உன் நினைவை மட்டும் தந்துவிட்டு
தனிமை காட்டில் விட்டுவிட்டாய்
உன் மொழிகளை மட்டும் வீசிவிட்டு
நாவறுந்த வனத்தினில் நடக்கவைத்தாய்
உன் கனவுகளை மட்டும் கொடுத்துவிட்டு
இரவே இல்லா வானத்தை காட்டினாய்
உன் புன்னகையை கடலாக்கிவிட்டு
கரையில் நின்று கண்ணீரை பொறுக்கவிட்டாய்
உன் நேசத்தை சிந்தி விட்டு
ஸ்வாசம் தீரும்மிடத்தில் மீனாய் தத்தளிக்கசெய்தாய்
உன் ஓவியத்தை கலைத்துவிட்டு
காலத்தடத்தை தேடி அலையவிட்டாய்
தூரத்து மின்னலாய் மறைந்துவிட்டு
எனை இயங்கும் பிணமாக்கிவிட்டாய் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக