வெள்ளி, 13 மே, 2011

நான் வாழும் காதல் பூகோளம்

ஏதேதோ தோன்றும்
எல்லாமே மாயம்
தீயாக மாறும்
உன் தேகம் தேடும்
இரவெல்லம் ரணம்
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

இதயம் வேரோடு சாயும்
இளையுதிர் காலமாய் நிமிடங்கள் மாறும்
உயிர் கூடு வாடும்
விழும் வார்த்தைகள் தடுமாறும்
விடியாத இரவாக எப்போதும் தோன்றும்
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

போதையின் உச்சியிலும்
உன் முகமே வந்தாடும்
பாதையின் வழி எங்கும்
உன் நினைவே பந்தாடும்
உணர்ச்சிகள் வெறிகொள்ளும்
விடும் மூச்சும் எனை கொல்லும்
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...


மோகங்கள் நகம் கீறும்
முழு நிலவும் ஆடை சூடும்
தேடல்கள் விரைந்தோடும்
தேன் உண்டும் நா கசக்கும்
புயல் ஒன்று இசைமீட்டும்
புலம்பல்கள் புதிராகும்
விரகங்கள் விண் தீண்டும்
நரகங்கள் கண் மூடும்
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...


ஒரு பக்கம் சரியுதடி
மறு பக்கம் உடையுதடி
நடு பக்கம் ஏனோ நரகங்கள் தேடுதடி
ஒரு விழியில் வலி கொல்லுதடி
மறு விழியில் உயிர் வழியுதடி
என் நான்கு இமைகள் மட்டும் முள்ளாக மாறுதடி
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

உன் நினைவுக் கொம்புகள்
என் இதயம் கிழிக்குதடி
உன் கனவு கத்திகள்
என் உறக்கம் நறுக்கதடி
மரணங்கள் கூடி வந்து
உன் பாதம் தொழுகுதடி
கல்லெல்லாம் உனைதேடி
காதல் கண்ணீராய் வடிக்குதடி
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...


மதி கெட்டுபோனது
விதி எட்டி நிற்கிறது
புவி முற்றும் எனக்கு
ஒரு புள்ளியாய் ஆனது
மரங்களுக்கு சொந்ததமில்லை
பிறக்கின்ற இலைகளுக்கு
வானங்கள் நிரந்தமில்லை
வலம் வரும் நிலவுக்கு
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

உன் மடிமீது சாய்ந்திடும்
தருணங்கள் என் தலை கேட்கும்
உன் உருவங்களை காணும்
நிமிடங்களை என் விழி கேட்கும்
அதிகாரம் செய்யாதே
காதல் அவமானம் அறியாததே
மெளனங்கள் மீட்டாதே
புது மரணங்கள் காட்டாதே
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...


இறைவா.. இரவே இல்லாத
ஒரு உ
கம் எனக்கென படைத்துவிடு
மனம் உள்ளே ஆடையின்றி
ஆடும் பேய்களை கொன்று விடு
அவளை பார்த்
து குற்றம் என்றால்
என் இரு விழி
களை நீக்கிவிடு
மீண்டும்.மீண்டும் அவளை விரும்பும்
இதயம் இல்லா உடலை தந்துவிடு
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக