
திருதராஷ்டினனின் இரு கண்
காந்தாரியின் சதைப்பிண்டன்
புதையிட்ட வெண்ணைய் குடத்தில் உதித்தோன்
கதாயுதத்தில் பலராம சீடன்
சகுனி மாமன்
துச்சாதனின் தூண்
கர்ணன் உயிர் நண்பன்
பானுமதியின் கணவன்
கிருஷ்ணனின் சம்பந்தன்
பேராசையின் முதல்வன்
ஆணவத்தின் ஆதியானவன்
குருசேத்திரத்தின் குருதியானவன்
பெரும் உறுதியானவன்
பீமனால் தோற்கடிப்பட்டவன்
தொடை பிளந்தும் கர்ஜித்தவன்
முன்னவன் சுயோதனன்
பின்னவனே துரியோதனன்
பேரழகன்
மகாபாரதத்தின்
கம்பீரமவன் ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக