சனி, 4 செப்டம்பர், 2010

சாபமிடு ,சாபம்கொடு

சுடும் சொல் ஒன்று: சொல்லி விடு
இல்லையேல் உன் சுட்டு விழியால்
எனை கொன்று விடு...

மறு மொழி ஒன்று கூறிவிடு
இல்லை, எனை கொல்லும்
மருந்தொன்று தந்துவிடு...

ஒருமுறை எனை தண்டித்துவிடு
இல்லை உன் உயிரை
நீயே துண்டித்துவிடு...

தவறுக்கு
மெளன தண்டனை வேண்டாம்
மன்னித்து விடு
மறு ஜென்மம் எனக்கு
அளித்து விடு...

இல்லையேல்
இவன் இன்றோடு
அழிந்து போகட்டும் என்று
சாபமிடு ,சாபம்கொடு !!

அன்பு மலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக