புதன், 6 அக்டோபர், 2010

காதல் கிறுக்கல்கள்



எப்படி நுழைந்தாய்
காற்றை மட்டும் அனுமதித்த என் இதயத்திற்குள் !

தவறுகள் செய்வதுண்டு
உன் திருத்தல்கள்  ரசிப்பதற்காக !

உனக்குள் நான் !
யார் சொன்னது நமக்குள் நாமே !

ஒரு வார்த்தை சொன்னது
இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது
என் பெயரை நீ உச்சரித்த சுகம் !

நீ சொல்லா விட்டால் எனக்கென்ன
புரியாத ?
உன் இமைகளின் காதல் பாசைகள் எனக்கு !

என்னையும் திருத்துகின்றன
கவலையில் நான் கவிழும் வேளையில்
உன் நினைவுகள் !

இவனுக்குள்ளும் ரசனையை
வரைந்து காட்டியது உனது மெளனம் தான் !

இது போதும் பிறந்ததற்கு
உன் கொழுசுகளின் மொழிகள் 
எனக்கு புரிந்தால் !

நான்
னக்கான பின்பு
நீ ஆனாய் எனது முற்றும் !

உன் உள்ள உதடு
எப்போதும் என்னை உடைப்பதில்லை
நான் உடுத்து கொண்டிருப்பதால் !

எனக்குள்ளே நிகழும் மாற்றங்கள்
அது உன் நினைவுகளின் ராட்டினங்கள் !

இவ்வுலகில் எனக்கென்று ஒன்று உண்டு
உன்னைத் தவிர வேறு ஏது ஒன்று !

எதாவது புரிந்ததா ?
உன்னைத் தவிர
என்னை முழுமையாக
 புரிந்த கொள்ள யாரால் முடியும் !

எனக்கும் புரியவில்லை ?
உனக்கு என்னை எப்படி புரிந்தது என்று !

இதை தான் காதல் கிறுக்கல்கள்
என்று சொல்லுவார்களோ ?

 
இல்லை இது செதுக்கல்கள் செதுக்கல்கள் !!



MVIDHYASAN@GMAIL.COM . பாடகன்