ஞாயிறு, 17 அக்டோபர், 2010

முன்னும், பின்னும் !!


எனது கனவுகளின் உலகம் முழுக்க
ஏதேதோ கிறுக்கல்கள்....

எனது வழி எங்கும் யார் யாரோ
எழுதி வைத்த கால் தடங்கள்...

எனது நினைவுகளின் தருணங்களில்
எத்தனையோ உருவங்களின் வரவுகள்...

என்னில் கடந்துபோன காட்சிகளில்
வழிந்து ஓடுகிறது தனிமையின் சாயங்கள்...

என்னில் நுழைந்து பார்த்த நிகழ்வுகளில்
தொலைந்து போன என் உணர்வுகள்...

இலையுதிர் காலத்திலும் இடைவிடாது
நிழல் தரும் மரக்கிளைகளாய்...

எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு
நமக்குள் இடைவெளி பூத்த பின்னும்


எனக்குள் வாசம் வீசுகிறது உந்தன் நினைவுகள்
முன்னும், பின்னும் !!


அன்பு மலர்