புதன், 8 செப்டம்பர், 2010

அழகு

அடிக்கடி எனை பார்த்தும்
பார்க்காதது போல் இருப்பது அழகு...

நகம் கடிக்கும் நிமிடத்திலும்
எனை நினைப்பது அழகு...

எட்டி நான் செல்லும் போதெல்லாம்
நீ குட்டி சோகம் கொள்வது அழகு...

அதி காலை விடியலில் முகம் கழுவி
கண்ணாடியில் என் முகம் காண்பது அழகு...

புத்தகத்தின் இடையே என் பெயர்
எழுதி தெரியாமலிருக்க அடித்திருப்பது அழகு...

திட்டி நான் பேசினாலும் முதலில்
விட்டு கொடுத்து நீ பேசுவது அழகு...

விட்டு விலகும் நேரத்தில்
குழந்தை போல் அடம்பிடிப்பது அழகு...

எங்கு சென்றாலும் உன் மனதோடு
எனை அழைத்து கொண்டு தனி இடம் கொடுப்பது அழகு...

மழை கொட்டும் கணத்தில்
என் உள்ளங்கை பிடித்து நடப்பது அழகு...

பிடித்திருக்கு என்று உன்னிடம் சொல்லுகையில்
விழிகளை மடித்துக் கொண்டு வெட்கம் கொள்வாயே
அது அது தனி அழகு !!

பாடகன் ---------- Mvidhyasan@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக