நினைவுகளின் உரசல்களில்
கனவுகளின் கால்தடங்கள் பதிகிறது
நிமிடங்களின் வழிநெடுகெங்கிலும்
நிஜங்களின் பிம்பங்கள் கரைகிறது
தடுமாறும் பயணங்களில்
தவிப்புகளின் விரல்கள் வருடுகிறது...
அலைமோதும் விநாடிகளில்
இதய கரைகள் கிளிஞ்சல்களை தேடுகிறது...
இளைபாறும் தருணங்களில்
நிழலின் மடிகளில் தனிமை பேசுகிறது...
மரணங்களின் வேதனைகள்
உண்மை காதலில் உயிர்க்கிறது...
கானலின் தூரத்தில்
தாகித்து நாக்குகள் ஏங்குகிறது...
நேசத்தின் உணர்வுகளில்
வேசங்கள் முகமூடி அணிகிறது...
உடைந்திடும் பொழுதினில்
மனம் முகம் காட்டும் கண்ணாடியாகிறது...
யார் அறியக் கூடும்
உனக்குள் பூக்கும் உயிர்ப்புகளை எல்லாம்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக