வெள்ளி, 13 மே, 2011

போடா

எதுவும் நடக்கட்டும் போடா
உலகத்தில் கவலையில்லா மனிதன் யாரடா
சென்றவர்கள் போகட்டும் போடா 
சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒன்றாய் இறந்தது இல்லையடா...



பிறக்கும்போது ஒன்றும் கொண்டு வரவில்லை கையில்
இறக்கும்போது ஏதும் சொந்தமில்லை மண்ணில்
வருவது வரட்டும் விட்டுவிடுடா 
வாழ்க்கை என்றாலே இழப்புதானடா....



வாழ்ந்தவர் எல்லாம் இறுதில் சொன்னது ஒன்றுமில்லை
வாழ்வில் அனுபவத்தை தவிர்த்து ஏதுமில்லை
உறவுகள் உதிரட்டும் போடா 
உன் அழுகைக்கு நீயே காரணமடா....







ஆவதும் அழிவதும் ஆசைகளே காரணம்
ஆண்டவனாக இருந்தாலும் அவனுக்கும் உண்டு துயரம்
வானமுண்டு, பூமிவுண்டு போடா 
யாரையும் நிர்ணயிப்பது பணம்தானடா



போவதும் வருவதும் மாயைதானே
காதலும் பருவமும் காயம்தானே 
உண்மைகள் நானே போடா
இந்த உலகம் து சொன்னால் என்ன போடா!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக