திங்கள், 18 அக்டோபர், 2010

இழைக்கிறது எனது இருதயத்தை

உனது மெளனத்தின் கரை உடைகையில்
எனது வார்த்தைகளின் சருக்கள்கள்
கிளிஞ்சல்களை பொறுக்குகின்றன.... 

உனது இமைகள் கைத்தட்டி திறக்கையில்
எந்தன் காட்சிகளில் வண்ணத்து பூச்சிகளும்,
வானவில்லும் சாயம் பூசிக் கொள்கின்றன...

உனக்குள் தவறி விழுந்த வார்த்தைகள் எல்லாம்
என் தோளில் சாய்ந்தபடி கதைகள்
சொல்லிக் கொண்டிருக்கிறது தினமும் தனிமையில்...

நெடுந்தூர பாதையில்,யாருமில்லா பயணத்தில்
தொடந்து வந்து, விரல் கோர்த்து அழைத்துச்
செல்கிறது உந்தன் நிழல் தோற்றங்கள்...

உடைந்துபோன பொம்மையாய்
நானிருந்த போதெல்லாம், மறைந்திருந்து
மென்மையாய் ஒட்டவைக்கிறது உந்தன் நினைவுகள்...

இரவுகளின் துயரங்களில் இமைகள், கதவடைக்கும்
தருணங்களில், கனவுகளின் வாசல்களில்
கோலங்கள் வரைகிறது, உந்தன் கால்தடங்கள்...

மண்ணோடு உரசி பறக்கும் சருகைபோல,
என்னோடு... உள்மூச்சில் உரைந்து கிடக்கிறது
உன் உதடுகள் உதிர்த்த நேசங்கள்...

நூலிழையில் பிரிவுகள் நிகழ்கையில்
உனது இணைகையின் நினைவுகள்
கொஞ்சம், கொஞ்சமாக இழைக்கிறது எனது இருதயத்தை !!
ஐ லவ் யூ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக