சனி, 27 ஆகஸ்ட், 2011

தீரா - மீரா 12

நாம்
ஒவ்வொருவரும்
நமது
நினைவுக் கப்பலில்
நமக்கு பிடித்தமானவர்களை (சரக்கு)
மட்டுமே ஏற்றிச் செல்கிறோம்!

ஏன் தெரியுமா?

சரக்கு எவ்வளவு
கனமாக இருந்தாலும்
கப்பல் கவிழாது!

(சரக்கு என்பது அன்பால் ஏற்படக்கூடிய
வேக மோதல்கள்)

அப்படி

தீரா- மீரா
நினைவு கப்பலில்
ஒருவர் மாறி
ஒருவரை சுமந்தனர்!

இந்த பூமியின் சுழற்சி
நிற்காமல் இயங்கிக் கொண்டிக்கிறது!
எவ்வித தடை ஏற்பட்டாலும்!

ஏன் தெரியுமா?

தடைகள் எனும் சூழ்நிலைகளை
பின்னிக் கொண்டு - அதன்
இயக்கம் நடந்து கொண்டிருப்பதால்!

அப்படிதான்!
தடைகள் பல கடந்து!
தீரா - மீரா
காதல் சூழற்சி
இயங்கிக் கொண்டிருந்தது!

ஆயிரம் புலியையும்
சம நேரத்தில்
எதிர்க்கவல்ல வீரனால்!
ஒரு பெண்ணின்
பார்வையை சமாளிக்க முடியாது!

மாபெரும் மலைகளையும் புரட்டிபோடும்
ஒருவனின் கைகளால்
ஒரு பெண்ணின் இதயத்தை
தீண்ட முடியாது!


எந்த யுகத்திலும்
கத்திகளை விட
கண் விழியால்
குத்தி பலியானவர்கள்
அதிகம்!

நினைவுகளின்
ராட்டின சவாரியில்
எப்போதுமே திருவிழா
நிகழ்வதில்லை!

ராட்சத சுழற்சியும்
அவ்வப்போது நிகழ்வதுண்டு!

ஒரு சிறு புள்ளிக்குள்
இரு உருவங்கள்!
தேய்ந்து கொண்டிருந்தன
தீராவும் - மீராவுமாக!

காதல் என்பது
மலைத்தேன்கூடு...
கலைக்க நினைத்தால்
காயங்களை ஏற்படுத்திவிடும்!

காதல் என்பது
காற்று...
கட்டுப்படுத்த நினைத்தால்
சூறாவளியாகி விடும்!

காதல் என்பது
தீப்பந்தம்...
அனைக்க நினைத்தால்
அனைத்தையும் எரித்துவிடும்!


காதல் என்பது
தண்ணீர் ...
பிடிக்க நினைத்தால்
கடலாக உருமாறி உள் இழுத்துவிடும்!

காதல் என்பது
மென்மை...
கசக்க நினைத்தால்
பற்கள் முளைத்து கடித்துக் குதறிவிடும்!

காதல் என்பது
அமைதி...
அடக்க நினைத்தால்
ஆயுதம் தாங்கிய படைகளே நடுங்கிவிடும்!


காதல் என்பது
கவிதை...
படிக்க நினைத்தால்
பிடித்து கொண்டு பிய்த்து எடுத்திவிடும்!

காதல் என்பது
நூல்...
அறுக்க நினைத்தால்
வில்லாக உருமாறி ஊடுறுவி செல்லும்!

காதல்
என்பது பொதுவானது
பிரிக்க நினைத்தால்
சாதி, மதங்களை சல்லடையாக்கிவிடும்!

காதல்
என்பது உலகானது
அழிக்க நினைத்தால்
மானுடம் மரித்துவிடும்!


காதல்
என்பது அழகானது
தீராவுக்கும் மீராவுக்கும்
சற்று அழுத்தமானதானது!!

நேற்று, இன்று, நாளை
பொழுதுகளை பொக்கி­rமாக
அடை காப்பது காதல் மட்டுமே!

முதன் முறையாக
காதலிப்பவர்களுக்கு
காதல்
கற்று கொடுக்கும்
முதல் பாடம்!

என்ன தெரியுமா?


இந்த வகுப்பிற்கு
மட்டும்தான்
கல்வி சாலை கிடையாது!
அனுமதி சீட்டு கிடையாது!
கட்டணம் கிடையாது!
தகுதி கிடையாது!
ஆசிரியர்கள் கிடையாது!
பாட புத்தகம் கிடையாது!
மனப்பாடம் கிடையாது!
தேர்வுகள் கிடையாது!
மதிப்பெண்கள் கிடையாது!
ஒரு வகுப்பில்
இருவருக்கு மட்டுமே
அனுமதி!

தினசரி வகுப்பில்
தினுசு தினுசாய் பாடங்களை
விழிகள் எனும் விரல்களால்
இமை பக்கங்களை புரட்டி போட்டபடி
படித்துக் கொண்டிருந்தனர்
இருவரும் ஒருவராய்!


காதலர்கள்
பேச ஆரம்பித்தால் போதும்...

வார்த்தைகளுக்கு வலி ஏற்பட்டுவிடும்!
பொழுதுகள் தேய்ந்து ஓய்ந்துவிடும்!
கற்பனைகள் கட்டித்தழுவும்!
பசி படுத்துறங்கும்!
மெளனம் இலக்கியமாகும்!
பார்வை உடைந்து பாதைதேடும்!
பிடிக்காதது இனிக்கும்!
பிடித்தது கசக்கும்!
புதிது புதிதாய்
ஆசைகள் பறக்க ஆரம்பிக்கும்!!

இப்படித்தான்
ஒருமுறை...
தீராவும் - மீராவும்
பேசிக் கொண்டிருந்தனர்!

அருகருகில்
ஆதவனும் - சந்திரனுமாய்
தீரா - மீரா!

பூவோடு காற்று உரசியதாய்
மீராவை உரசியபடி தீரா!

4 விழிகள் மாறி மாறி
கவ்விக் கொண்டிருந்தன
ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு!

மீராவின் மொட்டு ஐ விரல்கள்
தீராவின் விரல்களுக்கு இடையில்
இசை மீட்டிக் கொண்டிருந்தது...

எப்படி?

நதி நீரில், படகு துடுப்புபட்டதாய்!
ஓவியத்தின் மீது வண்ணம் தீண்டியதாய்!
வெயில் மீது மரல்நிழல் குவிந்ததாய்!
இலை மீது பனி வந்து அமர்ந்ததாய்!
குயவன் மண் பாண்டம் பிசைந்ததாய்!
நரம்பு மீது நாதங்கள் எழுந்ததாய்!
பூகளின் இதழ்களில் தேன் வடிந்ததாய்!
கிளை மீது நத்தை ஊறியதாய்!
இறுக்கியபடி பாம்புகள் பின்னியதாய்!
பறவையின் இறகுகள் அசைந்ததாய்!
கடல் அலைகள் எழுந்து அமர்ந்ததாய்!
நிலாவினை மேகம் உரசியதாய்!
மூங்கிலுக்குள் வண்டு நுழைந்ததாய்!
வானமும்,பூமியும் ஒட்டி பிரிந்ததாய்!
வார்தையில் அகப்படாத வரிகள் கிரங்கியதாய்!
விரல்களே கைகளாக மாறியதாய்!
புது விளையாட்டை
மீராவுக்கு தீரா விளக்கிக் கொண்டிருந்தான்!


(தொடரும்...)

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

தீரா - மீரா 11

இடைவெளி
சில நேரம்
உதிரத்தை நனைக்கும்!

இடைவெளி
சில கணம்
உணர்வுகளை சிதைக்கும்!

இடைவெளி
பல தருணம்
நினைவுகளை வருடும்!

இடைவெளி
பல நிமிடம்
கடந்ததை மறைக்கும்!

இடைவெளி
ஒவ்வொரு வினாடியும்
புதுப்புது விதையைய் விதைக்கும்!

தீரா-மீரா-வின்
அன்றை இடை வெளி
வானையும், மண்ணையும்
இணைத்ததாய்!

காற்றையும், மேகத்தையும்
கட்டியதாய்!

நீரையும், வெப்பத்தையும்
பிணைத்ததாய்!

நிழலையும், உருவத்தையும்
உருக்கியதாய்!

நினைவையும், கனவையும்
கலந்ததாய்!
ஆனது!

முதல் சந்திப்பில்
மூச்சு திணறிய நிமிடங்களில்
மயங்கிய கணங்களை சுமந்தபடி
தீரா!

முதல் சந்திப்பில்
முகம் சிவந்து, யுகம் கடந்த
மர்மங்களின் கனவுகளை அலசியபடி
மீரா!

காந்தமும், இரும்பும்
வேறு வேறுதான்!
அருகினில் இருந்தால்
வேரும் - நீரும் போன்றது!

அப்படித்தான்...
இளமை மைதானத்தில்
இருள் பந்தலில்
நிலவு பந்தை
நினைவுக் கைகளால்
தட்டி ....
விளையாடிக் கொண்டிருந்தனர்
மீராவும்- தீராவும்!

எல்லா பொழுதுகளுமே
ஒரே நினைவில்
ஒரே நிமிடத்தில்
ஒரே எண்ணத்தில்
ஒரே சுகத்தில்
ஒரே மயக்கில்
ஒவ்வொருவருக்கும்
விடிவதில்லை!

வேறுபடுவதுண்டு
வேறுபட்டது இருவருக்கும்!

ஆழமான எண்ணம்
தீண்டாத - வரை...

கோரமான ஆசை
புகாத - வரை...

விபரீதமான எண்ணம்
எழாத - வரை...

விழுங்கும் நினைவுகள்
விளாங்காத - வரை...

அழுத்தும் உணர்வுகள்
உதிக்காத - வரை...

ஆவேச உணர்ச்சிகள்
குதிக்காத - வரை...

அவசர செயல்கள்
புகாத - வரை...

அதிகார வாய்
பிளக்காத - வரை...

எதிலும் அடிமையாய்
ஆகாத - வரை..


காதல் நோய்
கவ்வாத வரை...தான் !

ஒருவன்
தான்..
தானாக
இருக்கிறான்!

இதில்...
ஏதாவது ஒன்று
எழுதத் தொடங்கி விட்டால்
போதும்!

தான்..
விண்ணாகி
மண்ணாகி
உலகாகி
உயராகி
மலையாகி
அலையாகி
கடுகாகி
காடாகி
கடவுளாகி
அனைத்துமாகிறான்!

அனைத்துமாகி
அதிர்ந்து கொண்டிருந்தனர்
தீராவும் - மீராவும்!

வானம்...
நிலா முகம்
கழுவிக் கொண்டிருந்தது...

சூரியன்
ஆடையை
சுறுசுறுப்பாக
அணிய
ஆயதத்மானது
வானம்!

இரவில்
நினைவில் கரைந்து
விழி சிவந்து
விழித்து...
சிரித்துக் கொண்டனர்
இதழ் சிவப்பு பார்த்து!

காலத்தின் சக்கரம்
சுழன்று கொண்டிருந்தது
தீராவுக்கும் - மீராவுக்கும்
காதல் பாடம்
கற்பித்துக் கொண்டு!

(தொடரும்....)

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

photo kavi



photo kavi


தீரா - மீரா 10

தீராவும்
மீராவும்
எதிர் எதிரே என்னாகும் ?

வெட்கம் உடையும்!
வெப்பம் உருகும்!
வேகம் கூடும்!
மோகம் பெருகும்!
ஞாபகம் மோதும்!
விரல்கள் தாவும்!
குரல்கள் அடைபடும்!
மயக்கம் வகுப்பெடுக்கும்!
தயக்கம் தற்கொலை செய்யும்!
ஓசைகள் செவிடாகும்!
காட்சிகள் குருடாகும்!
இருள் இன்பமாகும்!
வெளிச்சம் கூச்சமாகும்!
பசி படத்துறங்கும்!
ருசி நாவை விட்டிறங்கும்!
உதிரம் நோகும்!
உணர்வு வேகும்!
இமைகள் ஒட்ட மறுக்கும்!
உதடுகள் ஒட்ட துடிக்கும்!
எனக்கு நீ!
உனக்கு நான்!
இனி...
எல்லாம் வசப்படும்
நமக்கு!

இப்படி ஆகும்!


தீராவின் உதடுகள்
திடீரென திறந்தது !

வார்த்தை சில நேரம்
உணர்ச்சிக்குள்
மாட்டிக் கொள்ளும்
அப்போது
நாம்
மற்றவர்களை கொல்வோம் !

தீரா!
தேய்ந்து போன
வார்த்தைகளால்
பேச தொடங்கினான்!

முதலில்
யார் நீ?

மீரா!
மெளனம்!

தீரா!
எந்த ஊர்?
என்ன பெயர்?
எப்போதெல்லாம்
இங்கு வருவாய்?
என்னை பார்த்திருக்கிறாயா?
ஏன் வந்தாய்?
எப்போது வந்தாய்?
கேள்விகள் நீண்டன!

மீரா!
மெ...ள...ன...ம்...

தீரா!
மெ...ள...ன...ம்...

மீரா!
உதடு உதிர்த்தது!
ம்.....

என் பெயர்
மீரா!

தீரா!
சொல்லி பார்த்தான்
முதல் முதலாக பேசும்
குழந்தையாய்
மீரா வின் பெயரை!

மீரா!
உடையூர் எனதூர்!
முன்பு பார்த்தில்லை!
அடிக்கடி இங்கு வருவதுண்டு
தோழிகளுடன்!

தீரா!
மானை தின்ற
மலைப் பாம்பாய்!

தீரா!
எங்கே தோழிகள்!

மீரா!
தனிமை!

தீரா!
எனை பார்க்கவா?

மீரா!
மீண்டும்
மெ...ள...ன...ம்...

இளைபாற விரும்பவில்லை
எனது பெயர்
தீரா!

மீரா!
இதழ்
சிவத்தது!

தீரா-மீரா!
உயிரா-உடலா !

உதடுகளின் பாசையை விட
கண்களின் பாசையே
கனமானது!

மின்னலின்
பின்னலில்
முளைக்கும் காளானாய்!

கண்களின்
பின்னலில்
பேசியது காதலாய்!


மாலை (பொழுது)
வாட ஆரம்பித்தது!

கருப்பு ( உடை)
உடுத்த தொடங்கியது!

மீரா!
உணர்ந்தாள்!

உதிர்த்தாள்
வருகிறேன்!

தீரா!
அவசரம் ஏன்?

மீரா!
மாலை ரசம் மறைகிறதே!

தீரா!
அடுத்து எப்போது ?

மீரா!
நாளை இப்பொழுது!

தீரா!
உறுதியாகவா?

மீரா!
மெ...ள...ன...ம்...

தீரா!
மெ...ள...ன...ம்...

மீரா!
பறக்க ஆரம்பித்தாள்!

தீரா!
ஒரே இடத்தில்
பறந்து கொண்டே பார்த்தான்!

ஒரு நாள்
எப்போது முழுமையடையும்?
பகலும் இரவும்
கடக்கும் கணத்தில்!

ஒரு ஓவியம்
எப்போது அழகாகும் ?
கலை கண்களுக்குள்
வரையப்படும் போது!

ஒரு கவிதை
எப்போது உயிர்க்கும்?
ரசனையின் உதடுகள்
உரசும் பொழுது!

ஒரு கல்
எப்போது சிற்பமாகும்?
உளியும் விரல் நுனியும்
சந்திக்கும் வேளையில்!

ஒரு உறவு
எப்போது மலரும்?
இதயமும் விழிகளும்
இணையும் போது!


இரு மனம்
எப்போது ஒன்றாகும்?
உடல் பிரிக்கப்பட்டு
உயிர் பிணையப்படும் போது!

தீரா-மீரா
பிணைப்பு
ஆரம்பமானது!


தீரா- மீரா
இணைப்பு
துளிர் விட்டது!

தீரா- மீரா
நினைவு
இறுக்கப்பட்டது!

தீரா- மீரா
கனவு
களவாடப்பட்டது!

தீரா- மீரா
உணர்வு
வார்க்கப்பட்டது!

தீரா- மீரா
கவிதை
முழுமையாக வாசிக்கப்பட்டது!!


(தொடரும்...)

தீரா - மீரா 9


காத்திருப்பின்
நுனியில்!
திரியில் ஆடும் தீபமாய்!
தீரா!

காற்றில்
சிக்கிய காகிதமாய்!
கலக்கம்
தாண்டிய பெண்மையாய்!
மீரா!


ஆற்றங்கரை வரை
இறாகய் வந்த மீரா!
அடுத்த அடி வைக்க
பாதங்களை பாறைகளாக்கினாள்!

கரையும்
நிலையில்!
கரை வந்தாள்
மீரா!

மறு கரையில்
விழி வலையில்
தேடிக் கொண்டிருந்தான்
மீராவை - தீரா!

தூரத்தில்
துடிக்கும் நட்சத்திரமாய்!

மேகத்துணி
துடைத்தெடுத்த நிலவாய்!

பூமி
வந்திறங்கிய வானவில்லாய்!

புள்ளிகளால்
நிரப்பிய பூப்பந்தாய்!

தீராவின்
விழியில்
மீரா!
தூரத்தில்!!

பெண்களின் வெற்றிக்கு பின்னாள்
மூன்று முக்கிய காரணங்கள்
முகாமிட்டிருக்கிறது!

அழகு!
அழுகை!
பிடிவாதம்!

சில வெற்றிகள்
பிடிவதாத்தின் முனையில்
தீட்டப்படிருக்கும்!

பல வெற்றிகள்
அழுகையின் துளிகளில்
எழுதப்பட்டிருக்கும்!

இரண்டையும் விட
இந்த உலகில்
அழகினால் எழுப்பப்பட்ட
வெற்றிகளே அதிகம்!


தீரா!
மீராவின்
அழகில்!!


ஆண்கள் உடைதலுக்கும்
மூன்று முக்கிய காரணங்கள்
மூழ்கியிருக்கிறது!

காதல்!
காமம்!
பணம்!


பணத்தால் உடைபட்ட
உள்ளங்கள் சில!

காமத்தால் கரைந்த
உருவங்கள் பல!

கால சக்கரத்தில்
காதலால் உருவாக்கப்பட்ட
கல்லறைகள் அதிகம்!

தீரா!
காதலால்
உடைக்கப்பட்டான்!

விதை உயிர்த்து விட்டால்
பாறைகளை கூட துளைத்விடும்
வேர்கள்!

நதி
மலையிலிருந்து குதித்துவிட்டால்
மீண்டும் மேல் எழும்புவதில்லை!


அலை
கரையை தொட்டுவிட்டால்
நுரைகளுக்கு கூலி கேட்பதில்லை!

காதல்
இதயங்களில் வரையப்பட்டால்
வரம்புகள் விழிகளுக்கு புலப்படுவதில்லை!

தீரா!
மீரா!
இருவருக்கும்
வரம்புகளின் இடைவெளி
ஆற்றங்கரை மட்டுமே!

யார்
முதலில்
யாரிடம்
நோக்கி வருவது ?


பூவைத் தேடி
வண்டு!

தேனைத் தேடி
தேனீ!

மண்ணைத்தேடி
மழை!

விண்னைத்தேடி
மலை!

புல்லைத்தேடி
பனி!

தற்போது
மீராவை நோக்கி
தீரா!


தீரா!
மீரா அருகில்
ஊமையாக!

மீரா!
தீரா பக்கத்தில்
பொம்மையாக!

கண்ணாடியும்
கண்ணாடியும்
பார்த்துக் கொண்டால் என்னாகும்?
பிம்பங்கள் ஒன்றாகும்!

தண்ணீரும்
கண்ணீரும்
ஒன்றானால் என்னாகும்?
உவர்ப்பு அர்த்தமுள்ளதாகும்!

காற்றும்
வாசமும்
இணைந்தால் என்னாகும் ?
உருவமற்றது புது உயிராகும்!


காதலும்
இதயமும்
கலந்தால் என்னாகும்?
எதையும் தாங்கும் பலம் உருவாகும்!


தீராவும்
மீராவும்
எதிர் எதிரே என்னாகும் ?

(தொடரும்...)

தீரா - மீரா 8

கண்ணாடியின்
பார்வை
ரச விழி உள்ளவரை!

வானத்தின்
பார்வை
பூமி உள்ளவரை!


பூக்களின்
பார்வை
வாசம் உள்ளவரை!

சமுத்திரத்தின்
பார்வை
அலை உள்ளவரை!

ஸ்வரங்களின்
பார்வை
விரல் மீட்டும்வரை!

ஆணின்
பார்வை
பெண் உள்ளவரை!


பெண்ணின்
பார்வை
ஆண் உள்ளவரை!

தீராவின்
பார்வை
மீராவின் உள்ளம்வரை!


மீராவின்
பார்வை
தீராவின் எல்லை வரை!


புவி நடுங்கினால்
பூகம்பம்!

மலை நடுங்கினால்
எரிமலை!

வானம் நடுங்கினால்
மழை!

வாள் நடுங்கினால்
பலி!

சூரியன் நடுங்கினால்
தீ!

நிலா நடுங்கினால்
இருள்!

இதயம் நடுங்கினால்
காதல்!

நடுங்கியது
தீரா!
மீரா!
இதயம்!

இரவுகளை விற்றுவிட்ட
சந்தோசத்தில் அதிகாலை
சலசலத்தது!

தூக்கத்தை தூக்கிலிட்ட
கர்வத்தில் சூரியன்
மினுமினுத்தது!

அன்றைய
பகல் பொழுது
முந்தைய இரவு முதல்
நகர மறுத்தது!

உச்சி வேளை
உணர்வுகளை
பிய்த்து எறிந்து கொண்டிருந்தது!

தீரா
காட்டு தீயானான்!

மீரா
கற்றாளை முள் ஆனாள்!

மாலைக்காக
காத்திருந்தது
இரு மனமும்!

வழக்கம்போல்
சூரியன் சுருங்க ஆரம்பித்தது!

மயக்கம்தரும்
மாலை அரும்புவிட்டது!

தீராவிற்கு தெரியாத என்ன ?
பாதங்கள்
ஆற்றங்கரையில்!


நதிகள்
கரையில்
தலை துவட்டி கொண்டிருந்தது!

மீரா
நினைவு
தீராவை துவட்டிக் கொண்டிருந்தது!


புற்களின் நுனிகள்
பனித்துளிக்காக
புதுப்பித்துக் கொண்டிருந்தது!

தீரா- வின் விழிகள்
மீரா -வருகைக்காக
தடம் பதித்துக் கொண்டிருந்தது!


நிசப்தம்
நீளுகையில்
மொட்டு விரியும்
சப்தம் கூட கைத்தடலாகும்!

சப்தம் பிளிறுகையில்
சரிந்துகிடக்கும் சடல
நிசப்தம் கூட கதறிஅழும்!

நிகழ்ந்தது
கைதட்டல்களும்
அழுகையும்
தீராவுக்குள்!

நதிக்கரையில்
தீரா!
உயிர் கரையை மீட்டிக் கொண்டிருக்க!!

மறு கரையில்
மீரா!
உணர்வுகளை மூட்டிக் கொண்டிருந்தாள்!

ஒரு கல்
எப்போது சிரிக்கும்
சிலையானால்!

ஒரு மரம்
எப்போது காயப்படும்
பழமானால்!

ஒரு சொல்
எப்போது ஆழப்படும்
உண்மையானால்!

ஒரு முள்
எப்போது பேசப்படும்
பதம் பார்த்தால்!

ஒரு வாள்
எப்போது வீசப்படும்
சரித்திரமானால்!

ஒரு நெல்
எப்போது உயிராகும்
பசியாற்றினால்!

ஒரு பெண்
எப்போது பொன்னவாள்
நாணமானாள்!

மீராவுகள்
நிகழ்ந்தது!

யார் அது ?
ஆற்றங்கரையில்
ரேகை அழித்தது!

யார் அது ?
பூவுக்குள்
பூகம்பத்தை புகுத்தியது!

யார் அது?
பாலைவனத்தில்
பனி மழை பொழிந்தது!

யார் அது?
பாதரசத்தில்
பன்னீர் தெளித்தது!

யார் அது?
பாறைக்குள்
வேராய் நுழைந்தது!

யார் அது?
காற்றுக்குள் ஈரமாய்
புகுந்தது?

யார் அது?
சிறகுக்குள் சிறுத்தையை
விதைத்தது!

யார் அது?
நிலவுக்குள் கலங்கங்களை
துடைத்தது!

மீரா!
தீராவை!
யார் ? யார் ?


அனை நிரம்பினாள்
வெள்ளம்!

நீர் குதிக்குமிடம்
பள்ளம்!

மேகம் கூடினாள்
தடுக்க முடியாது
உருகுவதை!

மோகம் கூடினால்
நிறுத்த முடியாது
நோகுவதை!


மீரா!
வெள்ளமாய்!
பள்ளமாய்!
உருகினாள்!
நொந்தாள்!

யரால் ?
தடுக்க முடியும்?
உணர்ச்சிகள் உடைபடும்போது
இலக்கணம் மாற்றமடைவதை!

பெண்ணை
கட்டுப்படுத்துவது
என்பது ?

விண்னை
மட்டப்படுத்துவதற்கு
சமம்!

மீரா!

தடுத்தாள்!
உடைத்தாள்!
அதட்டினாள்!
ஆணையிட்டாள்!
அமிழ்த்தினாள்!
ஆற்றினாள்!
அழித்தாள்!
புதைத்தாள்!
மூடினாள்!
மறைத்தாள்!
தன் மனதை!!

இறுதியில்
உறுதியானாள்!

தீராவை
சந்திக்க
சிறகானாள்!

ஆற்றங்கரையில்
ஆடும் தென்றலாய்!
பாடும் குயிலாய்!
தாவும் மீனாய்!
தழுவும் நீராய்!
நுரைக்கும் மணலாய்!
சிறகு விரிக்கும்
வண்ணத்து பூச்சியாய்
வந்தடைந்தாள்!!


(தொடரும்....)

தீரா - மீரா 7

இரவு
பலருக்கு
தூக்கமாகும்!

இரவு
சிலருக்கு
கனவாகும்!

இரவு
பல நேரம்
படுக்கையாகும்!

இரவு
சில நேரம்
தொலையும் இடமாகும்!


இரவு
இனிப்பு
மழையாகும்!

இரவு
கண்ணீர்
மலையாகும்!

இரவு
நிலா
பந்தலாகும்!

இரவு
வின்மீன்
மாநாடாகும்!

இரவு
வியர்வை
துளியாகும்!

இரவு
கசங்கிய
போர்வையாகும்!

இரவு
தைக்கும்
உறவாகும்!

இரவு
நைய்ய புடைக்கும்
நினைவாகும்!

இரவு
முகம் காட்டும்
கண்ணாடியாகும்!

இரவு
யுகம் கடக்கும்
நிமிடமாகும்!


இரவு
மிதக்கும்
கப்பலாகும்!

இரவு
கலையும்
மேகமாகும்!

இரவு
வெளிச்சத்தின்
அஸ்திவாரமாகும்!

இரவு
இருட்டின்
அஸ்தியாகும்!

இரவு
நிழல்தரும்
குடையாகும்!

இரவு
நிர்வாண
உடையாகும்!

இரவு
கருப்பு
கடலாகும்!

இரவு
சிவப்பு
விழிகளாகும்!


இரவு
அழகிய
பாடமாகும்!

இரவு
இணைக்கும்
கூடமாகும்!

இரவு
நீண்ட
தேடலாகும்!

இரவு
மீளாத
ஊடலாகும்!

இரவு
கிளையில்லா
மரமாகும்!

இரவு
விலையில்லா
வரமாகும்!

இரவு
மர்மங்களின்
முடிச்சு!

இரவு
காயங்களின்
மருந்து!

இரவு
பகலுக்கு
முதுகு!

இரவு
காமத்திற்கு
மதகு!

இரவு
பிறப்புக்கு
விருந்து!

இரவு
காதலுக்கு
விந்து!

ஆனால்!
தீராவுக்கும் ‡ மீராவுக்கும்
அப்படி அல்ல!

ஓராயிரம் குண்டூசி
ஒன்றாக உடலை
துளைப்பதாய்!

நினைவுகளின்
சாட்டைகள் சுழற்றி சுழற்றி
அடித்ததாய்!

கனவுகளின்
இடுக்கில் உணர்வுகள்
துவைத்ததாய்!

வர்ணனையின்
மடியில் கற்பனைகள்
வழிந்ததாய்!

தறியின்
நூலில் பாதியாய்
இளைத்ததாய்!

இமை கதவுகள் சாத்திய பின்பு
விழி கால்கள்
உதைத்ததாய்!

தீரா!
மீரா நினைவில்
கசிந்ததாய்!


உயிரின் நடுவில்
கொதிக்கும் உலையாய்!

இமையின் திறியில்
உறக்கம் எரிந்ததாய்!

அலையின் வளைவில்
ஆடும் பூவாய்!

இரவுக் குடையில்
ஒதுங்கிய நிலவாய்!

தலையணை வலிக்க
புறண்ட உருவமாய்!

தவழ்ந்து வருகையில்
தடுமாறும் குழந்தையாய்!

உருகும் பனிக்குள்
அவிழும் நீர்துளியாய்!

மீரா!
தீரா தீண்டலில்
துவண்டிருந்தாள்!

இருவரின்
விழிகளும்
இமை உறைக்குள்
புக வில்லை!

மெளன இரவு
கசிய கசிய
மயக்கங்கள் தீரவில்லை!

மீரா!
விழிப்பிடியில்
தீரா!

தீரா!
விரல் பிடியில்
மீரா!

உறக்கம்
உளர ஆரம்பித்தது
இருவரின் பிடியில்!

வானம்
கருப்பு ஆடை உரித்து
வெளுக்க ஆரம்பித்தது!

தீரா!
மீரா!
வெளுத்த விழிகள்
சிவத்தது!

அதிகாலை
விடியலானது
தூக்கத்தையே
அணைக்கும்!


தீரா!
மீரா!
விடியலானது
ஏக்கத்தையே
அணைத்தது!

(தொடரும்....)

தீரா - மீரா 6

மீரா பூவாக !
தீரா புயலாக!
மீரா நதியாக!
தீராக கடலாக!
மீரா வண்ணத்து பூச்சியாக!
தீரா ஓவியனாக!
மீரா வானமாக!
தீரா மேகமாக!
விண்மீன் கூட்டத்திற்கு நடுவில்
நிலவாக நின்றிருந்தாள் மீரா !
பொம்மையை தேடும்
குழந்தையாக மீரா அருகில் தீரா!

யார் ? யார் ?
திடுக்கிட்டாள்!
தீயாகினாள்!
திக்கித்தாள்!
ஊமையாகினாள்!
நடுங்கினாள்!
கலங்கினாள்!
நிசப்தம்
நீண்டது !
பார்வைகள்
மோதியது!
தோழிகள்
விலகினர்!
மீரா!
மயங்கினாள்!
நாணமானாள்!
வசியமானாள்!
லகித்தாள்!
துள்ளினாள்!
உள்மூச்சு வாங்கினாள்!
உடைந்தாள்!
உருகினாள்!
இறுதியில்....
தீரா விழியில்
கைதியாகினாள்!

ஒரு ஆண்
ஒரு பெண்ணை ரசிக்க
யுகங்கள் போதாது!
ஒரு பெண்
ஒரு ஆணை ரசிக்க
சில நிமிடங்கள் அதிகமானது!
தீராவை!
மீரா!
சில நிமிடத்தில்
சிறு விழியில்
சிறைபிடித்தாள்!

கற்றுக் கொள்ளுதல் என்றானால்
தவழுதல் கூட கடினம் தான்!
ஒட்டி கொண்ட பிறகு பிரித்தல் என்பது
தழுவலுக்கு பின் கடினம் தான்!
தீரா!
மீரா!
விழிகள்!
கற்றுக் கொண்டது!
ஒட்டிக் கொண்டது!
காற்று உரசி கடந்துவிடும்
பின்புதான் நடக்கும்
இலை அசைவு!
மேகம் மோதி கடந்துவிடும்
வேகமாய் நகர்வதாய்
நிலா தோன்றும்!
நதியில் தண்ணீர் நில்லாது ஓடிவிடும்
மண்ணில் ஈரம் நீங்காது
தங்கிவிடும்!
ஒருவரை ஒருவர்
பார்வையில் தின்றபடி
திணறி கொண்டிருந்திருந்தனர்!
கல கல வென
தோழியர்கள் சிரிப்பு!
உணர்ந்தாள் மீரா!
தீரா உலகத்தில் கடத்தப்படுவதை!
வானவில்லின் வர்ணமாய்
வெட்கம் பூசிக் கொண்டு
தீராவை தாண்டினாள் மீரா!

அலை ஆவேசப்பட்டால்
சுனாமி!
நெருப்பு ஆவேசப்பட்டால்
சுடுகாடு!
காற்று ஆவேசப்பட்டால்
புயல்!
மழை ஆவேசப்பட்டால்
வெள்ளம்!
காதல் ஆவேசப்பட்டால்
காமம்!
மீரா!
கடக்க !
தீரா
தடுக்க!
ஆவேசப்பட்டால்
மீரா!
ஒரு
பூ
தீயானால் என்னாகும்?
ஒரு
நிலா
மூர்க்கமானால் என்னாகும்?
ஒரு
புறா
புலியானால் என்னாகும்?
ஒரு
புல்
கூர்வாள் ஆனால் என்னாகும்?
ஒரு
மெளனம்
அலறி கதறினால் என்னாகும் ?
அப்படி ஆனாள்
கை தீண்டி
தீரா!
தடுக்க!
மீரா!
புல்லாங்குழலை
பிடித்து
வாசிக்கும் இதழ் என்னவாகும்?
கிளைகளை
தாங்கி
ஆடும் தேனடை என்னாகும்?
நீரில்
மோதி
முகம் துடக்கும் காற்று என்னாகும்?
நிலா
உரசி
தேகம் உருகும் மேகம் என்னாகும்?
அப்படி ஆனான்!
தீரா!
மீரா!
விரல்
தீண்டியதும்!
ஒரு
நினைவில்
பூ!
ஒரு
நினைவில்
தீ!
ஒரு
கரையில்
குளிர்!
ஒரு
கரையில்
கொதிப்பு!
ஒரு
பாதியில்
உயிர்!
ஒரு
பாதியில்
சடலம்!
ஒரு
நுனியில்
அருவி!
ஒரு
நுனியில்
எரிமலை!
ஒரு
மன நிலையில்
தீரா!
ஒரு
மன நிலையில்
மீரா!
விடுக்கென்று
விரல் உதறி
உருவிச் சென்றால் மீரா!
படக்கென்று
விழி வழுக்கி
ஊடுறுவி தொடர்ந்தான் தீரா!
தோழிகள்
கேலியில்
துவண்டாள் மீரா!
தோழ்வியில்
வலியில்
தும்சமானான் தீரா!
சூறாவளி கடப்பதாய்
விர்ரென
கடந்தாள் மீரா!
சூரியன் விழுந்ததாய்
சுருண்டு
தேய்ந்தான் தீரா!
(தொடரும்...)

தீரா - மீரா 5

காம்புகள் கூட பாரம்தான்
பழுத்த பிறகு!
உதிரல் கூட தூரல்தான்
இலையுதிர் காலத்தில்!
அழுகை கூட அழகுதான்
மழையாய் வடிகையில்!
கல் கூட சிற்பம்தான்
சிற்பி உளி சிலிர்கையில்!
மரம் கூட வீடுதான்
பறவை கூடு கட்டுகையில்!
மனிதன் கூட மரம்தான்
இரக்கத்தை தொலைக்கையில்!
தீரா கூட காகிதம்தான்
மீரா எனும் கவிதை எழுதைகையில்!
அழகை கண்டால்
இதயம் ஆசையில் தவழும்!
அதிசயம் நடந்தால்
மனம் ஆச்சர்யம் கொள்ளும்!
ரகசியம் கேட்டால்
செவிகள் துள்ளி குதிக்கும்!
ஓவியம் உயிர்த்தால்
வர்ணங்கள் கர்வத்தில் அமரும்!
பிறை ரசிக்கப்பட்டால்
இரவு மயக்கத்தில் நகரும்!
காற்று ஸ்வாசிக்க நினைத்தால்
மூங்கில் காட்டுக்குள் நுழையும்!
தீரா!
மீராவை பார்த்தான் !
அழகாக!
அதிசயமாக!
ரகசியமாக!
ஓவியமாக!
பிறையாக!
காற்றாக!
அவன்
என்னவெல்லாமோ ஆக!
பார்த்தான்!

நிலா !
ஒரு முறை தேயும்
நாளிகை நகர்ந்தது!
காற்று!
இலை கோதி
தள்ளாடும் நிமிடமானது!
அந்த கண இடைவெளியில்
தீரா தீர்ந்து போனான் !
மீரா எனும்
மலர் மோதி!
தூரத்தில்
மிதப்பதால் தான்!
தீண்டபடாத கன்னியாய்
வெண்ணிலா!
உயரத்தில்
மின்னுவதால் தான்!
சூட்ட முடியாத புன்-நகையாய்
விண்மீன்!

அளவிட
முடியாததால் தான்!
பருக முடியாததாய் ஆடுகிறது
கடல்!
கண்ணுக்கு
தெரியாததால்தான் !
கையில் சிக்காது கடக்கிறது
காற்று!
அடுத்து
அறியாததால் தான்
அச்சத்தை ஏற்படுத்துகிறது
மரணம்!
அழித்து!
அடக்கி!
ஒடுக்கி!
ஒதுக்கி!
தாக்கி!
பதுக்கி!
நசுக்கி!
கசக்கி!
பொசுக்கி!
பிசுக்கி!
மடக்கி!
உருக்கி...
எப்படி?
வைத்தாலும் - சரி
முளைத்து கொண்டிருக்கிறது
காதல்!!
தீரா!
கண்களுக்கு புலப்பட்ட
கண்ணாடியில்
தன் முகம் பார்க்க
புறப்பட்டான்!

சில நேரம் ..
சிங்கம் சிறகாகும்!
தீரா சிறகானான்!
சில நேரம் ..
அசிங்கம் அழகாகும்
(அழகிகளிடம் பேசும்போது )
மீரா-வை நெருங்கினான் !
என்ன நடந்தது...??
(தொடரும்...)

தீரா - மீரா 4

மாபெரும் வீரணும் மைவிழியில்
மண் புழுவாய் ஆனதுண்டு !
அனைத்தும் அறிந்த அறிவாளியும் இதழிடையில்
முட்டாளாக மாறியதுண்டு!
கத்திக்கும் - புத்திக்கும்
நடக்கும் சண்டையில்
புத்தி முந்தி கொள்ளும்!
விதிக்கும் - மதிக்கும்
நடக்கும் சண்டையில்
மதி முந்திக் கொள்ளும்!
பகலுக்கும் - இரவுக்கும்
நடக்கும் சண்டையில்
பொழுதுகள் முந்தும்!
ஆணுக்கும் - பெண்ணுக்கும்
நடக்கும் சண்டையில்
ஆணே முந்துகிறான் !

இங்கும் தீராவே !
சில நேரங்களில்
உயிர்க்கும் சடலத்திற்கும்
இம்மி இடைவெளி கூட இருப்பதில்லை!
அமைதியான உடலாய் - சடலம்!
மெளனத்தின் உச்சமாய் - உயிர்!
நினைவுகளை இழந்தாய் - சடலம்!
ஒரே நினைவில் இருப்பதாய் - உயிர்!
அசையாத பொருளாய் - சடலம்!
உணர்விருந்தும் ஜடமாய் - உயிர்!
இதிலும் தீராவே !
உயிர் இருந்தும் சடலமாய்!

குத்துவாள் ஒரு பக்கம் கூர்மை!
துளைக்கும் தோட்டா ஒரு பக்கம் கூர்மை!
தைக்கும் நூல் இரு பக்க கூர்மை!
உடைந்த கண்ணாடி மூன்று பக்க கூர்மை
இரும்பு சட்டம் நான்கு பக்க கூர்மை
ஆனால் ...
பெண்ணின் ஒவ்வொரு பாகமும் கூர்மை !
ஊடுருவினால்
உயிர் தப்புவது கடினம் !
காயப் பட்டு!
உயிர் விட்டு!
தேகம் சுட்டு!
மோகம் முற்று!
தாகம் விற்று!
ஏக்கம் தொற்று!
விக்கித்துக் கிடந்தான் தீரா!

காதல் ஒரு கற்பூரம்
எரிய ஆரம்பித்த மாத்திரத்தில்
கரைவது தெரியாது!
காதல் ஒரு கடல்
மூழ்கும் அவசரத்தில்
ஆழம் புரியாது!
காதல் ஒரு நெருப்பு
பற்றும் வேகத்தில்
வேகுவது அறியாது!
காதல் ஒரு பனித்துளி
உருகும் நிமிடத்தில்
உருக்குலைவது உணராது!
காதல் ஒரு சூறாவளி
சுழலும் கணத்தில்
தூக்கி வீசப்படுவது தென்படாது!

காதல் ஒரு கண்ணாடி
கை நழுவும் வினாடியில்
சுக்குநூறாக உடைவது ஊர்ஜிதப்படுத்தாது!
காதல் ஒரு இனிப்பு
குடித்த பின்
கசப்பாய் மாறுவதை பொருட்படுத்தாது!
காதல் ஒரு விசம்
உயிரை உருக்கும்
கொடூரம் கற்பிக்காது!
காதல் ஒரு மகத்துவம்
கல்லறைகளுக்கு பின்னால்
வரலாறாய் வாசிக்கையில் கேட்காது!
எல்லாம்வாக தீரா !
தீண்டும் தென்றலை பூக்கள்
பார்த்திருக்க வாய்ப்பில்லை!
நதியில் தன் முகம் தெரிந்தாலும்
நின்று ரசிப்பதில்லை நிலா!
வேர் துளைத்து நெடுந்தூரம் சென்றாலும்
பாறைகள் கிடுகிடுப்பதில்லை!
மண்ணில் மறைந்தாலும்முற்றிலுமாக
மரித்துப்போவதில்லை மழைத்துளி!
அலை கரை முட்டி உடைந்தாலும்
கவலை அடைவதில்லை கடல் !
தீரா நின்று தின்று கொண்டிருந்ததை
மீரா கண்டுகொள்ளவில்லை!
உண்ணாதவரை மா சக்தியுடைய
மலைப்பாம்பு!
உண்டுவிட்டால் நத்தை அசைவுடைய
மண்புழு!
தனித்தனியாக இருக்கும் வரைதான் ஸ்வரம்
இணைந்து விட்டால் ராகம்!
திரவமாக இருக்கும் வரைதான் நீர்
உறைய துவங்கி விட்டால் பனி!
ஓடும் வரைதான் நதி
ஓரிடம் நின்றுவிட்டால் கடல்!
மூடி வைக்கப்படும் வரைதான் ரகசியம்
அவிழ்ந்து தென்பட்டால் தகவல் கசியும்!
விழியும், இதயமும் மோதாத வரைதான் தேடல்
மீரா (விழி) - தீரா (இதயம்) - வை தீண்டிவிட்டால் காதல் !

(தொடரும்...)

தீரா - மீரா -3

உலகத்தை ஊதி தள்ளிவிடுவேன் என்றவர்கள்
கல்லறைக்குள் உறங்குகிறார்கள் !
அண்டத்தையே ஆட்டி படைத்தவன் என்றவர்கள்
அக்னிக்கு உணவாகி சாம்பலானார்கள் !
உலகத்தின் கடைசி வரிசையில் நின்றவன்
ஆளும் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆச்சர்யமானான்!
புல்லாக ஒடுக்கப்பட்டவன்
புலியாக மாறி பூமி பந்தை புறட்டிபோட்டிருக்கிறான்!
காலத்தின் சக்கர பற்களில் சிக்கி
சிலாகித்தவர்களும் உண்டு !
சிதைந்து போனவர்களும்வுண்டு!
தீராவின் மனதிற்குள் ஏனோ
இப்படி எழுந்தன கேள்விகள்!
இயற்கையை அரைத்து உள்ளத்தில்
பூசி மகிழ்ந்தவன் கண்ணில்
ஒரு பெண்!
என்ன செய்வான்?
இறக்கை விரித்து பறக்கும்
பறவையாய் ஆனான்!
தீரா...!

அழகின் !
அதிநீள ஆறு!
ஐந்தடி பூ!
வாசம் வீசும் நிலா!
மீராவை..
ஆற்றங்கரையோரம் கண்டான்!
ஆவி சிலிர்த்தது!
பட பட வென இருதய மரம் சாய்ந்தது!
கட கட வென இரு விழிகள் அளந்தது!
மள மள வென காதல் தீ - கடல் பொங்கியது!
குபு குபு வென காம தீ பற்றியது!
தீரா! உரு மாறி ஒரு
நீராவியானான்!
கவனித்தான் மீராவை!
கருமேகமும், நடுநிசி இருட்டும்
காந்தமும் பிணைந்த ரசமாய்
கருங்கூந்தழ்!
சகாரா பாலைவன
சலிக்கப்பட்ட மணலை குழைத்து
செதுக்கப்பட்டதாய் நெற்றி!
கவிழ்ந்த படகாய்
விரிக்கப்பட்ட குடையாய்
ஒற்றை வானவில்லாய்
மெலிந்த நீள இலையாய்
இமைகள்!
உருளும் கருப்பு உலகம்
மிதக்கும் முத்து
கர்வம் துளைக்கும் குண்டு
சிரிக்கும் சோவி
அதிர்நதான் தீரா
இதுயாவும் விழயாக கண்டு!

சாய்ந்த கோபுரமாய்
துடிப்பை நிறுத்தும் நங்கூரமாய்
நாசி!
மடித்த ரோஜா இதழல்களாய்
சுருக்கி பொருத்தபட்ட சங்காய்
வீசாத சமரமாய்
செவிகள்!
பஞ்சு பொதியாய்
பிஞ்சு பூவாய்
சதை பிடித்த காற்றாய்
கன்னங்கள்!

மொழுகிய மெழுகாய்
நெய்யப்பட்ட பட்டு நூலாய்
மேவாய்!
ஒற்றை படகு
ஒரு வரி கவிதை
நத்தையின் உடம்பு
மேல் உதடாய்!
உருகும் அருவி
ஒழுகும் தேன்
சிவப்பு தோட்டம்
கீழ் உதடாய்!
உரைந்தான்
உடைந்தான்
உருகினான்
கருகினான்
பிளிறினான்
மெளனித்தான்
மறித்தான்
உயிர்த்தான்
தீரா !
அதற்குள் நடந்தது
அடுத்த ரசனை தேடல்!
கொய்யா மர வளவளப்பு
பாலை வன மணல் பரப்பு
முத்துகள் முகாமிடும் கூடாரம்
கழுத்தாய்!
பப்பாளி தளதளப்பு
பாதரச மினுமினுப்பு
எண்ணெயில் மூழ்கிய கூழாங்கல்லாய்
தோள்கள்!
மா மலைகள் மல்யுத்தம் செய்து
வெற்றி கொண்ட இரண்டு
மண்டியிட்டு மறைந்திருந்தது
மார்பகமாய்!
உள் நாவில் துளி ஈரமில்லை!
வார்த்தைகள் வசபடவில்லை!
நினைவுகள் கசிந்தன!
உணர்வுகள் பிசுபிசுத்தன!
கனவுகள் நசநசத்தன!
விளக்கை சுற்றி
விழுந்து எழுந்த
விட்டில் பூச்சியாய் தீரா !
அசையும் வானவில்லாய்
நீண்டிருக்கும் மெழுகுகாய்
கைகள்!
அளவெடுக்கப்பட்ட காம்பாய்
மெல்லிய ஸ்வர கம்பியாய்
உருட்டி வைக்கப்பட்ட மாலையாய்
விரல்கள்!
உரசிய சதுர பொட்டகம்
வளரும் வைரம்
முளைக்கும் சித்தரம்
விரல் நகம்!
ஆற்றின் வளைவு
உடுக்கையின் சரிவு
மலையின் நெளிவு
நடுவில் பூமியே மூழ்கும் குழி
இரு தீவு ஒட்டிய குட்டி
இடை!
பனிக்கட்டி மேடை
கண்ணாடி பாளம்
மின்னும் சட்டம்
முதுகுபுறம்!

தீரா!
குளிர்ந்த நீரில் குதித்த
நெருப்பு சூரியனாய்!
கனல் கக்ககும் எரிமலையில்
கானலாகும் துளி பனியாய்!
பூகம்ப விரிசலின் இடையில்
பூத்திருக்கும் பூவாய்!
கடும் புயல் கடந்த பின்
நடந்து வரும் காற்றாய்!
உருமாறியிருந்தான்!
தீரா!
தங்க தூண்
யானை தந்தம்
தொடையாய்!
அழகிய விழுது
பெருத்த புல்லாங்குழல்
முழங்கால்!
படந்த தாமரை இலை
பால் ஊறிய நிலா தோல்
பாதம்!
படுத்து கிடக்கும் கிரீடம்
காற்று நடமாடும் படிகட்டுகள்
கால் நகங்களாய்!
மேகம் உடைந்தால் மழை உதிரும்!
தீ உடைந்தால் கதகதப்பு வெளிப்படும்!
பூமி உடைந்தால் புத்துலகம் பிறக்கும்!
நீர் உடைந்தால் ஈரமாகும்!
காற்றுடைந்தால் நிசப்தமாகும்!
அலை உடைந்தால் கடல் மூழ்கும்!

ம்...ம்...
மனம் உடைந்தால்!
நினைவு உடைந்தால்!
ஆணவம் உடைந்தால்!
அர்த்தங்கள் உடைந்தால்!
வார்த்தைகள் உடைந்தால்!
மோகம் உடைந்தால்!
வேகம் உடைந்தால்!
தடுமாற்றம் உடைந்தால்
கவனம் உடைந்தால்!
நிகழ்வுகள் உடைந்தால்!
நிதானம் உடைந்தால்!
உடல் உடைந்தால்!
உயிர் உடைந்தால்!
என்னவாகும்?
காதல் பெரும் !
தீரா!
உடைந்தான்!
உருண்டான்!
இருண்டான்!
வெளிறினான்!
ஒலிந்தான்!
ஒளிர்ந்தான்!
குளிர்ந்தான்!
நெருப்பானான்!
நேரம் மெல்ல
தேய தேய
தானும் தேய்ந்தான் !
தீரா ...!

(தொடரும்)