திங்கள், 1 நவம்பர், 2010

தீபாவளி


இருட்டை கிழித்து பிறக்கட்டும் புது வழி
மத்தாப்பு புன்னகையில் கரையட்டும் கண்ணீர் துளி...


வறுமை கோலம் உடைய வானவெடி
அடிமை எரித்து, புதுமை உடுத்தி கும்மியடி...

உடலோடு, உள்ளமும் உடுத்தட்டும் புத்தாடை
ஒவ்வொரு இதயத்திலும் வீசட்டும் இனிப்பு வாடை...


ஒன்றே யாவரும் என்று கூடி வெடி,வெடி
நன்றே செய்வோம் என்று சொல்லி கொடி பிடி...

விடியும் பொழுது ஒளிர- ஏற்று தீப ஒளி
முடியும் என்ற திண்ணம் கொண்டு துவங்கட்டும் தீபாவளி !!

பாடகன் அன்பு மலர் பாடகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக