செவ்வாய், 10 மே, 2011

ஆஹா...


மின்னல் நரம்பில்
வானம் மீட்டியது ஓசை
மேகம் கொட்டியது இசை மழை...

ஜன்னல் கதவுகள் தட்ட
தொட்டதும் உயிர்விட்டது
பூக்களின் இதழ்கள்....

நடுநிசி நேரம்
நாய்களின் பயங்கர ஓலம்
தனியாக நானும் -  நிலாவும்...

ரகசிய உறவு
அழகிய பரிமாற்றம்
காதல் இனிப்பானது தேன்...

மெழுகுவர்த்தியும்/வெளிச்சமும்
கும்மிருட்டு கதை சொல்லியது
என் நிழல் எனக்குள்...

கசங்கிய காகிதம் கைகளில்
விரித்து விழிகள் ருச்சித்தது
என்னைபோல் யவனோ எழுதிய காதல் கவிதையை...

சொட்டும் மழைத்துளி
தட்டி விளையாடும் உள்ளங்கை
பட்டதும் நதியானது - ரேகையில்...

முற்றும் சுற்றும் பயணம்
இடைவிடாது துடிக்கும் இதயம் நிற்கும்
கண்ணீர் மற்றவருக்கு
ஆஹா...
இளைபாறுதல் இறந்தவனுக்கு !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக