செவ்வாய், 12 அக்டோபர், 2010

உந்தன் ஓரக்கண்கள்


என் பேனாக்கள் எழுத தவறிய வார்த்தைகள்

என் நினைவுகள் எட்டி பிடிக்காத கற்பனைகள்

நான் பயணிக்காத நினைவுகளின் பாதைகள்


நான் கவனிக்காத கனவுகளின் கால்தடங்கள்

தேடலில் விட்டுச் சென்ற எனது பதிவுகள்


தேய்பிறையை திரும்ப திரும்ப ரசித்த நிமிடங்கள்

மழை துளி பட்டு விரல் நுனியில் பிறந்த தூரல்கள்


தென்றலிடம் மட்டும் உரையாடிய வார்த்தைகள்

தலையனையோடு புதைத்து கொண்ட அந்தரங்கங்கள்


அர்த்தங்களை சொல்லி தந்த அனுபவங்கள்

எத்தனையோ விதமாக எனில் நுழைந்த சுகங்கள்


எல்லாவற்றையும் எடுத்துச் சென்ற சோகங்கள்

இப்படி...

எல்லாம் எனக்குள் நிகழ்ந்து கொண்டிருக்க


அதனை ...


ஒவ்வொன்றாக கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது

உந்தன் ஓரக்கண்கள் !!
ஐ லவ் யூ