சனி, 9 அக்டோபர், 2010

யார் நீ ?


நிலவா?
வட்டமா?

பூஜ்ஜியமா?
உலா வரும் கோளா?

நாணயத்தின் முகமா?
புல்லாங்குழ
லின் துளையா?

பூமி பந்தின் ஒரு தோற்றமா?
காலத்தை நகர்த்தும் சக்கரமா?
 

கொதித்து எரியும் சூரிய தட்டா?
சிப்பிக்குள் ஒலிந்திருக்கும் முத்தா?

உயிர் எழுத்துகளின் ஒலிக்கு உடலா?
நெற்றியில் ஒட்டிருப்பதால் பொட்டா?

புல்லில் படுத்துறங்கும் பனித் துளியா?
உடலில் ஒட்டிக் கொண்டிக்கும் மச்சமா?

தண்ணீரில் தள்ளாடும் தாமரை இலையா?
மயிலிறகின் மையத்தில் இருக்கும் அழகா?

சொட்டு சொட்டாக அவிழ்வதால் மழையா?
என் காதலியின் கன்னத்தில் உதித்த பருவா?

மணிக் கைகளில் விளையாடும் வளையலா?
அங்கும் இங்குமாய் அலைபாயும் கருவிழியா?

எழுத்து வடிவத்திற்கு உயிர் ஈட்டும் உருவமா?
தாயின் உறவை உயிர்பிக்கும் தொப்புள் கொடியா?

அகிலம்   எல்லாம்  நீயே   என்ற  கர்வத்தின்  உச்சமா?

யார் நீ ?

நானா.... ?

சிறு புள்ளி !!

நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக