வெள்ளி, 29 அக்டோபர், 2010

தென்படும் மறு பிறவியின் எல்லை

இலைகளின் மரணங்களால்
மரங்கள் மரித்து போவதில்லை ..

மேகங்கள் கலைவதால்
வானம் மெலிவதில்லை ...

உடல் உருகுவதால்
மெழுகுவர்த்தி ஒளியை குறைப்பதில்லை ...

குடை பிடிப்பதால்
மழை கொஞ்சுவதை நிறுத்துவதில்லை ...

பாதங்கள் மிதிப்பதால்
பாதைகள் பழிப்பதில்லை ...

அலை அடிப்பதால்
கரைகள் காயமாவதில்லை...

வண்டுகள் அமர்வதால்
பூக்கள் வசைபாடுவதில்லை...

மேகம் இருளை சூடுவதால்
வெண்ணிலா வெளிச்சத்தை குறைப்பதில்லை...

வானம் ஒழுகுவதால்
பூமி இட மாற்றம் செய்வதில்லை...

வீட்டை சுமப்பதால்
நத்தை ஓய்வெடுப்பதில்லை...

உயரம் என்பதால்
பறவை கூடு கட்ட மறுப்பதில்லை...

நிலை மாறும் வாழ்க்கையில்
இழப்பதற்கு உனதென்று ஏதுமில்லை...

உடைந்து ஒடுங்கிட விட
நீ ஒன்றும் கல்லறை இல்லை...

எதுவந்த போதும் எதிர்த்து நில்
மரணம் கூட உன்னை நெருங்க-தென்படும் மறு பிறவியின் எல்லை !!

Mvidhyasan@gmail.com ............................அன்பு மலர்

1 கருத்து: