வெள்ளி, 30 மார்ச், 2012

தீரா - மீரா 16

நீள ஆற்றின் ஓரத்தில்
வீங்கிக் கிடந்த பாறையாய்
மீராவின் இதழ்கரை ஓரத்தில்
 மலையயன உயர்ந்திருந்தது காயம்...

மீரா- தீராவிடம்
வீட்டில் கேட்டால் என்ன சொல்ல?
தீரா- மீராவிடம்
பழம் என்று நினைத்து பறவை ஒன்று கொத்தியது என்று...!


மீரா....
முறைத்து சிரித்தாள்

தீரா...
சிரித்து சிறகடித்தான்...!

நிலா
மறைத்து வைக்கப்படுகிறது
பகல் முழுவதும்...

சூரியன்
மறைத்து வைக்கப்படுகிறான்
இரவு முழுவதும்...

மேகம்
ஒலித்து வைக்கப்படுகிறது
கடல் நீராக...

மழை
ஒலித்து வைக்கப்படுகிறது
மேகமாக...

ஸ்வாசம்
ஒலித்து வைக்கப்படுகிறது
உடலுக்குள்ளே...

வாசம்
ஒலித்து வைக்கப்படுகிறது
இதழுக்குள்ளே...

இப்படி...
பல ஒலிந்தே
பிறர் தெரிய
ஒளிர்கிறது...

சில ஒலிந்தே
பிறர் தெரியாது
மறைகிறது...!

தீராவின்- மீராவின்
காதலும் அப்படித்தான்
பல காலமாக மறைக்கப்பட்டிருந்தது...


வானுக்கும், மண்ணுக்கும்
நிலவுக்கும், ஆதவனுக்கும்
வெயிலுக்கும், மழைக்கும்
இனிப்புக்கும், கசப்புக்கும்
பிரிவுக்கும், அனைப்புக்கும்
இமைக்கும், விழிக்கும்
நாவுக்கும், தொண்டைக்கும்
விரலுக்கும், உடலுக்கும்
இலைக்கும், நிழலுக்கும்
நினைவுக்கும், கனவுக்கும்
காற்றுக்கும், ஆடைக்கும்
நதிக்கும், கரைக்கும்
குயிலுக்கும், கிளைக்கும்
மலைக்கும், குளிருக்கும்
தீரா- தோலுக்கும்
மீரா- மடிக்கும்
மட்டுமே தெரிந்த காதல்...


முதல் முறையாக தெரிந்தது...?

(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக