திங்கள், 20 டிசம்பர், 2010

பின்னால்

ஒரு சிலைக்கு பின்னால்
அடி வாங்கி அலங்கரித்த உளி மறைந்திருக்கிறது


ஒரு ஓவியத்திற்கு பின்னால்
பல வண்ணங்களை உடுத்திய தூரிகை ஒலிந்திருக்கிறது


ஒரு பட்டு சேலைக்கு பின்னால்
பல்லாயிர பட்டு பூச்சிகளின் உயிர் படிந்திருக்கிறது


ஒரு மலருக்கு பின்னால்
உயிர் கொடுத்த வேர்கள் புதைந்திருக்கிறது


ஒரு ஒளிக்கு பின்னால்
இருளின் குவியல்கள் குவிந்து கிடக்கிறது


ஒரு மழைத்துளிக்கு பின்னால்
காற்றின் கால்தடங்கள் கலைந்திருக்கிறது


ஒரு நிமிடத்திற்கு பின்னால்
பல்லாயிர கணக்கான காலங்கள் உரைந்து கிடக்கிறது


ஒரு வெற்றிக்கு பின்னால்
உயிரை புரட்டி பார்த்த தோழ்விகள் பதுங்கியிருக்கிறது


ஒரு ஒலிக்கு பின்னால்
உருமில்லா இசை பின்னல்கள் பினைந்துகிடக்கிறது


ஒரு துன்பத்திற்கு பின்னால்
துளிகளின் வடிவில் கண்ணீர் கடல் கவிழ்ந்திருக்கிறது


ஒரு கவிதைக்கு பின்னால்
ஓராயிரம் கற்பனைகள் வடிகட்டியிருக்கிறது


ஒரு முதுமைக்கு பின்னால்
இளமையின் ரகசியங்கள் தொலைந்திருக்கிறது


ஒரு திறமைக்கு பின்னால்
இடைவிடாத முயற்சியின் சுவர் எழுந்திருக்கிறது


உலகில் உள்ள ஒவ்வொன்றிற்கு பின்னாலும்
கதை எழுத காத்திருக்கிறது


இயற்கையின் அதிசயங்கள் !!