சனி, 30 அக்டோபர், 2010

எப்போது வருவாய் விழியோரம்!

உன் கனவுகளில் ஊஞ்லாடுவது
என் நினைவுகளுக்கு நிலா அருகில் இருப்பதாய்..

உன் தூக்கத்தை ரசிப்பது
என் விழிகளுக்கு கவிதை படிப்பதாய்...

உன் தோள் சாய்வது
என் முகத்திற்கு பஞ்சாலையில் பதிப்பதாய்...

உன் விரல் பிடிப்பது
என் கை ரேகைகளுக்கு மருதாணி பூசியதாய்...

உன்னோடு நடப்பது
என் பாதைகளுக்கு பூந்தோட்டமாய்...

உன்னோடு இருப்பது
என் மணித்துளிகளுக்கு குளிர்காலமாய்...

நீ...
இப்போது இருப்பது தூரம்
எப்போது வருவாய் விழியோரம்!! 
அன்பு மலர்
Mvidhyasan@gmail.com./////////////////////////////////////////


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக