தவழ்ந்தான்,
துடித்தான்,
தானா... தானா...
என்று தவித்தான்
தனக்குள்ளே புலம்பினான்...


மனம் என்ன சொல்லுகிறது என்பதை உணரமுடியாது
கிரங்கிபோனன் தீரா...

காலம் சுற்றும் சுழற்சியின் படி தானே
நமது கால்களும் பயணிக்கும்...

அப்படிதான் தீரா தேட ஆரம்பித்தான்
தானே தொலைய...
தொலைந்து கொண்டு !!


(தொடரும்...).

தீரா - மீரா 1

அனைவருக்கும் வணக்கம்,

வாசித்து வாசித்து உதடுகளின் தோல் உதிர்த்து, ரசித்து கொண்டிருக்கும் ரசனை உள்ளங்களுக்காக ஓர் கவிதை கதை...
இந்த உலகம் எப்பொழுதுமே ஏதாவது ஒன்றன் பின்னால் சென்று கொண்டே இருக்கும்.
சுழலும் புவியின் திசைக்கு எதிரேயும் தென்றல் வீசிக் கொண்டிக்கும்.
மனிதனின் மனம் என்பது ஆயிரம் சமுத்திரங்களை விட பெரியது. அதனால்தான் பயணங்கள் முடிவடையாமல் நீண்டு
கொண்டே இனிக்கிறது.

இந்த பிரபஞ்சத்தில் பிறப்பதும், இறப்பதும் இடைவிடாது நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதம்.
எத்தனை விதமான பிறப்புகள் இருந்தாலும் மனித பிறப்புக்கே அத்தனையும் கட்டி ஆளும் மதம் உண்டு. மதம் என்று ஏன் சொன்னேன் என்றால் அது அறியும் மனம் கொண்டதால் மதம் என்றேன். (அறிந்தாலே மதம்தானே பிடிக்கும்)
அறிவு, கோபம், ஏமாற்றம், தடுமாற்றம், கர்வம், ஆணவம், துயரம், இன்பம், இரக்கம்... இப்படி வாழக்கையின் மதுக்
கோப்பையில் எத்தனை விதமான போதை ரசங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும், ரசனை எனும் மதுவை ருசிக்கத் தெரிந்த நாவிற்க்கு மட்டுமே வாழ்க்கை கோப்பையின் அடி முதல் நுனி வரை போதை ஏறும்.

அப்படி ரசனையின் பிம்பங்கள் எங்கே முழுமையாக உயிர்ப்பு அடைகிறது என்று சிந்தித்தால் அது எப்படி ?
தேனையும், வாசத்தையும் பூட்டிக் கொண்டு பூக்கும் போது சிறகடிக்கும் பூக்களா ?
மழை வரும் முன் வர்ணம் தீட்டும் வானவில்லா ?
கடல் கரைந்து மீண்டும் தனித்து விழுந்து தடம் தேடும் மழையா?
எது நடந்தாலும் நில்லாது கதை சொல்லி செல்லும் காலமா?
இரவுக்கு வழி காட்டும் நிலாவா?
எது எது எது.... என்று கேள்விகள் நிற்கவில்லை....
எல்லாவற்றையும் உடைத்தெறிந்து உடுத்திக் கொண்டது பெண் எனும் இரு வார்த்தையில்.
இந்தபெண் எனும் உயிர் ரசனைகளை ஒன்றோடு ஒன்றாக கட்டி இழுத்து செய்யப்பட்டதா?
அழங்காரங்களை ஒன்றன் மீதாக ஒன்றாக அடிக்கிவைக்கப்பட்டு செதுக்கப்பட்டதா?
ரகசியங்களை எல்லாம் குலைத்து தீட்டப்பட்டதா?
இயற்கையை யாவும் இணைத்து பிறப்பிக்கப்பட்டதா?
நினைவுகளை ராட்­­சச அலைகளால் மோதவிட உலாவவிட்டதா?

அது எதுவாக இருப்பினும் ஆண் எனும் பெரும் பாறைகள், சிறு பட்டாம் பூச்சியாய் மாறி பறக்க வைப்பது பெண்ணால்...
மட்டுமே நிகழ்த்தக் கூடிய விசயமாகும்.
அப்படி ஒரு பாறையின் இதய இடுக்கில் பூத்த ஒரு பூவின் கதையை கவிதையாக கட்டி போட முயற்சித்துள்ளேன்.
இது என் முதல் முயற்சி...
இல்லை .. இல்லை...
விடும் முதல் மூச்சு.
இந்த கதையில் வரும் கதா பாத்திரங்கள் அனைத்துமே கற்பனையே ...
அப்படி என்ன?
கதா பாத்திரங்கள் நிறைய உண்டா?
என்றால் இல்லை...
எல்லலோரையும் போன்று அல்லாது
இல்லாத வற்றையே தேடிக் கொண்டு
இரவு, பகல் ரசனை மடியில் நின்று
நாட்களை தள்ளி கொண்டிருப்பவனே
தீரா ....
இவன் தான் இந்த கதையின் நாயகன்....

பூக்களால் நெய்யப்பட்ட தேகம்
புள்ளிகளால் சேகரிக்கப்பட்ட பூ
கூர்மையை மண்டியிட வைக்கும் விழிகள்
வியர்வையில் சந்தன வாசம் வீசும் நிலா
ரசனையின் தொட்டிலில் உறங்கும் பறவையே
மீரா...
இவள் தான் இந்த கதையின் நாயகி...

ஆரம்பம் 1
எந்த ஆரம்பமும் பிரம்மாண்டத்தின் தோள்களில் உயிர்ப்பிக்கிறது.
அப்படிதான் இதுவும்...
தொடு வானம் எனும் ஊர்...
மேகத்தை துடைத்து கொண்டிருக்கும் மரங்கள்,
தானே பாடிக் கொண்டிருக்கும் நதிகள்,
உதயத்தையும் அஸ்தமனத்தையும் அழுத்தி சொல்லும் பொழுதுகள்
இயற்கையின் இடையில் அமைந்த இடம்....
கற்பனையின் காட்டுக்குள் தனக்கென்று
அமைத்த வீட்டுக்குள் வாழ்ந்தான் தீரன்...
தொடுவானம் முழுக்க இவன் பாதங்கள் தொடாத இடமில்லை
நெடுந்தூர மலைகளையும் இவன் விழிகள் விட்டுவைக்கவில்லை
வாழ்நாளில் உண்டு...
தூண் துயரம், வான் ஆனந்தம்
எல்லோர் போலவும் இவனுக்குள்ளும்...
ரசனையின் சந்தனம்
சிந்தனையில் சிற்பி
வர்ணனையில் ஓவியன்
தேடலில் அலை
கேள்வியின் சங்கு
கற்பனையின் கருவறை
கற்றுக் கொண்டே இருப்பான்
நாளும் காற்றிடம் எதையாவது...
தனக்கென தனி உலகம்
இனிக்கின்ற புது பயணம்
இதயத்தை துவைக்கின்ற எண்ணம்
நிமிடம், நிமிடம் தவம் தவம்
கவிதையால் நிறம்பியது இவன் வனம்...

நினைவுகளில் சொட்டும் வண்ணங்களை எல்லாம்
வடித்து வைப்பான் ஏட்டில்...
வருடும் உதயங்களை எல்லாம் பூட்டி
வைப்பான் இருதய கூட்டில்...
தீரன் எதை எதையோ சந்தித்தான்
வீரன் கண்டிராத வெற்றிகளை குவித்தான்
காலம் கரைந்தோடியது....
காத்திருப்பின் நீளம் கத்தியை விட கூர்மையானது
தேடும் வரைதான் பயணம் பிடிக்கும்
அலை தொடும் வரைதான் கரை சிரிக்கும்
வாடினால் தான் புது பூக்கள் பிறக்கும்

அப்படி தேடலின் தொடு விரலாய் - தீரன் - விழியை
தீண்டி - தீ -யை மூட்டி காதல் நோயைஊட்டியவள் தான் மீரா ...

யார் இந்த மீரா ?
கண்ணணுக்காக காத்திருந்தவளா ?
தம்புரா வைத்து சோக கீர்த்தணை பாடுபவளா?
வெள்ளை புடவைக்குள் பூட்டிக் கொண்டிருக்கும் வைரக்கல்லா?
யார் ? யார் ? இந்த மீரா?
தொடுவானம் அருகில் உள்ள உடையூரில் உதித்தவள்
சிகப்பு நிலா
மறையாத வானவில்
பகலில் மின்னும் நட்சத்திரம்
நடமாடும் நதி
இரவை உருட்டி விளையாடும் கருவிழி
இலைகளாய் செய்யப்பட்ட கைகள்
புன்னகை கோயில்
புருவ சொர்க்கம்
பாடும் குயில்
சொட்டும் ரசனை துளி
கற்பனை ஓவியம்
ஆண் வாசமே படாத மெழுகு காவியம்...

தீரனின் விரல் தீண்டலில் மீண்டு எழ முடியாது
காதல் தூண்டிலில் சிக்கி தவித்தவள்....

தொடரும்...............

துவட்டி விடுவாய்

எப்போது மழை வரும் ...
காத்திருப்பேன்
ஒதுங்குவதற்காக அல்ல
நனைவதற்காக!

அப்போது தானே...
உன்
உதடுகள் எனும் முந்தானையால்
முழுவதுமாக துவட்டி விடுவாய்
என்னை!!

புதன், 20 ஜூலை, 2011

வரம் தருவாயா ?

உன் கை பிடித்து ஊர் சுற்ற வேண்டும்
உன் விழி படித்து மனப்பாடம் செய்ய வேண்டும்
உன் மொழி கேட்டு இமை மூட வேண்டும்
உன் மடி சாய்ந்து சொர்க்கம் தேட வேண்டும்
உன் தோள் பற்றி கதை சொல்ல வேண்டும்

உன் நகம் கடித்து விரல் குடிக்க வேண்டும்
உன் கால் பிடித்து முத்தமிட வேண்டும்
உன் இடை வளைத்து இதயம் இணைக்க வேண்டும்
உன் முடி மீது முகம் நுழைத்து வாசம் நுகர வேண்டும்
உன் உள்ளங்கையில் என் எதிர்காலம் பார்க்க வேண்டும்

உன் உறக்கத்தில் என் உறக்கத்தை தொலைக்க வேண்டும்
உன் பக்கத்தில் உரசிக் கொண்டு உயிர் பேச வேண்டும்
உன் மூக்கோடு என் மூக்கு சண்டையிட வேண்டும்
உன் கூந்தழில் பூச்சூடி அதிசயிக்க வேண்டும்
உன் கைவளை ஒலியிலே என் காலை விடிய வேண்டும்

உன் இதழ் இரண்டும் என் பசி தீர்க்க வேண்டும்
உன் உலகம் என் உலகமாக வேண்டும்
உன் இமையோடு என் இமை புன்னகைக்க வேண்டும்
உன் உடல் முழுவதும் என் விரல் நீந்த வேண்டும்
உன் திட்டலுக்கு பின் எனை கட்டி கொள்ள வேண்டும்

உன் உயிரோடு என் உயிர் இணைய வேண்டும்
உன் கருவில் நம் உயிர் உருவாக வேண்டும்
உன் தாய்மை முழுவதும் நான் தாலாட்ட வேண்டும்
உன் கனவுக்கு தலையணை ஆக வேண்டும்
உன் சுமை கண்டு நான் சுகம் காண வேண்டும்

உன் இடை உலகத்தில் காது வைத்து உதை வாங்க வேண்டும்
உன் உயிராக என்னாக ஒன்று நீ பெற்றெடுக்க வேண்டும்
நம் உயிர் கண்டு என் கண்கள் ஈரமாக வேண்டும்
தொட்டிலுக்கும், கட்டிலுக்கும் நீ கவி பாட வேண்டும்
என் காலம் முழுக்க நீ கற்கண்டாய் வேண்டும்

கண்ணே...
என் உயிர் இறுதியில் உன் முகம் பார்த்து பிரிய வேண்டும்
வரம் தருவாயா ?

செவ்வாய், 19 ஜூலை, 2011

யாரோ ?



பெண்

யாரோ நீ
யாரோ நான்
ஒன்றாய் ஆனோம் சொந்தம் என்று...

ஆண்

உன் புன்னகைக்கு பின் கண்ணீர் கண்டு
என் நெஞ்சம் ஆனது முள்ளாய் இன்று....

பெண்

எது வரை நம் இருவரின் பயணமோ
உயிர் கரையினில் நம் நினைவுகள் கலந்திடுமோ

ஆண்

இமை விலகலில் தேடல் இன்னும் நீளுமோ
இருவரும் இனி ஒருவர் என்றாகுமோ....


பெண்

தவழ்ந்திடும் குழந்தையாய் என் மனம்
நீ தாவி அணைத்திட உயரமாகும் என் கரம்

நான்

என் நினைவினில் பூத்திட்ட புது சுகம்
நீ எனதிறுதிவரை வரும் நிழற் படம்


பெண்

காணும் கனவுக்குள் நீந்திடும் கானல் ஓடம்
கன்னத்தில் உதிரும் துளிகளும் பாரமாகும்

ஆண்

மறந்திடு கவலையை விட்டு பறந்திடு நீயும்
நீ இளைப்பாற என் தோளே மரக்கிளையாகும்

பெண்

இதுவரை எனக்கென்று ஏதுமில்லை நிரந்தரம்
இனி பயணங்கள் முழுவதும் உன் விரல் துணை வரும்


ஆண்

தயக்கங்கள் விடுத்திடு என்னிடம்
நடப்பது யாவும் இனி நம் வசம் !!


பெண்

யாரோ நீ
யாரோ நான்
ஒன்றாய் ஆனோம் சொந்தம் என்று...


ஆண்

நீயும் நான்
நானும் நீ
துளி பேதமில்லை  நம்மில் இனி !!

திங்கள், 18 ஜூலை, 2011

பொம்மையாய்


விளையாட்டு பொம்மையாய் அவள்
அதனால்தான்...
அவள் கைகயில் பொம்மையாய் மாற
ஆசைகள் எனக்கு !!

இதழ் கடிப்பாய்




நான் உனக்காக எது செய்தாலும்
நீ நன்றி சொல்வாய்...
வேண்டாம் என்பேன்....
புரிந்துவிட்டதாய் இதழ் கடிப்பாய் !!

குழந்தையாக


உன் வார்த்தைகள் எனை நெருங்கும் பொழுது
என் மொழிகள் எல்லாம் துள்ளிக் குதிக்கிறது
பொம்மையை கண்ட
சின்னஞ்சிறு குழந்தையாக !!

வெட்கம்




விழிகள் தலை சாய்த்துக் கொண்டது
இதழ்கள் மெல்ல சிவக்க ஆரம்பித்தது
இருதயம்  அதிர துடித்தது...

ஆசைக்கு  கைகள் நீண்டன
இமைகளின் குடைகள் சுருங்கின
உணர்வுகள் நில நடுக்கம் கண்டன...


பெண்மை மென்மையை உரசியது
மெளனம் எச்சிலை தேடியது
தேகம் தேய்பிறையாய் ஆனது...

ஆடைகளுக்கு விரல்கள் ஆலோசனை  சொன்னது
வார்த்தைகளுக்குள் வைத்தியம் நடந்தேறியது
பருவத்தின் திமிர் பதம் பார்த்தது...


அசையும் வளைவுகளில் ஆயிரம் அதிசயம்
எந்த விழியாலும் படிக்க இயலாத புத்தகம்
இது யாருக்கும் புரியாது நிகழ்ந்த  தருணம்...

நீ...
எனை பார்த்து வெட்கப்பட்ட நிமிடம் !!

ஞாயிறு, 17 ஜூலை, 2011

வெண்ணிலவாக


நீ இல்லாத இரவில்

உனை தேடி தனிமையில்

இமைக்காது தேடிக் கொண்டிருக்கிறேன்

ஒவ்வொரு நிமிடமும் தேய்ந்து கொண்டு...



வானத்து வெண்ணிலவாக !!

நாம் நாமானதால்

ம்... என்பது நீ
ம்கூம் என்பது நான்

காவலாக நீ
கவிகலாக நான்

நெஞ்சமாக நீ
நிழல்களாக நீ

மூச்சாக நீ
காற்றாக நான்

நிலாவக நீ
சுமக்கும் வானமாக நான்

இரவாக நீ
காணும் கனவாக நான்


உயிராக நீ
உடலாக நான்

நமக்காக நாம் என்று ஆன பின்பு
இனி...
எதற்காகவும் யவரும் நுழைய அனுமதியில்லைங
நாம் நாமானதால் !!

புதன், 22 ஜூன், 2011

புரிகிறது


என் கனவுகள் நிரம்பி வழிகிறது
உன் விழி பார்வையில்

இன்னும் நிமிடங்கள் நீள கேட்கிறது
உன்னுடன் இதயம் உடைகையில்

விண்ணுலகம் வாசல் திறக்கிறது
உன் பெண்ணுலகம் நுழைகையில்

உயிர் துளி மெல்ல கசிகிறது
உன் விரல் நுனி உலா வருகையில்

இரு விழி கடலாகிறது
உன் இதழ் படகாய் கவிழ்கையில்

ஐம் புலன்களும் ஆவியாகிறது
உன் அழகில் மூழ்கையில்

மரணங்கள் மயிலிறகாகிறது
உன் மடி மீது தலை சாய்கையில்

உணர்வுகள் புத்தகங்களாகிறது
உன் பாத தடங்களின் அலமாறியில்

நினைவுகள் களவாடுகிறது
உன் பிம்ப நிழல் ஊஞ்சலாடுகையில்

அடடா...
ஆதாம் ஏவால் அர்த்தம் புரிகிறது
நீ அடுத்தடுத்து என்னை உடுக்கையில் !!

செவ்வாய், 21 ஜூன், 2011

புது புது

விலையில்லா தருணம்
உன்னோடு உரையாடும் நிமிடம்

நெடுந்தூர பயணம்
உன் நினைவுகள் பாதையில்

தனிமையில் களவாடல்
உன் நிமிடங்களோடு நகர்தலில்

மெளனங்களிடம் மன்னிப்பு
உன் இதழ் விரிப்பின் காத்திருப்பில்

உலகத்தின் வனப்பு
உன் விரல் கோர்கையின் நிமிடத்தில்

காயத்தில் தேன்
என் கண்ணீர் கடலில் துடுப்பாய் உன் விரல்

சோகத்தில் தாலாட்டு
சாய்ந்து கொண்டது என் நெஞ்சம் உன் தோளில்

மரணத்தின் முன்னோட்டம்
துளி தருணத்தில் உள்வாங்கினேன் உன் பிரிவில்

சருகாய் இதயம்
உன் முகவரியை தேடிபோதெல்லாம்


அலை அலையாய் சுகம்
நீ அருகினில் இருக்கும்போது வரும்


மழை மழையாய் பொழியும்
நீ கணம் கோபித்தாலும் என் விழியில் நிகழும்

மலை மலையாய் மனம்
உன் உறவு உதயமானதால் வளரும்

பிழை மட்டுமே கவிதையாய்
நீ... இதழ் கடித்து படிப்பது என்றால் !!

அம்மா - சும்மா

எத்தனையோ தாயுண்டு
என் தாயப்போல இங்கு யாருண்டு
எத்தனையோ சேயுண்டு
இந்த நாயப்போல யாருண்டு


என்ன பெத்த நேரமுதல்லா
நிமிசம் நிமிசம் செத்து பிழைச்சா
என்ன விட சொத்து எதுவுமில்லையினு
சேத்து வச்சதெல்லாம் எனக்கு தருவா
 

நா சொன்னது கொஞ்சம்தான்
அவளுக்கு முன் தெய்வம் சின்னதுதான்...


இரவு பகலா அவ இருந்து
தன்ன மறந்து என்ன வளத்தா
ஒட்டிபோன வயிற பட்டினி போட்டு
நா அழுகுமுன்னே பால் கொடுத்தா
என்ன அவளும் திட்டிப்புட்டு
தீயில் விழுந்த புழுவா துடிப்பா
கொஞ்ச நேரம் நா கண்மறைந்தாலும்
நெஞ்சம் காயப்பட்டு கண்கலங்கிடுவா


நா சொன்னது கொஞ்சம்தான்
அவளுக்கு முன் தெய்வம் சின்னதுதான்...


எட்டு வச்சு நா நடந்தால்
பொட்டு வச்ச விழியால் ரசிப்பா
மத்தவங்க கண்ணு பட்டிடுமுன்னு
மொத்தமாக சுத்தி போட்டிடுவா
கட்டுத்தறி காளை ஆனாலும்
என்ன கண்ணுக்குள்ள தூக்கி சுமப்பா
தட்டுகெட்டு திரிஞ்சாலும்
என்ன விட்டு கொடுத்து பேசமாட்டா


நா சொன்னது கொஞ்சம்தான்
அவளுக்கு முன் தெய்வம் சின்னதுதான்...


ஒட்டுபோட்ட சீலை கட்டினாலும்
உசுருக்குள்ள பொத்தி காப்பா
நா மக்குதடி பிள்ளை -ஆனாலும்
மத்தவங்க மெச்சும் படி சொல்வா

ஏதும் வேணும்முன்னு என்ன கேட்க மாட்டா
நா வேதனை தரும் வார்தைகளை வீசினாலும் வெளியில் சொல்லமாட்டா
எதுவும் எனக்கு அப்ப புரியவில்ல
நீ ஏ என்தெய்வமென்றபோது என்ன விட்டுபோனதென்ன 

காத்தா என் ஆத்தா

அம்மா என் அம்மா
கோயில் உள்ளே உள்ள தெய்வம் எல்லாம்
சும்மா !!

புதன், 8 ஜூன், 2011

எல்லாம் - நீயே

பனித்துளிகள் உறையும் இரவு
பலூனாக மாறிபோன நிலவு
கைபிடியாக போனது கடல் அளவு
காற்றெல்லாம் மர இலையில் முகம் துடைத்த பொழுது
என் தோழோடு நீ சாய்ந்தாய் அப்போது...

ஏதேதோ பேசினாய் பொம்மையாய் விண்மீனை காட்டி
ஒரு ஊமையாய் நானும் உனை பார்த்தேன் இமை எட்டி
என் தோளில் உன் தோள் ஏதோ சொல்லியது முட்டி
யாருக்கு தெரியும் அந்த உரசலில் உலகம் ஆனது குட்டி...

அலை இதழ், கரை கன்னத்தில் முத்தமிட்ட தருணம்
மர இலை சருகாக உயிர் விட்ட கணம்
உன் கைவளை சத்தமிட்ட வரம்
எனக்கு நிகழ வேண்டும் அப்போது மரணம்...

அசையும் பொழுதெல்லாம் இசை பேசும் கொழுசு
விலையில்லா உன் இரு விழிக்கு ஏது வயசு
அறிந்தே உன் நிழலானது என் மனசு
அதற்காகத்தான் நீயே எனக்கானாய் பரிசு...

உன்னோடு நடக்கும் போது எல்லாம்
கண்கொட்டி யார்க்கிறது சாலையோர ஜன்னல்கள்
நீ என்னோடு உயிர்த்த நிமிடங்கள் எல்லாம்
நெஞ்சோடு சேமித்து வைக்கும் ஞாபக சின்னங்கள்...

உன் மடி சாய்த்து தலைகோதி
என் விழி பார்த்து இதய வலி தீர்ப்பாய்
அதையும் மீறி கண்ணீர் துளி வழிந்தால்
ஒரு குழந்தையாய் எனை தாவி அரவனைப்பாய்...

என் கோடி நினைவுகளுக்கும்
குடை பிடிக்கும் உன் முகம்
துடிக்கும் என் இருதயம் நின்ற பிறகும்
அடுத்த நொடுக்கே
தொடரும் பிறவிக்கு எல்லாம் நீயே வேண்டும்

சனி, 14 மே, 2011

நீ

உன் விழியே...  விழியே
என் வலி தீர்த்திடும் மருந்தல்லவா

உன் மொழியே... 
மொழியே
என் கண்ணீரை துடைத்திடும் துணி அல்லவா

இது நெடு நாள் வாழும் பந்தம்
உன் மடி மீது தூங்கும் என் நெஞ்சம்

அடடா... அழகிய சொர்க்கம்
நீ.. அருகினில் இருந்தால் வாசல் திறக்கும்

உனை பார்த்த பின்பு தானே
நானே நான் ஆகினேன்....


இதுவரை...
விடிந்த பின்னும் கிழக்கு எனக்கு இல்லை
இருந்திருந்தும் என் விரல் பிடித்தாய்
இனி என் உலகினில் சூரியன் தேவையில்லை...

முன்பு...
சுழன்றபோதும் சுகம் எனக்கு இல்லை
உடைந்திருந்தும் எனக்கு உயிர் கொடுத்தாய்
ஆகவே, நீளும் நேரம் போதவில்லை...


வெறும் வானமாய், நெடுந்தூரமாய் நின்றேன் நானடி
புது வானவில்லாய், தொடும் நிழலாய் வந்தாய் நீயடி
....



நீ...
சரி என்றால் அன்பே
எனக்கெனும் ஆயுளை உனக்
களித்திடுவேன்
நீ...
சிரிப்பதென்றால் அய்யோ
நான் சிறு குழந்தையாய் ஆடிடுவேன்

மறைந்தோடும் தென்றலாய்
நாளும் மனதோடு தீண்டுகிறாய்
இனி.. என் உயிர் போவதென்றால்
உன் நிழல் மீது தான் அன்றோ...


மழை பொழிந்தால், உடனே
நான், குடை
ன உனக்கிருப்பேன்
ஒரு துளி விழுந்தாலும் - அய்யோ
மறுகணம் உயிரையும் நான் இழப்பேன்...

எனக்காக துடிக்கும் உனக்காக
தயங்காது உயிரை நான் தருவேன்
எனக்கேதும் இல்லைஎன்ற போதும்
நீ இருக்க, மரணத்திலும் இதழ் விரிப்பேன்...


வெறும் வானமாய், நெடுந்தூரமாய் நின்றேன் நானடி
புது வானவில்லாய், தொடும் நிழலாய் வந்தாய் நீயடி!!




mvidhyasan@gmail.com

வெள்ளி, 13 மே, 2011

நிலா

தூரத்தில் நீ
தொடர்ந்து தேய்வது நான்

வட்டமாய் நீ
வட்டமிடுபவனாய் நான்

வெளிச்சமாய் நீ
உன் வருகைக்காகவே இரவாய் நான்

புள்ளியாய் நீ
சுற்றி அலையும் மேக புகையாய் நான்

பந்தாய் நீ
தட்டி விளையாடுகிறேன் இமைகளால் நான்


பனித்துளியாய் நீ
ஒவ்வொரு முறையும் உருகுகிறேன் நான்

அப்பளமாய் நீ
பார்த்தே பசியாருகிறேன் நான்

சக்கரமாய் நீ
சுழலும் பொழுதாக நான்


பொட்டாய் நீ
தொட்டாடும் மர இலையாய் நான்

வெண் "மை" யாய் நீ
நிரப்பிக் கொள்ளும் பேனா வாக நான்

கண்ணாடியாய் நீ
முகம் பார்க்க முடியாதவனாய் நான்

பலுனாய் நீ
பறப்பவனாய் நான்

பழமாக நீ
பறிக்க முடியாதவனாக நான்
நிர்வாணமாய் நீ
கண்கள் கூசியபடி வெட்கத்துடன் நான்

நாணயமாக நீ
சேமிக்கும் நாயகனாக நான்

ஒலிந்துகொள்வாய் நீ
தேடுபவனாக நான்

காதலியாக நீ
காதலனாக நான்
தனிமையாய் நான்
தேவதையாய் தேடி வருகிறாய் நீ !!

இயங்கும் பிணமாய்


உன் நினைவை மட்டும் தந்துவிட்டு
தனிமை காட்டில் விட்டுவிட்டாய்

உன் மொழிகளை மட்டும் வீசிவிட்டு
நாவறுந்த வனத்தினில் நடக்கவைத்தாய்

உன் கனவுகளை மட்டும் கொடுத்துவிட்டு
இரவே இல்லா வானத்தை காட்டினாய்

உன் புன்னகையை கடலாக்கிவிட்டு
கரையில் நின்று கண்ணீரை பொறுக்கவிட்டாய்

உன் நேசத்தை சிந்தி விட்டு
ஸ்வாசம் தீரும்மிடத்தில் மீனாய் தத்தளிக்கசெய்தாய்


உன் ஓவியத்தை கலைத்துவிட்டு
காலத்தடத்தை தேடி அலையவிட்டாய்


தூரத்து மின்னலாய் மறைந்துவிட்டு
எனை இயங்கும் பிணமாக்கிவிட்டாய் !!

சாரல்கள்

நினைவுகளின் உரசல்களில்
கனவுகளின் கால்தடங்கள் பதிகிறது

நிமிடங்களின் வழிநெடுகெங்கிலும்
நிஜங்களின் பிம்பங்கள் கரைகிறது

தடுமாறும் பயணங்களில்
தவிப்புகளின் விரல்கள் வருடுகிறது...

அலைமோதும் விநாடிகளில்
இதய கரைகள் கிளிஞ்சல்களை தேடுகிறது...

இளைபாறும் தருணங்களில்
நிழலின் மடிகளில் தனிமை பேசுகிறது...

மரணங்களின் வேதனைகள்
உண்மை காதலில் உயிர்க்கிறது...

கானலின் தூரத்தில்
தாகித்து நாக்குகள் ஏங்குகிறது...

நேசத்தின் உணர்வுகளில்
வேசங்கள் முகமூடி அணிகிறது...

உடைந்திடும் பொழுதினில்
மனம் முகம் காட்டும் கண்ணாடியாகிறது...

யார் அறியக் கூடும்
உனக்குள் பூக்கும் உயிர்ப்புகளை எல்லாம்...

போடா

எதுவும் நடக்கட்டும் போடா
உலகத்தில் கவலையில்லா மனிதன் யாரடா
சென்றவர்கள் போகட்டும் போடா 
சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒன்றாய் இறந்தது இல்லையடா...



பிறக்கும்போது ஒன்றும் கொண்டு வரவில்லை கையில்
இறக்கும்போது ஏதும் சொந்தமில்லை மண்ணில்
வருவது வரட்டும் விட்டுவிடுடா 
வாழ்க்கை என்றாலே இழப்புதானடா....



வாழ்ந்தவர் எல்லாம் இறுதில் சொன்னது ஒன்றுமில்லை
வாழ்வில் அனுபவத்தை தவிர்த்து ஏதுமில்லை
உறவுகள் உதிரட்டும் போடா 
உன் அழுகைக்கு நீயே காரணமடா....







ஆவதும் அழிவதும் ஆசைகளே காரணம்
ஆண்டவனாக இருந்தாலும் அவனுக்கும் உண்டு துயரம்
வானமுண்டு, பூமிவுண்டு போடா 
யாரையும் நிர்ணயிப்பது பணம்தானடா



போவதும் வருவதும் மாயைதானே
காதலும் பருவமும் காயம்தானே 
உண்மைகள் நானே போடா
இந்த உலகம் து சொன்னால் என்ன போடா!!