பருவம் பூத்த நாளிலிருந்து இடுப்பெழும்பு கீழே ரணமாக இரவெல்லாம் அடி வயிறு வதங்க திணித்த துணியில் வந்திறங்கிய சோகம் பாவமென்று ஒளித்து வைத்து புதைத்தால் நாய் தோண்டும் பாம்பு நுகர்ந்தால் மலடியாகும் பள்ளம் தோண்டி போட்டதை எரித்து பார்க்காது வா மகளே என்றுரைக்க தெரிந்து கொண்டேன் அன்று தீட்டென்பது பெண் என்று ~~~