இரவுகளின் கனவுகளில்
அடையாளம் பதிக்கிறது
உனது கால்தடம்...
நினைவுகளின் கரைகளில்
தழும்ப ஓடுகிறது
உனது ஞாபகங்கள்...
இரவின் மடியில்
தனியாய் விழித்திருக்கிறோம்
நிலவும், நானும்...
நிமிடங்களின் இடையே
குடை பிடித்து காத்திருக்கிறேன்
உன் நிழல் விழும் திசையை நோக்கி...
கணங்களுக்கு மத்தியில்
கடை விரித்து எதிர்பார்க்கிறேன்
நீ கடந்து போக கூடும் என்று...
உன்னோடு இருந்த
காலங்களை தேடி அலைகிறேன்
அங்கே நான் எங்கே வாழ்கிறேன் என்று...
உடைந்த கண்ணாடியிலும்
உன் உருவம் பார்க்கிறேன்
என் பார்வை நீதானா என்று...
உதிர்ந்து உலவும்
இலைகளிடம் கேட்கிறேன்
நீ இருக்கும் இடம் அறியுமா என்று...
அலையும் காற்றிடம்
சொல்வதுண்டு நீ சுவாசித்த
மூச்சு காற்றை மட்டும் சுமந்து வா என்று...
மண்ணும், நெருப்பும்
என்னை திண்ணும் போதும்
இதயம் விட்டு வைக்க கேட்பேன்...
எப்பொழுதும்
உன்னை நினைத்து துடிக்கவே !!
-வித்யாசன்
அடையாளம் பதிக்கிறது
உனது கால்தடம்...
நினைவுகளின் கரைகளில்
தழும்ப ஓடுகிறது
உனது ஞாபகங்கள்...
இரவின் மடியில்
தனியாய் விழித்திருக்கிறோம்
நிலவும், நானும்...
நிமிடங்களின் இடையே
குடை பிடித்து காத்திருக்கிறேன்
உன் நிழல் விழும் திசையை நோக்கி...
கணங்களுக்கு மத்தியில்
கடை விரித்து எதிர்பார்க்கிறேன்
நீ கடந்து போக கூடும் என்று...
உன்னோடு இருந்த
காலங்களை தேடி அலைகிறேன்
அங்கே நான் எங்கே வாழ்கிறேன் என்று...
உடைந்த கண்ணாடியிலும்
உன் உருவம் பார்க்கிறேன்
என் பார்வை நீதானா என்று...
உதிர்ந்து உலவும்
இலைகளிடம் கேட்கிறேன்
நீ இருக்கும் இடம் அறியுமா என்று...
அலையும் காற்றிடம்
சொல்வதுண்டு நீ சுவாசித்த
மூச்சு காற்றை மட்டும் சுமந்து வா என்று...
மண்ணும், நெருப்பும்
என்னை திண்ணும் போதும்
இதயம் விட்டு வைக்க கேட்பேன்...
எப்பொழுதும்
உன்னை நினைத்து துடிக்கவே !!
-வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக