வெள்ளி, 13 மே, 2011

இயங்கும் பிணமாய்


உன் நினைவை மட்டும் தந்துவிட்டு
தனிமை காட்டில் விட்டுவிட்டாய்

உன் மொழிகளை மட்டும் வீசிவிட்டு
நாவறுந்த வனத்தினில் நடக்கவைத்தாய்

உன் கனவுகளை மட்டும் கொடுத்துவிட்டு
இரவே இல்லா வானத்தை காட்டினாய்

உன் புன்னகையை கடலாக்கிவிட்டு
கரையில் நின்று கண்ணீரை பொறுக்கவிட்டாய்

உன் நேசத்தை சிந்தி விட்டு
ஸ்வாசம் தீரும்மிடத்தில் மீனாய் தத்தளிக்கசெய்தாய்


உன் ஓவியத்தை கலைத்துவிட்டு
காலத்தடத்தை தேடி அலையவிட்டாய்


தூரத்து மின்னலாய் மறைந்துவிட்டு
எனை இயங்கும் பிணமாக்கிவிட்டாய் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக