வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

தீரா - மீரா 11

இடைவெளி
சில நேரம்
உதிரத்தை நனைக்கும்!

இடைவெளி
சில கணம்
உணர்வுகளை சிதைக்கும்!

இடைவெளி
பல தருணம்
நினைவுகளை வருடும்!

இடைவெளி
பல நிமிடம்
கடந்ததை மறைக்கும்!

இடைவெளி
ஒவ்வொரு வினாடியும்
புதுப்புது விதையைய் விதைக்கும்!

தீரா-மீரா-வின்
அன்றை இடை வெளி
வானையும், மண்ணையும்
இணைத்ததாய்!

காற்றையும், மேகத்தையும்
கட்டியதாய்!

நீரையும், வெப்பத்தையும்
பிணைத்ததாய்!

நிழலையும், உருவத்தையும்
உருக்கியதாய்!

நினைவையும், கனவையும்
கலந்ததாய்!
ஆனது!

முதல் சந்திப்பில்
மூச்சு திணறிய நிமிடங்களில்
மயங்கிய கணங்களை சுமந்தபடி
தீரா!

முதல் சந்திப்பில்
முகம் சிவந்து, யுகம் கடந்த
மர்மங்களின் கனவுகளை அலசியபடி
மீரா!

காந்தமும், இரும்பும்
வேறு வேறுதான்!
அருகினில் இருந்தால்
வேரும் - நீரும் போன்றது!

அப்படித்தான்...
இளமை மைதானத்தில்
இருள் பந்தலில்
நிலவு பந்தை
நினைவுக் கைகளால்
தட்டி ....
விளையாடிக் கொண்டிருந்தனர்
மீராவும்- தீராவும்!

எல்லா பொழுதுகளுமே
ஒரே நினைவில்
ஒரே நிமிடத்தில்
ஒரே எண்ணத்தில்
ஒரே சுகத்தில்
ஒரே மயக்கில்
ஒவ்வொருவருக்கும்
விடிவதில்லை!

வேறுபடுவதுண்டு
வேறுபட்டது இருவருக்கும்!

ஆழமான எண்ணம்
தீண்டாத - வரை...

கோரமான ஆசை
புகாத - வரை...

விபரீதமான எண்ணம்
எழாத - வரை...

விழுங்கும் நினைவுகள்
விளாங்காத - வரை...

அழுத்தும் உணர்வுகள்
உதிக்காத - வரை...

ஆவேச உணர்ச்சிகள்
குதிக்காத - வரை...

அவசர செயல்கள்
புகாத - வரை...

அதிகார வாய்
பிளக்காத - வரை...

எதிலும் அடிமையாய்
ஆகாத - வரை..


காதல் நோய்
கவ்வாத வரை...தான் !

ஒருவன்
தான்..
தானாக
இருக்கிறான்!

இதில்...
ஏதாவது ஒன்று
எழுதத் தொடங்கி விட்டால்
போதும்!

தான்..
விண்ணாகி
மண்ணாகி
உலகாகி
உயராகி
மலையாகி
அலையாகி
கடுகாகி
காடாகி
கடவுளாகி
அனைத்துமாகிறான்!

அனைத்துமாகி
அதிர்ந்து கொண்டிருந்தனர்
தீராவும் - மீராவும்!

வானம்...
நிலா முகம்
கழுவிக் கொண்டிருந்தது...

சூரியன்
ஆடையை
சுறுசுறுப்பாக
அணிய
ஆயதத்மானது
வானம்!

இரவில்
நினைவில் கரைந்து
விழி சிவந்து
விழித்து...
சிரித்துக் கொண்டனர்
இதழ் சிவப்பு பார்த்து!

காலத்தின் சக்கரம்
சுழன்று கொண்டிருந்தது
தீராவுக்கும் - மீராவுக்கும்
காதல் பாடம்
கற்பித்துக் கொண்டு!

(தொடரும்....)