சனி, 17 மார்ச், 2012

தீரா மீரா 14


பாலைவனத்தில்
கன மழை
பனிக்கட்டிக்குள்
சூரிய இழை
எப்படி இருக்கும்...
அப்படி இருந்தது
மீராவிற்கு தீராவை பார்த்ததும்....

இடைவெளியின் நீளத்தை
எப்போது உணர முடியும் என்பது தெரியுமா?
அது...
தூரங்களின் அளவில் அல்ல
நெருக்கத்தின் இருக்கத்தில்...!

கண்ணீரின் சுவையை
நா எப்போது ருசிக்க முடியும் என்பது தெரியுமா?
அது...
சுவையை தீண்டுவதால் அல்ல
எதனால் தோன்றுவதை பொருத்து...!

மெளனத்தின் ஆழத்தை
மனம் எப்போது உருக்கிபோடும் என்பது தெரியுமா?
உதடுகள் பேசாதிருத்தலால் அல்ல
ஊமையின் நிலையை வருடும் இடத்தில்....!

இத்தனையும்...
ஒன்றாக
நின்றால் தீரா...!

உயிர் சருகு உருகியது
மயிர் முனைகள் மருகிறது
கை விரல்கள் அதிர்ந்தது
கால் தடங்கள் கண் திறந்தது
உதடுகளின் கதவுகள் சிவந்தது
உள் மூச்சு பேச்சறுந்து நின்றது
நாவுக்குள் ஆதவன் புகுந்தது
நரகமும், சொர்கமும்
நடுவில் தெரிந்தது
மீராவிற்கு...!


தீரா....
தூரத்தில்....

இதயத்தில் துளையிட்ட
அம்பாக தீராவை நோக்கி வந்தான்...!

அம்பு
நெருங்க, நெருங்க...

குருதி கொட்டியது
மீரா
விழிகளில்...!

மேகமும், வானமும்
முதல் முறையாக பார்ப்பதாய்...

தேகமும், ஆத்மாவும்
முதல் முறையாய் உரசுவதாய்...

மழையும், மண்ணும்
முதல் முறையாய் ஒட்டுவதாய்...

காற்றும், இலையும்
முதல் முறையாய் மோதுவதாய்...

பருவமும், காலமும்
முதல் முதலாய் முத்தமிடுவதாய்....

தங்கமும், நெருப்புமும்
முதல் முறையாய் முட்டுவதாய்...

இப்போது
தீரா, மீரா
அருகருகில்....

அகல துடுப்பான
இமைகளை நனைத்து கொண்டு
மீரா...
தீரா வை பார்த்தாள்...

அடுத்த கணம்
தீரா...
மீராவின்
உடலை பின்னிக்கொண்டிருந்தான்
முதுகின் எழும்புகளை எண்ணியபடி...!

பிரிவின் உச்சம் அறிந்த
புரிவின் அர்த்தம் புரிந்து
ஆழ தழுவினான் தீரா...

இது...
தீராது.. தீராது...தீராது....
போதாது...போதாது..போதாது..
தீ யாக பற்றிக் கொண்டால்
தீராவை முழுவதுமாக மீரா...!


சில நிமிடங்கள் மயங்கியது
பல இலைகள் தலை கவிழ்ந்தது
சில மைல் கடந்தது நதி நீர்
பல குயில் பறந்தது வான்வெளியில்
சில மேகம் சிதைந்தது திடுக்கென
பல மோதலில் விழி-த்தன படக்கென
தீரா- மீரா


மீரா நீள் முடியைபோன்று
நீண்ட இடைவெளிக்கு பிறகு
மீண்டு கேட்டால்
ஏன் இவ்வளவு காலம்
வரவில்லை என்று...!

பெண் என்பவள்
தெரிந்தே (புரிந்து)
வேகமாக நுழைவாள் ( யாருக்கும் தெரியாது)
அதை விட பன்மடங்கு வேகத்தில்
மீண்டு விடுவாள்...


தீரா நீந்திக் கொண்டிருந்தான்
விரல் இடுக்கில் எப்படி
சூரியன் சுருண்டு கிடக்கிறான் என்று
தீராவின் கைகளை பற்றிக் கொண்டே
மீராவின் கேள்விக்கு
பதில் கூறாது....

ஆண் என்பவன்
ஆழம் அறியாது
புயலென நுழைவான்
ஆனால்...
மீளத் தெரியாது
அதிலே வீழ்ந்து
ஆளவும் செய்வான்
மாளவும் செய்வான்...!

(தொடரும்)

தீரா-மீரா -13

நிலா...
உடை களையும் நேரம்
பொழுது புத்துணர்வு பெறும்!

வானம்...
கண் மை யை கழுவும் நிமிடம்
பூமி பிரகாசமாகும்!

தீரா - மீராவின்
உரசலில்...
இயற்கை தன்னை
சருகுகளாக உதிர்த்து கொண்டிருந்தன!

நதிக் கரையின்
இடைவெளிக்கு பின்
கரைகளின் வார்த்தைகள் எழுதப்படும்!

மழைத் துளியின்
இடைவெளிக்கு முன்
வானவில் அர்த்தங்களை பொறிக்கும்!


உளி முனையின்
இடைவெளிக்கு இடையில்
சிந்தனையின் சிலை புலப்படும்!

தீரா - மீராவின்
உரசலின் நீள் இடைவெளிக்கு
முன், பின், இடையில்
மெளனங்கள்!


ஒரு கணம்
உரைந்த பணி
உருகியதாய்
உதடு திறந்து
ஆரம்பித்தான் தீரா!


சுற்றும்முற்றும்
பார்த்தான்
சூழ்நிலைகளை
சுழற்றி போட்டுக் கொண்டு
கற்பனைகளை
கழற்றி கொண்டிருந்தான்
மீராவிடம், தீரா!


மலையை பார்...
அசையாத கருப்பு நதியாய்
நீள்கிறது!

வானை பார்...
விதவிதமாய் ஓவியங்களை
வரைகிறது மேகம்!

காற்றை உணர்...
தீண்டலின் ஆழத்தை
சொல்கிறது!

உன்னை கண்ட நிலா
முகம் காட்ட
மறுக்கிறது!

வண்டுகள்
தேன் குடித்து
பூ இதழ் மடியில் நீந்துகிறது!

நதிக் கரைகள்
நீரில் கால் கழுவி
சுத்தம் செய்கிறது!

விரல்களா ?
இல்லை
புல்லாங்குழலா ?
என் உதடுகளுக்கு
சந்தேகம்!

அசையும்
தீபமாய் நீ!
வெளிச்சத்தின்
ஈரமாய் நான்!

அதோ...
பறக்கிறது பறவை
எப்படி?
ஒரு பழம்
அமர்ந்திருக்கிறது
என்ற ஆச்சர்யத்தில்!


அதோ...
அலைகிறது முகில்
எப்படி?
வானவில்
மண்ணில் முகாமிட்டுக்கிறது
என்ற தடுமாற்றத்தில்!

அடிக்கொரு முறை
இமைக்காதே!
துடிக்கின்ற
இருதயத்தை நறுக்காதே!

தொடர்ந்தான்
விடாது
கற்பனையை
பொழிந்தான்!

கடல்
வெப்பம்
அலை
கிளை
குளிர்
அழகு
சிலிர்ப்பு
சிரிப்பு
உயிர்ப்பு
தவிப்பு
கதகதப்பு
என
எல்லாவற்றையும்
எல்லையில்லாது
இறுதியில்
இளைத்து
பார்த்தான்
தீரா - மீராவை !


ஆண்
எப்போதுமே
அழகை கண்டதும்
ஆழ விழுந்து அமிழ்ந்திடுவான்!

பெண்
அப்படி இல்லை
எதிர்மாறானது!

தீரா
விழுந்து
வார்த்தைகளில்
மூழ்கி
விழுங்கிக் கொண்டிருநதான்!

இத்தனையும்
கேட்ட மீரா
ஒரே
வார்த்தை
ம்.......


தீரா
திகைக்கவில்லை!
நகைக்கவில்லை!
பரிதவிக்கவில்லை!
பரவசபடவில்லை!
கோபபடவில்லை!

மாறாக...
ரசித்தான்!

எத்தனையோ
கற்பனைகளை விதைத்தேன்
அத்தனையும்
அர்த்தமில்லை என்று அறிந்தேன்

ம்...
என்ற ஒரு வார்த்தைக்கு முன்
மொத்தத்தையும்
சமர்ப்பனம் செய்தேன்
என்றான் தீரா!

(தொடரும்...)