வெள்ளி, 13 மே, 2011

நிலா

தூரத்தில் நீ
தொடர்ந்து தேய்வது நான்

வட்டமாய் நீ
வட்டமிடுபவனாய் நான்

வெளிச்சமாய் நீ
உன் வருகைக்காகவே இரவாய் நான்

புள்ளியாய் நீ
சுற்றி அலையும் மேக புகையாய் நான்

பந்தாய் நீ
தட்டி விளையாடுகிறேன் இமைகளால் நான்


பனித்துளியாய் நீ
ஒவ்வொரு முறையும் உருகுகிறேன் நான்

அப்பளமாய் நீ
பார்த்தே பசியாருகிறேன் நான்

சக்கரமாய் நீ
சுழலும் பொழுதாக நான்


பொட்டாய் நீ
தொட்டாடும் மர இலையாய் நான்

வெண் "மை" யாய் நீ
நிரப்பிக் கொள்ளும் பேனா வாக நான்

கண்ணாடியாய் நீ
முகம் பார்க்க முடியாதவனாய் நான்

பலுனாய் நீ
பறப்பவனாய் நான்

பழமாக நீ
பறிக்க முடியாதவனாக நான்
நிர்வாணமாய் நீ
கண்கள் கூசியபடி வெட்கத்துடன் நான்

நாணயமாக நீ
சேமிக்கும் நாயகனாக நான்

ஒலிந்துகொள்வாய் நீ
தேடுபவனாக நான்

காதலியாக நீ
காதலனாக நான்
தனிமையாய் நான்
தேவதையாய் தேடி வருகிறாய் நீ !!

1 கருத்து:

  1. அற்புதமான கவிதை...வித்யாசன்..உங்கள் காதலி இதை படித்தால் உங்களை விட்டு விட்டு உங்கள்
    கவிதையை காதலிக்க தொடங்கிவிடுவார்...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு