செவ்வாய், 28 ஏப்ரல், 2015

தனி உலகம் படைப்பேன்

எனக்கென ஒரு தனி உலகம் படைப்பேன் - அங்கே
தடையேதுமின்றி ஏழை தோள்பிடித்து நடப்பேன்
படபடக்கும் பட்டாம் பூச்சியாய் பறப்பேன்
பேதமை பாராது யாவிலும் தேன் குடிப்பேன்
கொடுமை செய்வோரை படம்பிடிப்பேன்
பொதுக்கூடத்திலே அவர்தம் முகத்திரைக் கிழிப்பேன்
நெடு நெடு வானாய் நிமிர்ந்து சிரிப்பேன்
நேசமுற அழைப்போரது நெஞ்சத்தில் வீற்றிருப்பேன் ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக