வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

நீயே யாதும்

மண்ணில் இல்லா இன்பம்
எது வென்று கேட்டேன்

விண்ணில் இடம் பெறா
அதிசயம் எதுவென்று வினவினேன்
...
கண்ணில் உள்ள சோகத்தை எல்லாம்
கரைக்கும் காட்சி எது வென்று விரைந்தேன்

எண்ணி,எண்ணி மகிழும் 
 நான் என்பது எதுவென்று தேடினேன்...

என் கைதனிலே மின்னி மிதக்கும்
மகளே
நீயே யாதும் என்று அறிந்தேன் !!