பக்கத்தில் பக்கத்தில் தான்
நீயும்- நானும்...
தொடும் தூரத்தில் இருந்தும்
இரு வரும் பரிந்தபடி
...
இணை பிரியாத பயணம்தான்
தொடர்கிறது இணைய முடியா இடைவெளி
வெயில் நேரத்தில் -நான்
வெங்துவிடுவேன் என்று
நீ‡நொந்ததுண்டு
மழை காலத்தில் -நான்
நனைவேன் என்று
நீ‡ கண்ணீர் சிந்தியதுண்டு
நீண்ட வளைவுகளில்
நாம்- அவ்வப்போது
நலம் விசாரித்து கொள்வதுண்டு
பேசாமலிருக்கும் உதட்டின் மீது
பிரியத்தை சொல்லி போகும் ரயில் பெட்டிகள்
கற்களின் மேடையில் நடக்கிறது
தினம் தினம் நமது காதல் நாடகம்
யார் அறிவார் ?
உனக்கும் -எனக்குமான
உயிர்ப்புள்ள இடைவெளி இணைப்பை !!