திங்கள், 4 ஏப்ரல், 2011

சுகமாகவே

நெடுந்தூர பயணம்
உன் நினைவுகள் நிழலாய் துணை வரும்....


மழை சொட்டும் தருணம்

உன் உதடுகள் கொடுத்த ஒத்தடம் ஞாபகம்...


வெயில் சுடும் கணம்

உன் மடி சாய்ந்த நிமிடமாய் வருடும்...


கடல் அலை கரையில் நுரையிடும்
மெளனம்
உன் கால் கொழுசு மணியாய் உருமாறும்...


நிலவு உலா வரும் நேரம்

நீ காத்திருப்பதாய் தோன்றும்...


கிளை, இலை எல்லாம் அசையும்
சுகம்
நீ விடும் மூச்சு காற்றை சுவாசிக்கும் இதயமாகும்....


எது எதுவாகினும் எனக்கென்னமோ

எல்லாமே நீ ஆகிறாய் எனக்குள் சுகமாகவே !!




-வித்யாசன்