சனி, 4 செப்டம்பர், 2010

ஒவ்வொரு முறையும்

மரணங்களின் வலியை
தாண்டியது உன் நினைவு...

துன்பத்தின் உச்சியில்
கொண்டு சேர்க்கிறது உன் பிரிவு...

ஒரு முறை...
நிமிடங்களிடம் மண்டியிடுகிறேன்
மீண்டும் உன் நினைவை தூண்டாதே என்று...

மறு முறை...
கணங்களிடம் கையேந்துகிறேன்
உன் கனவோடு கரைந்து உயிர் போகவே...

என் கவனம்...
எல்லாவற்றையும் கட்டி போடுகிறது
உனது மெளனம்....

உள்ளுக்குள்ளே புதைத்து...
கல்லரை கட்டிய போதும்
புன்னகைத்து பூக்கிறது...

உயிரின் வேர் வரை சென்ற
உனது நினைவுகள் ஒவ்வொரு முறையும் !!

-வித்யாசன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக