திங்கள், 1 நவம்பர், 2010

நிலா வரைந்த நிலாக்கள்

வெள்ளைத் தாளில் விளையாட்டாய்
வைத்தாய் புள்ளியாய்...

தலை சீவி, கூந்தல் சிரிக்க
கோர்த்தாய் பூவாய்...

தேகம் தீண்டி மோகம் கொள்ள கழுத்தில்
சூட்டினாய் பாசி மணியாய்...

தென்றல் அமர்ந்து ஊஞ்சலாட செவியில்
மாட்டினாய் தோடாய்...

உரசி, உரசி ஓவியமாக கைகளில்
பூட்டினாய் வளையலாய்...

தூங்கும் போதும் கதை பேச
அணிந்தாய் பாத கொழுசாய்...

பணி செய்யும் போதெல்லாம்
வடித்தாய் வியர்வை பனியாய்...

அப்பொழுதெல்லாம் எனக்கு
புரியவில்லை...

நிமிர்ந்து வானம் பார்த்தேன்
வெண்ணிலா தென்படவில்லை...

என்னவள்
அருகில் வந்து பார்த்தேன்...

அவள்...
தேய்த்து சுட்டு கொண்டிருந்தாள் வெண்ணிலவை !

அன்பு மலர் (சப்பாத்தி,தோசை,இட்லி -இதுல எதுவாகவும்) அன்பு மலர்

பின்புதான் அறிந்தேன்

உனை தொட்டதெல்லாம்
நிலா வரைந்த நிலாக்களாக மாறுமென்று !!

என்னிடம்...
ஏக்கத்தோடு கேட்டது
வானம்-வெண்ணிலவை
எப்போது விடுதலை செய்வாள் என்று !!!

அன்பு மலர் 
M.VIDHYASAN@GMAIL.COM.........................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக