செவ்வாய், 15 மார்ச், 2011

உனக்குள் இருக்கும்




மெல்லிய இடைவெளியில் நீயும், நானும்
சொல்லிக் கொள்ளும் தூரத்தில் நம் நாவும்
கேட்கும் நீளத்தில் நான்கு  செவியும்
இருப்பினும் இதயத்தில் ஏதோ உதறல்கள்...

எனக்குள் இருப்பதுதான் உ
க்குள்ளுமா ?
உனக்குள் இல்லாதிருப்பது எனக்குள் முளைத்திருக்குமா ?
ச்..சீ.. நமக்குள் என்றான பின் நினைவு மாறுமா ?

இப்படி கேள்விகள் ?  நிமிடத்தில் ஆயிரம்
இமைகளின் விலகலில் கூட உன் நினைவுகளை தேடிடும்
உனக்கும் இது தெரியும் என்பது எனக்கு மட்டுமே புரியும்...


மணி கணக்கில் யோசித்து வைத்திருப்பேன்
உன்னிடம் என்னவெல்லாம் அலாவலாம் என்று
நிமிடக் கணக்கில் மறந்திடுவேன்
நீ தொலைவில் வந்த தருணத்தில் ஏனோ தொலைந்திடுவேன்...


எப்படியோ, எப்போதாவது, எப்படியாவது
என் காதலை, சொல்ல நேரிடும் கணத்தை எதிர்பார்த்து
எதுவாகிய பின்னும், நீயே எனதுயிராவாய் என்றும்
அப்படித்தானா?  இப்படித்தானா ?  உனக்குள் இருக்கும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக