செவ்வாய், 10 மே, 2011

வா வா

ஓர் அழகிய மாலை
அவள் நினைவு சுமந்த வேளை
இதை விட சுகம் இந்த உலகில் இல்லை...

வான் நிலா முகம் காட்ட
அவள் நினைவு எனை வாட்ட
எப்படி அவளிடம் என் மன நிலையை காட்ட...

குளிர் தென்றல் இசைக்கிறது
விழி இரண்டில் உயிர் கசிகிறது
சதா என் உள் மூச்சும் என் பெயரையே உச்சரிக்கிறது...

இரவு தொட்டிலில் நான் குழந்தையாக
உன் இதழ் கட்டிலில் நான் புது உறவாக
நீளட்டும் இன்னும் நிமிடங்கள் தூரமாக...

மேகம் ஆனது துளி ஈரம்
மோகம் கொண்டது மனம் முழுதும்
நீ என் அருகில் இல்லை தீராத பாரம்...

உடைந்து போகட்டும் இந்த பூமி
கீழே விழுந்து நொருங்கட்டும் வானம்
வா வா என்னோடு நாம் செல்வோம் புது உலகம் !!


mvidhyasan@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக