செவ்வாய், 26 ஏப்ரல், 2011

யார் அறிவார் ?

பக்கத்தில் பக்கத்தில் தான்
நீயும்- நானும்...

தொடும் தூரத்தில் இருந்தும்
இரு வரும் பரிந்தபடி
...
இணை பிரியாத பயணம்தான்
தொடர்கிறது இணைய முடியா இடைவெளி

வெயில் நேரத்தில் -நான்
வெங்துவிடுவேன் என்று
நீ‡நொந்ததுண்டு

மழை காலத்தில் -நான்
நனைவேன் என்று
நீ‡ கண்ணீர் சிந்தியதுண்டு

நீண்ட வளைவுகளில்
நாம்- அவ்வப்போது
நலம் விசாரித்து கொள்வதுண்டு

பேசாமலிருக்கும் உதட்டின் மீது
பிரியத்தை சொல்லி போகும் ரயில் பெட்டிகள்

கற்களின் மேடையில் நடக்கிறது
தினம் தினம் நமது காதல் நாடகம்

யார் அறிவார் ?
உனக்கும் -எனக்குமான
உயிர்ப்புள்ள இடைவெளி இணைப்பை !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக