வெள்ளி, 13 மே, 2011

சாரல்கள்

நினைவுகளின் உரசல்களில்
கனவுகளின் கால்தடங்கள் பதிகிறது

நிமிடங்களின் வழிநெடுகெங்கிலும்
நிஜங்களின் பிம்பங்கள் கரைகிறது

தடுமாறும் பயணங்களில்
தவிப்புகளின் விரல்கள் வருடுகிறது...

அலைமோதும் விநாடிகளில்
இதய கரைகள் கிளிஞ்சல்களை தேடுகிறது...

இளைபாறும் தருணங்களில்
நிழலின் மடிகளில் தனிமை பேசுகிறது...

மரணங்களின் வேதனைகள்
உண்மை காதலில் உயிர்க்கிறது...

கானலின் தூரத்தில்
தாகித்து நாக்குகள் ஏங்குகிறது...

நேசத்தின் உணர்வுகளில்
வேசங்கள் முகமூடி அணிகிறது...

உடைந்திடும் பொழுதினில்
மனம் முகம் காட்டும் கண்ணாடியாகிறது...

யார் அறியக் கூடும்
உனக்குள் பூக்கும் உயிர்ப்புகளை எல்லாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக