புதன், 29 செப்டம்பர், 2010

தூக்கம் 7 - இதை எழுதியது 30 நிமிடத்தில் இரவு 10 மணி . ஒளி,ஒலி இணைப்புக்குதான் நீண்ட நேரம் ஆகிவிட்டது. இதற்காக என்னோடு தம்பி வரதன் இத் தொகுப்பிற்கான காட்சி இணைப்பு பணியினை செய்தார். எனது எல்லா படைப்புகளுக்கும் பின்னால் வரதன் உள்ளான். அதற்காக நன்றியை தெரிவிக் கொள்கிறேன். மீண்டும் நாங்கள் இணைவோம் என்ற நம்பிக்கையில்.

தூக்கம் 6

தூக்கம் 5

தூக்கம் 4

தூக்கம் 3

தூக்கம் 2

தூக்கம் 1 (இந்த பகுதியை முடிக்க இரவு 3 மணி ஆனது. முடித்து சந்தோசத்தில் நான் தூங்கிவிட்டேன் அயர்ந்து. ஒரு நாள் விடுமுறை. மறக்க முடியாத அனுபவ தூக்கம் இது)

சனி, 25 செப்டம்பர், 2010

விபத்து 8 ( part end_ this video"s story writing ,pictures, video, voice _all of me )

விபத்து 7

விபத்து 6

விபத்து 5

விபத்து 4

விபத்து 3

விபத்து 2

விபத்து 1 I ( my own creation in 2009 tv )

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

தாய்மையோடு ஒருத்தி

இதில் மட்டும்தான்
சுமைகள் கூட, கூட
சுகங்கள் அதிகரிக்கும்...

ஒவ்வொரு நிமிடமும்
கடந்து செல்வதற்குள்
ஓராயிரம் யுகங்கள் இருப்பது
கண்டுபிடிக்கப்படும்...

முதன் முதலாக
வீட்டு தேதிகள் கிழிப்பதற்கு
கைகள் தவமிருக்கும்...

அடிக்கடி
பயமும், பரவசமும்
ஒரே நேரத்தில் சந்திக்கும்...

ஒவ்வொரு...
செயல்களிலும் ஈடுபடும்போது
எச்சரிக்கை ஒலிகள்
அலைகளாக வந்து சேரும்...


இளமைப் பருவத்தில்
முதுமைப் பருவத்தின்
அனுபவம் கற்றுக் கொடுக்கப்படும்
தள்ளாடி நடக்கையில்...


உறங்கும் வேளையில்
எட்டி உதைத்து எழுப்புவதுண்டு
குட்டி பாதச்சுவடுகள்
உலகத்திற்குள்...

அங்கும் இங்குமாய் நிகழும்
அசைவுகளும்,நெழிவுகளும்
அழகிய கவிதையாகிறது...

கண்ணாடி வளையல்களுக்குள்
ஒலிந்து கொண்டது கைகளும்,
கைரேகைகளும்...

பெயர் சூட்டுவதற்கு
இப்பொழுதே மனதிற்குள்
மாபெரும் மாநாடு நடக்கும்...

தாயின் தன்மையை
உணர்கிறேன் கருவில்
உருவை சுமக்கையில்...

இன்னும்
சில தினங்களில்
விதைக்கப்போகிறேன்
இன்னொரு தலைமுறையை
(இல்லை)
மீண்டும் என்னை...

உலகத்தில்
உயர்ந்தது இதுதான்
படைப்பதால், கடவுளாவதால்...

கனவுகளின் பிம்பங்களோடு
காலத்தடங்கின் சின்னங்களோடு
காத்திருக்கிறாள்..

அம்மா என்று அழைக்கும்
அந்த நிமிடத்திற்காகவும்
தனக்கு மட்டும் புரியும்
அழகிய மொழிக்காகவும்...

ஆவலோடு
அடி வயிற்றை தடவிக்கொண்டு
தாய்மையோடு
ஒருத்தி...

ஆமாம்
ஒவ்வொரு
பெண்ணுக்கும்
இது ..
தன்னை அளந்து பார்க்கும் காலம்
தனக்குள் நிகழும் மாற்றங்களை
உணர்ந்து பூக்கும் தருணம்...

பூமிப்பந்தின் பேரானந்தம்
ஒவ்வொரு பெண்ணுக்கும்
இது...
புது ஜென்மம்தான் !!

வித்யாசன்.
ஐ லவ் யூ

வியாழன், 23 செப்டம்பர், 2010

எங்கே போனாய் தோழி


எங்கே போனாய் தோழி


நீ யாரோ
நான் யாரோ


பிறந்ததும், வளர்ந்ததும்
வேறு, வேறு இடம்

இணைந்தததோ
இணையதளத்திடம்

எதார்த்தமாக எங்கு அமர்ந்தாலும்
வண்ணத்துப் பூச்சியின் வண்ணம்
ஒட்டிக் கொள்வது போல்
பழகியதும் சிறகு விரித்தது நம் நட்பு


எனக்காதரவு நீயானாய்
உனக்காதரவு நானானேன்

தொலைவில் நாமிருந்தாலும்
தொடும் தூரத்தில்தான் நம் நினைவுகள்

வலிநேரிடும் போதெல்லாம்
ஓடி வருவாய் என்னிடம்
மருத்துவன் நான் என்று...

மகிழ்வோடு விளையாடும்போது
ஒரு குழந்தையாகவே மாறிவிடுவாய் 
நட்பெனும் மயிலிறகு தீண்டும் போது...

எனக்கு மட்டும்தான் தெரியும்
நீ தோழமையின் பூந் தோப்பு என்று...

எனக்கு மட்டும்தான் புரியும்
உன் நேசத்தின் மொழி  பெயர்ப்பு...

ஏதோ காரணம்
விலகி விட்டாய்
இல்லை
விளையாடி பார்க்கிறாய்...

கண்ணாமூச்சு ஆட்டடமாய் ஆனது வாழ்க்கை
உன் விரல் பிடித்து சென்ற வழி எல்லாம் கேட்கிறது
எங்கே  உன் நிழல் என்று...

நிலை மாறும் உலகத்தில்
தடுமாறும் நிமிடத்தில்
எங்கே நீ இருந்தாலும்

உனக்கென்று ஒன்று இல்லை என்று
ஓய்ந்து விடும் காலத்தில்
உடைந்து விடாதே...
நட்பெனும் நம் வீட்டு
கதவு திறந்து இருக்கு மறந்துவிடாதே...


எப்பொழுதும்...
இணையதளம் வரும்போது எல்லாம்
இணை பிரிவதில்லை
இளையுதிர் காலமாய்
இன்னும் நிகழ்கிறது
நமக்குள் முட்டிக் கொண்டு
நாம் ஒட்டிக் கொள்ள காரணமாக இருந்த
அந்த முதல் வார்த்தைகள்...

உன் பெயர் உள்ளவரிடம் எல்லாம்
உரிமையோடு உரையாடுகிறேன்
அது நீயாக இருக்கலாமோ என்று...

நீ..

எப்படி

தோழி...

அப்படிதானா
என்னையும் தேடுகிறாய்



வித்யாசன்


பாடகன்






புதன், 22 செப்டம்பர், 2010

அதிசய உலகம் நீ மட்டுமே

ஏதேதோ பேசிக் கொண்டே
உன்னையே பார்ப்பேன் நான்
ம்ம்... என்று சொல்லிக்கொண்டே
குழந்தையாக என்னையே பார்ப்பாய் நீ...

நீ தூங்குவதை நான் பார்க்க விழித்திருக்கிறேன்
என்று சொல்லிவிட்டு
நான் தூங்கும் அழகை
நீ ரசித்த இரவுகள்தான் அதிகம்...

உனக்காக செய்யும் எல்லாவற்றிலும்
எனக்கானதை நான் மறந்துவிடுவதுண்டு
எனக்காக நான் எதை தேர்வு செய்தாலும்
அது உனக்கு பிடித்திருக்கவே ஆசைபடுவதுண்டு...

வீட்டின் நாட்குறிப்பேட்டில் உள்ள
தினங்களில் சிகப்பு நாட்களை
மட்டுமே நான் நேசிக்கிறேன்
உன் விடுப்பு தினம் அது என்பதால்.....

அலுவலக நெருங்கும் நேரம்
நீ அரக்க, பறக்க கிளம்பும் தருணம்
அழுக்கு படிந்த முக வியர்வையை புடவையில் மறைத்து
கதவோரும் நானிருந்து இமைக்காது கையசைப்பது சுகம்...

நெடுந்தூரம் உன்னோடு நான் பயணிக்கும் வேளையில்
இது அதுவென்று, அது இதுவென்று
என்று சாலையில் விவரிப்பாயே அப்போது
உன் தோள் சாய்ந்து கேட்பது இதம்...

உனக்காக காத்திருக்கும் எண்ணற்ற
உலகத்துக்கு மத்தியில்
நமக்காக வாழும் போதும்
எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே !!

 பாடகன்

--------mvidhyasan@gmail.com

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

இன்னும் இன்னும்

இதுவரை...
தூசுபடிந்த இடம்
தூங்கா சொர்க்கமானது
நீ வந்ததும்...

சில நொடிக்கு முன் வரை
இது...
பாலைவம் என்றவர்கள்
பால் நிலா உவா வரும்
விண்ணுலகம் என்றனர்
உன் பார்வை பட்டதும்...


வெறும் மூங்கில் காடு
இதுவென்று வட்டமிட்ட வண்டுகள்
தேன் கூடு என்று தேனீக்களுக்கு
தகவல் சத்தம் கொடுக்கிறது
உன் விரல் பட்டதும்...

விழுந்ததும்அருவம் தெரியாது
உடைந்திடும் மழைத்துளி...
ஊஞ்சல் என்றும்,அருவி என்றும் பாய்ந்ததாம்
என் தோழிலும், மாரிலும் விழுகையில்...

புழுதிகளை உடுத்திக் கொண்டு
புலம்பிய பூங் காற்று...
புதுப் புலவராக மாறி
ம்ம்... என்ற சத்தமும் கவிதையயன்றதாம்
உன் மூச்சுக்காற்றாய் நுழைந்ததும்...

கைதட்டி, கைகாட்டி
வரவேற்று,வழி அனுப்பிய மர இலைகள்...
விசிறியாகவும், தலையாட்டி பொம்மையாகவும்
உதிரும் இதயமாகவும்,காதல் கடிதமாகவும் உருமாறி போகிறது
நீ கடக்கும்
(தவறு)
மிதக்கும் தருணத்தில்...


சுட்டு பார்த்த சூரியனுக்கு
கொதிக்கும் காய்சலாம்
தெரிந்தும் மீண்டும், மீண்டும் சுடுகிறது
உன் மேனி தொட்டு பார்த்து காய்ச்சல் கூட்ட...

விந்தையின்
சந்தையில்
விலை கேட்கிறது
இயற்கையை
உன் அழகா?

அல்ல ...


அசைந்து, இசைந்து
குவிந்து,வளைந்து
நெளிந்து, உலர்ந்து
சிவந்து,முதிர்ந்து
இன்னும் இன்னும்
என்று எல்லாவற்றையும்
சுட்டு விரல் நீளத்தில்
சுட்டிலுக்கும்
சூட்சமம் கொண்ட
உந்தன்
இரட்டை இதழ்தான் !!

--------------------Mvidhyasan@gmail.com

வியாழன், 16 செப்டம்பர், 2010

அந்த தருணம்

எதிர் பார்க்க வில்லை
இது நிகழும் என்று...


இயற்கையில் மாற்றங்கள்
ஏற்பட்டதை உணரவில்லை...

சற்றும் தோனவில்லை
சந்தர்ப்பம் அமையும் என்று...


இதய கதவுகள் சாத்தியிருந்தும்
உள் நுழைந்தது எப்படி ?

இரு விழிகள் விழித்திருந்தும்
கனவாக மாறியது எதனால் ?

நடந்து முடிந்த நிமிடம் தாண்டி
இன்னும் நீங்கவில்லை நினைவு கரை மோதி

மறுபடியும் நிகழுமா
?
நீ....
கடந்து செல்லும் அந்த தருணம்!!


----------Mvidhyasan@gmail.com

கனவு


இது....
ஜன்னல்களை எட்டி பார்க்கும்
பூங்காற்று அல்ல...


எப்போதுமாய் ஏதோதோ
வந்து போகும் காட்சி அல்ல..


ரத்தம் பிலிறும் சத்தம்
லட்சியத்தின் வெறியில்
இரவின் உச்சியில் எழுந்த நர்த்தனம்
இந்த கனவு...
இது...

 இமைகளை மூடிக்கொண்ட
முனங்கல் அல்ல
விழிகளை கிழித்துக்கொண்டு
சீறி எழுந்த உணர்வு...

நரம்புகள்
போர்க்களமாக மாறும் !
உணர்வுகள்
உரக்க தாளம் போடும்!


ஏ... கனவே.... கனவே...
நீ களைந்து விடாதே !
நீ களைத்து  விடாதே !
தோல்வி கதறி
அழுது கேட்டாலும்
நீ கலங்கி விடாதே !
என்று முழங்கிய கனவு இது...

தோற்று, தோற்று
போனதெல்லாம்
நேற்று, நேற்று, என்று சொல்லி
போனகதை போதுமடா !
உயிர் கூட்டை விட்டு
பிரியும் கனம் எதுவென்று
தெரியாத பின்னே இன்னும்
தூக்கம் ஏனடா !
என்று எனை துப்பி
எழுப்பிய கனவு இது...

இமைக்கதவை உடைத்தெறிந்து வெளியே வா
விழித்துவிட்டால்
விண்ணும் தூரமில்லை
வியர்வை (சூரியன்)
விழாமல்
வெளிச்சம் (பகல்) இல்லை
என்று அணிச்சமாக
வந்த கனவிது....

தோல்வி கோடி வந்தபோதிலும்
ஓடி ஒழிந்து விடாது எதிர்த்து
மோதி உடைந்து தூளாகிவிடு !
காற்று உன்னை சுமக்க
காத்திருக்கும் !
ஒரு கனம் உலகை கடந்து பார்க்க
துடிக்கும்
என்று
உருமிய கனவிது...

கவலை சொல்லும்
நினைவை கல்லறையாக்கிவிடு !
நீ...
காலத்திற்கு
கையயழுத்து போட
தூக்கத்தை கலைத்துவிடு !

உறங்கியது போதும்
உடனே எழுந்து விடு !

உன்...
உடைவாளாய் நானிருக்கிறேன்
என்று உணர்த்திய கனவிது...

ம்....
கனவிது என்று
யார் சொன்னது
எனுது...
நகக் கண்களும் இப்பொழுது
விழித்திருந்து
பார்க்கும் போது கனவெல்லாம்
நிஜமானது!!




--Mvidhyasan@gmail.com

புதன், 8 செப்டம்பர், 2010

அழகு

அடிக்கடி எனை பார்த்தும்
பார்க்காதது போல் இருப்பது அழகு...

நகம் கடிக்கும் நிமிடத்திலும்
எனை நினைப்பது அழகு...

எட்டி நான் செல்லும் போதெல்லாம்
நீ குட்டி சோகம் கொள்வது அழகு...

அதி காலை விடியலில் முகம் கழுவி
கண்ணாடியில் என் முகம் காண்பது அழகு...

புத்தகத்தின் இடையே என் பெயர்
எழுதி தெரியாமலிருக்க அடித்திருப்பது அழகு...

திட்டி நான் பேசினாலும் முதலில்
விட்டு கொடுத்து நீ பேசுவது அழகு...

விட்டு விலகும் நேரத்தில்
குழந்தை போல் அடம்பிடிப்பது அழகு...

எங்கு சென்றாலும் உன் மனதோடு
எனை அழைத்து கொண்டு தனி இடம் கொடுப்பது அழகு...

மழை கொட்டும் கணத்தில்
என் உள்ளங்கை பிடித்து நடப்பது அழகு...

பிடித்திருக்கு என்று உன்னிடம் சொல்லுகையில்
விழிகளை மடித்துக் கொண்டு வெட்கம் கொள்வாயே
அது அது தனி அழகு !!

பாடகன் ---------- Mvidhyasan@gmail.com

இன்று

மர இலைகளின் கைதட்டல்,
கொடிகளின் கைகோர்ப்பில் வரவேற்ற சாலை:
செல்போன் டவர்களாகவும்,
மின் இணைப்பு வயர்களாகவும் உருவெடுப்பு...

ஆற்றங்கரை குளிர்காற்றிலும்,
குருவிகளின் சத்தத்திலும் குதூகலித்த நிமிடங்கள்:
புழுதிகளின் முகமூடியிலும் ,
வாகன இரைச்சல்களின் பிடியிலும் நகர்கிறது...

மலை பாங்கையும்,
விளை நிலங்களையும் சுமந்த பசுமை
அடுக்குமாடி குடியிருப்பாகவும்,
தொங்கும் பூந்தொட்டிகளாகவும் புதுமை...

குளக்கரை துவையலும்,
கிணற்று குளியலும் நனைத்த சுகங்கள்:
சவர் பாத்ரூமிலும்,
வாசிங்மிசன் சலவையிலும் சுமைகளாக...

உரலில் இடித்து,
அம்மியில் அரைத்த மருந்து உணவு:
மிக்சியில் நுரைத்து,
ஃபிரிஜ்ஜில் விரைத்து விசமானது உண்மை...

பாட்டி விற்ற நெல்லிக்காயும்,
மாங்காய் வடுவும் ருசித்த வாய்:
பீசா, பிரட்டும்,
வண்ண சருகையில் லாலிபாப்புமாய்...

ஊற்று நீரும்,
மண்பானை தண்ணீரும் சுவைத்த நாக்கு:
ஃபில்ட்டர் பாட்டிலும்,
பிளாஸ்டிக் பாக்கெட்டிலும் குடிநீர் விலைக்கு...


வெயிலில் ஆடி,
மழையில் நனைந்தபடி கழிந்த காலம்:
புத்தகம் பாதி, அலைபேசி,
தெலைகாட்சி,கணினி என மீதியில் கரைகிறது...


வெண்ணிலாவும்,
வின்மீனும் ரசிக்க வேண்டுமாயின்:
பொட்டை காட்டைத் தேடியும்,
மொட்டை மாடி ஓடியும் நின்றால்தான் தெரியும்...

காதலும்,வீரமும்
மானமும், ஈகையும் கலந்த கலாச்சாரம்
துட்டுக்கு ஓட்டும்,
துடிக்கும் நிமிடத்திற்கு ஒரு காதலும்,
ஏழை மீது ஆதிக்கமும்,
உழைப்போரை ஏய்ப்பதுமாய் ஆனது...

மாறிப்போனது யாவும்
தேடி பார்க்க வேண்டியிருக்கிறது
 இன்று !! அன்பு மலர் 

---------Mvidhyasan@gmail.com

ஒருவன்

யாரென்று தெரியாது - நீ...
இணையதளம் இணைத்த இணைப்பு...
மன்னிக்கவும்...
இனிப்பு...

உனக்கும் எனக்கும் ஒரு வித்யாசம்...
நிஜங்கள் எனக்கு கை கொடுப்பதில்லை...
கனவுகள் உனக்கு கை கொடுப்பதில்லை...
இருந்தும்,
நம்பிக்கையின் பாதையில்,
ஊர்ந்து கொண்டிருக்கிறோம்...

வெற்றி தொலைவல்ல தோழியே...
சில உறவுகளுக்கு அர்த்தங்கள் இல்லை...
நீ இல்லையேல், வாழ்வில் அர்த்தம் இல்லை...
இந்த வார்த்தைகள்,
நேரம் தாழ்ந்தாலும்,
நேசம் தாழாது...

என் வெற்றியில் உன் பங்கிருக்கும்...
உன் வெற்றியில்,
நிச்சயம் என் பங்கிருக்கும்...
நேரில் பார்க்காவிட்டாலும்...
நேரம் கிறுக்கி விட்டது..
நம் நட்பை...

கிறுக்களும் காவியமாகிவிட்டது...
இது அதிசயம்...
என்றும் உன் அருகில் இருப்பேனா என்பது எனக்கு தெரியாது..

ஆனால்...
ஓடி..கலைத்து வா...
நட்பென்னும் நிழலை கொண்டு நான் நின்றிருப்பேன்...
தோழியே...
உனக்காக...
உங்களை சந்திக்க சிந்திக்க ஒருவன் !!!
மு.வித்யாசன்  நன்றி

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

கருவறை


மருதாணி

என் விரல்கள் சூடிக் கொள்ளும்
ஒற்றை வண்ண தாவணி..

இரவும், பகலும் மறையாமல்
உள்ளங்கையில் ஒளிரும் முழு மதி...
ரேகை எனும் சாலையில்
பூத்திருக்கும் நிழற்குடை...


இமைகள் இன்றி
விழித்திருக்கும் அழகிய விழி...
உன் விரல்கள் கோலம் போட
நான் யிட்டுக் கொண்ட புள்ளி...
உனக்கு மட்டும் புரியும்
இந்த புன்னகையின் மொழி...
நீ...
பக்கம் வரும் முன்
வெட்கம் கொள்கிறது ஏனோ .
என்ன?
என் மருதாணி !!
ஐ லவ் யூ ஐ லவ் யூ  ஐ லவ் யூ

---------mvidhyasan@gmail.com

திங்கள், 6 செப்டம்பர், 2010

சொன்னது...

 


வானம் எப்பொழுதுமே
அழகாகவே இருக்கிறது
ஏன், எப்படி என்று கேட்டேன்...

சொன்னது...

நானென்று அகந்தை கொள்ளாது
தானென்று எதையும் எண்ணாது
பொதுவென விடுவதும்...

வருவதும்,மறைவதும் மாயையின் வழக்கம்
எதுவாக இருப்பினும் தள்ளி இருப்பதே சிறக்கும்
என்பதை புரிந்ததே காரணம் என்றது...

சற்று குனிந்து பார்த்தேன்...

நிஜம்தான் !!
 
புவி மேடையில் நான் !!


மு.வித்யாசன் அன்பு மலர்

விளக்கு

காலம்

மழை

மாயை

பயணம் 2

புத்தகம்

பயணம்

தாஜ்மஹால்

மாட்டுவண்டி

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

மெளனம்

தாய்

புரிதல்

காதல்

சாலை

தேடல்

சருகு

சனி, 4 செப்டம்பர், 2010

ஒவ்வொரு முறையும்

மரணங்களின் வலியை
தாண்டியது உன் நினைவு...

துன்பத்தின் உச்சியில்
கொண்டு சேர்க்கிறது உன் பிரிவு...

ஒரு முறை...
நிமிடங்களிடம் மண்டியிடுகிறேன்
மீண்டும் உன் நினைவை தூண்டாதே என்று...

மறு முறை...
கணங்களிடம் கையேந்துகிறேன்
உன் கனவோடு கரைந்து உயிர் போகவே...

என் கவனம்...
எல்லாவற்றையும் கட்டி போடுகிறது
உனது மெளனம்....

உள்ளுக்குள்ளே புதைத்து...
கல்லரை கட்டிய போதும்
புன்னகைத்து பூக்கிறது...

உயிரின் வேர் வரை சென்ற
உனது நினைவுகள் ஒவ்வொரு முறையும் !!

-வித்யாசன்




நினைத்து துடிக்கவே

இரவுகளின் கனவுகளில்
அடையாளம் பதிக்கிறது
உனது கால்தடம்...

நினைவுகளின் கரைகளில்
தழும்ப ஓடுகிறது
உனது ஞாபகங்கள்...

இரவின் மடியில்
தனியாய் விழித்திருக்கிறோம்
நிலவும், நானும்...

நிமிடங்களின் இடையே
குடை பிடித்து காத்திருக்கிறேன்
உன் நிழல் விழும் திசையை நோக்கி...

கணங்களுக்கு ம
த்தியில்
கடை விரித்து எதிர்பார்க்கிறேன்
நீ கடந்து போக கூடும் என்று...

உன்னோடு இருந்த
காலங்களை தேடி அலைகிறேன்
அங்கே நான் எங்கே வாழ்கிறேன் என்று...

உடைந்த கண்ணாடியிலும்
உன் உருவம் பார்க்கிறேன்
என் பார்வை நீதானா என்று...

உதிர்ந்து உலவும்
இலைகளிடம் கேட்கிறேன்
நீ இருக்கும் இடம் அறியுமா என்று...

அலையும் காற்றிடம்
சொல்வதுண்டு
நீ சுவாசித்த
மூச்சு காற்றை மட்டும் சுமந்து வா என்று...

மண்ணும், நெருப்பும்
என்னை திண்ணும் போதும்
இதயம் விட்டு வைக்க கேட்பேன்...

எப்பொழுதும்
உன்னை நினைத்து துடிக்கவே !!


-வித்யாசன்

சாபமிடு ,சாபம்கொடு

சுடும் சொல் ஒன்று: சொல்லி விடு
இல்லையேல் உன் சுட்டு விழியால்
எனை கொன்று விடு...

மறு மொழி ஒன்று கூறிவிடு
இல்லை, எனை கொல்லும்
மருந்தொன்று தந்துவிடு...

ஒருமுறை எனை தண்டித்துவிடு
இல்லை உன் உயிரை
நீயே துண்டித்துவிடு...

தவறுக்கு
மெளன தண்டனை வேண்டாம்
மன்னித்து விடு
மறு ஜென்மம் எனக்கு
அளித்து விடு...

இல்லையேல்
இவன் இன்றோடு
அழிந்து போகட்டும் என்று
சாபமிடு ,சாபம்கொடு !!

அன்பு மலர்

விதி விலக்கா


உனக்கு
உலகமே
நிசப்தமானது
என் மெளனத்தால்...

தனிமை
உலகத்தில்
நீ‡தள்ளப்பட்டாய்
நான் தள்ளிவைத்ததால்..

நீ கதறுகிறாய்
நான் இருதய
கதவை அடைத்ததும்...

உனக்குள்
பூகம்ப புலம்பல்கள்
நான் கோபித்ததும்...

வெறுமையின்
உச்சத்தில் -நீ
நான்- உனை
வெறுத்து விட்டதால்..

எனக்குள்
அனுதாபம் ஏற்படுத்தவில்லை
நீ சொன்ன வார்த்தைகளும்
செய்த செயல்களும்...

துடிதுடித்து
நீ ஏங்கினாலும்
நடிப்பு என்றுதான் தோன்றுது...


எனக்காக வா
இவ்வளவும்
என்று யோசிக்கும்
போது
என் அழகும் கொஞ்சம் கூடுது...

மாண்டு விடுவாயா ?
மறந்து விடுவாய ?

இல்லை...

காய்ந்து விடுவாய ?
கடந்து விடுவாயா ?


இல்லை...

சாய்ந்து விடுவாயா ?
ஓய்ந்து விடுவாயா ?

என்ன செய்ய போகிறாய்
நான் இல்லாது ?

கவி எழுதி எழுதி
கரைந்து போவாயா ?

கன்னம் வீங்க வீங்க
அழுது கவிழ்வாயா ?

உன் கைகள் ஏந்தி
காதல் பிச்சை கேட்க போகிறாயா ?

இன்னும் கேள்விகள்
இரு வானம் அளவுக்கு
இருக்கு-உன்னிடம்...

ஒரு வேளை
நீ இல்லாமல் போன பிறகுதான்
புரிவேனோ
உன் அன்பினை..

எதுவாக இருந்தாலும்
சரி
பொதுவாகவே
நிஜமான காதலுக்கு
நான் மட்டும் என்ன விதி விலக்கா ?

 -வித்யாசன்

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

தொலைந்து போன நட்பு

நெருங்கி பழகும் வேளையில்
தெரியவில்லை
நொருங்கி போகும் என்று..

கைகோர்த்து நடந்த கணத்தில்
கவனிக்கவில்லை
வெகுதூரம் செல்வாய்என்று...

துணையாக இருந்த தருணத்தில்
உணரவில்லை
துயரமாக போவது என்று...

புன்னகைத்து பூரித்த பொழுதில்
புரியவில்லை
கண்ணீரை பரிசளிப்பாய் என்று...

தவறு செய்த நிமிடத்தில்
அறியவில்லை
தடையாக இது மாறுமென்று...

தொலை தூர வாழ்க்கையில்
தொலைத்து விட்டு வழி நெடுக
தேடுகிறேன்...

தூய்மையான
என் தோழமையை
நீ...
( வருவாய் ) மன்னிப்பாய் என்ற நம்பிக்கையில் !!



                                                                                         -Vidhyasan@gmail.com

புதன், 1 செப்டம்பர், 2010

பாரதி