புதன், 6 ஏப்ரல், 2011

அன்றையதாய் ஆனேன்




உன் தோள் சாய்ந்த அந்த நிமிடம்
என் துயரங்கள் யாவும் தூரம் சென்ற மாயம்

...உலகம் புரியாத புதிராய் சுழன்ற காலம்
என்னை அழைத்து சென்று காண்பித்தாய் நட்பெனும் அழகிய உலகம்

எதை எதையோ காட்டி உனக்கு வேண்டுமா என்பாய்
எப்போதும் என்னிடம் நீ மட்டும்தான் இருந்தாய் அன்பாய்


உன் விரல் கோர்த்து விளையாடிய காலம்
விழி மீது அலையாடி ஏற்படுத்துகிறது நினைவுகளாக காயம்

எதற்கெடுத்தாலும் உன்னையே தேடும் என் மனம்
ஏனோ மறந்தது தோழா துருவம் பிரிந்து பருவம் தீண்டியதால்

இது நாள் வரை தென்பாடாத உனதுருவம்
விதி விளையாட்டாய் வீதியில் நாம் சந்திக்க

கொட்டி தீர்த்து விட்டாய் அந்த நாள் முதல் எனை கண்ட நிமிடம் வரை நீ:
எல்லாமே சொல்லாமல் கேட்டறிந்தேன் உன் முகவரியை நான்

வீடு வரும் முன் இது வரை தொடர்ந்து வந்த துயரங்கள் நடந்து வந்தது
இமை மூடி சற்று சுவற்றில் சாய்ந்தேன்,தோள் கொடுத்து கண்ணீர் துடைத்தாய் அன்றையதாய் ஆனேன் நான் !!
vidhyasan@gmail.com