சனி, 14 மே, 2011

நீ

உன் விழியே...  விழியே
என் வலி தீர்த்திடும் மருந்தல்லவா

உன் மொழியே... 
மொழியே
என் கண்ணீரை துடைத்திடும் துணி அல்லவா

இது நெடு நாள் வாழும் பந்தம்
உன் மடி மீது தூங்கும் என் நெஞ்சம்

அடடா... அழகிய சொர்க்கம்
நீ.. அருகினில் இருந்தால் வாசல் திறக்கும்

உனை பார்த்த பின்பு தானே
நானே நான் ஆகினேன்....


இதுவரை...
விடிந்த பின்னும் கிழக்கு எனக்கு இல்லை
இருந்திருந்தும் என் விரல் பிடித்தாய்
இனி என் உலகினில் சூரியன் தேவையில்லை...

முன்பு...
சுழன்றபோதும் சுகம் எனக்கு இல்லை
உடைந்திருந்தும் எனக்கு உயிர் கொடுத்தாய்
ஆகவே, நீளும் நேரம் போதவில்லை...


வெறும் வானமாய், நெடுந்தூரமாய் நின்றேன் நானடி
புது வானவில்லாய், தொடும் நிழலாய் வந்தாய் நீயடி
....



நீ...
சரி என்றால் அன்பே
எனக்கெனும் ஆயுளை உனக்
களித்திடுவேன்
நீ...
சிரிப்பதென்றால் அய்யோ
நான் சிறு குழந்தையாய் ஆடிடுவேன்

மறைந்தோடும் தென்றலாய்
நாளும் மனதோடு தீண்டுகிறாய்
இனி.. என் உயிர் போவதென்றால்
உன் நிழல் மீது தான் அன்றோ...


மழை பொழிந்தால், உடனே
நான், குடை
ன உனக்கிருப்பேன்
ஒரு துளி விழுந்தாலும் - அய்யோ
மறுகணம் உயிரையும் நான் இழப்பேன்...

எனக்காக துடிக்கும் உனக்காக
தயங்காது உயிரை நான் தருவேன்
எனக்கேதும் இல்லைஎன்ற போதும்
நீ இருக்க, மரணத்திலும் இதழ் விரிப்பேன்...


வெறும் வானமாய், நெடுந்தூரமாய் நின்றேன் நானடி
புது வானவில்லாய், தொடும் நிழலாய் வந்தாய் நீயடி!!




mvidhyasan@gmail.com

வெள்ளி, 13 மே, 2011

நிலா

தூரத்தில் நீ
தொடர்ந்து தேய்வது நான்

வட்டமாய் நீ
வட்டமிடுபவனாய் நான்

வெளிச்சமாய் நீ
உன் வருகைக்காகவே இரவாய் நான்

புள்ளியாய் நீ
சுற்றி அலையும் மேக புகையாய் நான்

பந்தாய் நீ
தட்டி விளையாடுகிறேன் இமைகளால் நான்


பனித்துளியாய் நீ
ஒவ்வொரு முறையும் உருகுகிறேன் நான்

அப்பளமாய் நீ
பார்த்தே பசியாருகிறேன் நான்

சக்கரமாய் நீ
சுழலும் பொழுதாக நான்


பொட்டாய் நீ
தொட்டாடும் மர இலையாய் நான்

வெண் "மை" யாய் நீ
நிரப்பிக் கொள்ளும் பேனா வாக நான்

கண்ணாடியாய் நீ
முகம் பார்க்க முடியாதவனாய் நான்

பலுனாய் நீ
பறப்பவனாய் நான்

பழமாக நீ
பறிக்க முடியாதவனாக நான்
நிர்வாணமாய் நீ
கண்கள் கூசியபடி வெட்கத்துடன் நான்

நாணயமாக நீ
சேமிக்கும் நாயகனாக நான்

ஒலிந்துகொள்வாய் நீ
தேடுபவனாக நான்

காதலியாக நீ
காதலனாக நான்
தனிமையாய் நான்
தேவதையாய் தேடி வருகிறாய் நீ !!

இயங்கும் பிணமாய்


உன் நினைவை மட்டும் தந்துவிட்டு
தனிமை காட்டில் விட்டுவிட்டாய்

உன் மொழிகளை மட்டும் வீசிவிட்டு
நாவறுந்த வனத்தினில் நடக்கவைத்தாய்

உன் கனவுகளை மட்டும் கொடுத்துவிட்டு
இரவே இல்லா வானத்தை காட்டினாய்

உன் புன்னகையை கடலாக்கிவிட்டு
கரையில் நின்று கண்ணீரை பொறுக்கவிட்டாய்

உன் நேசத்தை சிந்தி விட்டு
ஸ்வாசம் தீரும்மிடத்தில் மீனாய் தத்தளிக்கசெய்தாய்


உன் ஓவியத்தை கலைத்துவிட்டு
காலத்தடத்தை தேடி அலையவிட்டாய்


தூரத்து மின்னலாய் மறைந்துவிட்டு
எனை இயங்கும் பிணமாக்கிவிட்டாய் !!

சாரல்கள்

நினைவுகளின் உரசல்களில்
கனவுகளின் கால்தடங்கள் பதிகிறது

நிமிடங்களின் வழிநெடுகெங்கிலும்
நிஜங்களின் பிம்பங்கள் கரைகிறது

தடுமாறும் பயணங்களில்
தவிப்புகளின் விரல்கள் வருடுகிறது...

அலைமோதும் விநாடிகளில்
இதய கரைகள் கிளிஞ்சல்களை தேடுகிறது...

இளைபாறும் தருணங்களில்
நிழலின் மடிகளில் தனிமை பேசுகிறது...

மரணங்களின் வேதனைகள்
உண்மை காதலில் உயிர்க்கிறது...

கானலின் தூரத்தில்
தாகித்து நாக்குகள் ஏங்குகிறது...

நேசத்தின் உணர்வுகளில்
வேசங்கள் முகமூடி அணிகிறது...

உடைந்திடும் பொழுதினில்
மனம் முகம் காட்டும் கண்ணாடியாகிறது...

யார் அறியக் கூடும்
உனக்குள் பூக்கும் உயிர்ப்புகளை எல்லாம்...

போடா

எதுவும் நடக்கட்டும் போடா
உலகத்தில் கவலையில்லா மனிதன் யாரடா
சென்றவர்கள் போகட்டும் போடா 
சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒன்றாய் இறந்தது இல்லையடா...



பிறக்கும்போது ஒன்றும் கொண்டு வரவில்லை கையில்
இறக்கும்போது ஏதும் சொந்தமில்லை மண்ணில்
வருவது வரட்டும் விட்டுவிடுடா 
வாழ்க்கை என்றாலே இழப்புதானடா....



வாழ்ந்தவர் எல்லாம் இறுதில் சொன்னது ஒன்றுமில்லை
வாழ்வில் அனுபவத்தை தவிர்த்து ஏதுமில்லை
உறவுகள் உதிரட்டும் போடா 
உன் அழுகைக்கு நீயே காரணமடா....







ஆவதும் அழிவதும் ஆசைகளே காரணம்
ஆண்டவனாக இருந்தாலும் அவனுக்கும் உண்டு துயரம்
வானமுண்டு, பூமிவுண்டு போடா 
யாரையும் நிர்ணயிப்பது பணம்தானடா



போவதும் வருவதும் மாயைதானே
காதலும் பருவமும் காயம்தானே 
உண்மைகள் நானே போடா
இந்த உலகம் து சொன்னால் என்ன போடா!!


நான் வாழும் காதல் பூகோளம்

ஏதேதோ தோன்றும்
எல்லாமே மாயம்
தீயாக மாறும்
உன் தேகம் தேடும்
இரவெல்லம் ரணம்
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

இதயம் வேரோடு சாயும்
இளையுதிர் காலமாய் நிமிடங்கள் மாறும்
உயிர் கூடு வாடும்
விழும் வார்த்தைகள் தடுமாறும்
விடியாத இரவாக எப்போதும் தோன்றும்
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

போதையின் உச்சியிலும்
உன் முகமே வந்தாடும்
பாதையின் வழி எங்கும்
உன் நினைவே பந்தாடும்
உணர்ச்சிகள் வெறிகொள்ளும்
விடும் மூச்சும் எனை கொல்லும்
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...


மோகங்கள் நகம் கீறும்
முழு நிலவும் ஆடை சூடும்
தேடல்கள் விரைந்தோடும்
தேன் உண்டும் நா கசக்கும்
புயல் ஒன்று இசைமீட்டும்
புலம்பல்கள் புதிராகும்
விரகங்கள் விண் தீண்டும்
நரகங்கள் கண் மூடும்
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...


ஒரு பக்கம் சரியுதடி
மறு பக்கம் உடையுதடி
நடு பக்கம் ஏனோ நரகங்கள் தேடுதடி
ஒரு விழியில் வலி கொல்லுதடி
மறு விழியில் உயிர் வழியுதடி
என் நான்கு இமைகள் மட்டும் முள்ளாக மாறுதடி
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

உன் நினைவுக் கொம்புகள்
என் இதயம் கிழிக்குதடி
உன் கனவு கத்திகள்
என் உறக்கம் நறுக்கதடி
மரணங்கள் கூடி வந்து
உன் பாதம் தொழுகுதடி
கல்லெல்லாம் உனைதேடி
காதல் கண்ணீராய் வடிக்குதடி
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...


மதி கெட்டுபோனது
விதி எட்டி நிற்கிறது
புவி முற்றும் எனக்கு
ஒரு புள்ளியாய் ஆனது
மரங்களுக்கு சொந்ததமில்லை
பிறக்கின்ற இலைகளுக்கு
வானங்கள் நிரந்தமில்லை
வலம் வரும் நிலவுக்கு
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

உன் மடிமீது சாய்ந்திடும்
தருணங்கள் என் தலை கேட்கும்
உன் உருவங்களை காணும்
நிமிடங்களை என் விழி கேட்கும்
அதிகாரம் செய்யாதே
காதல் அவமானம் அறியாததே
மெளனங்கள் மீட்டாதே
புது மரணங்கள் காட்டாதே
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...


இறைவா.. இரவே இல்லாத
ஒரு உ
கம் எனக்கென படைத்துவிடு
மனம் உள்ளே ஆடையின்றி
ஆடும் பேய்களை கொன்று விடு
அவளை பார்த்
து குற்றம் என்றால்
என் இரு விழி
களை நீக்கிவிடு
மீண்டும்.மீண்டும் அவளை விரும்பும்
இதயம் இல்லா உடலை தந்துவிடு
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

செவ்வாய், 10 மே, 2011

சீ...சீ... படுக்கை மொத்தம்

திடுக்கென்று ஒரு சப்தம் 
வெடுக்கென்று பூத்தது பயம்
விசுக்கென்று வழிந்தது வியர்வை...

பொசுக்கென்று நுழைந்தது பார்வை 
பிசுபிசுக்கச் செய்தது இதய வேரை 
கசக்கி புழிந்தது உன் வருகை...

எது எது காண்பேனோ
அது அது நீயானாய்
விடு விடு என்றபோதும் ஏனோ விதையானாய்...

மது மது உன் இதழ்
எடு எடு என்றது என் விழி 
ம்ஹூம் , ம்ஹூம் என்று தடுத்தது உன் விரல்...

சல சல என காற்று
கல கல என கை வளை பாட்டு
விழ விழ எழுந்தது மோக கீற்று...

மூடி மூடி மறைத்தது உன் முந்தானை
மாறி மாறி பொழிந்தது தேன் மழை
இன்னும் இருக்கிறது அந்த கலை...

மள மள என சரிந்தது உயிர் கூடு 
எழு எழு என சிரித்தது உன் தோடு 
அழ அழ வைத்தது அந்தரங்கத்தோடு...

திடுக்கென்று ஒரு சப்தம் 
படக்கென்று பிரிந்தது இமை முற்றும்
சீ...சீ... இது கனவென்றது படுக்கை மொத்தம் !!

mvidhyasan@gmail.com

வா வா

ஓர் அழகிய மாலை
அவள் நினைவு சுமந்த வேளை
இதை விட சுகம் இந்த உலகில் இல்லை...

வான் நிலா முகம் காட்ட
அவள் நினைவு எனை வாட்ட
எப்படி அவளிடம் என் மன நிலையை காட்ட...

குளிர் தென்றல் இசைக்கிறது
விழி இரண்டில் உயிர் கசிகிறது
சதா என் உள் மூச்சும் என் பெயரையே உச்சரிக்கிறது...

இரவு தொட்டிலில் நான் குழந்தையாக
உன் இதழ் கட்டிலில் நான் புது உறவாக
நீளட்டும் இன்னும் நிமிடங்கள் தூரமாக...

மேகம் ஆனது துளி ஈரம்
மோகம் கொண்டது மனம் முழுதும்
நீ என் அருகில் இல்லை தீராத பாரம்...

உடைந்து போகட்டும் இந்த பூமி
கீழே விழுந்து நொருங்கட்டும் வானம்
வா வா என்னோடு நாம் செல்வோம் புது உலகம் !!


mvidhyasan@gmail.com

ஆஹா...


மின்னல் நரம்பில்
வானம் மீட்டியது ஓசை
மேகம் கொட்டியது இசை மழை...

ஜன்னல் கதவுகள் தட்ட
தொட்டதும் உயிர்விட்டது
பூக்களின் இதழ்கள்....

நடுநிசி நேரம்
நாய்களின் பயங்கர ஓலம்
தனியாக நானும் -  நிலாவும்...

ரகசிய உறவு
அழகிய பரிமாற்றம்
காதல் இனிப்பானது தேன்...

மெழுகுவர்த்தியும்/வெளிச்சமும்
கும்மிருட்டு கதை சொல்லியது
என் நிழல் எனக்குள்...

கசங்கிய காகிதம் கைகளில்
விரித்து விழிகள் ருச்சித்தது
என்னைபோல் யவனோ எழுதிய காதல் கவிதையை...

சொட்டும் மழைத்துளி
தட்டி விளையாடும் உள்ளங்கை
பட்டதும் நதியானது - ரேகையில்...

முற்றும் சுற்றும் பயணம்
இடைவிடாது துடிக்கும் இதயம் நிற்கும்
கண்ணீர் மற்றவருக்கு
ஆஹா...
இளைபாறுதல் இறந்தவனுக்கு !!

வியாழன், 5 மே, 2011

நீ ஆக வடிவெடுப்பதால்

கைகளில் புத்தகம்
ஒவ்வொரு பக்கமும் உன் பெயரானது 
அத்தனை எழுத்துகளும்....

எப்படி அதை விடுப்பது என்று தெரியாது 
படித்து கொண்டே இருக்கிறேன் ன் 
வார்த்தைகள் எல்லாம் நீ ஆக வடிவெடுப்பதால்!!.

புதன், 4 மே, 2011

முடியவில்லை



நான் உனக்கு என்றேன்
நீ எனக்கு என்றாய்
இத்தோடு என் வாழ்க்கை முடிந்தது என்றேன் 
நீ... இன்னும்...
முடியவில்லை தொடரும் என்றாய்...




அன்பின் எல்லை நீ என்றேன் 
அதிசய புத்தகம் நான் என்றாய் 
என்னை முழுவதும் படித்தாயே என்றேன்
நீ... இன்னும் ...
முடியவில்லை படிக்கிறேன் என்றாய்...




நீ எனது சூரியன் என்றேன் 
நான் உனை சுழலும் பூமி என்றாய் 
முற்றிலுமாக சுழன்று விட்டேன் என்றேன் 
நீ...இன்னும்..
முடியவில்லை சுழல்கிறாய் என்கிறாய்...


நீ எனது கனவு என்றேன்
நான் உன் நிஜம் என்றாய் 
கனவு கலைந்திடுமே என்றேன் 
நீ...இன்னும்...
முடியவில்லை கனவு தொடரும் என்றாய்...




நீயே எனக்கு எல்லாம் என்றேன் 
எனனை தவிர உனக்கு ஏதும் தேவையில்லை என்றாய் 
உயிர் பிரிந்திடின் உனை விலகிடுவேனே என்றேன் 
நீ...இன்னும்...
முடியவில்லை நமக்கான வாழ்வு  உள்ளவரை என்றாய் !!




எல்லாம் முடியவில்லை என்கிறாயே ஏன் என்றேன் 
முடியவில்லை ஏதும் நமக்குள் ஏனெனில் முடிவில்லலாதது நாம் என்றாய் உனக்கே உண்டான முடிவில்லா புன்னகையோடு!!