செவ்வாய், 15 மார்ச், 2011

எப்போது வருவாய்...

எப்போது வருவாய்...

அடர்ந்த காடாய் இருந்தது என் உதயம்
அடை மழையாய் ஆனது உன் வருகையால்

...சுடும் பாலைவனமாய் என் மனது
மடை வெள்ளமாய் ஆனது உன் பார்வையால்...

நீ எப்போது வருவாய்
எனக்காக ஒரு நிமிடமாவது

நீ எப்போது வருவாய்
எனக்கே எனக்காகவே எப்போதுமாய்

நிமிடத்திடம் உலறியதை உணர்கிறேன்
செல்லும் வழி எல்லாம் நீயாக் கூடாதா என ஏங்குகிறேன்...

வந்து விட்டு செல் போதும்
நீ வந்த தருணத்தை எண்ணிக் கொண்டே
என் ஆயுளை தீர்த்து விடுகிறேன்....

மறந்து விட்டேன் என்று சொல் போதும்
நீ என்னை நினைத்து விட்டாய் என்ற
ஆதங்கத்தில் என் ஆண்டை நீளவிடுகிறேன்...

எப்போது வருவாய் நீ
எப்படி?

சொல்
சொல்
இல்லை
கொல்
கொல்
உடனே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக