செவ்வாய், 10 மே, 2011

சீ...சீ... படுக்கை மொத்தம்

திடுக்கென்று ஒரு சப்தம் 
வெடுக்கென்று பூத்தது பயம்
விசுக்கென்று வழிந்தது வியர்வை...

பொசுக்கென்று நுழைந்தது பார்வை 
பிசுபிசுக்கச் செய்தது இதய வேரை 
கசக்கி புழிந்தது உன் வருகை...

எது எது காண்பேனோ
அது அது நீயானாய்
விடு விடு என்றபோதும் ஏனோ விதையானாய்...

மது மது உன் இதழ்
எடு எடு என்றது என் விழி 
ம்ஹூம் , ம்ஹூம் என்று தடுத்தது உன் விரல்...

சல சல என காற்று
கல கல என கை வளை பாட்டு
விழ விழ எழுந்தது மோக கீற்று...

மூடி மூடி மறைத்தது உன் முந்தானை
மாறி மாறி பொழிந்தது தேன் மழை
இன்னும் இருக்கிறது அந்த கலை...

மள மள என சரிந்தது உயிர் கூடு 
எழு எழு என சிரித்தது உன் தோடு 
அழ அழ வைத்தது அந்தரங்கத்தோடு...

திடுக்கென்று ஒரு சப்தம் 
படக்கென்று பிரிந்தது இமை முற்றும்
சீ...சீ... இது கனவென்றது படுக்கை மொத்தம் !!

mvidhyasan@gmail.com

1 கருத்து: