புதன், 19 ஜனவரி, 2011

தை பிறந்தால்

தை பிறந்தால் புது வழி பிறக்கும்
இந்த வாசகம் உண்மையாகட்டும்

தட்டினால் காற்றில் பறக்கும் தூசாக

நம்மில் தோழ்விகள் மட்டும் வீழட்டும்

விண்ணும் முட்டி உடையும் அளவு

மனித நேயம் பெருகட்டும்

மண்ணில் உழவர் சிந்தும் வியர்வையில்

பொங்கும் கடலின் தாகம் அடங்கட்டும்

முடியும் என்ற நம்பிக்கை கொண்டு

விடும் மூச்சு காற்று வெளியேறட்டும்

இருள் இடிந்து விடியும் பொழுதுகளில்

உரக்க நம் பெயர் சொல்லி சூரியன் உதிக்கட்டும்

அடிமை என்னும் கசப்பு நீங்கி

அனைவரும் சமம் என்று
அடிக் கரும்பாய் இந்த பொங்கல் இனிக்கட்டும் !!

 

1 கருத்து: