வெள்ளி, 30 மார்ச், 2012

தஞ்சுவும் தாத்தாவும் 2

கரையை கண்டதும் தஞ்சு மீனுக்கு பயங்கர சந்தோசம். துள்ளி குதித்து கரையின் மேற்பரப்பில் உள்ள அழகை கண்டு ரசித்தது. அங்கேயும், இங்கேயுமாக பாய்ந்து நீந்தியது. மற்ற மீன்கள் தஞ்சுவின் சேட்டையை கண்டு சிரித்தன.

சற்று தூரத்தில் ஒரு மீன் நீந்த முடியாமல் தள்ளித்துக் கொண்டிருப்பதை தஞ்சு பார்த்தான். யார் என கேட்டான். மற்ற மீன்கள் இதுதான் முரட்டு முதிய மீன் என்று பயத்தோடு கூறின. தஞ்சு ஏன் இப்படி தள்ளாடி நீந்துகிறது என கேட்டான். அது நடிக்கிறது கிட்ட போனால் கடித்துவிடும் என்றன மற்ற மீன்கள். ஆனால் தஞ்சுவுற்கு அது உண்மையாக தென்படவில்லை.

தஞ்சு முதிய மீனிடம் சென்றது. மற்ற மீன்கள் அனைத்தும் தடுத்தன. ஆனால் தந்திரமாக தாத்தா மீன் அருகில் சென்றது. மற்ற மீன் குஞ்சுகள் ஐ...ய்...யோ... என்று பயத்தில் மிரண்டு தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

தாத்தா மீன் உயிருக்கு போராடி கொண்டிருந்து. அருகில் சென்ற தஞ்சு என்ன வேண்டும் தாத்தா என்றது... பசி பசி என்றது தாத்தா மீன்... தஞ்சு மற்ற மீன்களுக்கு ஆணையிட்டது. சீக்கிரம் இரை கொண்டு வாருங்கள் என்று. அனைத்து மீன் குஞ்சுகளும் இரை தேடி சென்று ஒரு வழியாக ஆகாரம் கொண்டு வந்து கொடுத்தது.

தஞ்சு அந்த ஆகாரத்தை தாத்தா மீனிற்கு கொடுத்தான். சில மணி நேரம் கழித்து தாத்தா மீன் கண் விழித்தது. செதில்களுக்கு புத்துயிர் கிடைத்தது. தாத்தா மீனின் விழிகளில் நீர் வழிந்தது நன்றி என்று. இதனை கண்ட மற்ற மீன்கள் மெல்ல நெருங்கி வந்தன ஆச்சர்யத்துடன்.

தாத்தா மீனை பார்த்து தஞ்சு கேட்டான் உங்களது பெயர் என்ன என்று? என் பெயரா வீரா என்றது.. தஞ்சு பயங்கரமாக சிரித்தது. கடலே அந்த சிரிப்பில் சற்று உள்வாங்கியது. வீரன் கேட்டான் ஏன் இந்த சிரிப்பு என்று. இல்லை தாத்தா உங்களை முரட்டு மீன் என்று தானே கூப்பிடுவார்கள் நீங்கள் என்னவென்றால் வீரா என்கிறீர்களே என்று... இதை கேட்டதும் வீராவும் சிரிக்க மற்ற அனைத்து மீன்களும் சிரித்தன கடல் அலைபோல.


( தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக