வெள்ளி, 30 மார்ச், 2012

தஞ்சுவும் தாத்தாவும் - 1

கண்கள் எட்டும் தூரம் கடற்கரை மணல்வெளி சிரிப்பு, மனித கால்தடம் அற்ற பகுதி. அற்புதங்கள் நிரம்பி வழியும் இயற்கையின் பொக்கிசம், கம்பீரமாக பாய்ந்து வரும் நீல அலைகளுக்குள் ஆதவன் எழுந்து, விழுந்து விçயாடும் அழகிய கடல் அது...

அந்த கடலுக்கு ஒரு புதிய மீன் குஞ்சு பிறந்தது பெயர் தஞ்சு. மிகவும் சுட்டியான மீன் குஞ்சு அது. மற்ற குஞ்சுகளை போன்றுஅமையானதாக இருக்காது. பயப்படாது. எல்லாவற்çயும் விட அழகிய கடலை விட தஞ்சுவே அழகானது ஆதலால். அத்தனை மீன்களுக்கும் தஞ்சு செல்லப்பிள்ளை. கடல் அலையே தஞ்சு... தஞ்சு... என்று சொல்லிக் கொண்டே  கரையில் உடையும்.

அந்த ஆழமான கடலில் கணக்கில் அடங்காத வண்ண மீன்கள் வாழ்ந்து கொண்டிருந்தது வளையிட்டு பிடிக்க யாரும் இல்லாததால் இனிமையாக. கடல் மீன்களின் குஞ்சு (குட்டி) மீன்கள் தினமும் கரையில் வந்து விளையாடிச் செல்வது வழக்கம். அப்படி விளையாடி செல்லும் போது தாய் மீன்கள் குஞ்சு மீன்களுக்கு சொல்லும் ஒரே விசயம். கரையில் இருக்கும் முரட்டு முதிய மீனின் பக்கம் செல்லவோ, பேசவோ கூடாது... மீறி சென்றால் கடித்து தின்று விடும்.

ஆகையால் கரைக்கு  விளையாடப் போகும் குஞ்சு மீன்கள், பயத்தில் முதிய மீன் இருக்கும் பக்கத்தில் செல்வதே இல்லை.
அதே போன்று அந்த முதிய மீனும் மற்ற மீன்களுடன் பேசாது. கரையோரத்திலே நீந்திக் கொண்டிருக்கும்.  கடலுக்குள் வராது.

இப்படியே  சில ஆண்டுகள் கழிந்தன. தஞ்சு மீன் வளர்ந்துவிட்டான். மற்ற மீன்கள் போல தானும் கரைக்கு சென்று விளையாடும் பருவத்தை எட்டி விட்டான். ஆனால் தஞ்சுவின் தாய்க்கு அது பயத்தை கூட்டியது. தஞ்சு சேட்டை காரன், சொல் பேச்சை கேட்காதவன். அவன் முரட்டு முதிய மீனிடம் ஏதாவது வம்பு செய்து ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று பயந்தாள். இதனால் தஞ்சுவை கரைக்கு அனுப்ப மறுத்தால்.

ஒருநாள் தஞ்சு தாய்கு தெரியாமல், மற்ற குஞ்சு மீன்களுடன் கரைக்கு வந்துவிட்டான் விளையாட. மற்ற மீன்கள் கடலிலிருந்து கரை வரும் வரை தஞ்சுவிடம் சொன்னது முரட்டு மீன் பக்கம் செல்லாதே என்று. தஞ்சு தçயை ஆட்டிக் கொண்டே கனவுகளோடு நீந்தி வந்தான். கரையை காணப்போகும் நினைவில்.

தஞ்சு மீன் மட்டும் தாத்தா மீனின் அருகில் தயிரியமாக வந்து பேசியது. மற்ற மீன் குஞ்சுகள் ஐ...ய்...யோ... என்று பயத்தில் மிரண்டு தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

கரை வந்நது... ?

(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக