வெள்ளி, 3 செப்டம்பர், 2010

தொலைந்து போன நட்பு

நெருங்கி பழகும் வேளையில்
தெரியவில்லை
நொருங்கி போகும் என்று..

கைகோர்த்து நடந்த கணத்தில்
கவனிக்கவில்லை
வெகுதூரம் செல்வாய்என்று...

துணையாக இருந்த தருணத்தில்
உணரவில்லை
துயரமாக போவது என்று...

புன்னகைத்து பூரித்த பொழுதில்
புரியவில்லை
கண்ணீரை பரிசளிப்பாய் என்று...

தவறு செய்த நிமிடத்தில்
அறியவில்லை
தடையாக இது மாறுமென்று...

தொலை தூர வாழ்க்கையில்
தொலைத்து விட்டு வழி நெடுக
தேடுகிறேன்...

தூய்மையான
என் தோழமையை
நீ...
( வருவாய் ) மன்னிப்பாய் என்ற நம்பிக்கையில் !!



                                                                                         -Vidhyasan@gmail.com