செவ்வாய், 15 மார்ச், 2011

எப்போது வருவாய்...

எப்போது வருவாய்...

அடர்ந்த காடாய் இருந்தது என் உதயம்
அடை மழையாய் ஆனது உன் வருகையால்

...சுடும் பாலைவனமாய் என் மனது
மடை வெள்ளமாய் ஆனது உன் பார்வையால்...

நீ எப்போது வருவாய்
எனக்காக ஒரு நிமிடமாவது

நீ எப்போது வருவாய்
எனக்கே எனக்காகவே எப்போதுமாய்

நிமிடத்திடம் உலறியதை உணர்கிறேன்
செல்லும் வழி எல்லாம் நீயாக் கூடாதா என ஏங்குகிறேன்...

வந்து விட்டு செல் போதும்
நீ வந்த தருணத்தை எண்ணிக் கொண்டே
என் ஆயுளை தீர்த்து விடுகிறேன்....

மறந்து விட்டேன் என்று சொல் போதும்
நீ என்னை நினைத்து விட்டாய் என்ற
ஆதங்கத்தில் என் ஆண்டை நீளவிடுகிறேன்...

எப்போது வருவாய் நீ
எப்படி?

சொல்
சொல்
இல்லை
கொல்
கொல்
உடனே...

உனக்குள் இருக்கும்




மெல்லிய இடைவெளியில் நீயும், நானும்
சொல்லிக் கொள்ளும் தூரத்தில் நம் நாவும்
கேட்கும் நீளத்தில் நான்கு  செவியும்
இருப்பினும் இதயத்தில் ஏதோ உதறல்கள்...

எனக்குள் இருப்பதுதான் உ
க்குள்ளுமா ?
உனக்குள் இல்லாதிருப்பது எனக்குள் முளைத்திருக்குமா ?
ச்..சீ.. நமக்குள் என்றான பின் நினைவு மாறுமா ?

இப்படி கேள்விகள் ?  நிமிடத்தில் ஆயிரம்
இமைகளின் விலகலில் கூட உன் நினைவுகளை தேடிடும்
உனக்கும் இது தெரியும் என்பது எனக்கு மட்டுமே புரியும்...


மணி கணக்கில் யோசித்து வைத்திருப்பேன்
உன்னிடம் என்னவெல்லாம் அலாவலாம் என்று
நிமிடக் கணக்கில் மறந்திடுவேன்
நீ தொலைவில் வந்த தருணத்தில் ஏனோ தொலைந்திடுவேன்...


எப்படியோ, எப்போதாவது, எப்படியாவது
என் காதலை, சொல்ல நேரிடும் கணத்தை எதிர்பார்த்து
எதுவாகிய பின்னும், நீயே எனதுயிராவாய் என்றும்
அப்படித்தானா?  இப்படித்தானா ?  உனக்குள் இருக்கும்