திங்கள், 6 செப்டம்பர், 2010

சொன்னது...

 


வானம் எப்பொழுதுமே
அழகாகவே இருக்கிறது
ஏன், எப்படி என்று கேட்டேன்...

சொன்னது...

நானென்று அகந்தை கொள்ளாது
தானென்று எதையும் எண்ணாது
பொதுவென விடுவதும்...

வருவதும்,மறைவதும் மாயையின் வழக்கம்
எதுவாக இருப்பினும் தள்ளி இருப்பதே சிறக்கும்
என்பதை புரிந்ததே காரணம் என்றது...

சற்று குனிந்து பார்த்தேன்...

நிஜம்தான் !!
 
புவி மேடையில் நான் !!


மு.வித்யாசன் அன்பு மலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக