உனக்கு
உலகமே
நிசப்தமானது
என் மெளனத்தால்...
தனிமை
உலகத்தில்
நீ‡தள்ளப்பட்டாய்
நான் தள்ளிவைத்ததால்..
நீ கதறுகிறாய்
நான் இருதய
கதவை அடைத்ததும்...
உனக்குள்
பூகம்ப புலம்பல்கள்
நான் கோபித்ததும்...
வெறுமையின்
உச்சத்தில் -நீ
நான்- உனை
வெறுத்து விட்டதால்..
எனக்குள்
அனுதாபம் ஏற்படுத்தவில்லை
நீ சொன்ன வார்த்தைகளும்
செய்த செயல்களும்...
துடிதுடித்து
நீ ஏங்கினாலும்
நடிப்பு என்றுதான் தோன்றுது...
எனக்காக வா
இவ்வளவும்
என்று யோசிக்கும் போது
என் அழகும் கொஞ்சம் கூடுது...
மாண்டு விடுவாயா ?
மறந்து விடுவாய ?
இல்லை...
காய்ந்து விடுவாய ?
கடந்து விடுவாயா ?
இல்லை...
சாய்ந்து விடுவாயா ?
ஓய்ந்து விடுவாயா ?
என்ன செய்ய போகிறாய்
நான் இல்லாது ?
கவி எழுதி எழுதி
கரைந்து போவாயா ?
கன்னம் வீங்க வீங்க
அழுது கவிழ்வாயா ?
உன் கைகள் ஏந்தி
காதல் பிச்சை கேட்க போகிறாயா ?
இன்னும் கேள்விகள்
இரு வானம் அளவுக்கு
இருக்கு-உன்னிடம்...
ஒரு வேளை
நீ இல்லாமல் போன பிறகுதான்
புரிவேனோ
உன் அன்பினை..
எதுவாக இருந்தாலும்
சரி
பொதுவாகவே
நிஜமான காதலுக்கு
நான் மட்டும் என்ன விதி விலக்கா ?
-வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக