
கண்ணம்மா...
உண்மை ஊமையாகையிலே ;
நெஞ்சம் பதறுதடி
கண்ணம்மா...
நேர்மை சாகையிலே ;
சொல்லில் வேல் பாயுதடி
கண்ணம்மா...
மிகு ஏழை என்கையிலே ;
கண்ணில் முள் தைக்குதடி
கண்ணம்மா...
அடிமை என்றாகையிலே ...
பள்ளி பல்கிப் பெருகியும்
நம் பாடது தீரவில்லையே ;
கல்வி ஓங்கிப் பரவியும்
நாளும் பேதமை நீங்கவில்லையே ;
கோபம் மூளுதடி
கண்ணம்மா...
நிதம் அஞ்சி வாழ்கையிலே
நெஞ்சம் வேகுதடி
கண்ணம்மா
சிறு கஞ்சிக்கு அழுகையிலே ...
எங்கும் சுதந்திரமா ?
பின் ஏற்றத் தாழ்வது எழலாமா ?
யாவருமிங்கு சமமா ?
பின் வீண் பிரிவினை வரலாமா ?
ஞாயம் என்னம்மா ?
கண்ணம்மா
அது காகித தாளா சொல்லமா ?
பாவம் கூடாதம்மா
கண்ணம்மா
பாரில் பலமதுவே சட்டமா ?
நல் ஏடுகள் இங்கிருந்தும்
நாளும் கேடுகள் விளைவது ஏன் ?
நன்மை யாவிலிருந்தும்
பொல்லாத் தீமை புகுவது ஏன் ?
பேராசை தானடி
கண்ணம்மா
தானெனும் ஆணவமடி
மோசம் செய்வாரடி
கண்ணம்மா
காரிய பாசமது மெய்யோடி ~~~
- வித்யாசன்
நம் பாடது தீரவில்லையே ;
கல்வி ஓங்கிப் பரவியும்
நாளும் பேதமை நீங்கவில்லையே ;
கோபம் மூளுதடி
கண்ணம்மா...
நிதம் அஞ்சி வாழ்கையிலே
நெஞ்சம் வேகுதடி
கண்ணம்மா
சிறு கஞ்சிக்கு அழுகையிலே ...
எங்கும் சுதந்திரமா ?
பின் ஏற்றத் தாழ்வது எழலாமா ?
யாவருமிங்கு சமமா ?
பின் வீண் பிரிவினை வரலாமா ?
ஞாயம் என்னம்மா ?
கண்ணம்மா
அது காகித தாளா சொல்லமா ?
பாவம் கூடாதம்மா
கண்ணம்மா
பாரில் பலமதுவே சட்டமா ?
நல் ஏடுகள் இங்கிருந்தும்
நாளும் கேடுகள் விளைவது ஏன் ?
நன்மை யாவிலிருந்தும்
பொல்லாத் தீமை புகுவது ஏன் ?
பேராசை தானடி
கண்ணம்மா
தானெனும் ஆணவமடி
மோசம் செய்வாரடி
கண்ணம்மா
காரிய பாசமது மெய்யோடி ~~~
- வித்யாசன்